தங்கையிடம் இருந்து வந்த கை பேசி அழைப்பை பேசி முடித்த ஹர்ஷவர்தனின் முகத்தில் சிந்தனையின் ரேகைகள்…
ஜீவ ஜோதி விவாகாவிடம் பேசி கொண்டு இருந்தாலும், கணவனின் முக மாற்றத்தையும் கவனிக்க தவறவில்லை…
அவர்கள் தான் எப்போதுமே பார்வையினால் ஒருவருக்கொருவர் பின் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனரே… கணவனின் அந்த முக மாற்றம் மனைவிக்கு தெரியாது போகுமா…?
ஜீவ ஜோதிக்கு கணவனின் பேசிக்கு வந்த அழைப்பு அவனின் தங்கையிடம் இருந்து வந்தது என்று தெரியும்… ஆனால் விசயம் என்ன என்று கணவன் சொல்லாது எப்படி அவளுக்கு தெரியும்.. கணவன் சொன்னால் தான் உண்டு..
ஆனால் அவனோ பேசி முடித்து விட்ட பின் கூட அமைதியாக இருக்க.. ஜீவ ஜோதி தான் விவாகா விரும்பி பார்க்கும் சேனலை டிவியில் போட்டு விட்டு அவளை பார்க்க செய்த பின் கணவனின் அருகில் வந்து அமர்ந்தாள்..
அமர்ந்தவளின் கையை கெட்டியாக ஹர்ஷவர்தன் பிடித்து கொண்டானே ஒழிய அப்போது கூட என்ன என்று மனைவியிடம் அவன் கூறவில்லை.. ஆனால் முகம் மட்டும் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தது…
இவனாய் வாய் திறக்க மாட்டான்… இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த ஜீவ ஜோதி…
அவளே… என்ன பிரச்சனை …என்று கேளாது… “ உங்க சிஸ்ட்டர் என்ன சொன்னாங்க…?” என்று கேட்டாள்…
ஜீவ ஜோதி இன்னும் பூஜாவிடம் சரளமாக பேசவில்லை.. பேச ஏதோ ஒரு தயக்கம்.. திருமணம் முடிந்து ஒன்றாக இருந்து இருந்தாளோ.. தொடர்பில் இருந்து இருந்தாளோ. இருவருக்குள் ஒன்று அன்பினால் ஒரு பிணைப்பு உருவாகி இருக்கும்..
இல்லை சண்டையிலாவது ஒரு உரிமை உறவு என்று இருந்து இருக்கும்.. இது இரண்டும் இல்லாது… ஏழு வருடங்கள் கடந்த பின் நாத்தனார் என்ற உறவை ஜீவ ஜோதி பூஜாவிடம் காட்ட முடியவில்லை.. அதே நிலை தான் பூஜாவுக்குமே….
ஆனால் பெரியவர்களுக்கு தான் இது போலான தயக்கம் எல்லாம். குழந்தைகளின் மனது… தனி தானே….
பூஜாவின் குழந்தைகள் விவாகாவோடு மட்டும் அல்லாது அத்தையான ஜீவ ஜோதியிடமும் ஒட்டிக் கொண்டது.. அதே தான் விவாகாவும் சட்டென்று அத்தை மாமா என்று குழந்தைகளுக்குள் ஒரு ஒட்டுதலாக ஒட்டிக் கொண்டு விட்டாள்….
அதனால் தான் ஜீவ ஜோதி பிரச்சனை என்ன என்று தெரிந்து கொள்ள பூஜாவை கேட்காது கணவனிடமே கேட்டது….
மனைவி கேட்டதும்.. ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஹர்ஷவர்தன்.. “ அப்பா அம்மா இங்கு வர்றாங்கலாம்…” என்று விட்டான்…
இதை கேட்ட உடன் ஜீவ ஜோதிக்கும் பக் என்று தான் ஆகி விட்டது… இது அவள் முகத்திலுமே வெளிப்பட்டது..
