“நீ என்ன நினைச்சி பாக்காததை இவரு உன் கிட்ட கேட்டாரு….?” என்று கேட்டுக் கொண்டே இந்திராவின் பக்கத்தில் நின்றவன்.
இந்திராவின் பதிலுக்காக அவள் முகத்தை பார்க்க. அதில் தெரிந்த பதட்டமே தான் நினைத்ததை தான் கேட்டு இருக்கிறான் என்று தெள்ளத்தெளிவாக புரிய.
இப்போது இந்திராவிடம் கேட்காது கொஞ்சம் மாற்றி பாஸ்கரிடம் கேட்டான். “உன் கிட்ட படிக்கிற பசங்க கிட்ட இப்படி தான் கேட்பிங்களா…..?” என்று அடக்க பட்ட கோபத்தில் கேட்க.
பாஸ்கர் தன் இடத்தில் குருவை சத்தியமாக எதிர் பார்க்கவில்லை. அதுவும் என்ன மாதிரி நேரத்தில் சரியாக வந்து இருக்கிறான் என்று நினைத்தவன்.
“இங்கு நாங்க என்ன பேசுறோம் என்று தெரியாம இடையில் என்ன பேச்சு…..?” என்று தன் பதட்டத்தை மறைத்து கேட்க.
“சரி இப்போ கேட்குறேன் என்ன பேசிட்டு இருந்திங்க.” என்று கேட்டவன்.
பின் “சாரி என்ன அவ கிட்ட கேட்டிங்க…..?’
“அது என் பர்சனல்.”
“உங்க பர்சனலை உன்ங்களோடு வைத்திருந்தால் நான் கேட்டு இருக்க மாட்டேன். அதை இந்திராவிடம் பேசியதால் தான் நான் கேட்டேன்.” என்றவனிடம் எப்படி சொல்வது என்று தயங்க.
“வெளிப்படையா சொல்ல முடியாததை தான் உங்களிடம் படிக்கும் பெண்ணிடம் கேட்டுக் கொண்டு இருக்கிங்க. உங்கள நம்பி உங்க வீட்டில் தங்க அனுமதித்த இந்த பிள்ளைகளின் பெற்றோருக்கும், உங்க கல்லூரி நிர்வாகத்துக்கும் நீங்க நல்ல மரியாதை கொடுக்கிறிங்க.” என்ற அந்த வார்த்தை பாஸ்கரை பலமாக தாக்க.
“பார்த்து பேசுங்க மிஸ்டர் குருமூர்த்தி. . நான் என்னவோ எல்லா பெண்களிடமும் தப்பா நடந்துக்குற மாதிரி இருக்கு. உங்க பேச்சு. நான் தப்பா எல்லாம் இந்திராவிடம் கேட்கவில்லை என்னை கல்யாணம் செய்துக்க விருப்பமான்னு தான் கேட்டேன்.”தன்னை ஒரு தெரு பொறுக்கி ரேஞ்ச்சிக்கு பேசும் குருவின் பேச்சை கேட்க முடியாது உண்மையைய் உரைத்து விட.
அவன் மனதை புரிந்தவன் போல….”நானும் நீங்க ஒரு பொறுக்கி என்று எல்லாம் சொல்லலே…..உங்க மேல எவ்வளவு மரியாதை இருந்தா உங்க கல்வி நிர்வாகம் உங்கள நம்பி பெண் பிள்ளைகளை அனுப்பி இருப்பாங்க. (https://bparlay.com/) அவங்க கிட்ட இப்படி பேசுவது நியாயமான்னு தான் கேட்குறேன்.”
சிறு தயக்கத்துடன் “ஒரு பெண்ணிடம் தன் விருப்பதை சொல்வது தப்பா….?”
பாஸ்கரின் தயக்கமான பேச்சிலேயே அவனின் மனநிலையைய் புரிந்த குரு “பார்த்திங்களா….உங்க விருப்பத்தை கூட குற்றவுணர்ச்சியோடு சொல்றிங்க. அப்பவே அது தப்புன்னு உங்களுக்கு புரியலையா…..?” அவன் பேச்சில் தலை குனிந்து நின்ற பாஸ்கரை பார்த்து இந்திராவுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
இந்த இரண்டு நாளாகவே பாஸ்கர் மற்றவர்களை விட தன்னிடம் நெருக்கத்தை காமிப்பது போல் இருக்க. கூடிய மட்டும் பாஸ்கரிடம் எவ்வளவு ஒதுங்க முடியுமோ அவ்வளவு ஒதுங்க ஆராம்பித்து விட்டாள்.
