Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
நீரும் நெருப்பும் 13
Post Views:
6,805
அத்தியாயம்
–
13
விக்ரம்
அங்கு
வருவான்
என்று
துளியும்
எதிர்பாராத
குரு
அவன்
அணைப்பில்
இருந்து
விலகியவன்
“
என்ன
விக்ரா
இங்க
…?
”
என,
“
ஓ
நீ
கூப்பிடுறதுக்குள்ள எப்படி
வந்தேன்னு
தானே
யோசிக்குற
…?”
குருவின்
காதில்
“
நீ
கோயம்பேட்டில்
என்
ஆளோடு
போறது
எனக்கு
தெரிஞ்சிடுச்சு. அதுவும்
என்
மாமியாரை
பஸ்
ஏத்திட்டு
இந்திராவை
மட்டும்
உன்
ஆபிசுக்கு
கூட்டிட்டு
வந்ததையும்
சேர்த்தே
தான்
சொன்னவங்க
என்
கிட்ட
சொன்னாங்க..
.
”
குருவுக்கு
பல்லை
கடிப்பதை
தவிர
வேறு
எதுவும்
செய்ய
முடியாத
சூழ்நிலையில்
இருந்தான்
.
ஏன்
என்றால்
இந்திரா
இவர்கள்
இருவரையும்
சந்தேகத்துடன்
பார்ப்பதை
பார்த்து
விக்ரமிடம்
இது
பற்றி
பேச
முடியாதவனாய்
வாட்சை
பார்த்தவன்
.
“
இந்திராவுக்கு
பஸ்சுக்கு
டைமாயிடுச்சு
…
நாம
அப்புறம்
பார்க்கலாம்
.
..
”
என்று
விக்ரமிடம்
சொன்னவன்,
இந்திராவிடம்
“
வா
…”
என்று
சொல்லிக்
கொண்டே
எழுந்தவனை
தடுத்த
விக்ரம்
“
என்னடா
இந்திராவோடு
என்னை
சேர்த்து
வைக்குறேன்
என்று
சொல்லிட்டு
அவளை
என்கிட்ட
பேசக்
கூட
விடாமல்
அழைச்சிட்டு
போற..
.”
என்று
ஆதாங்கத்துடன்
கேட்டான்
.
இதை
கேட்ட
இந்திராவுக்கு
கோபம்
கோபமாக
வந்தது
.
யார்
இவன்
யாரை
கேட்டு
இவனை
என்
கூட
சேர்த்து
வைக்கிறேன்
என்று
சொல்லி
இருக்கான்
.
யார்
இவனுக்கு
இந்த
அதிகாரத்தை
கொடுத்தது
என்ற
கோபம்
எழ
.
அந்த
இடத்தை
விட்டு
போனால்
போதும்
என்று
போக
பார்க்க
.
விக்ரம்
சட்டென்று
அவளின்
கை
பற்றி
“
போகாத
இந்திரா
என்ன
கோபம்னாலும்
,
பேசி
தீர்த்துக்கலாம்
.
என்
தப்பு
தான்
நானே
உன்னிடம்
நேரிடையாக
தான்
பேசி
இருக்கனும்
.
குருவிடம்
உதவி
கேட்டது
தப்பு
தான்..
.”
என்று
சொல்ல
.
இந்திரா
வாய்
திறப்பதற்குள்
குரு
“
முதலில்
அவள்
கையை
விட்டுட்டு
பேசு..
.”
என்று
கோபத்துடன்
சொன்னான்
.
இவன்
ஏன்
கோபப்படுகிறான்
என்று
குருவின்
கோபத்தை
பார்த்து
நினைத்தாலும்
,
கையை
விட்டவன், திரும்பவும்
இந்திராவிடம்
“
இந்திரா
நான்
உன்னிடம்
கொஞ்சம்
பேச
வேண்டும்..
.”
என்று
பேச அனுமதி கேட்டான்
.
