“கோபம் எல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. வருஷம் ஓடிபோச்சு, அப்பப்ப எங்க இருக்கா, என்ன செய்யறாளோ இப்படி பேசிட்டு தான் இருப்போம். பெரியம்மா மட்டும் எதுக்கு ஓடி போனவளை வீட்டுல பேசறீங்கன்னு திட்டுவாங்க….”
“அன்னைக்கு உங்கம்மா கூட்டிட்டு வர சொல்லலைன்னா அஜிதா இங்க வந்திருக்க மாட்டாங்க. அப்படித்தானே?…”
“ஆமா ஸார், ஆனா அம்மா அழுது பேசி, பெரியம்மாவும் சப்போர்ட் பண்ணி பெரியப்பாக்கிட்ட சொல்லவும் அவங்களுக்கும் உடனே பார்க்கனும்னு தோணிருக்கும் போல. அக்காவை பார்க்கற வரை தான் அவங்க கோபம். அதான் வர சொன்னாங்க…”
“ஒரு நிமிஷம் மீரா, உங்க பெரியப்பா உடனே சரின்னு சொன்னாரா? அஜிதாவை நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி உங்க அம்மா கேட்டதும் உடனே சம்மதிச்சிட்டாரா?….” என்றான் கண்கள் இடுங்க.
“உங்கப்பா என்ன சொன்னாங்க மீரா?….” என்றான் நெடுஞ்செழியன்.
“பெரியப்பா பேசும்போது அக்கா போட்டோவை பார்த்து அப்பா அழுதுட்டு நின்னாங்களாம். என் பொண்ணை பார்த்து எத்தனை வருஷமாச்சுன்னு. எல்லாருக்குமே அக்காவை பார்க்கனும்னு ஆசை தான்…” மீரா இப்போதும் அழுதுகொண்டே தான் கூறினாள்.
“சரி, வீட்டுக்கு கூட்டிட்டு வந்த உடனே எல்லாருமே ஏத்துக்கிட்டாங்களா?….” என்றவன் கேள்வியில்,
“அண்ணன் மட்டும் கோபமா இருந்தாங்க. அக்காவையும், மாமாவையும் வர சொல்ல மாமா தான் ரொம்ப சத்தம் போட்டுட்டு கிளம்பினாங்க எப்படி இவளை வீட்டுல சேர்க்கலாம்ன்னு கோபம் அவங்களுக்கு…” என மீரா சொல்லவும்,
“நைட் எல்லாருமே சேர்ந்து சாப்பிட்டீங்களா? யார் யார் இருந்தீங்க வீட்டுல?…” என்றான் அவன்.
“இங்க எங்க வீட்டுல எல்லாருமே இருந்தோம்…”
“நல்லா யோசிச்சு சொல்லுங்க. நைட் அஜிதா தூங்க போறதுக்கு முன்னாடி யார் யார் பேசினீங்க? ஏன் அஜிதாவை தனியா தூங்க அனுப்பினீங்க? பதிமூணு வருஷம் கழிச்சு வந்திருக்கற பொண்ணு கூட இருக்கனும்னு தானே தோணும்?….” என்ற கேள்வியில் மீராவும் யோசித்தாள்.
“இல்லை ஸார், அக்கா அன்னைக்கு பரிதி மாமாவோட பேச அந்த ரூம்க்குள்ள போய்ட்டா. தேவகி அக்காவும் கிளம்பிட்டாங்க. பெரியம்மா தான் அவ பேசிட்டு இருக்கட்டும். நாளைக்கு பேசுங்க. இங்க தான இருப்பான்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சாங்க….” என மீரா சொல்ல,
“அப்போ டைம் என்ன இருக்கும்?….” என கேட்டவன் மீரா சொல்லவும் இன்னும் குழம்பினான்.
“எப்போ நீங்க அஜிதாவை பார்த்தீங்க. அதாவது இப்படி அவங்க ரூம்ல ஏசி தீப்பிடிச்சிருக்குன்னு எப்போ எழுந்து வந்தீங்க?…” என்றான்.
“அதிகாலை ஒரு மூணு மணிக்கு மேல. நாலு மணிக்குள்ள. கரெக்ட் டைம் தெரியலை. வீடெல்லாம் புகை. என்னோட அண்ணி தான் வந்து எழுப்பினாங்க. அதுக்குள்ளே ரூம் எரிஞ்சு அஜிதாக்கா….” என சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட நெடுஞ்செழியன் சிறிது நேரம் இடைவெளி விட்டான்.