அதை கவனித்த ஹர்ஷவர்தன்… “ ஏய் எதுக்கு இப்படி ரியாக்ட் கொடுக்குற,.. அவரால் என்ன பண்ண முடியும்.. ஒன்னும் பண்ண முடியாது புரியுதா…?” என்று மனைவிக்கு தைரியம் கொடுத்தான்..
அது ஜீவ ஜோதிக்குமே தெரியும்.. இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று…
ஆனால் அவர்களை பார்த்தால், கடந்த நாட்கள் எல்லாம் நியாபகத்தில் வருமே.. அது நல்லதாகுமா..? என்ற எண்ணம் தான்… மனதில் நினைத்ததை கணவனிடம் சொல்லவும் செய்தாள்…
அதுவும் தன்னோடு உங்களுக்கு தானே… பிரச்சனை.. அன்று மீடியா முன் ஹர்ஷவர்தன் அவமானப்பட்டதை தான் இப்படி சொன்னது…
அதற்க்கு ஹர்ஷவர்தன்.. “இந்த இந்தியா நியாபகம் படுத்தாத.. என் அப்பாவும் அம்மாவும் நியாபகம் படுத்தி விட போகிறார்கள்..” என்று விட்டான்.. அதுவும் சரி தானே…
அதுவும் இனி இந்தியா தான் எனும் போது அனைத்தையும் எதிர் நோக்கி தானே ஆக வேண்டும்.. காளிங்கவரதனையும் ஜானகியையும் தைரியமாகவே எதிர் கொண்டனர் ஹர்ஷவர்தன் தம்பதியர்…
ஜீவ ஜோதி “விவா..” எனும் போது.. ஹர்ஷவர்தன்.. “ பேபியும் இருக்கட்டும்.. இப்போ காட்டலேன்னா.. அவளை தனியா பார்க்க ட்ரைப் பண்ணுவாங்க. அதுக்கு நம்ம முன்னே பார்க்கட்டும்..”
“அதுவும் இல்லாது நம்ம பேபி மெச்சூரிட்டி… தான்.. நம்ம சொன்னால் சரியாக புரிந்து கொள்வாள்…” என்றும் சொன்னான்…
.
ஆம் அவன் சொல்வது சரி தான்… இந்தியா போகிறோம் எனும் போது விவாகா..
“ஐய் ஜாலி சுபாஷப்பா.. கமலப்பா பாட்டி … கூட ஒன்னா இருக்கலாம் ஜாலி ஜாலி…” என்று சொல்லி தான் அவள் குதித்தது..
குழந்தையின் இந்த பேச்சில் ஜீவ ஜோதி தான் எப்படி சொல்லி புரியவைப்பது.. புரிந்து கொள்வாளா…?
ஏன் என்றால் குழந்தையில் இருந்து பிறந்து வளர்ந்த வீடு.. சுபாஷ் வீடு தான்.. இனி அவர்கள் உறவு மட்டுமே.. எப்போதாவது வந்து செல்லும் உறவு மட்டும் தான் என்று சொன்னால் புரிந்து கொள்வாளா…? என்ற பயம்..
ஆனால் அந்த பயம் ஹர்ஷவர்தனுக்கு இல்லை போல…
“நாம இந்தியாவுக்கு போகிறோம் செல்லம்.. ஆனால் மைசூருக்கு இல்ல சென்னை… சுபாஷ் பெரியப்பா வீடு மைசூர் ப்பா வீடு சென்னை தானே… அப்போ நீ சென்னையில் என் கூடவும் ம்மா கூடவும் தானே இருக்கனும்…” என்று விட்டான்..