இந்திராவுக்கு
விக்ரம்
கோயம்பத்தூரில்
வந்து
பேசிய
போது
,
அவளுக்கு
அவனை
நியாபகம்
இல்லை
என்றாலும்
,
அன்று
இரவு
படித்து
முடித்தவள்
உறக்கம்
வருவதற்கு
முன்
விக்ரமை
நினைத்து,
அவன்
யார்
என்று
யோசிக்கும்
போது
அவன்
என்னவோ
குரு
என்றானே
என்று
நினைக்கும்
போதே
விக்ரம்
எங்கு
பார்த்தோம்
என்ற
நியாபகம்
வந்து
விட்டது
.
வந்த
உடன்
தான்
அவளின்
கவலையும்
அதிகரித்தது
என்றே
கூறலாம்
.
முதலில்
யாரோ
என்று
தான்
நினைத்தாள்
.
அவள்
அழகான
பெண்
என்பதால்
நிறைய
ஆண்கள்
ஏதாவது
காரணம்
சொல்லி
அவளிடம்
பேச
வருவார்கள்
.
அது
மாதிரி
தான்
விக்ரமும்
என்று
நினைத்து
விட்டாள்
.
இது
மாதிரியானவர்களை
கண்டு
கொள்ளாது
விட்டால
போதும்
.
இரண்டு
நாள்
பின்
தொடர்ந்து
வருபவர்கள்
மூன்றாம்
நாள்
காணாமல்
போய்
விடுவார்கள்
.
விக்ரம்
யார்
என்று
தெரிந்ததும்
,
இவன்
என்ன
சென்னையில்
இருந்து
இங்கு
வந்து
இருக்கிறான்
.
என்னை
பார்க்க
வந்தானா
?
இல்லை
வந்த
இடத்தில்
என்னை
பார்க்கவும் பேசினானா
?
என்று
புரியாது
தவித்து
விட்டாள்
.
அடுத்த
நாள்
விக்ரம்
தன்னை
பின்
தொடரவில்லை
என்று
தெரிந்ததும்
.
சரி
தான்
நாம்
தான்
பயந்து
விட்டோம்
.
நமக்காக
எல்லாம்
வரவில்லை
.
வந்த
இடத்தில்
என்னை
பார்க்கவும் ஏதோ
உலறிக்
கொட்டி
இருக்கிறான்
என்று
நினைத்து
அதை
மறந்தும்
விட்டாள்
.
ஆனால்
இப்போது
விக்ரமின்
பேச்சை
கேட்க
கேட்க
அவளுக்கு
என்ன
செய்வது
என்றே
புரியவில்லை
.
கோபத்தில்
கத்தும்
ரகமும்
அவள்
இல்லை
.
தனக்கு
பிடிக்காதது
ஏதாவது
நடந்தால்
அந்த
இடத்தை
விட்டு
தான்
அவள்
போவாள்
.
அதாவது
துஷ்டனை
கண்டால்
தூர
விலகு
என்ற
பழமொழிக்கு
ஏற்ப
நடந்துக்
கொள்வாள்
.
அதே
போல்தான்
இப்போதும்
விக்ரம்
பேச்சை
கேட்க
பிடிக்காது
அந்த
இடத்தை
விட்டுப் போக
நினைத்தாள்
.
அதையும்
செய்ய
விடாது
தன்
கை
பற்றியவனை
இழுத்து
அறையலாம்
என்று
கூட
நினைத்து
விட்டாள்
.
எப்போதும்
அவள்
கடைபிடிக்கும்
நிதானம்
வேண்டாம்
என்று
தடுக்க
தன்
கையை
விடு
என்று
விக்ரமிடம்
சொல்வதற்கு
முன்
குரு
கையை
விடு
என்றதும், அவள்
கோபம்
குரு
மேல்
தான்
சென்றது
.
ஆனாலும்
அவனை
அவள்
என்ன
செய்ய முடியும்
?
என்று
நினைப்பில்
அமைதியாகி
விட்டாள்
.
ஏதோ
பேச
வந்த
விக்ரமிடம் “எனக்கு
உங்களிடம்
பேச
எதுவும்
இல்ல
.
நல்லா
கேட்டுக்குங்க
எதுவுமே
இல்ல
.