“ஸாரி ஸார்….” என முகத்தை துடைத்துக்கொண்டவன் நிமிர்ந்து அமர,
“பரவாயில்லை. சரி சொல்லுங்க. காலையில யார் யார் இருந்தீங்க அந்த நேரம். அக்கம்பக்கத்துல ஏன் யாரையும் உதவிக்கு கூப்பிடலை?….” என்றான்.
“நான் எழுந்து வரும்போதே அக்கா, மாமா, அவங்க வீட்டுல இருந்து எல்லாரும் வந்திருந்தாங்க. இருந்த பதட்டத்துல அக்காவுக்கு என்னாச்சோன்னு தான் தோணுச்சு. எதையும் அப்போ நான் யோசிக்கலை….” என்றாள்.
“இப்போ யோசிங்க. இந்த வீட்டுக்குள்ளயே இருக்கற உங்களுக்கு முன்னாடி எப்படி உங்க அக்காவும், மாமாவும் வந்திருந்தாங்க? அதுவும் நைட் கிளம்பி போனவங்க?…” என கேட்க மீராவின் முகத்தில் பயங்கர குழப்பம்.
“பரிதிக்கிட்ட உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க யார் எல்லாம் போன்ல பேசினாங்க?…” என்றான் அடுத்ததாக.
“நான், அம்மா…” என்றாள் கைகள் நடுங்க.
“வேற யாரும் ஏன் பேசலை?….” என கேட்டவன் கேள்வியில்,
“பேசலை. உடனே பேச யாருக்கும் முடியலை. நேர்ல வரவும் பேசிப்போம்ன்னு சொன்னாங்க…”
“அப்படின்னு யார் சொன்னா?….”
“அப்பா தான்…” என்றவளால் அமர முடியவில்லை.
அப்போதே நெடுஞ்செழியன் கேள்விகளும், தனக்கே இன்னும் புலப்படாத விஷயங்களும் அவளை நிலைகுலைய செய்தது.
ஆமாம், தனக்கு முன்பே இரு வீதி தள்ளி இருக்கும் அக்காவும், மாமாவும் அந்த அதிகாலை வீட்டில் இருந்ததன் காரணம் என்னவாக இருக்கும் என எண்ணியபடி இருந்தாள்.
“சரி இதுக்கு பதில் சொல்லுங்க, நைட் பரிதி பேசும் போது அஜிதா அந்த அறைக்கு போய்ட்டாங்க. அதுக்கப்பறம் எப்போ வந்தாங்க வெளில? உங்க அக்கா அப்போ இருந்தாங்களா இல்லையா?…” என்றான்.
“அக்கா சாப்பிடவுமே கிளம்பிட்டா அவளோட பொண்ணு தேடுதுன்னு. அஜிதாக்கா மாமாக்கிட்ட இருந்து போன் வரவும் உள்ள போய்ட்டா. எல்லாரையும் படுக்க போக சொல்லிட்டாங்க. அதுக்கப்பறம் யாரும் வெளில வரலை….” மீரா சொல்ல,
“அப்போ நைட் அஜிதாவுக்கு வீஸிங் வந்தப்போ நீங்க கூட இல்லையா?….” என கேட்க மீரா திகைத்தாள்.
“இல்லை அக்காவுக்கு வீஸிங் எதுவும் வரலை. தூங்க போற வரைக்கும் நல்லா தான் இருந்தா. ஏசில கசிஞ்ச புகை காரணமா தான் மூச்சு திணறல் வந்து இந்த மரணம்…” மீரா சொல்லும் பொழுதே பரிதியின் பேச்சும் ஞாபகம் வந்தது.
வழக்கு நடந்த பொழுது இதெல்லாம் பரிதி சொல்ல வீட்டில் அத்தனை பேரும் ஒன்று போல அப்படி ஒன்று நிகழவே இல்லை என்று தானே வாக்குமூலம் கொடுத்தோம் என நினைத்தாள்.
“பரிதி மாமா சொல்லும் போது கூட அப்படி எதுவுமே நடக்கலை. அக்கா நல்லா தான் இருந்தா. இதை தான் கோர்ட்ல கூட சொன்னோம்….” மீரா சொல்ல,
“நீங்க போகலாம் மீரா…” என்றான் நெடுஞ்செழியன்.
மீரா அந்த கேள்விகளால் பெரிதும் தாக்கத்திற்குள்ளாகி இருக்க அவள் எழுந்து நகரும் முன்,
“திரும்ப விசாரணைக்கு வருவேன். இன்னும் எதுவும் முடியலை…” என்ற நெடுஞ்செழியன்,
“பரந்தாமன், இந்த பொண்ணை வேற அறையில இருக்க வைங்க….” என சொல்லவும் மீரா சென்றுவிட்டாள்.
