மதுரை மாநகரக்காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நெடுஞ்செழியன் உள்ளே நுழைந்தான்.
“ஸார் கோபிநாத் வந்துட்டார்…” என்று அவனுக்கு கீழ் பணிபுரியும் பரந்தாமன் கூற,
“எந்த கோபிநாத்…” என கேட்டுக்கொண்டே தனக்கு மரியாதை செலுத்தியவர்கள் அனைவருக்கும் தலையசைத்துக்கொண்டே நடந்தான்.
“அந்த அஜிதா ஆக்ஸிடன்ட் கேஸ் சம்பந்தமா விசாரணை செஞ்ச இன்ஸ்பெக்டர் கோபிநாத்….”
“ஓஹ், ஓகே…” என சொல்லிவிட்டு உள்ளே நுழைய கோபிநாத் எழுந்து சல்யூட் அடித்தான்.
“உட்காருங்க கோபிநாத்….” என அவனை அமர சொல்லிய நெடுஞ்செழியன் தலையில் வைத்திருந்த தொப்பியை கழற்றிவிட்டு ஆசுவாசமாய் சுழல் நாற்காலியில் அமர்ந்து வியர்த்திருந்த சிகையை கோதினான்.
“ஸார் வர சொல்லியிருந்தீங்க….” கோபிநாத்தின் பவ்யம் நெடுஞ்செழியன் விழிகளை இடுங்க செய்தது.
“என்ன காரணம்ன்னு சொல்லி தானே வர சொன்னேன் கோபிநாத். வேற ஏதாவது இம்பார்ட்டென்ட் இன்வெஸ்டிகேஷன் போய்ட்டிருக்கா?…” என்றான் தன் லேசர் விழிகளால்.
“நோ ஸார்…” மீண்டும் பணிந்து சொல்ல,
“போலீஸ் தானய்யா நீ? ஒழுங்கா நேரா நிமிர்ந்து உக்கார். உனக்கு மேல நான் இருந்தா உன் உடுப்புக்கு மரியாதை தரமாட்டியா? கூழை கும்பிட்டு போட்டா எனக்கு பிடிக்காது….” என எச்சரிக்கை செய்ய கோபிநாத்தின் முகம் இருண்டது.
“ஓகே ஸார்….” என்று அமர்ந்தான்.
“ஹ்ம்ம், அந்த கேஸை விசாரிச்சது நீங்க தானே?…” என கேட்டவன் தோரணையில்,
“எஸ் ஸார். நான் தான். ஆக்சுவலி இது ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ். திரும்ப ரீ-ஓபன் பன்றதுக்கு சுத்தமா வேல்யூ இல்லாத ஒரு கேஸ்….” எரிச்சலுடன் கோபிநாத் கூறினான்.
மீண்டும் இதன் பின்னால் அலைய வேண்டுமா என்னவென்ற கடுப்பை அவனின் முகம் காட்டிக்கொடுத்தது.
“செத்தது அவன் பொண்டாட்டி. அப்ப அவனுக்கு சந்தேகம்ன்னா அப்பீல் பண்ணத்தான் செய்வான். திரும்பவும் விசாரிச்சு ஆக்ஸிடன்ட் தான்னு ப்ரூவ் பண்ணிட்டா முடிஞ்சது. அதுக்கு தான வாங்கறோம் சம்பளம்….”
நெடுஞ்செழியன் சுருக்கென்று குத்தும் விதமாக கேட்க கோபிநாத்திற்கு மண்டை காய்ந்தது.
‘இப்படி வந்து இவனிடம் சிக்கிக்கொண்டோமே’ என உள்ளே கொந்தளிக்கும் மனதை அடக்கியபடி தலையாட்டினான் கோபிநாத்.
“பொண்டாட்டியை பறி குடுத்தவன் அப்படித்தான் செய்வான். அது அவன் குடும்பம். முறையா திரும்ப விசாரிச்சு கேஸ் விபரத்தை கோர்ட்க்கு அனுப்ப வேண்டியது நம்மோட வேலை….” என்றதும்,
“ஸார், பொண்ணு லவ் மேரேஜ். நிச்சயம் பண்ணின கல்யாணம் பிடிக்கலைன்னு ஓடி போயிருச்சு. பதிமூணு வருஷம் கழிச்சு தான் திரும்ப சொந்தத்தை பார்த்திருக்காங்க. அதுவும் வேற ஒரு நிகழ்ச்சி மூலமா…”
“வேற நிகழ்ச்சின்னா? என்னன்னு அதுக்கு பேர் இல்லையா?…” என்றான் நெடுஞ்செழியன்.
‘கேஸ் ஹிஸ்டரியை படிச்சிட்டு கேள்வி வேறையா?’ என கடுப்புடன் கோபிநாத் பார்க்க,
“நான் கேட்கிற கேள்வி எனக்கில்லை. உங்களுக்கே. நீங்க எங்கியாச்சும் கோட்டை விட்டிருந்தா?…” என சொல்லவும்,
“நோ ஸார், இது ஆக்ஸிடன்ட் தான். மர்டர்ன்னு யாரையும் சஸ்பெக்ட் பண்ண முடியாது…” என்றான் கோபிநாத்.
“அப்போ நீங்க விசாரணையை துவங்கும் போதே விபத்து தான் அப்படிங்கற உறுதியில துவங்கியிருக்கீங்க?…” என்றதும் திடுக்கிட்டான் கோபிநாத்.
“ஸார் அது வந்து…”
“யோசிங்க கோபிநாத். லவ் மேரேஜ். கல்யாணம் முடிஞ்சதும் பாரின் போயிடறாங்க. வந்த இடத்துல அவங்க மீட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போன அன்னைக்கே இறந்திருக்காங்க. உங்களுக்கு ஏன் சந்தேகம் வரலை?…” என்றான்.