நீங்க
இவரோட
பிரண்ட்னு
எங்க
அண்ணா
கல்யாணத்தில்
நீங்க
சொல்லல.க்
உங்க
அம்மா
சொன்னாங்க
.
நீங்க
சொல்லி
இருந்தா
அதை
கேட்க
கூட
அந்த
இடத்தில்
இருந்திருக்க
மாட்டேன்
.
அதுவும்
நான்
அப்பவே
மறந்துட்டேன்
.
உங்க
பேச்சில்
குருன்னு
இவங்க
பேரு
சொன்னதும் தான்
ராத்திரி
யோசிக்கும்
போது
நியாபகத்தில்
வந்தது..
.”
என்று
மேலும்
அவள்
ஏதோ
சொல்ல
வருவதை
தடுத்த
விக்ரம்,
“
அன்னிக்கு ராத்திரி
என்னை
நினைச்சியா
இந்து
..
.”
என்று
கேட்க, அவனின்
அந்த
பேச்சும்
தன்
பெயரை
சுருக்கி
அவன்
சொன்னதும் பிடிக்காது
முகத்தை
திருப்பிக்
கொண்டாள்
.
இந்திராவின்
தெளிவான
பேச்சை
கேட்டுக்
கொண்டு
இருந்த
குரு
,
இடையில்
விக்ரமின்
அந்த
பேச்சு
வந்ததும்
“
விக்ரா
பார்த்து
பேசு
.
அவள்
என்
வீட்டு
மாப்பிள்ளையின்
தங்கை..
.”
என்று
சொல்ல,
“
அதற்கு
தான்
உன்
உதவி
கேட்டு
வந்தேன்
குரு
.
நீயும்
எனக்காக
தான்
இங்க
கூட்டிட்டு
வந்தன்னு
நினச்சேன்
.
ஆனா
இப்போ
நீ
பேசுவதை
பார்த்தா
….”
என்றவனிடம்,
“
இதோ
பார்
விக்ரா
இந்திராவுக்கு
பஸ்சுக்கு
டைமாயிடுச்சு. எதுன்னாலும், உங்க
அப்பாவிடம்
இருந்து
தான்
வரவேண்டும்
.
அவ
படிக்கிற
இடத்துக்கு
போறது
.
இது
மாதிரி
கையை
பிடிக்கிற
வேலை
எல்லாம்
வெச்சுக்காத
.
அப்புறம்
நான்
பிரண்ட்னு
கூட
பாக்க
மாட்டேன்..
.”
என்ற
குருவின்
பேச்சு
விக்ரமுக்கு
கோபத்தை
தூண்டியது
.
“
அதை
நீ
சொல்லாதே
….”
என்றவன்,
இந்திராவிடம்
“
இந்திரா
நான்
உன்
கிட்ட
பேசணும்
.
..
”
என்றான்.
அவள்
பதிலை
எதிர்
பாராது
“
பஸ்
போனால்
கூட
நான்
உன்னை
காரில்
கூட்டிட்டு
போய்
விடுறேன்
.
..
”
என்றது
தான்
.
“
உன்னை
மாதிரி
பொம்பளை
பொறுக்கியோடு
எல்லாம்
அவளை
அனுப்புவதாய்
இல்லை..
.”
என்று
குரு
சொல்லி
விட்டான்
.
தன்னை
பற்றி
இந்திரா
எதிரில்
குரு
இப்படி
சொல்வான்
என்று
விக்ரம்
துளியும்
எதிர்
பார்க்கவில்லை
.
குருவே
விக்ரமை
பற்றி
சொல்ல
வேண்டும்
என்று
நினைத்து
எல்லாம்
சொல்லவில்லை
.
விக்ரம்
இந்திராவை
காரில்
அழைத்துச்
செல்கிறேன்
என்றதும்
,
ஏனோ
அவனின்
நடத்தை
இந்திராவுக்கு
தெரிய
வேண்டும்
என்று
சொல்லி
விட்டான்
.
சொல்லிய
பிறகு
தான்
விக்ரமின்
அதிர்ந்த
முகத்தை
பார்த்து
,
சே
ஏன்
சொன்னோம்
என்று
ஆனது
.
