ஹர்ஷவர்தன் வாங்கிய வீட்டிற்க்கு பின் கடற்கரை இருப்பது போலான அமைப்பிலான வீட்டை தான் அவன் வாங்கியது.. அது சிட்டிக்கு தள்ளி இருந்தாலுமே, அந்த வீடு அவனுக்கு மிகவும் பிடித்து இருந்ததினால் தான் தன் மனைவி தன் குழந்தையையும் அழைத்து சென்று அந்த வீட்டை காண்பித்தது..
தனக்கு பிடித்து இருந்தாலுமே, தன் மனைவி மகளின் பிடித்தமும் மிக முக்கியம் என்று கருதினான்….
அந்த வீட்டிற்க்குள் உள் நுழையும் போதே ஹர்ஷவர்தனின் பார்வை தன் மனைவி மகள் முகத்தில் தான் இருந்தது…
அவர்களின் முகத்தில் வந்து போன பாவனை கொண்டே அவர்களுக்கும் இந்த வீடு பிடித்து இருப்பதை கண்டு கொண்டான்..
மனைவியோடு மகளின் முகத்தில் வந்து போன அந்த மகிழ்ச்சியை பார்த்து மனதில் அப்படி ஒரு திருப்தி அவனுக்கு …
அதுவும் பின் பக்கம் இருந்த அந்த கடற்கரையை பார்த்து விட்டு.. அப்படி ஒரு குதுகலம் விவாகாவுக்கு…
தந்தையின் கையை பிடித்து கொண்டு இருந்த குழந்தை கை விடுத்து கடற்கரையை நோக்கி ஓடியவளின் பின் தந்தையும் ஓட.
பின் சிறிது நேரம் தந்தையும், மகளும், ஒருவரின் மீது ஒருவர் தண்ணீர் தெளித்து ஆடி என்று ஒரு ஆட்டம் போட்ட பின் தான் ஹர்ஷவர்தனின் பார்வை மனைவி பக்கம் சென்றது…
ஜீவ ஜோதியின் பார்வையோ.. கணவன் மகளின் பக்கமே இருக்க.. மனைவியின் பார்வையை பார்த்த ஹர்ஷவர்தன் ..
ஜீவ ஜோதியிடம். “ நீயும் வா…” என்று சைகை செய்தான்…
“வேண்டாம்..” என்று இவளுமே கணவனை பின் பற்றி சைகை மொழி பேசியவளின் பார்வை மட்டும் மாறவில்லை…
மனைவியின் அந்த பார்வையை பார்த்த ஹர்ஷவர்தன் முகத்தில் சிந்தனையின் சாயல்… அதில் மனைவியின் பக்கம் செல்ல இருந்த தந்தையின் பக்கம்
“ப்பா…” என்று அழைத்து தன் கையில் இருந்த பாலை ஹர்ஷவர்தனை நோக்கி வீச. அதில் மனைவியை மறந்து என்று சொல்ல முடியாது… இருந்தும் இப்போது குழந்தையின் மனம் நோக கூடாது என்று நினைத்தவன்…
குழந்தையிடம் சிறிது நேரம் விளையாடி விட்டு தான் கடற்கரையின் கரையை அடைந்தான் ஹர்ஷவர்தன்..
கணவனின் இந்த செயல்களையுமே ஜீவ ஜோதி கவனித்து கொண்டு தான் இருந்தாள்…
பின் மனைவி மகளுக்கு பிடித்து விட்டதில் அதே இடத்தில் நின்று அந்த வீட்டின் உரிமையாளரிடம் விலை பேசி முடித்து விட்டான்…
அதிக விலை தான்.. ஹர்ஷவர்தனின் பேச்சிலேயே அந்த வீட்டின் விலையை தெரிந்து கொண்ட ஜீவ ஜோதி தன் மனதில் பட்டதை….
“அதிக காஸ்ட்டா தெரியல..” என்று கேட்டவளிடம்….
