பிடித்து கொண்டது மட்டும் அல்லாது மீண்டும் முன் போல தன் கன்னத்தில் அவன் கையை வைத்து கொண்டவள்…
கணவனின் கண் பார்த்து … “பன்னிரெண்டு வயசுல ஒரு பிம்பிள்ஸ் வந்தது.. ஆனா அது உடனே போயிடுச்சி… அப்புறம் வரல.. ஆனா எனக்கு வரனும் என்று ஆசைப்பட்டேன்…”
மனைவியின் செயலிலும்.. பேச்சிலும் ஹர்ஷவர்தனுக்கு சிரிப்பை கொடுத்தது.. கூடவே ஏன் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் கொடுக்க….
“ஏன் ஆசைப்பட்ட..?” என்று கேட்டான்..
“பிம்பிள்ஸ் வந்தா பசங்க நம்மை பார்க்கிறாங்க.. அப்படி பார்த்தா தான் பிம்பிள்ஸ் வருமாம்…” என்று பதில் சொல்ல….
ஹர்ஷவர்தன் மனைவியிடம் இருந்து சத்தியமாக இது போலான ஒரு பதிலை எதிர் பார்க்கவில்லை…
“அடிப்பாவீ…”
இப்போது ஹர்ஷவர்தனின் கைகள் மனைவியின் கன்னத்தில் இருந்து அவனின் வாய்க்கு இடம் மாறி இருந்தது…
“ஆமா பிரன்ஸ் அப்படி தான் சொன்னாங்க.. என்னோட சுமாரான பசங்க கன்னத்தில் எல்லாம் பிம்பிள்ஸ் இருக்கும்…”
“ அவங்க சொன்னது போல தான் பாய்ஸ் அந்த பெண்களை பார்ப்பாங்க .. ஆனா என்னை யாரும் படிக்கும் போது பார்த்தது கிடையாது…” இப்போது நீண்டு மனைவி விளக்கம் சொல்ல…
இப்போது ஹர்ஷவர்தன் மனைவியின் பேச்சை கவனிக்க தொடங்கினான்…
அவளே உணராது வாறு மனைவியின் கை பற்றி தங்கள் அறைக்கு அழைத்து வந்தவன் படுக்கையிலும் அமர வைத்தான்…
தான் கேள்வி கேட்டு மனைவியின் பதிலில் தங்களின் வாழ்க்கையை தெளிவு படுத்தி கொள்ள வேண்டி தான் ஹர்ஷவர்தன் குழந்தையை ஆதித்யன் அறைக்கு அனுப்பி வைத்தது…
ஆனால் அவன் கேள்வி கேளாது மனைவியின் பேச்சின் மூலமே முதலில் அவளை பற்றி தெரிந்து கொள்ள இப்போது விரும்பினான்…
அதனால் தன் பேச்சை மனைவியின் வழிக்கு கொண்டு செல்ல….
“ஏன் உன்னை விட சுமாரான பெண்களை பார்த்த பசங்க உன்னை பார்க்கல…”
என்ன தான் சாதாரணமாக கேட்க நினைத்தாலுமே, இதை கேட்கும் போது ஹர்ஷவர்தன் சிரித்து விட்டான்…
மனைவியின் முறைப்பில்.. “ சரி சிரிக்கல சொல் ஏன் பார்க்கல…?” என்று கேட்க…
“ஒரு சில பசங்க நான் நல்லா படிப்பேன்.. பசங்களின் பார்வையில் நான் படிப்ஸ்.. தயிர் சாதம்… போர்… என்று நினைச்சிட்டாங்க போல… அதனால பார்க்கல..” என்று சொல்ல….
மனைவியின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டி.. “ சரி ஒரு சில பசங்க படிப்ஸ் தயிர் சாதம் என்று பார்க்கல.. மத்த பசங்க ஏன் பார்க்கல…” என்று விளையாட்டு போல மனைவியை பேச வைத்தான்….
இத்தனை நேரமும் சிரித்த முகத்துடம் சொல்லி கொண்டு இருந்த ஜீவ ஜோதியின் முகத்தில் ஒரு பெரும் மாற்றம்…
இப்போது அவளின் குரலிலும் மாற்றம்.. “ அப்பா என் அப்பா… என் அப்பாவை பத்தி எல்லோருக்கும் தெரிந்து இருக்கு.. ஜாதி வெறி பிடித்த மனுஷன்.. என்னை பார்த்தா அவங்க அவ்வளவு தான்….
