தன் கண் பார்வையில் தந்தையின் அறை நோக்கி ஓடி சென்ற தன் மகளின் செயலை ஒரு வித சிலிப்போடு நினைத்து கொண்டே நேற்று கணவன் குடித்த எல்த்தி டிரிங்க்ஸை ஆதித்யனுக்கும் சேர்த்து இரண்டாக கலக்கியவள் மகளுக்கு பாலை கலக்கி கொண்டு இருந்தவளின் நினைவுகள் முழுவதும் மகள் கணவனே நிறைம்பி வழிந்தனர்…
இந்த இரண்டு நாளிலேயே மகளுக்கு தந்தை என்ற அந்த பிம்பத்தின் மீது இருந்த பாசம் அவளுக்கு புரிந்து விட்டது….
என்ன தான் கணவன் வயதுடைய இரண்டு ஆண்கள் இருக்கும் வீட்டில் வளர்ந்தாலுமே, தந்தை என்ற அந்த உறவின் வெற்றிடத்தை குழந்தையின் மனது உணர்ந்ததினால் தானே… தந்தை என்ற உறவை கை காட்டியதுமே மகள் கெட்டியாக பிடித்து கொண்டாள்…
இதை நினைத்து ஜீவ ஜோதிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், இன்னொரு பக்கம்.. வருத்தமாக இருந்தது…தன்னை மட்டுமே இது வரை நினைத்து கொண்டு இருந்து மகளின் ஏக்கத்தை புரிந்து கொள்ளவில்லையே என்று…
மகளை மட்டுமா…? கணவனையுமே தான்.. என்பதை இங்கு வந்த இந்த இரண்டு நாளில் கணவனின் அந்த பார்வையில் அவள் புரிந்து கொண்டாள் தான்.. ஆனால் அதை எப்படி சரி செய்வது என்பது தான் அவனுக்கு புரியவில்லை….
ஒருவர் கெட்ட பெயர் எடுப்பது மிக எளிது.. அதே ஒரு நல்ல பெயர் எடுக்க நீண்ட நாட்கள் ஆகும்.. அதே நிலையில் தான் ஜீவ ஜோதியுமே இருந்தாள்….
தான் செய்த தவறை நான் தான் சரி செய்ய வேண்டும்.. தவறு செய்வதை சரியாக செய்து முடித்து விட்டாள்.. ஆனால் அந்த தவறை சரி செய்யும் வழி தான் அவளுக்கு தெரியவில்லை….
அந்த வழி தன் மகள் தான் என்பதை இன்னும் சிறிது நேரத்தில் ஜீவ ஜோதி புரிந்து கொண்டு விடுவாள்..
முன்னது பின்னது என்று ஜீவ ஜோதி யோசனை செய்வதிலும், ஜீவ ஜோதிக்கு அந்த வீட்டின் சமையல் அறை புதியது தானே…
அதனால் எந்த எந்த பொருட்கள் எங்கு எங்கு இருக்கிறது என்பதை தேடி அவள் கணவனுக்கும் குழந்தைக்கும் காலை பானத்தை கலக்கி முடிக்கும் முன்..
தந்தையை தேடி உடற்பயிற்சி கூடத்திற்க்கு சென்ற மகளோ… தந்தை புஷ்ஷப் செய்வதை பார்த்தவளுக்கு என்ன நினைவு வந்ததோ… தந்தையின் முதுகில் அவனை கட்டி அணைத்து கொண்டு ஒய்யாரமாக படுத்து கொண்டாள்…
ஹர்ஷவர்தனும் மகள் தன்னை தேடி வந்து விட்டாள் என்பதை மகளின் காலடி ஒசையில் மட்டும் அல்லாது அந்த அறையில் இருந்த கண்ணாடியில் மகளின் பிம்பத்தை பார்த்தும் அறிந்து கொண்டவனுக்கு அந்த விடியல் இன்னும் அழகு கூட்டியது எனலாம்…
அதை விட உரிமையோடு தன் முதுகில் படுத்து கொண்ட மகளின் அந்த செயலில் தந்தையின் மனது பாகாக உருகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
ஒரு வாரம் முன் வரை.. தன் மகள் தன்னை தந்தையாக ஏற்றுக் கொள்வாளா….? ஆறு வயது குழந்தையிடம் திடிர் என்று தந்தை என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தாள், அவளின் மனநிலை எப்படி இருக்கும்.. தன்னை நெருங்க. மகளுக்கும் கொஞ்சம் காலம் பிடிக்கும் தானே.. அது வரை தன் மனது தாக்கு பிடிக்குமா..?
