ஹர்ஷவர்தனுக்கு இது போலான ஒரு நிகழ்வு புதியது கிடையாது.. பொது வெளிக்கு வந்து விட்டால், அவன் விருப்பு வெறுப்பையும் தான்டி இது போலான நிகழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி தான் இருக்கும்….
இன்றாவது கன்னத்து முத்தம்.. இதழ் முத்தம் கூட அவனின் ரசிகர்கள் இது போலான பொது வெளியில் கொடுத்து இருக்கிறார்கள்….
வயது வித்தியாசம் இல்லாத இதழ் ஒத்தட்டம் அவனுக்கு புதியது கிடையாது.. ஏன் ஒரு சில முறை ஆண்களிடம் இருந்து கூட அவனுக்கு கிடைத்து உள்ளது தான்….
ஆனால் இப்போது பிரச்சனை இந்த முத்தம் கிடையாது.. தன் மகள் கையில் இருக்க கிடைத்த அந்த முத்தம் முதல் முறையாக அதிர்ச்சியை கொடுத்தது….
ஆம் ஹர்ஷவர்தன் இந்த விசயத்தில் மனைவியோடு குழந்தையை தான் மனதில் முன் நிறுத்தினான்…
ஹர்ஷவர்தனுக்கும், ஆதித்யனுக்கும் அவனை சுற்றி பாடிகார்ட் எப்போதும் கூட வருவார்கள்.. ஆனால் அவன் அருகில் இல்லாது சிறிது இடை வெளிவிட்டு தான் பின் தொடர்வது….
இதோ இது இன்று வரை ஜீவ ஜோதிக்கு கூட தெரியாது .. காரணம்.. குடும்பமாக வரும் போது அந்த பாடிகார்டின் இடைவெளியை இன்னும் அதிகப்படுத்தியதே …
அந்த இளம் பெண் ஹர்ஷவர்தனுக்கு முத்தம் கொடுத்த நொடி அந்த பார்டி கார்ட் எங்கு இருந்து வந்தார்களோ… வந்தவர்கள் அந்த இளம் பெண்களை அப்புறம் படுத்தி விட்டார்கள்..
இந்த அனைத்து நிகழ்வு நடை பெற்று கொண்டு இருக்கும் போது அனைத்திலுமே ஹர்ஷவர்தனின் கையில் குழந்தை இருந்தது..
அதாவது தந்தைக்கு அந்த பெண் முத்தம் கொடுக்கும் போதுமே ஹர்ஷவர்தன் கையில் விவாகா இருந்தாள்…
இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், முத்தம் இட்ட கன்னத்தை அவன் துடைக்கும் முன் தன் பிராக்கை தூக்கி விவாகா துடைத்து விட. அவனால் தன் மகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை…
மனைவியை கூட நினைத்து பார்க்காத ஆண்கள் இருப்பார்கள்.. ஆனால் மகளை முன் நிறுத்தி பார்க்காத ஆண்கள் நம் நாட்டில் குறைவு தான்….
அதனால் தான் பெண்களுக்கு உண்டான சட்டத்தை இயற்றும் போது மனைவியை நினைத்து எழுதாதே… மகளை நினைத்து சட்டம் எழுது என்று சொன்னார்கள் போல…
ஹர்ஷவதனுக்குமே மகளின் மனநிலை.. என்று யோசித்து கொண்டு இருந்த போது விவாகா தன் அப்பாவை பார்த்து…
“ப்பா பாய்ஸ்க்கு குட் டச்.. பேட் டச் எல்லாம் இல்லையாப்பா….ம்மா என் கிட்ட சொல்லி இருக்காங்க.. இங்கே இங்கே.. மத்தவங்க டச் பண்ண கூடாது…”
“தெரியாதவங்க கிஸ் பண்ண விட கூடாது என்று.. உங்களுக்கு உங்க மம்மி சொல்லி கொடுக்கலையாப்பா…?”
மகள் கேட்ட கேள்விக்கு பாவம் பதில் தெரியாது.. பதில் சொல்ல முடியாது திரு திருத்து மகளை பார்த்து கொண்டு இருந்தான் ஹர்ஷவர்தன்….