பசங்களோட அவங்க அப்பா அம்மாவுக்கும் தெரிந்து இருக்கு.. என்னை கை காட்டி அந்த பெண்ணை மட்டும் பார்த்து விடாதிங்க என்று ஒரு அம்மா சொன்னதை நானே கேட்டு இருக்கேன்…” என்று இந்த பேச்சை சொல்லி முடிக்கும் வரை.. அதே குரலில் தான் சொன்னதும்.
பின் மீண்டும் அவள் குரலில் ஒரு உற்சாகம்… “ அதனால தான் அக்கா மாமா லவ் பண்ணது எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது..
என்னை சும்மா கூட பார்க்காத பசங்களை கோழை என்று நினச்சிப்பேன்.. அப்படி பட்ட அப்பா பெண்ணையே லவ் செய்த என் மாமா அப்போ என் கண்ணுக்கு ஹீரோவா தெரிந்தார்…”
மனைவியின் சுபாஷை பற்றிய இந்த விளக்கம். கணவனான ஹர்ஷவர்தனுக்கு பிடிக்கவில்லை.. தன் மனைவியின் மனதில் நான் தான் நாயகனாக இருக்க வேண்டும் என்ற கணவனின் நினைப்பு தான் அவனுக்குமே…
தன் மனைவி அவள் அக்கா கணவனை ஹீரோ ஆக்கியதில் கோபம்.. அது கொடுத்த தாக்கத்தில்…
“யாரு உன் மாமா ஹீரோ…? யாருக்கும் தெரியாம பெண்ணை கூட்டிட்டு போயிட்டு மேரஜ் செய்தா ஹீரோவா.. ? அந்த ஹீரோ ஏன் அப்போ உன்னை கைய்யோட கூட்டிட்டு போகவில்லை… “ என்று கோபத்துடன் கேட்க.
தன் கோபத்திற்க்கு மனைவியும் கோபப்படுவாள் என்று ஹர்ஷவர்தன் நினைக்க.. அவளோ..
“ஆமா அந்த வயசுல நான் அப்படி நினச்சேன்.. ஆனா இப்போ யோசிக்கும் போது… எல்லாம் புரியுது.. அதுவும் அவர் செய்த செயலில் நீங்க பலிக்காடா ஆனதில்…”
ஜீவ ஜோதியினால் அடுத்து பேச முடியவில்லை.. பேச கூடிய விசயமும்.. அது இல்லையே.. அந்த நாளின் நிகழ்வை நினைத்தால் பெண்ணுக்கு இன்னுமே உடல் வெட வெடத்து போய் விடுமே.
இதோ இப்போது கணவனிடம் பேசும் போதே அவள் உடல் முழுவதிலுமே ஒரு நடுக்கம்.. கணவனுக்கு தன்னுடைய நடுக்கத்தை காட்ட கூடாது என்று என்ன முயன்றாலும் முடியாது போக.
அவளின் உடலின் நடுக்கம் மனைவியின் கை பற்றி கொண்டு அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனின் கை உணர..
“வதி. “ சிறிது தள்ளி அமர்ந்திருந்தவன் பக்கம் வந்து அமர்ந்து கொண்டு தோளோடு மனைவியை சேர்த்து அணைத்து கொண்டான்….
மனைவியின் நடுக்கம்.. ஹர்ஷர்தனுக்கு பயத்தை கொடுத்தது.. தான் தவறாக கேட்டு விட்டோமோ.. பேசி விட்டோமோ என்று பயந்து போய் விட்டான்..
ஆறு வயது குழந்தைக்கு தந்தை என்றாலுமே ஹர்ஷவர்தனுக்கு மனைவியை பற்றி முழுவதும் தெரியாது தானே.. அதனால் பயந்து விட்டான்..
“வதி நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை.. ஒன்னும் சொல்ல தேவையில்லை.. நம்ம லைப் இப்படியே போனா கூட பரவாயில்லை..
“ஆனா நீ இப்படி பயந்துட்டு.. நீ சொல்லி எனக்கு எதுவுமே தெரியவும் வேண்டாம் .. புரியவும் வேண்டாம்..” என்று விட்டான்..
