ஆம் ஜீவ ஜோதி இங்கு வந்து ஒரு மாதம் ஆகிறது.. இருவரின் வாழ்க்கையும் வெளிப்பார்வைக்கு நன்றாக செல்வது போல இருந்தாலுமே, இன்னும் அனைத்தும் சரியாகவில்லை என்பது தான் உண்மை…
அந்த ஒரு பார்வையின் மாற்றம் இருவருக்கும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.. அந்த பார்வை இருவருக்கும் பிடித்தும் தான் இருக்கிறது..
ஆனால் அதையும் தான்டி ஹர்ஷவர்தனும் ஜீவ ஜோதியின் பக்கம் தங்களின் வாழ்க்கையின் அடுத்த நகர்வாக ஒரு அடியை எடுத்து வைக்கவில்லை.. ஜீவ ஜோதியுமே கணவன் பக்கம் செல்லவில்லை…
ஆனால் மற்றப்படி நல்ல மனைவியாக கணவன் குழந்தைக்கு மட்டும் அல்லாது ஆதித்யனுக்கும் அவர்களின் உடற்கட்டுப்பாட்டிற்க்கு தேவையான உணவை அவளே சமைத்து கொடுக்கிறாள்..
இடை இடையே ஆண்களுக்கு என்று பிரத்தியோகமாக அவள் வடிவமைத்த உடையையும் சந்தை படுத்த ஜானை பார்த்தும் வருகிறாள். தான்.. சில சமயம் ஹர்ஷவர்தனே அழைத்து செல்வான்.. சில சமயம் ட்ரைவர் கொண்டு அவளே தனித்தும் சென்று வருவாள்…
ஜீவ ஜோதியின் அக்கா குடும்பம்.. ஜீவ ஜோதி ஹர்ஷவர்தன் வீடு வந்து அடுத்த வாரமே இந்தியாவுக்கு சென்று விட்டனர்… சென்ற உடன் சுபாஷ் ஜீவிதா தாட்சாயிணி பேசியது.. பின் தாட்சாயிணியே ஜீவ ஜோதியிடம் தீர்த்து சொல்லி விட்டார்….
“நீ அங்கு பார் என்று.. தேவைப்பட்டா மட்டும் அழை என்றும்…
இப்படி ஜீவ ஜோதியின் அக்காவின் உறவு முற்றிலும் முடிந்தது என்று சொல்ல முடியாது என்றாலும், முன் போல தொடர்பு இல்லை.. அதனால் ஜீவ ஜோதியின் நினைவு முழுவதுமே இப்போது குழந்தை கணவன்.. தன் ஆடை வடிவமைப்பு என்று தான் செல்கிறது… அது நன்றாக தான் செல்கிறது..
ஆனாலுமே ஹர்ஷவர்தனுக்கும் சரி ஜீவ ஜோதிக்கும் சரி ஏதோ குறைவது போல ஒரு உணர்வு….
ஏதோ என்ன..? ஏதோ… கணவன் மனைவிக்குள் நடக்கும் அந்த தாம்பத்தியத்தின் வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்க இருவருக்குள்ளும் அவ்வளவு தயக்கம்….
ஜீவ ஜோதிக்கு தயக்கம் என்றால், ஹர்ஷவர்தனுக்கு தயக்கத்தையும் தான்டி பயம்.. ஆம் உண்மையில் பெண்ணவளை மீண்டும் தொட அவன் மனது துடித்தாலுமே, அதையும் தான்டி அவன் மனதில் பயமும் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை…
திருமணம் ஆன அந்த பதினைந்து நாள் வாழ்வில், நடந்தது அவனுக்குள் பயத்தை கொடுத்து இருந்தது..
இன்னொன்றும் அவன் மனது ஒத்துக் கொண்டது.. அப்போதே தனக்கு ஜீவ ஜோதியை பிடித்து இருந்தது என்பதை..