தந்தையின் பார்வையின் மகள் என்ன புரிந்து கொண்டாளோ.. “சரிப்பா.. உங்களுக்கு தெரியலேன்னா. உங்க மம்மி சொல்லி கொடுத்து இருக்கலேன்னா. நான் சொல்லி தரேன்ப்பா.. இது போல கிஸ் பண்ணா நீங்க ஷாக் ஆனிங்கலே அப்படி ஆக கூடாது…
அவங்களை பிடிச்சி இப்படி தள்ளி விட்டுட்டு.. சத்தம் போட்டு கத்தனும்.. அழனும்.. அப்போ தான் மத்தவங்க எல்ப் பண்ண வருவாங்க…” தன் அன்னை தனக்கு சொல்லி கொடுத்ததை ஒன்று விடாது மிக அழகாக தன் தந்தைக்கு சொல்லி கொடுத்தாள்…
தந்தைக்கு மகளின் பேச்சை கேட்டு அப்படி ஒரு ஆனந்தம்.. இழுத்து கன்னத்தில் முத்தம் இட்டான்.. தன் மகளை இத்தனை அறிவாக வளர்த்த அவள் அன்னைக்கும் முத்தம் வைக்க அவன் மனது கள் வெறிக் கொண்டது…
இத்தனை நாள்.. எப்படி தங்கள் வாழ்க்கையின் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்று கணவனாக தயங்கி நின்றவனுக்கு….
ஒரு தந்தையாக தன் வாழ்க்கையை அடுத்த அடி நோக்கி எடுத்து வைக்க வேண்டிய அவசியத்தை அவனுக்கு எடுத்து உரைத்தது…
அது கொடுத்த தாக்கத்தில் இத்தனை நாள் மனைவியை விட்டு சிறிது இடைவெளி விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தவன் ஒரு கையில் குழந்தையை தூக்கி கொண்டு இருக்க தன் மற்றொரு கையை மனைவியின் தோள் மீது போட்டவன். தன்னை நிமிர்ந்து பார்த்த மனைவியிடம்…
“இது போல வந்து இருந்தா அந்த பெண் என் கிட்ட கூட வந்து இருந்து இருக்காது.” என்று வேறு கதை படித்தான்….
பக்கத்தில் நடந்து வந்து கொண்டு இருந்த ஆதித்யன் காதில் ஹர்ஷவர்தன் பேச்சு தெளிவாக விழ..
“பார்த்துடா உன் பொண்ணு ம்மா மேல பேட் டச் பண்ற என்று உன்னை கேள்வி கேட்க போறா….?” என்ற நண்பனின் இந்த கேள்வியில் ஹர்ஷவர்தன் உண்மையில் பயந்து மகளை பார்த்தான்..
மகளோ தன் தோள் மீது சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக ஷா சொன்ன…
“பாரு உன் ஆதி அங்கிள் பேட் அங்கிள்.. என்னை ஹக் பண்றார்… டச் பண்றார்…” தன் தோள் மீது கை போட்டு கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்த ஆதித்யனை சுட்டி காட்டி சொல்ல…
ஷாஷாவின் பேச்சுக்கு மகளின் பதில் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் ஹர்ஷவர்தனுக்கும் வந்து விட.. மகளை பார்த்தான்….
அவனின் மகளோ… “ ஆன்ட்டி இது பேட் டச் கிடையாது… தெரியாதவங்க… யாரும் இல்லாத போது இப்படி டச் பண்ணா தான் பேட் டச்… நீங்க ஆதி அங்கிளை தானே மேரஜ் செய்துக்க போறிங்க.. அப்போ அது குட் டச் தான்…” என்று சொன்ன விவாகா..
கூட தன் தந்தை தன் தாய் மீது போட்டு இருந்த கையை சுட்டி காட்டி.. “ப்பா கூட ம்மா மீது கை போட்டு இருக்காங்க பாருங்க… அவங்களுக்கு மேரஜ் ஆகிடுச்சிலே.. அதனால அது குட் டச்..” என்று விளக்கம் சொன்னாள்…
மகளின் இந்த தெளிவு அன்னைக்கே புதியது தான். ஏன் என்றால், அவள் மகளுக்கு இதை சொல்லி கொடுக்கவில்லை….