ஆனால் இப்போது அவன் மனைவி.. “ இல்ல. இல்ல நான் உங்க கிட்ட எல்லாம் சொல்லனும்.. எல்லாமே சொல்லனும்.. “ என்ற குரலில் முன் போல் நடுக்கம் இல்லை.. உடலிலும் அவ்வளவு நடுக்கம் இல்லை..
ஆனால் கணவனின் தோள் சாய்ந்து கொண்டவள்.. கணவனின் ஆதரவை கெட்டியாக பிடித்து கொள்வது போல இன்னுமே தன் தலையை அதில் அழுத்தமாக பதித்து கொண்டவள்…
தன் பாட்டுக்கு பேச தொடங்கினாள்… “ அன்னைக்கு அன்னைக்கு நான் எவ்வளவு ஹாப்பியா இருந்தேன் தெரியுமா…? ஸ்டேட் பஸ்ட்.. அவ்வளவு பெருமை… நான் அதை உங்க கிட்ட சொல்லனும்… நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா ஆனா..
காலையில் அப்படி சந்தோஷப்பட்டேன் ஆனா அன்னைய நாள் முடிவிலேயே…”மீண்டும் மனைவி உடலில் சிறு நடுக்கம்….
“வதி வேண்டாம் வதி.. வேண்டாம்.. உன்னை இவ்வளவு ஸ்டேயின் பண்ணிட்டு எனக்கு நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை…” என்று ஹர்ஷவர்தன் சொல்லியும் அவன் மனைவி விடாது சொன்னாள்…
“அன்னைக்கு என்னை ஏதோ ஒரு இடத்திற்க்கு கூட்டிட்டு போனாங்க. யார் யாரோ என்ன என்னவோ கேட்டாங்க… அதுல பாதி எனக்கு புரியல… ஆனா அவங்க கேட்டது நம்ம அந்தரங்கத்தை என்பது மட்டும் எனக்கு புரிந்தது…”
இப்போது ஹர்ஷவர்தன் உடலில் இறுக்கம்… “ கேட்டது லேடிஸா ஜென்ஸா…? என்று மட்டும் கேட்டான்…
“லேடிஸ் தான்.. ஆனா நான் ஒன்னுமே சொல்லலே… சொல்லவே இல்ல.. நம்ம பிரவேஸி.. அதை ஏன் அவங்க கிட்ட நான் சொல்லனும்…? என்று சொன்னவளின் குரலில் அவ்வளவு உறுதி.
இப்போது ஹர்ஷவர்தன் எதற்க்குமே வாய் திறக்கவில்லை..
தன் பாட்டுக்கு அவளே பேசி கொண்டு இருந்தாள்..
“நான் எல்லாம் சொல்லனும்.. பேசனும் என்று நினச்சது எல்லாம் உங்க கிட்ட தான்.. உங்க கிட்ட மட்டும் தான்…”
“பதினைந்து நாள்.. பதினைந்து நாள் என்னை ஒரு இடத்தில் இருக்க சொன்னாங்க… அங்கு இருந்த ஒவ்வொரு நாள் போக போக. எனக்கு எப்போ பதினெட்டு வயது முடியும்…”
“நான் அங்கு இருந்து எப்போ வெளியில் வருவேன்.. எப்போ உன் கிட்ட நான் எல்லாம் சொல்ல என்று காத்துட்டு இருந்தேன்….”
“வந்தது.. என் பதினெட்டாவது பிறந்த நாள்.. வந்தேன் அந்த இடத்தை விட்டு வெளியில் வந்தேன்.. ஆனா ஆனா நான் சொல்ல நினச்சத்தை சொல்ல நீங்க தான் அன்னைக்கு இல்ல…” என்று ஒரு மாதிரி மரத்த குரலில் சொன்ன பெண்ணவள்..
இப்போது தலை நிமிர்த்தி தன் கணவன் முகத்தை பார்த்து.. “ என் காதலை சொல்ல அன்னைக்கு ஏன் நீங்க வரல …?” என்ற மனைவியின் கேள்வியில் ஹர்ஷவர்தன் அதிர்ச்சியில் மனைவியின் முகத்தை பார்த்தவனின் உதடு மெல்ல…