அதன் பின்னர் மீராவின் தாய் நாச்சியாரை விசாரிக்க மீரா சொல்லியவற்றை தான் அச்சு பிசகாமல் அவரும் தேம்பிக்கொண்டே கூறி முடித்தார்.
“ஸார் அடுத்து யாரை வர சொல்ல?….” பரந்தாமன் கேட்கவும்,
“தேவகி…” என்றான் நெடுஞ்செழியன்.
அறையிலிருந்து வெளியே வந்து நெடுஞ்செழியன் எதிர் அமர்ந்த தேவகியின் முகத்தில் துளியும் அச்சமில்லை.
“சொல்லுங்க ஸார், என்ன கேட்கனும்?…” என கேட்டு,
“நானே பதில் சொல்லிடறேன். சும்மா ஒண்ணொண்ணா கேட்டு நானும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. எனக்கு நேரமில்லை….” என்றவள் அவன் பதில் சொல்ல கூட நேரம் கொடுக்காமல் தன் மனப்பாடத்தை ஒப்பித்து வைத்தாள்.
ஏற்கனவே செல்வபாண்டியும், சுடலைமுத்துவும் என்ன கேட்டார்கள் என சொல்லியிருக்க தேவகியின் பதில்கள் மடமடவென்று வந்தது.
“பேசி முடிச்சிட்டீங்களா?….” என்ற நெடுஞ்செழியன்,
“இந்த பதில் எல்லாம் எனக்கு தேவையே இல்லை…” என என்றான் சாதாரணமாக.
“என் நேரத்தை வீணாக்காதீங்க ஸார். நானே என் பொண்ணு ஸ்கூல்ல இருந்து வந்திருவாளேன்னு பார்த்திட்டிருக்கேன். நான் போகனும். இல்லைன்னா என்னை தேடுவா என் பொண்ணு….” தேவகி காட்டமாக கூறினாள்.
“மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல தான் படிக்கிறா உங்க பொண்ணு ராகவி?…” என பள்ளியின் பெயரை சொல்லி கேட்கவும் தேவகி திகைப்பாய் பார்க்க,
“ஸ்கூல் விட இன்னும் டைம் இருக்கே? அதோட ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சுட்டு உங்க பொண்ணு வர இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கு. கூட்டிட்டு வர வேண்டிய ட்ரைவர் காத்தமுத்து இன்னும் ஸ்கூலுக்கு போகலை. நீங்க ஏன் அவசரப்படறீங்க?…”
நெடுஞ்செழியன் சொல்லியதில் தேவகியின் கண்கள் பெரிதாகி பயத்தை காண்பிக்க அதுவரை இருந்த துணிச்சல் தொலைய ஆரம்பித்தது.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தூண்டிலுடன் நெடுஞ்செழியன் காத்திருந்தான்.
“இதுவரைக்கும் நீங்க சொன்ன எதுவும் எனக்கு தேவையில்லாதது. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்….” என்றவன் ஒரு பேப்பரை எடுத்து பார்த்துக்கொண்டே,
“சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் இங்க இருந்து நீங்க எப்போ கிளம்பினீங்க உங்க வீட்டுக்கு? திரும்ப எப்போ வந்தீங்க?….” என கேட்க சீட்டுக்கட்டாய் எல்லாமே சரிந்திருந்தது தேவகியின் ஞாபகத்தில்.
“என்ன ஸார்? என்ன கேட்டீங்க?….”
“காது கேட்காதா?….” என்றவன்,
“இந்த வீட்டுல இருந்து நீங்க எப்போ கிளம்பினீங்க?…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஒரு ஒன்பது மணி அதுவா, இல்ல இல்ல எட்டு மணிக்கே போய்ட்டேன். என் பொண்ணுக்கு சீக்கிரமே தூக்கம் வந்திரும். நான் போய் நைட்டுக்கு சமைச்சு குடுத்து தூங்க வைக்கனும். அதான் போய்ட்டேன்…”
தேவகி இதைத்தான் தான் முதலில் சொன்னோமா என ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள் மனதிற்குள்.
“ஓஹோ, அப்போ அஜிதாவை பார்க்க உங்க பொண்ணு இங்க வரலையா? ஏன்னா சித்தி இல்லையா? சின்ன பிள்ளைங்க பார்க்க வராம இருக்க மாட்டாங்க. அதான் கேட்டேன்….” என்று கேட்டான்.
