குரு, பத்தாவது படிக்கும் சமயம், அப்போது தான்கிருஷ்ணமூர்த்தி முதன்முதலாய்சினிமாவிற்கு பைனான்ஸ்செய்தார். அதுவும்அந்தபடம்பணம்இல்லாமல் முடங்கும்சமயத்தில்,நண்பன் ஒருவன் கேட்டதினால் தான்பைனான்ஸ்செய்தார்.அதில்நடித்தஹீரோயின்முப்பதின்தொடக்கத்தில்இருப்பவள். அத்துனை ஒன்றும் மார்க்கெட் இல்லை. கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் அவரின் மூலம்செட்டில்ஆகிவிடலாம் என்று எண்ணி, அதற்கான அனைத்து அடிமட்ட வேலைகளும் செய்தாள்.
படத்தின் பூஜையின் போது, இருவரும் சேர்ந்து நிற்பது போன்று, பேசிச் சிரிப்பது போன்றெல்லாம் புகைப்படங்கள் வெளி வரும்படி செய்ய, விளைவு, அடுத்தநாள்எல்லாபத்திரிகையிலும்முதல்பக்கத்தில்தலைப்பு செய்தியே இதுதான்.
அத்தோடு விடாது, அந்தஹீரோயின்அனைத்துப் பத்திரிக்கையிலும்கிருஷ்ணமூர்த்தியும் அவளும்,ஐந்துவருடமாய்ரகசியவாழ்க்கை வாழ்வதாகவும், மேலும் பல கதைகள் சொல்லி பேட்டி கொடுத்துவிட, குடும்பத்தில் பிரச்சனை கிளம்ப, சுலோச்சனா மகளை அழைத்துக் கொண்டு பிறந்தவீடு சென்றுவிட, குருவிற்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. பரீட்சை நேரம் வேறு.
பின் ஒருவழியாய் அந்தஹீரோயின்மேனஜரைபிடித்துமீடியாமுன்அவன்வாயலயேஉண்மையை வர செய்ய, ஆங்காங்கே எல்லாம் பொய், பணத்தால் சரி செய்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தாலும், ஒருவழியாய் அந்த பிரச்சனை ஓய்ந்தது. சுலோச்சனாவிற்கு கணவரை நம்பாது போனோமே என்று. அவருக்கோ மனைவி தனக்கு துணையாய் நிற்கவில்லையே என்று. அந்த கசப்பு அப்படியே இருந்ததுதான் நிஜம்.
அனைத்தையும் கேட்ட இந்திரா “புரியுதுகுரு. அந்தவயசுலஅப்பாவைபத்திஇப்படிஒருநியூஸ்வந்தா,அதுஎந்தஅளவுக்குபாதிப்புஏற்படும்னு என்னாலபுரிஞ்சிக்கமுடியுது. உங்கஅம்மாவபோலகுற்றஉணர்ச்சியோடுஉங்கக்கூடவாழும்சூழ்நிலைஎப்போவும்எனக்குவராது. இந்தஉறுதிமொழியைஎன்னாலகொடுக்கமுடியும்குரு...” என்றாள்.
அந்த அதிகாரியே திகைத்து “நோ.. நோ.. சீக்கிரமே எல்லாம் முடியும்…” என்று சொல்ல, பின் கீதாவின் பிரச்சனை பற்றி சிந்திக்கலானான்.
அனைத்தும் தற்செயலா, இல்லை தனக்கு விரித்தவலையா? இருந்தால், எப்படிவெளிவருவதுஅதுவும்தன்பெயர்கெடாமல். இந்துநம்பிக்கைவைத்திருக்கிறாள். அதுவேறுவிஷயம். ஆனால் வெளியே விஷயம் போனால்? எதுவாகினும் சரி, காதும்காதும்வைத்தமாதிரிமுடித்துவிடுவேன் என்று முடிவு செய்தான்.
ஒருநாள் “நிவிவீட்டில்தான்அம்மா, வேலைக்காரங்க எல்லாம் இருக்காங்கல. அவங்கக்கிட்டகுழந்தையவிட்டுட்டுகொஞ்சம்பிஸ்னஸ் பார்க்கப்போகக்கூடாதா….?” என்றுகேட்டதுதான் தாமதம்,
“கண்டிப்பாநிவிஅந்ததொழில்உனக்குன்னுகொடுத்ததுதான். இன்னொன்னும்உன்கணவருக்குகொடுத்தபணம்கூடதங்கையானஉனக்குசீராவெச்சிக்கோ….” என்று அவன் சொன்னதைநம்பமுடியாமல்பார்த்தவள், “அண்ணாநிஜமாவாசொல்றீங்க...” என்றாள் கண்கள் மின்ன.
குரு அப்போதே சுபாஷை பற்றி யோசித்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ என்னவோ.
கெளதமைதனிப்பட்டமுறையில்தேடசொன்னடிடக்டிவோ “சார்நீங்கஅவன்பாங்க்அக்கவுண்டை முடக்காமஇருந்துஇருந்தாஅவன்ஏ.டி. ஏமில்இருந்துபணம்எடுக்கும்போதுஅதுஎங்கிருந்து எடுத்ததுன்னுஇந்நேரம்கண்டுபிடிச்சிஇருக்கலாம்...” என்றதுமே, அதற்கான வேலைகளை செய்துவிட்டான் குரு.
கீதாவிடம் பேசும் சந்தர்ப்பமும் வரவில்லை. இதெல்லாம் யோசித்து குரு கடுப்பில் இருக்க, அதே நேரம் இந்திரா அழைக்க, அவனின் ஹலோவில் என்ன கண்டாளோ,
“முதல்லஅந்தபேபிம்மாவைநிறுத்துங்க. ஏதோபழையபடத்தைசொல்றதுபோலவேஇருக்கு...” என்றுஅதட்டியவள், “இப்போ என்ன பிரச்சனை…?” என்றாள்.
குருவும் எல்லாம் சொல்ல “அதான் கண்டுபிடிச்சிடலாம் சொல்றாங்களே பின்ன என்ன? கீதா வீட்ல ஆளுங்க எல்லாம் போகட்டும்… இவ்வளோ நாள் பொறுமையா போனதுபோல இப்பவும் இருங்க..” என்றாள்.