இன்று காலையில் இருந்தே தலை வலித்ததால் தான் இன்று கேம்புக்கு செல்லாமல் தன் அறையிலேயே முடங்கி விட்டாள். அவர்களோடு சென்ற பாஸ்கர் சிறிது நேரத்துக்கு எல்லாம் தன் அறை கதவை தட்டியதுமே இந்திராவுக்கு புரிந்து விட்டது தன்னிடம் தனியாக பேச தான் வந்து இருக்கிறார் என்று.
தனியறையில் பேசுவதை விட வெளியில் பேசுவது தான் நல்லது என்று “எது என்றாலும் கார்டனில் பேசலாம்.” என்று அவளும் ஒரு முடிவோடு தான் அழைத்து வந்திருந்தாள்.
பாஸ்கர் தன் விருப்பத்தை சொன்னால் மறுத்து விட்டால் இத்தோடு பிரச்சனை முடிந்து விடும்.காலம் கடத்த வேண்டாம் என்று நினைத்தால் இப்படியாகி விட்டதே…
இவர்களின் இருவர் பேச்சில் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து முதல் முறையாக “குரு வீனா பிரச்சனை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்ல.
“ஓ பரவாயில்லையே அம்மணிக்கு என் பேருலா கூட தெரியுது.” என்று நக்கல் செய்தவன்.
பின் “நீ பார்த்துக்குற லட்சணத்த தான் பார்த்தேனே…..மத்த பசங்கல விட்டுட்டு உன் கிட்ட மட்டும் ஏன் இப்படி இவர் கேட்குறாரு….” அவள் மீது பாய.
அந்த பேச்சு இருவரையும் தாக்கியது. “குரு இந்திராவை தப்பா பேசாதிங்க.” என்ற பாஸ்கரின் பேச்சுக்கு.
“நான் எப்போ அவளை தப்பா பேசினேன்.” என்று சொல்ல.
“ஒ இப்போ நீங்க பேசியது தப்பு இல்லியா….?” என்று ஒரு வித குற்ற சாட்டுடன் இந்திரா கேள்வி கேட்க.
“தப்பு இல்ல. படிப்பு முக்கியம் தான் நான் இல்லேன்னு சொல்லலே…ஆனா நம்ம சுத்தி என்ன நடக்குதுன்னும் பாக்கனும்.. நம்ம கிட்ட எந்த விதமா பழகுறாங்க…..” என்று அவன் சொல்லிக் கொண்டு போகும் போதே…..
“என்ன ரொம்ப சீப்பா பேசுறிங்க குரு.” என்று பல்லை கடிக்க.
“நீங்க சீப்பா நடந்தா சீப்பா தான் பேசுவாங்க. சொல்ல கூடாதுன்னு நினச்சேன். உன் என்று ஒருமையில் பேச ஆராம்பித்தவன்.” சாரி சாரி உங்க வயசு என்ன….?இதில் இருந்தே தெரிஞ்சி இருப்பிங்க.
உங்க என்ணம் தப்புன்னு நானே உங்களை நீன்னு கூப்பிட முடியாத வயசு…வயசுல மட்டும் இல்ல. ஸ்தானத்தில் இருக்கிங்க. பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருக்கிங்க.
மாதா. பிதா, குரு,தெய்வம். அம்மா அப்பா அடுத்ததா…அதாவது தெய்வத்துக்கு முன்ன உங்கள வெச்சி இருக்காங்க.உங்க பதவி உங்க வயதை மறந்து இப்படி தான் உங்கள நம்பி அனுப்பிய சின்ன பெண்ணிடம் பேசுவிங்களா…அதுவும் அவ மனசுல என்ன இருக்குன்னு கூட தெரியாது.”
குரு பேச பேச தன் தவறை உணர்ந்த பாஸ்கர்..குரு கடைசியாக சொன்ன இந்திரா மனதில் என்ன இருக்குன்னு தெரியாம பேசியதை பற்றி சொல்ல..
அதை பற்றி அறிய “அவ மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு ரொம்ப தெரியுமா…..?” என்று கேட்டதுக்கு.
“தெரிந்த தொட்டு தான் சொல்றேன். இதோ உங்க கிட்ட தைரியமா பேசுறாளே..ஏன்…..?நீங்க ஏதாவது கேட்ட திட்டவட்டமா இல்லேன்னு சொல்லிடுவா.
ஆனா என் விருப்பம் தெரிஞ்சும் அதை கண்டுக்காம ஏன் இருக்கா….உங்க கிட்ட மறுத்து பேசுனது போல என் கிட்ட பேச முடியாது.
இவளுக்கு நான் சொந்தம்மா இல்லாம இருந்து இருந்தா….வசதி இந்த அளவுக்கு இல்லாம இருந்து இருந்தா…….நான் கூட சொல்ல தேவையில்ல. அவளே அவ விருப்பத்தை என் கிட்ட சொல்லி இருப்பா….ஏன்னா என்னை அவளுக்கு அந்த அளவுக்கு பிடிக்கும்.