அதனால் தான் அன்று தான் அத்தனை அசிங்கப்பட்டும்.. தன்னை பற்றி அத்தனை கீழ்த்தரமாக மீடியாவும்.. அப்பாவின் எதிர்கட்சியும் பேசிய போதும்…
மனைவி பற்றிய உண்மையை.. அதாவது அக்காவின் பெயரில் தான் தன் மனைவி தன்னோடு இத்தனை நாள் இருந்தாள் என்ற உண்மையை சொல்லவில்லை..
அதன் பின்னும்.. மனைவியின் நியாபகம் இல்லாது அவனுக்கு ஒரு நாள் சென்றது இல்லை என்பது தான் உண்மை… மனது மனைவியோடு சேர தான் துடித்தது.. ஆனால் சேர அவன் மனதில் ஏதோ ஒரு தயக்கம்….
அந்த தயக்கம் என்ன என்பது மனைவி அருகில் இருக்கும் இந்த ஒரு மாத காலம் அவனுக்கு புரியவைத்து விட்டது….
தான் அன்று அவளிடம் கேட்டு அவளை எடுத்து கொண்டு இருந்தாலும், அன்று அவளுக்கு அது புரியும் வயது கிடையாது….
அதோடு அவளையுமே தன் அம்மா அப்பா அவள் அம்மா அப்பா பயம் முறுத்தி தான் தன் அறைக்குள் அவளை அனுப்பி இருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயம்…
அந்த பயத்தில் அன்று தன்னை ஒத்து கொண்டு இருந்து இருப்பாளோ.. அதோடு இப்போது அவளுக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்று அவளின் பார்வை அவனுக்கு உணர்த்தினாலும்,
அடுத்த அடி.. அதாவது மனைவியை நெருங்க பயம். காரணம் தன்னை தவறாக நினைத்து கொள்வாளோ என்று.. முன் செய்த தான் செய்த செயலில் தன்னை பற்றி மனைவி என்ன நினைத்து இருப்பாள்.. காய்ந்து போனவன் பாய்ந்தது போல தன் மீது பாய்ந்து விட்டான் என்றா..
இப்போதும் தான் நெருங்கினால், தன்னை அது போல நினைத்து கொண்டாள்….
ஆனால் இதை அனைத்தும் தான்டி.. மீண்டும் மனைவியை தாய்மையாக்க அவன் மனது துடித்து கொண்டு தான் இருந்தது…
இந்து துடிப்பு காமத்தினால் கிடையாது.. விவாகாவிடம் தான் விட்ட விசயங்கள் அனைத்தையும் அடுத்த குழந்தை மூலம் தானும் பெற வேண்டும் மனைவிக்கும் கொடுக்க வேண்டும் என்பது தான் அவன் மனது முழுவதும் ஆசை… ஆனால் அதன் ஆரம்பம் எப்படி என்பது தான் அவனுக்கு புரியவில்லை….
ஆதித்யன் கேட்டதற்க்கு தன் மனதில் இருந்த தயக்கம் அனைத்தையும் சொல்லி விட்டான்…
கேட்ட ஆதித்யன்.. “நீ முட்டாள் ஹர்ஷ்.. நிஜமா சொல்றேன் முட்டாள் தான்… எனக்கு தெரியுது ஹர்ஷ் ஜோக்கு உன்னை பிடித்து இருக்கு என்று.. அது உண் கண்ணுக்கு தெரியலையா..?”
“இப்படியே நீ மனசுல அப்படி பிடித்தம் இருந்தாலும், தள்ளி இரு.. ஜோவும் தள்ளி இருக்கட்டும்.. குழந்தை வானத்தில் இருந்து குதித்து விடும்…”
அன்று ஜீவ ஜோதி தன் உடை வடிவமைப்பின் மாற்றம் பற்றி பேச ஜானை பார்க்க சென்று இருந்ததினால், வீட்டில் ஆண்கள் இருவரும் தனியாக இருந்த சமயம் தான் இந்த பேச்சுக்கள் எல்லாம் நடந்தது….
அந்த சமயம் சரியாக அந்த இடத்திற்க்கு வந்த ஷாஷா.. “ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆன ஹர்ஷுக்கு நீ ட்யூஷன் எடுத்து கொண்டு இருக்கியா ஆதி…” என்று கிண்டலுடன் கேட்டு கொண்டே அவர்கள் இருவரின் முன்னும் வந்து நின்றவள்….