இதை நினைத்து மகளை நினைத்து ஏகப்பட்ட சந்தேகங்கள் ஹர்ஷவர்தன் மனதில் இருந்தது.. ஆனால் இந்த இரண்டு நாளில் மகள் தன் மீது காட்டும் அந்த பாசத்தில் அவனின் சந்தேகம் வருத்தம் அனைத்துமே மறைந்து விட்டதில் அவனுக்கு மகிழ்ச்சி என்றாலுமே..
அவனுமே ஜீவ ஜோதியை போலவே தன் மகள் தந்தையின் அருகாமை ஏங்கி போய் இருந்ததினால் தானே.. தன்னை சட்டென்று ஏற்று கொண்டு விட்டாள்.. அதை நினைத்து மகளை ஏங்க விட்ட தன்னை நினைத்தே அவனுக்கு கோபம் தான்….
ஆனால் நடந்ததை இனி மாற்ற முடியாது.. ஆனால் இனி குழந்தையை எந்த விதத்திலுமே தான் ஏங்க வைக்க கூடாது என்று நினைத்து கொண்டவன்….
மகள் ஆசையோடு தன் முதுகில் படுத்ததுமே மகளை முதுகில் வைத்து கொண்டே இன்னும் வேகமாக புஷ்ஷப் செய்ய…
அந்த விளையாட்டு மகளுக்கு பிடித்து விட்டது போல..
அதனால் விவாகா.. “ப்பா இன்னும் ஸ்பீட்… ப்பா இன்னும் ஸ்பீட்…” என்று தந்தையை வேகம் படுத்த சொல்ல..
விவாகாவின் இந்த ஆசையை கூட அவளின் தந்தை நிறைவேற்ற மாட்டானா என்ன. மகளின் உற்சாக குரலுக்கு இன்னும் தன் வேகத்தை கூட்டினான்…
ஆதித்யனும் தான் உடற்பயிற்சி செய்வதை விட்டு விட்டு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தவன்…
தன் உடலில் வடிந்த வியர்வையை அங்கு இருந்த டவலை கொண்டு துடைத்து கொண்டே தந்தை மகளின் செயலை அவனுமே ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்….
விவாகா இன்னும் இன்னும் வேகம் சொல்ல. அதற்க்கு தகுந்தது போல ஹர்ஷவர்தனும் வேகத்தை இன்னும் கூட்ட….
ஹர்ஷவர்தன் உடற்பயிற்ச்சி செய்ய ஆரம்பித்து இது முடியும் நேரம்… உடற்பயிற்சி செய்யவும்.. இவ்வளவு நேரம் இவ்வளவு வேகம் என்று ஒரு அளவு இருப்பதை ஒரு உடற்பயிற்ச்சி கூடத்தை வைத்து நடத்தும் ஆதித்யனுக்கு தெரியும்..
அதனால் உடலில் உள்ள எனர்ஜி அனைத்தும் முடியும் இந்த நேரத்தில் ஹர்ஷவர்தனின் இந்த வேகம் நல்லது கிடையாது என்று நினைத்த ஆதித்யன் அமர்ந்திருந்தவன் எழுந்து கொண்டே….
ஹர்ஷவர்தன் விவாகாவை நோக்கி நடந்து கொண்டே.. விவாகாவிடம்….
“பேபி போதும்.. வா…” என்று சொன்னதோடு விவாகாவை தூக்கியும் கொண்டான்….
ஆனால் விவாகாவுக்கோ… பிடித்த அந்த ஆட்டத்தை விட மனது இல்லையா…? இல்லை பிடித்த தந்தையின் நெருக்கத்தை விட மனது இல்லையா…? என்று தெரியவில்லை….
குழந்தை அடம் பிடித்தாள்.. “ நோ அங்கிள் ப்பா ப்பா..” என்று சொல்லி தந்தையிடம் தாவ முயன்றாள்..
ஆதித்யன் குழந்தையை தூக்கியதுமே ஹர்ஷவர்தனும் உடனே எழுந்து நின்று கொண்டு விட்டான் தான்… ஆதித்யன் நினைத்தது போல் தான் ஹர்ஷவர்தன் சிறிது டையாடாகி கொண்டு இருந்தான்…
குழந்தை சிணுங்கவும் மீண்டும் ஹர்ஷவர்தன் குழந்தையை வைத்து பிஷ்ஷப் செய்ய தான் குழந்தையை வாங்க கை நீட்டினான்…
.