பிடிக்கும் என்பதையே யோசிக்காம இருக்கான்னா.. அதுக்கு காரணம் .நான் சொன்ன அந்த இரண்டு காரணம் தான்.” இந்திராவின் மனநிலையைய் தெள்ள தெளிவாக விளக்கியவன்.
இந்திராவிடம் “உன் கிட்ட கொஞ்சம் பேசனும் வா…..” என்று அழைக்க.
“இல்ல….” என்று ஏதோ மறுத்து பேச வந்தவளிடம்.
“ நீ வரியா வரலியான்னு கேட்கலே…வா” என்று கை பிடித்து அழைத்து சென்றவனை பார்ப்பதை தவிர பாஸ்கரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
தன் காரில் சென்னையில் தனக்கு உள்ள கெஸ்ட் அவுஸ்க்கு கூட்டிக் கொண்டு வந்தவனிடம்.”எது பேசுவது என்றாலும் வெளியிலேயே பேசலாமே….” உள்ளே போக தயங்கிய படி சொல்ல.
“பயப்படாம வா…இப்போதைக்கு உன்னை ரேப் பண்ற ஐடியா இல்ல.” என்று அவன் பேச்சு கேட்டு வாயை பிளந்தளை பார்த்து கை பிடித்து அழைத்து சென்றவன்.
அங்கு இருந்த சோபாவில் அமர வைத்தவன் அவளை பார்த்து “இப்போதைக்கு இல்லேன்னு சொன்னேன்.. ஆனா எப்போதைக்கும் இல்லேன்னு சொல்ல மாட்டேன்.” என்று சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்க்க.
“ உன் கிட்ட நல்லா கேட்டுக்கோ உன் கிட்ட நல்லவனா நடந்துக்கனும் என்று பாக்குறேன்.ஆனா நான் எந்த நோக்கத்தோடு உன் கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சும் தெரியாது போல இருப்பது.
அப்புறம் இந்த படிப்பு சமுக சேவைன்னு சொல்லிட்டு திரியுறது. ஆ முக்கியமா அத்தை போன் பண்ணி ஏதோ சொன்னாங்கன்னு என் கிட்ட மூஞ்சை திருப்பிக்கின்னு திரியிறதை விட்டா நான் நல்லவனா இருப்பேன். இல்லேன்னா உனக்கு நான் வில்லன் தான். உன் கிட்ட நான் நல்லவனா இருப்பதா… கேட்டவனா இருப்பதான்னு நீ தான் முடிவு பண்ணனும்..” என்று சொல்லி விட்டு அவளை பார்க்க.
அவன் பேச்சில் ஏதோ தீர்மானத்தோடு தான் இங்கு அவன் நம்மை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்று புரிந்துக் கொண்ட இந்திரா.தானும் தன் முடிவை சொல்லி விடலாம் என்று வாய் திறக்கும் வேளையில்….
“எனக்கு தேவை உன் சம்மதம் மட்டும் தான். வேறு இல்லை.” என்று சொன்னவன்.
இப்போ உன் பதில் சொல் என்ற வகையில் அவளை பார்க்க….”இப்படி சொன்னா நான் என்ன சொல்வது.” என்று சொல்லியவனிடம்.
சம்மந்தமே இல்லாது “யாராவது உன்னிடம் பிரபோஸ் செய்தா தான் நீ என் பெயரை சொல்லுவியா…..?” பாஸ்கர் எதிரில் குரு என்று அழைத்தவள் இப்போது எந்த விதமும் இல்லாது மொட்டையாக பேசியதை குத்தி காட்ட.
“இப்போ அதுவா முக்கியம்.”
“இல்லையா இந்து. இப்போ என் பெயரை கூப்பிடவே யோசிச்சா நாளை கல்யாணத்துக்கு பிறகு செல்ல பெயரை வெச்சி எப்படி கூப்பிடுவே…..?” என்று சொல்லியவனை முறைத்தவள்.
“இங்கு பொண்டாட்டிக்கே வழியே காணுமாம். ஆனா பிள்ளைங்க எத்தனைன்னு கேட்டாங்கலாம். அது மாதிரி இருக்கு உங்க பேச்சு.” என்று சொல்லி கழுத்தை ஒரு திருப்பு திருப்பி தோள் பட்டையில் இடிக்க.
“ஏய் இந்து இது மாதிரி நீ செய்வது நல்லா இருக்கு.” என்று அவள் செய்ததை ரசித்து பார்த்தவனை பார்த்து இவன் தான் அண்ணா கல்யாணத்தில் தான் பார்த்த குருமூர்த்தியா…? என்று நினைக்க தோன்றியது.