“ பேபிக்கு இந்த வீட்டை ரொம்ப பிடித்து இருக்கு… பேபியின் பிடித்ததிற்க்கு முன்னே காஸ்ட் எல்லாம் ஒரு விசயமே இல்ல…” என்று சொன்ன கணவனை பார்த்த ஜீவ ஜோதியின் பார்வையில் மீண்டும் அதே பார்வையின் சாயல் தெரிந்தது ஹர்ஷவர்தனுக்கு…
தன் ஆள் காட்டி விரல் கொண்டு புருவத்தை தடவி விட்டவனின் முகத்தில் மீண்டும் சிந்தனையின் சாயல்…
இப்போது சிந்தனை மட்டும் இல்லாது ஹர்ஷவர்தன் வாயும் மெல்ல முனு முனுத்து கொண்டது…
“இவள் ஏதோ நினச்சிட்டு இருக்கா…” என்று..
அடுத்த வாரமே அந்த புது வீட்டிற்க்கு சிறு விழா போல் வைத்து குடியேறி விட்டனர்… யாரையும் அழைக்கவில்லை..
தன் குடும்பம் மட்டுமே போதும் என்ற அளவில் முடித்து கொண்டான் ஹர்ஷவர்தன்..
ஜீவ ஜோதியின் விருப்பத்தையும் கேட்டு தான் இதை செயல்படுத்தினான்… அவளுக்கு தன் அக்கா சுபாஷ் குடும்பம் வர விருப்பம் இருந்தால் என்ற எண்ணத்தில்.. கேட்க..
“இல்ல வேண்டாம்.. நம்ம வரை போதும்.. என்று ஜீவ ஜோதியும் சொன்ன பின் தான். இதோ தங்கள் வரை ஐய்யரை வைத்து கிரகபிரவேசம் செய்த பின்…
ஒரு அநாதை ஆசிரமத்திற்க்கு அன்று முழுவதுமே ஹர்ஷ்வர்தன் அங்கு இருந்த குழந்தைகளுக்கு தங்கள் கைய்யால் உணவு கொடுத்து.. புது வீடு புகு விழா வைபோகத்தை முடித்து கொண்டு விட்டான்…
ஓட்டல் அறையில் இருந்த நாட்களில் முழுவதுமே ஹர்ஷவர்தனுக்கு மனைவியின் அந்த பார்வையின் பொருள் புரியவில்லை..
ஆசை பார்வை காதல் பார்வை என்று கணவனாக புரிந்து கொண்டவனுக்கு மனைவியின் இந்த பார்வையின் பொருள் மட்டும் புரியாது போக…
அந்த வாரம் இரவு முழுவதுமே மனைவியின் அந்த பார்வையின் ஆராய்ச்சி தான் ஹர்ஷவர்தனுக்கு.. ( மனைவி பக்கம் இருக்க. அதுவும் இத்தனை ஆண்டு பிரிந்து இருந்து சேர்ந்த கணவனின் ஆராய்ச்சி எதில் இருக்கு பார்த்திங்கலா..)
மனைவியிடம் கேட்டால் சொல்லி விடுவாள் தான்.. ஆனால் மனைவியின் பார்வையின் அர்த்தம் அவள் சொல்லாமலேயே தனக்கு தெரிய வேண்டும் என்று விரும்பினான்.. ஆனால் பாவம் அவனுக்கு தான் புரியாது போக…
பொறுத்து பொறுத்து பார்த்த ஹர்ஷவர்தன் தங்கள் புது வீட்டின் முதல் நாள் முதல் இரவில் தங்கள் படுக்கை அறையில் மனைவியிடம் கேட்டு விட்டான்…
மகளின் ஆசைக்கு தங்கள் பெரிய அறையில் குழந்தையின் அளவுக்கு சிறிய பெட்டாக வாங்கி அதே அறையில் போட்டவன் குழந்தை உறங்கிய பின்..
தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து படுக்க வந்த மனைவியை படுக்க விடாது தான் ஹர்ஷவர்தன் ..