முதலில் குழந்தை தந்தையின் பேச்சில் முகம் வாடி விட்டது தான்.. “ப்பா இனி விஷி.. சுபாஷப்பா கமலப்பா பாட்டியை பார்க்க முடியாதா…? ரொம்ப டேஸ் ஆச்சி அவங்களை பார்த்து…” குழந்தை ஏக்கத்துடன் தான் இதை சொன்னது…
ஹர்ஷவர்தனுக்கு குழந்தையின் அந்த வாடிய முகமும்.. ஏக்கம் கலந்த குரலும் ஒரு மாதிரியாக தான் இருந்தது…
ஆனால் இனி இது தான் என்று அவள் மனது ஏத்து கொண்டு தான் ஆக வேண்டும்.. அதில் ஹர்ஷவர்தன் உறுதியாக இருந்தான்…
அதனால் மகளுக்கு புரியும் படியாகவே.. விவாகாவின் பெஸ்ட் பிரண்ட் பெயரை கேட்டு.. அவர்கள் எல்லாம் யார் கூட இருக்கிறார்கள் என்று கேட்டதற்க்கு..
.
அனைவரும் ஒன்று போல்.. “ அவங்க ப்பா ம்மா கூட தான் இருக்காங்க…” என்று ஏதோ ஒரு யோசனை செய்த வாறு தான் குழந்தை சொன்னது…
பின்.. குழந்தை.. “ ஆனா நான் இது வரை அவங்க கூட தானே இருந்தேன்..?” என்று கேட்டாள்.. அது நியாயமான கேள்வியும் தான்…
அடுத்து குழந்தையிடம் இந்த கேள்வி தான் வரும் என்று ஹர்ஷவர்தனும் எதிர் பார்த்தான்….
அதனால் உடனே அவனும்.. “ஆமாம் ப்பா ஜெர்மனயில் இருந்தேன்…ம்மா படிச்சு சுபாஷ் பெரியப்பா கூட பிசினஸ் என்று இருந்தாங்க… அதனால நீ உன் பெரியப்பா கூட இருந்தே….
இப்போ ப்பா இந்தியாவில் செட்டில் ஆக போறேன்.. அதான் நாம ஒன்னா இருக்கலாம் என்று சொல்றேன்… ஏன் பேபிக்கு ப்பா கூட இருக்க பிடிக்கலையா…? என்று சொல்லி…
தன் குழந்தைக்கு இனி நாம மூன்று பேரும் மட்டும் தான் நம் குடும்பம் என்பதை மனதில் பதிய வைத்தான் ஹர்ஷவர்தன்…
அடுத்து மேலும் குழந்தையை யோசிக்காத வகையாக… தன்னோடு இருக்க பிடிக்கவில்லையா…? என்று கேட்டு விட்டு முகத்தை சோகமாகவும் வைத்து கொண்டான்..
அவ்வளவு தான் விவாகா.. “ ப்பா விவா பேபிக்கு ப்பா கூட இருக்க தான் ரொம்ப பிடிக்கும்..” என்று மகளின் வாயில் இருந்தே அந்த வார்த்தையை வர வழைத்து விட்டான்….
அதோடு குழந்தையின் வாயில் இருந்தே சுபாஷை பெரியப்பா என்றும் அழைக்க வைத்து விட்டான்…
“பெரியப்பா விஷிகா.. பாட்டியை எல்லாம் பார்க்க கூட்டி போவீங்க தானே..” என்று கேட்ட விவாகாவை தூக்கி கொண்ட ஹர்ஷவர்தன்….
“கண்டிப்பா செல்லம்.. “ என்று குழந்தையை அந்த நொடி இன்னும் கொஞ்சி தீர்த்து விட்டான்….
அது என்னவோ தன் குழந்தை தன்னை மட்டுமே அப்பா என்று அழைக்க வேண்டும் என்ற பேராசை வந்து விட்டது.. அந்த தந்தைக்கு…
குழந்தையின் மனதில் இது தான் தன் குடும்பம் என்று புரிய வைத்தது போல.. அவன் அப்பா அம்மாவின் வருகையையும் புரிய வைத்து விடுவான் என்று ஜீவ ஜோதி நினைத்தது போல் தான் விவாகாவிடம் ஹர்ஷவர்தன்….