அவன்
வட்டாரத்தில்
இது
எல்லாம்
சகஜம்
தான்
.
இவனுக்கு
தான்
பெயர்
,
ஆரோக்கியம்
,
கெட்டு
விட
கூடாது
என்று
பெண்ணைத்
தேடி
சென்றது
கிடையாது
.
பெண்களை
ரசிப்பான்
அவ்வளவே. ஒருவரின்
அந்தரங்கத்தை
சொல்வது
நாகரிகம்
கிடையாது
என்று
கருதும்
நானா இப்படி
சொன்னேன்
என்று
வருந்தினாலும்
,
அந்த
வருத்தத்தை
முகத்தில்
காட்டாது
.
கெத்தாக
விக்ரமை
பார்த்து
நிற்க
.
அதுக்கு
மேல்
விக்ரமால்
அந்த
இடத்தில்
நிற்க
முடியாது
போனது
.
அவன்
பெண்கள்
விஷயத்தில்
பலவீனமானவன்
தான்
.
ஆனால்
இந்திராவை
அவன்
அதுபோல்
எல்லாம்
நினைக்கவில்லை
.
முறைப்படி
மணந்து
வாழ
வேண்டும்
என்று
நினைத்ததால்
தான்
இந்திராவை
பார்த்த
உடன்
தன்
அன்னையிடம்
“
இவள்
தான்
உங்க
மருமகள்
.
..
”
என்று
கூறினான்
.
அவள்
எதிரில்
தன்
அந்தரங்கத்தை
போட்டு
உடைத்த
குருவின்
மீது
விக்ரமுக்கு
கொலை
வெறியே
வந்தது
.
ஆனால்
அந்த
இடத்தில்
இந்திராவின்
எதிரில்
நிற்க
முடியாது, போனால்
போதும்
என்று
போய்
விட்டான்
.
விக்ரம்
போன
உடனே
எதுவும்
நடவாது
போல்
குரு
காரின்
சாவியை கை
விரலில்
சுழட்டிக்
கொண்டே
“
வா
போகலாம்
.”
என்று
இந்திராவை
அழைத்தான்
.
இந்திராவுக்கு
அதை
சாதாரணமாக
எடுத்துக்
கொள்ள
முடியவில்லை
.
அவர்கள்
பேச்சில்
இருந்து
இந்திராவுக்கு
புரிந்தது
விக்ரம்
குருவிடம்
தன்னை
பற்றி
பேசி
இருக்கிறான்
.
அதற்கு
விக்ரமின்
அப்பாவை
பேசு
என்று
இவன்
சொல்லி
இருக்கிறான்
.
எதற்கு
பேசு
என்று
சொன்னான்
என்பது
அறியாத
குழந்தை
இல்லையே
இந்திரா
.
அவளுக்கு
இவன்
யார்
என்னை
இவனோடு
கூட்டு
சேர்க்க
என்ற
ஆத்திரத்தில்
இருக்கையை
விட்டு
எழாமல்
இருக்க,
“என்ன
பஸ்ஸுக்கு டைமாகலையா
..?”
என்று
கேட்க, அவளோ கோபத்தில்
குரு
கூப்பிட்டும்
எழாமல்
இருந்தவளை
திரும்பவும்
“
வா
…
டைமாயிடுச்சி
…”
என்று
மீண்டும் அழைத்தான்
.
அவனை
நிதானமாக
பார்த்தவள்
“
பரவாயில்லை
டைமானா
விக்ரம்
காரில்
கூட்டுட்டு
போவாரு
….”
“
என்ன
சொன்ன
…?
என்ன
சொன்ன
….?”
என்று
அதிர்ந்து
கேட்டான்
.
திரும்பம்
அதையே
“
விக்ரம்
கூட்டிட்டு
போவாரு
.”
என்று
எந்த
பயமும்
இல்லாது
சொல்ல, அடிக்க
ஓங்கிய
கையை
அவளின்
அதிர்ந்த
முகத்தை
பார்த்து
கீழே
இறக்கினான்
Advertising
Advertising