அப்போ இவன் செய்த அலம்பல் என்ன…?. இப்போ என்னவோ காதல் மன்னன் மாதிரி பேசிட்டு இருக்கான் என்று நினைத்துக் கொண்டவள்.அதையே அவனிடம் கேட்டும் விட்டாள்.
இந்திரா அப்படி கேட்டதும் அவளின் மிக அருகில் வந்து நின்றவனை பார்த்து அவள் தன் உடலை பின் பக்கம் சாய்க்க. அவள் இரு தோள் பட்டையும் பிடித்து தன் பக்கம் இழுத்தவன்.
“இப்போதும் நான் அதே குரு தான் இந்து மத்தவங்களுக்கு…..” என்று சொன்னவன். அவள் மூச்சு காத்து படும் தூரத்தில் தன் முகத்தை கொண்டு சென்றவன்.
“ ஆனா உங்கிட்ட அந்த கெத்து அலட்டல் எல்லாம் என்னை விட்டு போச்சு…அதுக்கு காரணம் உன் கிட்ட என் கெத்தை காமிச்சா என் கிட்ட நானே காமிச்சுக்குறது போல.” என்று சொல்லியனின் பேச்சு புரியாது அவனை பார்த்த இந்திராவின் தலையில் தன் தலை வைத்து முட்டியவன்.
“உனக்கு படிப்பை தவிர வேறு எதுவும் தெரியாதா……? அதாவது நீ வேறு நான் வேறு இல்லேன்னு சொன்னேன். ஆ ஏதோ சொன்னியே பொண்ணாட்டிக்கே வழியில்ல பிள்ளை எத்தனைன்னு கேட்டானான்னு.
பிள்ளை பெத்துக்குறதுக்கும் கல்யாணத்துக்கும் சம்மந்தம் இருக்கு…..? என்று கேட்டவனிடம் இருந்து தன்னை விடு வித்து கொள்ள பார்க்க.
அவள் அருகில் இருந்தாலும் அவளின் தோளை மட்டுமே பற்றிக் கொண்டு இருந்த குருவுக்கு இந்திராவின் இந்த உடல் அசைவால் அவளின் மென்மையான பகுதி அவனை தீண்டி செல்ல.
அதன் தாக்கத்தில் அவளை சட்டென்று தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தி விட்டு அவளை பார்க்காது திரும்பி நின்றவன். பின் தன்னை கட்டுக்குள் கொண்டு வர பாடாத பாடு பட்டு ஏதோ தன்னிலைக்கு வந்தவன்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமே இவளிடம் பேசி விட்டு இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அவளை பார்க்க திரும்பியவன்.
அவளின் முகத்தின் செங்குத்து நிறத்தை பார்த்து அய்யோ இவள் நம்மை நல்லவனா இருக்கனும் என்று பார்த்தா கூட விட மாட்டாள் போலவே…. தான் பேச வந்ததை மறந்து அவளின் சிவந்த முகத்தை ரசித்து பார்க்க.
இந்திராவின் நிலையோ அவனுக்கு மேல் இருந்தது அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க பார்த்தவள் அவனின் உடல் தீண்டலில் இது வரை உடல் கூற்றினை பற்றி படிப்பாக மட்டும் படித்தவளுக்கு இந்த அனுபவ பாடம் ஏதோ ஒரு உலகுக்கு அவளை அழைத்து செல்வது போல் இருந்தது.
அவனின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியாது தலை குனிந்து நின்றவள். இவ்வளவு நேரமாகியும் அவனிடம் இருந்து எந்த பேச்சும் வராததை பார்த்து நிமிர்ந்து பார்த்தவளுக்கு தன்னை கடித்து தின்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்து வெட்கம் பறந்தோடிய இடத்தில் பயம் அமர்ந்துக் கொள்ள.
தன்னை பார்த்ததும் முகம் சிவப்பு பறந்தோட வெளுக்க ஆராம்பித்த அவள் முகத்தை பற்றியவனாய்…
.”பேபி என் கிட்ட என்ன பயம். நான் உன் அத்தான் தானே……?நான் உன்ன எதுவும் செய்ய மாட்டேன் பேபி. பேச தான் கூட்டிட்டு வந்தேன் அந்த வில்லன் எல்லாம் சும்மா பஞ்ச் டையலாக் மாதிரி பேசியது பயப்படாதே……” இது தன் குரலா என்று அவனே வியக்கும் வண்ணம் குழைந்து பேசியவனை விழியகலாது பார்த்தவளின் பார்வையில் தன்னை இழந்து அவள் முகம் நோக்கி குனிய. இந்திராவின் கை தன்னால் அவனின் முடி கோத ஆராம்பித்தது.