ஆதித்யன் அருகில் நெருங்கி நின்று கொண்டவள்…
“நமக்கு பேபி வருவதை பற்றி நீ எப்போ யோசிக்க போற மேன்…?” என்றும் கேட்டாள்…
“உனக்கு ஆட்சபனை இல்லை என்றால், நாம அதற்க்கு உண்டான பிராசஸில் இப்போதே இறங்கலாமா ஷா…” என்று ஒரு மாதிரியாக கேட்க.
“நான் நம்ம மேரஜ் எப்போ என்பதை தான் கேட்டேன் மேன்…” என்று கேட்டவளின் முகத்திலும் சரி குரலிலும் சரி.. இப்போது தீவிரம் தெரிய…
ஆதித்யனும் ஹர்ஷவர்தனும் ஒரே சமயத்தில். “என்ன ஷா… திரும்ப உன் வீட்டில் பிரச்சனை செய்யிறாங்கலா…?” என்று கேட்டதற்க்கு..
ஒரு மாதிரியாக சிரித்த ஷாஷா. “ அவங்க பிரச்சனை செய்வது புதுசா… என் கிட்ட இருக்கும் மொத்த சொத்தும் கொடுத்தாலும், பத்தாது தானே சொல்லுவாங்க…” என்று சொன்னவள்.
.
கூடவே… “இது வரை என் சொத்து என் மூலம் வரும் பணம்.. இதை மட்டும் தான் யோசிச்சிட்டு இருந்தாங்க. ஆனா இப்போ அதை எல்லாம் மீறி என் அம்மா என்னை மொத்தமா விற்க ப்ளான் செய்யிறாங்க…” என்றவளின் பேச்சு இரு ஆண்களுக்கும் புரியவில்லை…
“என்ன ஷா சொல்ற….?” என்று கேட்க.
“ஐம்பது வயது கிழவனுக்கு என்னை மேரஜ் செய்து வைக்க என் வீட்டில் ப்ளான் நடக்குது ஆதி…”
இது வரை இருவரையும் பார்த்து பொதுவாக சொல்லி கொண்டு இருந்தவள்.. இந்த கடைசி திருமண பேச்சை மட்டும் ஆதித்யாவை பார்த்து கூறினாள்…
ஆதித்யனின் பார்வையும் இப்போது ஒரு வித தீவிரத்துடன் ஷாஷாவின் முகத்தில் தான் இருந்தது…
அவனுமே நக்கலாக சிரித்து கொண்டே. “ ப்ளான் அவங்க செய்யட்டும் நாமே மேரஜ் செய்து கொள்ளுவோம்..” என்று சொல்ல..
இப்போது தான் அங்கு அதிகப்படி என்று உணர்ந்து கொண்டு ஹர்ஷவர்தன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்..
ஆதித்யன் சொன்னப்படியே அடுத்த வாரமே அவர்களின் திருமணம் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்து விட்டான்..
ஆதித்யன்.. திருமண வேலைகள் அனைத்திற்க்கும் ஹர்ஷவர்தனும் பக்கபலமாக உதவி செய்ய. ஷாஷாவுக்கு திருமணத்திற்க்கு உண்டான நகை புடவை என்று ஜெர்மனியில் இந்திய உடையை தேர்தெடுப்பத்து கொடுப்பது ஜீவ ஜோதி பெரும் உதவி செய்தாள்….
ஜீவ ஜோதியின் தொழிலே ஆடை வடிவமைத்து கொடுப்பது தானே… அதனால் மெட்டிரியல் மட்டுமே எடுத்தவள்.. ஆடை வடிவமைத்து கொடுக்கும் மொத்தமும் அவளே.. ..செய்து கொடுத்தாள்..
ஷாஷாவுக்கு மட்டும் அல்லாது ஆதித்யனுக்குமே ஷாஷாவின் உடைக்கும் வடிவமைப்பிற்க்கும் ஏற்ப செய்து கொடுத்தாள்..