“பேபி இப்போ உன்னை பார்க்க தாத்தா பாட்டி வர போறாங்க… அவங்க என் அப்பா அம்மா.. வயது ஆனவங்க ஏதாவது எமோஷனல் ஆனா நீ பயந்துக்க கூடாது…” என்று ஹர்ஷவர்தன் சொன்னது போலவே தான் அந்த ஓட்டல் அறைக்குள் நுழைந்ததுமே ஜானகி…
குழந்தையின் கன்னத்தை கிள்ளுவதும்.. இழுத்து பிடித்து முத்தம் கொடுப்பதும்.. பின் தன் மடி மீது வைத்து கொண்டதுமாக இருக்க.. விவாகாவுக்கு இது எல்லாம் புதியது தான். ஆனால் தன் தந்தை முன்னவே சொல்லி விட்டதால் அவள் பயந்து விடவில்லை…
மாறாக… ஜானகியிடம்.. “ பாட்டி நீங்க ஏஜ் ஆனவங்க.. என் வெயிட் தாங்க மாட்டிங்க.. நான் உங்க பக்கத்துல உட்கார்ந்து கொள்றேன்..” என்று சொல்லி பக்கத்தில் அமர்ந்து கொண்டு விட்டாள்…
அவளின் பேச்சை கேட்டு ஜானகி திருஷ்ட்டி கழிக்க.. காளிங்கவர்தனோ… “ நம்ம சாதி ரத்தம் டா. பேச்சு பார்த்தியா இந்த வயசிலேயே என்ன முச்சிட்டா பேசுது…” என்று சொல்லி மீசையையும் முறுக்கி கொள்ள…
ஹர்ஷவர்தனுக்கும் சரி.. ஜீவ ஜோதிக்கும் சரி.. இவரை எல்லாம் திருந்த மாட்டார்கள் என்று நினைத்து அவர் பேச்சை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை…
ஜானகி தான் ஜீவ ஜோதியிடம்.. “ நீ உன் அப்பன் ஆத்தா செத்த போது வந்த தானே.. அப்போ நான் உங்க மவன் கூட தான் இருக்கேன் என்று ஒரு வார்த்தை சொல்ல கூடாதா…?
என் மகன் கூட குடும்பம் நடத்தி வாரிசும் பெத்து இத்தனை பெருசா வளர வரை எங்க கிட்ட நீ சொல்லவே இல்ல.. ஆனாலும் உனக்கு நெஞ்சு அழுத்தம் அதிகம் தான்.. “ என்று மருமகளுக்கு ஒரு பட்டத்தை கொடுத்த ஜானகி.
பின் அவரே பெரிய மனது வைத்து மன்னித்ததை போல.. “ சரி நடந்தது எல்லாம் நான் பெருசா எடுத்துக்கல. இந்த ஓட்டல் ரூமை காலி பண்ணிட்டு நம்ம வூடு வந்து சேருங்க.. நாங்க பேத்தியை கூட்டிட்டு முதல்ல வூட்டுக்கு போறோம்..” என்று சொன்னதோடு விவாகாவின் கையையும் பிடித்து கொள்ள.
இத்தனை நேரம் தன்னை பற்றி பேசியதை நீ என்ன வேணா பேசி கொள் என்பது போல் இருந்த ஜீவ ஜோதி மாமியார் தன் குழந்தையின் கை பற்றவும்.. .