“என்னை அப்போ அப்போ ஒரு பார்வை பாக்கிறியே வதி.. அதுக்கு என்ன அர்த்தம்….?” என்று கேட்டு கொண்டு இருக்கும் போது விவாகா படுத்து இருந்த படுக்கையில் அசைவு தெரிய ஹர்ஷவர்தன் சட்டென்று மனைவியை மறந்தவனாக குழந்தையின் படுக்கையின் அருகில் சென்றான்…
குழந்தை அசைந்து படுக்கையில் மகளின் உடலுக்கு கீழ் மாட்டி கொண்டு இருந்த விவாகாவின் கையை விடு வித்து விட்டு முதுகை சிறிது நேரம் தட்டி கொடுத்து கொண்டு இருந்த ஹர்ஷவர்தன் மகள் நன்கு உறங்கி விட்டாள் என்று தெரிந்த பின் மீண்டும் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தவன்..
நெற்றியை ஒரு விரல் கொண்டு நீவி விட்டு கொண்டவனாக.. “ என்ன உன் கிட்ட கேட்டேன்….?” என்று மனைவியிடம் கேட்கும் போதே ஹர்ஷவர்தனுக்கு தான் மனைவியிடம் பேசி கொண்டு இருந்த விசயம் நியாபகத்தில் வந்து விட்டது தான்..
ஆனால் அந்த இடைப்பட்ட சிறிது நேரத்திற்க்குள் ஹர்ஷவர்தன் மீண்டும் மனைவியிடம் அந்த பார்வை தெரிய…
ஹர்ஷவர்தனின் விரல் மீண்டும் தன்னால் அவன் புருவமத்திக்குள் சென்றது.. சிறிது யோசித்தவன் பின்..
“வதி நீ பிராங்கா பேசினா தான் நீ என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியும்.. ஏற்கனவே நாம நம்ம வாழ்க்கையில் ரொம்ப நாட்கள் வீணடித்து விட்டோம்…” என்று பேசியவனையே பார்த்திருந்த ஜீவ ஜோதி..
“என் கூட வாழ நினைக்கிறது விவாகாவுக்காகவா…?” என்றவளின் கேள்வியில் ஹர்ஷவர்தன் அதிர்ந்து தான் போய் விட்டான்..
“என்ன வதி கேள்வி இது..?” என்றும் கேட்டவனிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டவள்.. அதற்க்கு உண்டான காரணத்தையும் கூறினாள்..
“நாம ஒன்னா ஒரே வீட்டில் இருந்து மூன்று மாதம் ஆக போகுது.. ஆனா இன்ன வரை நீங்க என் கிட்ட கூட வரல… என் கிட்ட உங்களுக்கு அது போல.” என்றவளை அடுத்து பேச விடாது வாயை அடைத்து விட்டவன்.. சிறிது நேரம்.. அதாவது அவளே மூச்சுக்கு திணறும் போது அவளை விடுவித்து விட்டவன்…
“முதல் செய்த தப்பை திரும்ப செய்ய கூடாது என்று நினைத்து தான் நான் உன்னை விட்டு தள்ளி இருந்தேன்.. அதுக்குள்ள நீ உன் இஷ்ட்டத்துக்கு கற்பனை செய்துப்பியா லூசு லூசு..
நீ அப்போ அப்போ பார்த்த பார்வைக்கு அர்த்தம் இது தானா…?…” என்று கோபமாக கேட்டு கொண்டு இருந்தவற்களுக்கு இடையில் மீண்டும் ஒரு ஆவேசமான முத்தம் அவர்களுக்குள் ..
ஆனால் இந்த முறை கொடுத்தது ஹர்ஷவர்தன் கிடையாது நம் ஜீவ ஜோதி.
ஹர்ஷவர்தனுக்கு தன் மனைவியிடம் இருந்து கிடைத்த முதல் முத்தம் இது… நினைத்து பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு…
கணவனின் அந்த சிரிப்பில் தான் சரியாக முத்தம் கொடுக்கவில்லையோ என்ற சந்தேகம் ஜீவ ஜோதிக்கு.. அதை கணவனிடமும் கேட்டு விட்டாள்..