இதை சுபாஷ் ஒரு நாள் ஜீவிதாவின் மிக அருகில் அமர்ந்து இருந்த போது.. விவாகா… கேட்க.. அதற்க்கு சுபாஷ் இது போலான ஒரு விளக்கத்தை கொடுத்தது ஜீவ ஜோதிக்கு தெரியாது.. அதனால் கணவன் பார்வையில் நான் சொல்ல தரவில்லை என்று வாய் அசைத்து சொல்ல…
ஹர்ஷவர்தன் சடுதியில் புரிந்து கொண்டு விட்டான்.. மகள் பார்க்க ஜோடியாக இருந்தது சுபாஷ் ஜீவிதா மட்டுமே .. அவர்கள் தான் சொல்லி இருப்பார்கள் என்று…
ஆனால் அவனுக்கு இப்போது தெரிய வேண்டியது அது கிடையாது.. தனக்கும் ஜீவ ஜோதிக்கும் திருமணம் முடிந்து விட்டது என்று மகள் எப்படி சொல்கிறாள் என்பது தான்.. போகும் வழியில் அதையும் கேட்டு தெளிவு படுத்தி கொண்டான்….
இந்த காலத்து குழந்தைகள் மிக தெளிவாகவே இருக்கின்றனர்.. பேபி இருந்தா மேரஜ் ஆகி இருக்குமாம்.. ஹர்ஷவர்தனுக்கு விவாகா சொன்னது….
சொல்லி விட்டு.. “ப்பா உங்களுக்கு இது தெரியாதா…?” என்று வேறு கேட்டாள்…
ஹர்ஷவர்தனுக்கு இன்று மகளிடம் பேசியதில் புரிந்து கொண்டதும்.. தெரிந்து கொண்டதும் ஒன்று தான்….
இன்னும் தங்கள் வாழ்க்கை இப்படியே சென்றால், கண்டிப்பாக மற்ற அப்பா அம்மாவுக்கும் தங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை குழந்தைக்கு தெரிந்து விடும் என்பதும்…
கூடவே இன்னும் தங்கள் திருமணமே இன்னும் முழுமை பெறாது தான் இருக்கிறது.. அதையுமே சரி செய்து விட வேண்டும் என்றும்..
அதனால் இரவு சாப்பிடும் போது ஹர்ஷவர்தன் ஆதித்யனிடம்.. “இன்னைக்கு பேபியை உன் கூட படுக்க வைத்து கொள் ஆதி…” என்று சொல்ல…
ஹர்ஷவர்தனை அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்த ஜோவை பார்த்து கொண்டே ஆதித்யன்..
“ஓகே ஹர்ஷ்… இன்னைக்கு இல்ல… என்னைக்குமே பேபி என் கூட படுத்தா நான் ஹாப்பி தான்..” என்று விவாகாவின் கன்னத்தை தொட்டு சொல்ல…
“நெக்ஸ்ட் வீக் ஷாவை மேரஜ் செய்த பின்னுமா….?” என்ற கேள்வியில் பாவம் ஆதித்தன் என்ன சொல்வது என்று திரு திரு என்று பார்க்க….
ஹர்ஷவர்தன் பேச்சில் அதிர்ச்சியில் இருந்த ஜீவ ஜோதி இந்த பேச்சில் சிரித்து விட்டாள்…
அதே சிரித்த மனநிலையிலேயே ஆதி குழந்தையை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்….
ஜீவ ஜோதிக்கு கணவன் தன்னிடம் பேச தான் குழந்தையை ஆதியுடன் அனுப்பி இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் தான்..
இருந்தும் முதல் முறை கணவனோடு தனித்து இருப்பது.. அவளுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் கண் முன் வலம் வந்தது…
அதில் கணவன்.. “வதி வதி..” என்று தன்னை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை…
அதனால் ஹர்ஷவர்தன் தோள் பற்றி… “ வதி என் கூட தனியா இருக்க பயம் என்றால், குழந்தையை வாங்கிட்டு வரேன்.. “ என்று சொன்னதோடு ஆதியின் அறையை நோக்கியும் செல்ல..
கணவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய அவனின் வதி.. “ உங்க கிட்ட எனக்கு என்ன பயம்.. ? ஏன் நான் உங்க கூட தனியே இருந்தது இல்லையா… அதுவும் அந்த வயதிலேயே….”
கணவனின் இறுகிய முகத்தில், அவனை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன்… ஜீவ ஜோதி இப்படி சொல்லி விட்டாள்..