வெடுக்கென்று தன் மாமியார் கையில் இருந்து தன் குழந்தையின் கையை எடுத்து விட்டவள்.. கணவனை பார்த்து…
“நீங்க பேசுறிங்கலா நான் பேசட்டுமா…?” என்று கேட்ட மனைவியின் இந்த தோரணை ஹர்ஷவர்தனுக்கு புதியது தான்.. ஆனால் பிடித்து இருந்தது…
சிரித்தவன் … “நானே பேசுறேன்… நீ பேபியை ரூமுக்கு கூட்டிட்டு போ…” என்று சொல்ல… இது வரை குழந்தையின் முகத்தில் தங்கள் வம்சத்தின் சாயல் படிந்து இருப்பதை பெருமையாக பார்த்து கொண்டு இருந்த காளிங்கவரதன்…
ஜீவ ஜோதியின் இந்த பேச்சில்.. “ அது என்ன ஆம்பிள்ளை உட்கார்ந்து இருக்கும் இடத்தில் பொம்பளை வாய் திறந்து இப்படி சத்தமா பேசுறது.. இது நம்ம சாதியில் இல்லாத பழக்கமா இருக்கு…” என்று மருமகளை கண்டித்து மகனிடம்..
“என்ன டா.. நாங்க இப்போ தான் பேத்தியை பார்த்துட்டு இருக்கோம்.. நான் இன்னும் தொட்டு கூட பேசல. நீ அதுக்குள்ள உன் பொஞ்சாதி கிட்ட குழந்தையை கூட்டிட்டு போக சொல்ற…
ஒழுங்கு மரியாதையா மருமக பொண்ணும் பேத்தியோட வீடு வந்து சேரு… நம்ம வீடு கடல் மாதிரி இங்கு இருக்க. நீ மனைவி குழந்தை கூட அதுவும் பொம்பளை பொண்ணு கூட ஒட்டல்ல தங்கிட்டு இருக்க..” என்று காளிங்கவரதன் சொன்னார் என்பதை விட வீடு வந்து சேரு என்று கட்டளை இட்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும்…
அவரை பொறுத்த வரை பெண்கள் ஒட்டலில் தங்குவது எல்லாம் கெளரவ குறச்சல்.. அவரின் சாதி பற்று அது தான் அவருக்கு சொல்லி கொடுத்தது..
தந்தை இன்னும் மாறாது தன் சாதி பற்றுதலுடன் பேசிக் கொண்டு இருந்தவரின் இந்த பேச்சில். இனி பிரச்சனை வேண்டாம்.. ஒட்டி கொண்டு இல்லை என்றாலும் வெட்டி கொண்டு திரிய வேண்டாம் என்று நினைத்து அமைதியாக அமர்ந்திருந்த ஹர்ஷவர்தன் தந்தையின் இந்த பேச்சில் கோபத்துடன் எழுந்ததோடு மட்டும் அல்லாது…
மனைவியிடம் தன் முதல் கோபமான பேச்சாக…. “விவாவை ரூமுக்கு கூட்டிட்டு போக சொன்னேன் வதி…” என்று பல்லை கடித்து கொண்டு கூறினான்…
கணவனின் இந்த பேச்சு ஜீவ ஜோதிக்கு கோபமான பேச்சாக தெரியவில்லை.. மாறாக அவனின் இந்த பேச்சு அவளுக்கு உரிமையான பேச்சாக தான் தெரிந்தது. அதில் அப்படியே நின்று விட்டாள்..
விவாகா தான்.. “ ம்மா வாங்க ரூமுக்கு போகலாம். ப்பா திட்டுவாங்க…” என்று தன் அன்னையிடம் சொன்ன குழந்தை.. அன்னையின் கை பிடித்தும் இப்போது பேசிக் கொண்டு இருந்த அந்த வெயிட்டிங்க அறையில் இருந்து அந்த ஒட்டலின் படுக்கை அறைக்கு அழைத்து சென்றது.. செல்லும் போது ஜானகியையும், காளிங்கவரதனையும் பார்க்க தவறவும் இல்லை.. அக்குழந்தை புரிந்து கொண்டு விட்டாள்.. அப்பாவுக்கு இவர்களை பிடிக்கவில்லை என்பதை…
இதன் தொட்டு இவர்கள் விவாகாவை வெளியில் சந்திக்க திட்டம் இட்டாலும் குழந்தை தவிர்த்து விடுவாள் என்பதை மகளின் செயலின் மூலம் தந்தையும் புடிந்து கொண்டான். அவனுக்கு வேண்டியதும் அது தானே…
மனைவி குழந்தை அறைக்கு சென்றதும் ஹர்ஷவர்தன் தீர்த்து பேசி விட்டான்..