“ஸார்…” கோபிநாத்திற்கு வியர்த்தது.
“சொல்லுங்க, அதுவும் அவங்க வீட்டுக்காரருக்கு சொல்லாம தகனம் செஞ்சு சடங்கு முடிச்சிருக்காங்க இதுக்கு என்ன காரணம்ன்னு தோணலையா?….” என்றான்.
“நிஜமாவே விபத்தா இருந்தாலும் நாம தான் எல்லா திசையிலையும் நம்மோட பார்வையை திருப்பனும் கோபிநாத். இதுலையே கோட்டை விட்டிருக்கீங்களே?….” என்று சாதாரணமாக கேட்பதை போன்றிருந்தாலும் அப்பட்டமான குற்றசாட்டு.
கோபிநாத்திற்கே இப்போது அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் வந்துவிட யோசனையாய் அவனை ஏறிட்டான்.
“மேல சொல்லுங்க….” நெடுஞ்செழியன் சொல்ல,
“மதுரை கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ்ல உலக சுகாதார அமைப்பில் இருந்து மருத்துவ கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அஜிதாவும் வந்திருந்தாங்க. அஜிதாவோட சிஸ்டர் மீராவும் ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட்….”
“ஓஹோ…” என அவன் கவனமாக கேட்க,
“அப்ப பார்த்து பேசி வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க. போன இடத்துல தான் நைட் அங்க தங்கி இருக்கும் போது இந்த விபத்து…” என்ற கோபிநாத்,
“ஸாரி ஸார். இந்த இன்ஸிடன்ட் நடந்திருக்கு…”
“அடுத்து…”
“ஏசில இருந்து கசிஞ்ச விச வாயுவால மரணம் நிகழ்ந்திருக்குன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது…”
“ஓகே….”
“அஜிதாவுக்கு ஏற்கனவே வீஸிங் ட்ரபுள் இருந்திருக்கு. அதோட யாரையும் உதவிக்கு கூப்பிட முடியாம மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்காங்க…”
“சரி இதை வீட்டுல இருந்தவங்க எப்போ பார்த்தாங்க?….” என்றான் நெடுஞ்செழியன்.
அவன் கேள்விகள் கேட்கவும் கோபிநாத் சொல்ல பரந்தாமன் அதனை தன்னுடைய கையேட்டில் எழுதிக்கொண்டார்.
அதுவும் போதாதென்று இதனை காணொளியாகவும் பதிவு செய்து கொண்டிருந்தான் நெடுஞ்செழியன்.
“ஏசில இருந்து கசிஞ்ச விஷக்காற்றோட ஏசியும் தீப்பத்தி எரிய ஆரம்பிச்சு அந்த புகை மூலமா தான் மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதுக்குள்ள அஜிதாவோட உடல் பாதிக்கு மேல அந்த அறையிலையே எரிஞ்சிருச்சு ஸார்…”
“ஓகே, இந்த விஷயம் உங்ககிட்ட எப்போ கம்ப்ளைண்டா ரிஜிஸ்டர் ஆச்சு?…” என்றான் நெடுஞ்செழியன்.
“அஜிதாவோட வீட்டுக்காரர் இளம்பரிதி தான் வந்து கம்ப்ளைண்ட் பண்ணினார்…”
“என்னன்னு கம்பளைன்ட் குடுத்தார்?….” என்றவன் தனக்கு முன்னிருந்த பைலையும் ஒரு முறை பார்த்துவிட்டு அவனிடம் கேட்க,
“என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்லுங்க கோபிநாத். கேஸ் எப்படி மூவ் பண்ணனும்ன்னு எனக்கு ஹெல்ப் பண்ணின மாதிரி இருக்கும்….” என்று நெடுஞ்செழியன் தன்னிரு கைகளையும் கோர்த்து மடிமீது வைத்துக்கொண்டு கேட்டான்.
“உடனே எடுத்துக்கலை. அந்த கேஸ் எங்க பார்வைக்கு வரும் போதே அவங்க தகனம் பண்ணிட்டாங்க…”
“சொல்லலை ஸார், அங்க அப்படி ஒரு விஷயம் நடந்ததே மறுநாள் காலையில தான் தெரியும்ன்னு சொன்னாங்க. அதுவும் அழுகை சத்தம் கேட்டு தான் பார்க்க போயிருக்காங்க…”என சொல்லிய கோபிநாத்,
“அதுக்கப்பறம் தான் கேஸ் அப்ப இங்க இருந்த ஏசிபி மூலமா விசாரிக்க சொல்லி ஆடர் வந்தது. இளம்பரிதி அடுத்ததா இங்க தான் வந்திருக்கார் கேஸ் குடுக்க…”
“ஓகே, நெக்ஸ்ட்….”
“நாங்களும் விசாரிச்சோம். அஜிதா வீட்டுல எல்லாருமே ரொம்ப துக்கத்துல இருந்தாங்க. இருந்தாலும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தாங்க. திரும்ப போஸ்ட்மார்ட்டம் பண்ணி பார்த்ததுல மூச்சுத்திணறல் தான் காரணம்ன்னு சொல்லி ரிப்போர்ட் வந்திருச்சு….”
“எலும்பை எடுத்து போஸ்மார்ட்டம் பண்ணியிருக்காங்க. அந்த ரிப்போர்ட்ல அஜிதாவோடது மூச்சு திணறலால உண்டான மரணம்ன்னு வந்ததனால கேஸ் நிக்கலை. அப்படித்தானே….” என கேட்ட நெடுஞ்செழியன்,