“ஆமா, ஆமா. வந்தா. ஆனா போய்ட்டா. என் வீட்டுக்காரருக்கு பிடிக்கலை. கோபமா போகும் போதே என் பொண்ணையும் கூட்டிட்டு போய்ட்டார்…”
“உறுதியா சொல்றீங்களா?…”
“ஆமா ஸார், ஏன் கேட்கறீங்க? நிஜமா தான் சொல்றேன்…”
“சரி, நீங்க எப்போ கிளம்பினீங்க?….”
“அதான் சொன்னேனே என் பொண்ணுக்கு சமைக்கனும்னு சீக்கிரம் போய்ட்டேன்…”
“ஏன் இங்க சாப்பிடலையா நீங்க? இது உங்கம்மா வீடு. உங்க பொன்னுக்கும் இங்க இருந்தே கொண்டு போயிருக்கலாமே?….” என அடுத்த தூண்டில்.
“ஸார், என் புருஷன் கோச்சுக்கிட்டு போயிருக்கார். நான் தான் தங்கச்சி பாசம்ன்னு இருந்துட்டு கிளம்பி போனேன். ரெண்டு பக்கமும் விட்டுக்குடுக்க முடியாதே ஸார்…”
“சரி, காலையிலே எப்ப வந்தீங்க? விஷயம் எப்படி தெரியும்?….” என்றான் அடுத்ததாக.
“தம்பி தான் போன் பண்ணினான். போன் போட்டதும் அப்படியே கிளம்பி வந்தா இங்க எல்லாம் முடிஞ்சு போச்சு…” என பெருமூச்சு விட,
“அவ தான் சித்தியை பிள்ளைங்களை பிடிச்சுக்கிட்டா. என்னை பார்த்ததும் ஒரே அழுகை…” என்று சொல்லியவளை பார்த்து தலையசைத்தவன்,
“சரி, அஜிதாவுக்கு வீஸிங்ன்னு பரிதிகிட்ட சொன்னீங்களே? ஏன் அந்தநேரம் ஹாஸ்பிட்டல்க்கு போகலை?…” என்ற கேள்வியில்,
“நானா? நான் பேசலையே? நான் தான் எட்டு மணிக்கே கிளம்பிட்டேனே? மறுநாள் தான் நானும் என் வீட்டுக்காரரும் இங்க வந்தோம்…..” என்று உறுதியுடன் தேவகி சொல்ல,
“அப்போ இது யாராம்?….” என தன்னுடைய போனில் இருந்து ஒரு வீடியோவை காண்பித்தான்.
அதில் வெளி வாசலில் வந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வந்த தேவகியும், வேக வேகமாய் லுங்கியுடன் குமாரகுருவும் உள்ளே வருவது பதிவாகி இருந்தது.
“நேரம் இரவு பத்தரை மணி. கோவமா போன உங்க புருஷன், எட்டு மணிக்கே போன நீங்க ரெண்டுபேரும் அந்த நேரம் ஏன் திரும்ப வந்தீங்க? நீங்க வரும்போதே எதுக்காக வெளில பதட்டம பார்த்துட்டே வந்தீங்க?….” என்று கேட்க தேவகியின் முகம் பேயறைந்ததை போலிருந்தது.
“பத்து நாற்பத்தைந்துக்கு இந்த வீட்டு லேண்ட் லைன்ல இருந்து பரிதி நம்பருக்கு ஒரு போன் போயிருக்கு. பேசினது நீங்க. எட்டு மணிக்கே வீட்டுக்கு போனவங்க அந்தநேரம் போன் பண்ண மட்டும் திரும்பி வந்தீங்களா?….” என்றான்.
தேவகி மாட்டிக்கொண்டோமோ என பயத்துடன் வியர்த்து போய் நெடுஞ்செழியனை பார்த்தாள்.
“பரந்தாமன் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி உடனே ரெண்டு லேடி கான்ஸ்டபிளை அனுப்ப சொல்லுங்க…” என உத்தரவு பிறப்பித்துவிட்டு,
“பதில்கள் முன்னுக்கு பின் முரணா இருந்த காரணத்தினால் சந்தேகத்தின் பேர்ல முதல் கைது இந்த தேவகி. தக்க ஆதாரங்களோட கைது செய்யறோம். இப்பவே கோர்ட்ல ஒப்படைச்சு ரிமான்ட் பண்ணி நம்ம கஸ்டடில எடுக்கறோம்…” என்றவன் பேச்சில் தேவகி வெலவெலத்து பார்க்க,