திருமணத்திற்க்கு என்று தங்கள் குடும்பம் தனித்து தெரியும் படி ஹர்ஷவர்தனுக்கும் தனக்கும் விவாகாவுக்கும் என்று ஒன்று போல் நிறம் டிசைன் என்று பிரத்தியோகமாக வடிவமைத்து விட்டாள்…
அனைத்தும் நன்றாக தான் நடந்து கொண்டு இருந்தது.. என்ன ஒன்று ஷாப்பிங் செல்லும் போது ஆதியும் ஷாவும் கொஞ்சம் நெருக்கமாக இருப்பார்கள்..
அந்த நாடும்.. அவர்களின் தொழிலும்.. இது தவறு இல்லை என்று சொல்ல. அதற்க்கு ஏற்றது போல நடந்தார்கள்..
ஹர்ஷவர்தனுமே அங்கு ஆண்டு கணக்கில் இருந்ததினாலும்.., அவனுமே இது போல காட்சி அந்த நாட்டில் மட்டும் அல்லாது அவன் இருந்த தொழிலிலும் பார்த்ததினால், அது அவனுக்கும் பெரியதாக தெரியவில்லை தான்…
ஆனால் ஜீவ ஜோதிக்கு இது போலான நேரத்தில் அவளின் முகம் காட்டும் பாவனையிலும், அப்போது மட்டும் தன்னை பார்க்கும் அந்த பார்வையிலும், அந்த காட்சி வேறு ஒரு ரூபத்தில் அவன் மனதிற்க்கு தனித்து தான் தெரிந்தது…
இது அனைத்திற்க்கும் சிகரம் வைத்தார் போல… அன்று ஷாப்பிங் செய்த போது ஹர்ஷவர்தன் குழந்தையை தூக்கி வைத்து கொண்டு பெண்கள் செல்ல அவர்களை தொடர்ந்து ஆண்கள் நடந்து கொண்டு இருந்தனர்..
ஆல்மோஸ்ட் அன்று அனைத்து திருமணத்திற்க்கு தேவையானதை வாங்கி முடித்து விட்டனர்.. குழந்தைக்கு சின்ன சின்ன வைர கற்கள் வைத்த சின்ன நெக்லஸ் வாங்க ஹர்ஷவர்தன் ஆசைப்பட்டதினால் தான் அந்த இந்திய நகைகடையை நோக்கி பெண்கள் சென்றது…
நகையும் விவாகாவின் கழுத்தில் வைத்து பார்த்து வாங்கியும் விட்டனர்… குழந்தை பார்க்க சோர்வாக தெரியவும் ஹர்ஷவர்தன் மீண்டும் குழந்தையை தூக்கி கொண்டு தான் அப்போது ஆதித்யனிடம் ஏதோ பேசி கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான் ஹர்ஷவர்தன்…
அப்போது அந்த நாட்டின் டீன் ஏஜில் இருந்த பெண்கள் கும்பலாக அந்த இடத்திற்க்கு வந்தனர்… அனைத்து பெண்களுக்கும் வயது பதினாறு அல்லது பதினெழு தான் இருக்கும்…
அதில் ஒரு பெண் ஹர்ஷவர்தனை பார்த்து.. அவனை அடையாளமும் கண்டு கொண்டு மற்ற பெண்களிடமும்..
“ஏய் மாடல் ஹர்ஷவர்தன்.. “ என்று இவனை நோக்கி கை காட்டி சொன்னது தான் தாமதம் அதில் ஒரு பெண் ஹர்ஷவர்தனை நோக்கி ஓடி வந்தவள்..
ஹர்ஷவர்தன் என்ன என்று உணர்ந்து அந்த பெண்ணை தவிர்ப்பதற்க்குள் அந்த பெண் ஹர்ஷவர்தனை ஏக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள்..
அந்த பெண்ணின் முத்தம் இடும் இடமாக ஹர்ஷவர்தன் இதழை தான் தேர்வு செய்தது… ஆனால் ஹர்ஷவர்தன் சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டு விட்டதால், அந்த பெண்ணின் முத்தம் கன்னத்தில் பதிந்து விட்டது…