இப்போது ஹர்ஷவர்தனிடம் இருந்து முன்பை விட அப்படி ஒரு சிரிப்பு. கணவனின் சிரிப்பில் ஜீவ ஜோதி தான் தன் கை கொண்டு அவன் வாயை மூடியவள்.. குழந்தையையும் கண் காட்டினாள்.. எழுந்து விட போகிறாள் என்ற சைகையும் கொடுத்து..
மகளை தொட்டு தன் சிரிப்பின் சத்தத்தை குறைத்து கொண்ட ஹர்ஷவர்தனால் முழுவதுமாக தன் சிரிப்பை அவனால் நிறுத்த முடியவில்லை..
சிரித்து கொண்டே தான்.. “ இல்ல நமக்கு மேரஜ் முடிந்து செவன் இயர்ஸ் ஆகுது.. ஒய்ப் கிட்ட இருந்து எனக்கு கிடைக்கும் பஸ்ட் கிஸ் இது என்று நினச்சி நான் சிரித்தா..
ஆனா நீ அந்த கிஸ்சுக்கே டவுட்.. நான் சரியா கிஸ் பண்ணேனா என்று.. இதுல நமக்கு சிக்ஸ் இயர்ஸ்ல பேபி வேறு…” என்று சொல்லி சிரித்து கொண்டே ஹர்ஷவர்தன் மனைவியை பார்த்தான்..
மனைவியின் பார்வை இப்போதும் தன்னிடம்.. ஆனால் இந்த பார்வை அவனை ஆராயவில்லை… சந்தேகிக்க வில்லை.. காதல் பார்வையும் இல்லை ஒரு நிறைவான பார்வை ஜீவ ஜோதியிடம் இருந்து ஹர்ஷவர்தனுக்கு கிடைத்தது…
தன் வீடு… தன் குடும்பம் இது.. தன் கணவன் இது.. இந்த குடும்பத்தில் நான் என் கணவன் என் மகள்.. இது அவளுக்கு கிடைக்க நெடிய ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது….
தங்களின் இந்த பிரிவுக்கு யார் காரணம்.. சாதியா…? தங்களின் பெற்றோர்களா…? இரண்டுமே தான்…
..
ஆனால் அதை விட இவர்களின் இத்தனை நீண்ட வருட பிரிவுக்கு முக்கிய காரணம் இவர்கள் இரண்டு பேரின் தயக்கம் தான்..
ஒருவருக்கு ஒருவர் பிடித்து இருந்தும்.. மற்றவர்களை நாடி செல்லாது அவர்களின் தயக்கம் தான் இவர்களின் இந்த பிரிவுக்கு காரணம்..
அதை உணர்ந்து கொண்டு தான் ஹர்ஷவர்தன் தங்களுக்குள் இனி எந்த வித ஒளிவு மறைவும் இருக்க கூடாது..
அதோடு ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு அன்று வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாள், கண்டிப்பாக தங்களுக்குள் பிரிவு வந்து இருக்காது.
இனி வாழும் வாழ்க்கையிலாது தங்களுக்கு இடையில் புரிதல் இருக்க வேண்டும் என்று ஹர்ஷவர்தன் நினைக்க..
ஆனால் ஜீவ ஜோதியோ அதற்க்கு வேறு அர்த்தம் கற்பித்து கொண்டதை நினைத்து.. அவள் கொடுத்த முத்ததில் ஆணழகன் மனைவியிடம் வீழ்ந்து கொண்டு இருந்தவனிடம் மனைவியின் இந்த முத்தத்தின் சந்தேகமானது மொத்தமாக மனைவியிடம் விழ வைத்து விட்டது…
அன்று அறியாத வயதில் அவசரகதியில் மனைவியிடம் அவனே கற்று கொண்ட பாடத்தை இன்று அனைத்துக் நன்கு அறிந்தவனாக நிதானமாக மனைவிக்கு சொல்லி கொடுக்க ஆரம்பிக்க…
அதற்க்கும் தடையிட்டாள் மனைவி.. “ இப்போ என்ன தான் டி உன் பிரச்சனை..” என்று முக்கியமான நேரத்தில் தடை போடும் மனைவியிடம் கேட்க.