ஆனால் ஆதித்யன் அவனை முறைத்து விட்டு குழந்தையை அவனிடம் தராது விவாகாவிடம்.. “பேபி ப்பா பாரு டையாடா தெரியிறார்.அவரால் முடியல…” என்று ஆதித்யன் சொன்னது உடன்…
விவாகாவிடம் இருந்து. “ நோ ஆங்கிள் என் ப்பா ஸ்டாங் மேன்…” என்று சொன்னவள்.. அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லை….
ஆனால் குழந்தையோ தன் தந்தையின் வலிமையை தெரியபடுத்தும் பொருட்டு…
“நையிட் ப்பா ம்மாவை முதுகில் வைத்து கொண்டு புஷ்ஷப் செய்தார் தெரியுமா…” என்று சொல்லி ஆதித்யனிடம் போட்டு கொடுத்தது மட்டும் அல்லாது குழந்தை தான் சொன்னது சரி தான் என்று ஆதித்யனிடம் நிருப்பிக்கும் பொருட்டு…
“ப்பா ஆமா தானேப்பா… நீங்க நேத்து நையிட் அம்மாவை உங்க முதுகில் வைத்து கொண்டு புஷ்ஷப் செய்திங்க தானேப்பா….”
தான் சொன்னது உண்மை தான் என்று தெளிவுப்படுத்த வேண்டி சாட்சியாக தன் தந்தையையே சொல்லும் படி சொன்னாள்…
ஹர்ஷவர்தன் நிலையோ நண்பனின் பார்வையில் அய்யோ என்று ஆனது… ஆண் மகனான ஹர்ஷவர்தனின் நிலையே அப்படி என்றால், அப்போது தான் ஒரு வழியாக காலை பானத்தை கலக்கி உடற்பயிற்சி கூடத்திற்க்கு கொண்டு வந்த ஜீவ ஜோதியின் நிலை சொல்லவும் வேண்டுமே….
மகள் சொன்ன பேச்சை தெளிவாக வாங்கி கொண்டு தான் ஜீவ ஜோதி அந்த உடற்பயிற்சி நுழைவாயில் வந்து நின்றது..
இப்போது இதை கொடுக்கவா…? இல்லை தான் வந்தது தெரியாது அப்படியே சென்று விடவா என்று அவள் ஒரு முடிவுக்கு வரும் முன் ஆதித்யன்..
தன் வாய் மீது கை வைத்து கொண்டு.. “ டேய் பேபியை வைத்து கொண்டு…” என்று சொன்னவன்.. பின் என்ன நினைத்தானோ…
“இன்னையில் இருந்து பேபி என் கூட இருக்கட்டும்…” என்று சொல்ல…
ஆதித்யனின் இந்த பேச்சை கேட்ட பின்.. ஜீவ ஜோதி தான் வந்த தடம் தெரியாது சென்று விட தான் பார்த்தாள்.. ஆனால் அதற்க்குள் குழந்தை விவாகா அன்னையை பார்த்து விட்டாள்…
“ம்மா அப்பா ஸ்டாங் மேன் தானே…” என்று ஆரம்பித்தவளின் பேச்சு அதற்க்கு அடுத்து எதை நோக்கி நகரும் என்பதை தெரிந்து கொண்ட ஆதித்யன்..
“பேபி…” என்று மட்டும் அழைத்து குழந்தையை அடுத்து பேச விடாது தடுத்து நிறுத்தியவன்.. அங்கு இருந்த தன் கை பேசியை எடுத்து ஷாஷாவுக்கு அழைத்தவன்..
“ஷா நான் உன்னை பார்க்கனும்…” என்று சொல்லி கொண்டே குழந்தையோடு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்…
இப்போது அந்த உடற்பயிற்சி கூடத்தில் இருவரும் மட்டுமே தான் மிச்சம்..
இன்னுமே ஹர்ஷவர்தன் திரும்பி அந்த உடற்பயிற்ச்சி கூடத்தின் வாசலில் நின்று கொண்டு இருக்கும் மனைவியின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை தான்….