“ஓரு மகனாக உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் உங்க வீட்டிற்க்கு வருவேன்.. எப்போதவது என் மனைவி குழந்தை என்று பார்க்க வருவேன்.. அவ்வளவு தான்.. இந்த பெத்தி ஒரே வீடு.. இது எல்லாம் கற்பனை பண்ணிட்டு இனி வராதிங்க.. நீங்க எங்களுக்கு செய்த வரை போதும்.. “ என்று விட்டான்..
காளிங்கவரதன் அப்போது கூட விடாது.. “ நான் என்ன உனக்கு கெட்டது செய்துட்டேன்.. நல்லது தான் செய்து இருக்கேன்.. நீ உன் பொஞ்சாதி கிட்ட பேசுறதுல இருந்தே தெரியுது..”
“ உனக்கு அந்த பொண்ணை எவ்வளவு பிடித்து இருக்கு என்று… நம்ம சாதி பெயரை சொல்ல பேத்தி… உன் வாழ்க்கைக்கு என்ன டா குறச்சல்.. நான் கெடுத்துட்டேன் என்று சொல்ற… “ என்று பேசியவரிடம் முறைத்து கொண்டு ஹர்ஷவர்தன் நின்று கொண்டு இருக்க.
மகனின் அந்த பார்வையில்…
காளிங்கவர்தன்… “ அந்த மீடியா அரெஸ்ட் எல்லாம் உன் பொஞ்சாதியால தான் அன்னைக்கு நீ அவமானப்பட்டது… பொம்பளை பிள்ளைக்கு அம்புட்டு படிப்பு என்னத்துக்கு… மாநிலத்துல முதலா வந்ததால தான் பிரச்சனை ஆகிடுச்சி.. இல்லேன்னா பதினெட்டு வயசு முடிந்ததும் உங்க கல்யாணத்தை ரிஜிஸ்ட்டர் செய்துட்டு யாருக்கும் தெரியாது இருந்து இருக்கும்.” என்று சொல்லும் தந்தையிடம் பேசுவதே வேஸ்ட் என்று புரிந்து கொண்டவன்…
ஹர்ஷவர்தன் அதற்க்கு மேல் அதை பற்றி பேசாது .. “ இனி நீங்கள் உங்க எல்லைக்குள் இருந்து கொண்டால் நல்லது… அப்படி இருந்தால் மகன் என்று நான் உங்க வீட்டிற்க்கு வந்து போக இருப்பேன்…
என் மனைவி மகளை அப்போ அப்போ கூட்டிட்டு வந்தாவது காட்டுவேன்…” என்று மகன் சொன்ன தோரனையில் காளிங்கவர்தனுக்கு தங்கள் எல்லை எது என்று புரிந்து கொண்டவராக…
அவ்வப்போது மகன் மருமகள் பேத்தியை கண்ணில் பார்த்தால் மட்டும் போதும் .. உரிமை எடுத்து கொண்டால், இதுமே இல்லாது செய்து விடுவான் என்று புரிந்து கொண்டு விட்டார்….
ஒரே வாரத்தில் ஹர்ஷவர்தனுக்கும் ஜீவ ஜோதிக்கும் முக்கியமாக குழந்தை விவாகாவுக்கும் பிடித்தது போல ஒரு பங்களா விலைக்கு வர. ஹர்ஷவர்தன் அதை விலைக்கு வாங்கி குடும்பத்துடன் ஒரு நல்ல நாளில் குடும்பமா குடிபுகுந்தான் நம் நாயகனும்.. ஜீவ ஜோதியின் ஆணழகனுமான ஹர்ஷவர்தன்…