சொல்லிய பின் தான்.. சொன்னதை நினைத்து பார்க்க.. என்னவோ போலான முக பாவனை இப்போது ஜீவ ஜோதியின் முகத்தில் கணவனை இப்போது தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்…
ஹர்ஷவர்தனோ அவனுக்கு மிகவும் பிடித்த அந்த உப்புலான கன்னம்.. அன்று போல இன்றும் ஈர்த்தது…
குழந்தைக்கும் மனைவியின் கன்னம் போல் தான் இருக்கும்… மனைவியின் முகத்திலும்.. தோற்றத்திலும் நடையிலும் இந்த ஏழு வருடத்தில் நிறைய மாற்றம்..
ஆனால் அன்றும் இன்றும் மனைவியிடம் மாறாது இருக்கும் அவனுக்கு மிகவும் பிடித்த அந்த கன்னத்தை தொட்டு பார்க்க.. தோன்ற… அவனின் கை மனைவியின் கன்னத்தை நோக்கியும் நீண்டு விட்டது….
தன் கை நீண்டலில் தன்னை அதிர்ச்சியோடு பார்த்த மனைவியின் அந்த பார்வையில் அவன் கை மேலும் முன்னேறவில்லை என்றாலும், கீழேயும் இறக்கவில்லை….
மனைவியிடம் கேட்டான். அனுமதி கேட்டான்… “ உன் கன்னத்தை நான் தொடவா… “ என்று…
கணவனின் இந்த அனுமதிக்கு என்ன சொல்வது… என்ன ரியாக்ட் செய்வது என்று கூட தெரியாது பாவன் ஜீவ ஜோதி முழித்து கொண்டு இருக்க…
மீண்டும் ஹர்ஷவர்தன் “ உன் கிட்ட மனசு விட்டு பேசிட்டு தான் மத்தது எல்லாம் என்று நான் முடிவு செய்து இருக்கேன் வதி.. அதுவும் உனக்கு பிடித்து இருந்தால் மட்டுமே.. இது இது…” தன் ஒரு விரல் கொண்டு அவன் கன்னத்து பகுதியின் மிக அருகில் கொண்டு சென்றவன்.. கன்னத்தை தொடாது…
“ஆனால் இதை மட்டும் டச் பண்ணனும் என்று தோனுது.. இது பேட் டச்சில் சேராது தானே….” மகளின் பேச்சை இதில் கொண்டு வந்து ஹர்ஷவர்தனின் பேச்சில் ஜீவ ஜோதி சிரித்து விட்டாள்…
மீண்டும் ஹர்ஷவர்தன்.. “ டச் பண்ண நீ இன்னும் பர்மிஷன் கொடுக்கலையே வதி…”
‘அய்யோ இதுல என்னடா இருக்கு தொட்டு தான் தொலையேன்… இது போல கேட்டு இம்சை செய்வதற்க்கு தொடுவது என்ன ஒரு முத்தம் கூட வைத்து கொள்டா…’ என்று தான் ஜீவ ஜோதி மனத்தில் நினைத்து கொண்டாள்..
ஆனால் வெளியில். “ம்..” என்று சின்ன குரலில் சம்மதம் சொன்ன நொடி.. அவள் கன்னத்தின் மிக அருகில் இருந்த அவனின் அந்த ஒற்றை விரல் தான் முதலில் அவளின் அந்த உப்பிய கன்னத்தை தொடும் பாக்கியம் பெற்றது…
அந்த ஒற்றை விரல் அனுபவித்த அந்த மென்மையின் உணர்வை மற்ற விரல்கள் மட்டும் அல்லாது அவனின் உள்ளங்கையுமே கேட்க.
சட்டென்று தன் இரு உள்ளங்கை கொண்டு மனைவியின் கன்னத்தை தாங்கி கொண்டான்..
அவளின் கன்னத்தை விட மென்மையான குரலில்…
“ உனக்கு சின்ன வயசுல கூட பிம்பிள்ஸ் வந்தது இல்லையா வதி….” என்று கேட்டவனுக்கு பதில் தெரிய வேண்டி அவள் கண்ணை பார்த்தவனுக்கு…
அங்கு தெரிந்த அதிர்ந்த பார்வையில் சட்டென்று தன் கையை எடுத்து கொண்டவன் தன் தலையை கோதி கொண்டு பின் கலைத்தும் கொண்டும் என்ன என்னவோ செய்து கொண்டு இருந்தவனின் கையை இப்போது ஜீவ ஜோதி கெட்டியாக பிடித்து கொண்டாள்….