ஆனாலுமே ஹர்ஷவர்தனுக்கு மனைவியின் சிவந்த முகமும்.. ஒரு வித கூச்சத்தோடு கீழ் நோக்கிய பார்வையுமாக கையில் பானத்தை வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தவளை தன் முன் இருந்த கண்ணாடி வழியாக ரசித்து கொண்டு தான் இருந்தான்…
இந்த நிலை எத்தனை நேரம் தான் நீடிக்க வைப்பது.. தான் வந்து நின்று இத்தனை நேரம் சென்றும் கணவன் ஒன்றும் பேசாது இருப்பதில், ஜீவ ஜோதி மெல்ல தன் தலையை நிமிர்த்தி பார்த்தாள்….
பார்த்தவள் கண்ணுக்கு கண்ணாடி வழியாக தன்னையே பார்த்து கொண்டு இருந்த கணவன் தெரிய….
ஜீவ ஜோதி மீண்டும் சட்டென்று தலை குனிந்து கொண்டு விட்டாள்…
இதுமே ஹர்ஷவர்தன் கண்ணாடி வழியாக பார்த்தவனுக்குமே சொல்ல முடியாத ஒரு உணர்வு மனதில் எழுந்தது…
எத்தனையோ விளம்பரத்தில் பெண்களோடு நெருக்கமாக நடித்து இருக்கிறான்…ஆனால் அப்போது எல்லாம் எழாத இந்த உணர்வு அலை அவனுக்கு புதியதாக இருந்தது… பிடித்தும் இருந்தது.. கூடவே நீ டீன் ஏஜிலா இருக்கே..
ஆறு வயது குழந்தைக்கு நீ அப்பன் டா என்று அவன் அறிவு அவனுக்கு எடுத்து கொடுத்தது தான்.. இருந்துமே அந்த உணர்வு எழுவதை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை..
தன்னை பார்த்து குனிந்து கொண்ட மனைவியின் பக்கம் வந்து நின்றவன் அவனே அவள் கையில் இருந்த பானத்தை எடுத்து கொண்டவன் ..
மற்றொன்றை காட்டி.. “ இது ஆதிக்கா…?” என்று கேட்டான்..
பெண்ணவளுக்கு ஹர்ஷவர்தனை போல அந்த சமயம் சாதாரணமாக பேச முடியவில்லை….
அதனால் ஆம் என்று தலையாட்டல் மட்டுமோ கொடுக்க…
அதை இன்னொரு கையில் எடுத்து கொண்டவன்….
“குழந்தைக்கு நீ கொடுத்து விடு…” என்று விட்டு தன் நெருக்கத்தை இன்னும் கூட்டி மனைவியை சோதிக்காது அங்கு இருந்து சென்று விட்டான்…
ஆனால் ஜீவ ஜோதிக்கு உடற்பயிற்சி கூடத்தை விட்டு வெளியில் வர சிறிது நேரம் தேவைப்பட்டது..
தினம் தினம் இதுவே ஜீவ ஜோதி ஹர்ஷவர்தன் குழந்தை என்று வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது..
ஆதித்யன் தனியாக வீடு பார்த்து சென்று விடுகிறேன் என்று தான் சொன்னான்.. ஆனால் ஹர்ஷவர்தன் அதற்க்கு விடவில்லை..
“ஷாவை திருமணம் செய்து கொண்டு தனியா போ… உங்க இரண்டு பேருக்கும் அப்போ தான் பிரவேசி தேவைப்படும்…” என்று சொன்னவனிடம்..
ஆதித்யன்.. “அது தான் டா.. நான் உனக்கு கொடுக்க நினைக்கிறேன்.. நான் இங்கு இருப்பது ஜோக்கு கம்பர்டபுல் கொடுக்காது தான் டா.. உனக்கு தான் நான் பிரண்ட் ஆனா ஜோக்கு நான் தேர்ட் பர்சன் தானே…”
ஆதித்யன் தான் தனியே போவதற்க்கு உண்டான காரத்தணத்தை ஹர்ஷவர்தனிடம் சொன்னான்.. ஆனால் அதற்க்கு ஹர்ஷவர்தன் சொன்ன…
“இப்போதைக்கு நானுமே ஜோக்கு தேர்ட் பர்சன் தான் ஆதி…” என்றதில்..
“ஹர்ஷ்…என்ன சொல்ற…ஜோ இங்கு வந்து ஒன் மந்த் ஆகுது ஹர்ஷ்… இன்னுமே உங்களுக்குள் சரியாகவில்லையா….?” என்று அதிர்ந்து போய் தான் கேட்டான்…