அவளிடம் இருந்தோ மீண்டும் ஒரு பார்வை… இப்போது மனைவியின் பார்வை தெள்ள தெளிவாக கணவனுக்கு புரிந்து விட்டது..
தங்கள் படுக்கைக்கும் மகளின் படுக்கைக்கும் இடையில் ஒரு தடியான திரை வீழ… இது எப்போ மாட்டினான் என்று மேல் சீலிங்கை பார்த்து கொண்டு இருந்த மனைவியை தன்னை பார்க்க வைத்த ஹர்ஷவர்தன்…
திருமணம் முடிந்து ஏழ ஆண்டுகள் கழித்து மனைவியின் முகம் பார்த்து அவளின் ஒவ்வொரு அசைவையும் அனுமானித்து.. பிடித்து உள்ளதா இல்லையா…? என்று கவனித்து மனைவியை எடுத்து கொண்டவன் தன்னையும் மனைவியிடம் எடுத்து கொள்ள வைத்தான்..
அவர்கள் இருவரின் வாழ்வும் ஒவ்வொரு நாளும் வண்ணமையமாக தான் மிளிர்ந்தது.. கண் பார்த்து புரிந்து கொள்ளும் படியான ஒரு வாழ்க்கையை தான் ஹர்ஷவர்தனும் ஜீவ ஜோதியும் வாழ்ந்து கொண்டு வந்தனர்..
இதன் இடையில் ஜீவிதா தன் கணவனோடு சென்னைக்கு வந்து தங்கையை பார்த்து விட்டு சென்றாள்.. தாட்சாயிணியும் கமலேஷ் திருமண பத்திரிக்கை வைத்து கண்டிப்பாக வர வேண்டும் அன்று அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றனர்..
ஹர்ஷவர்தனும் குடும்பமாக அந்த திருமணத்திற்க்கு இரண்டு நாட்கள் மைசூருக்கு சென்று வந்தான்..
அங்கு ஜீவிதா இரண்டாம் குழந்தை உண்டாகி இருக்க.. விஷிகா விவாகாவிடம்…
“விவா எங்க வீட்டில் பேபி வர போகுது…” என்று மகிழ்ச்சியோடு கூற..
விவாகா உடனே தன் தந்தையை தான் பார்த்தாள்.. ஹர்ஷவர்தன் தன் மனைவியை பார்க்க.. அவள் அவனை பார்த்த அந்த பார்வையில் அவனுக்கு உண்டான விடை கிடைத்து விட…
பின் என்ன ஹர்ஷவர்தன் குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பு தான்…
ஹர்ஷவர்தன் முதல் குழந்தை பிறக்கும் போது செய்யாத சேவைகள் எல்லாம் மனைவிக்கு செய்தான்.. உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான் என்பார்களே.அதை உண்மையாக்கினான் ஹர்ஷவர்தன்..
முதல் குழந்தை பிறப்புக்கு தான் மனைவியின் அருகில் இல்லை.. குழந்தையை கையில் ஏந்த வில்லை.. குழந்தை தவிழ்ந்தது.. மழலையில் பேசியது என்று ஒவ்வொரு அசைவையும் பார்க்கவில்லை என்று ஏங்கிய ஏக்கத்தை அனைத்தையும் மனைவி இரண்டாம் குழந்தை உண்டாகியதில் அனைத்தும் தீர்த்து கொண்டான்..
ஜீவ ஜோதியுமே முதல் குழந்தை உண்டாகி இருந்த போது அவளின் வயது படிப்பு வாழ்க்கை பற்றியான பயம்…
இவை அனைத்திற்க்கும் மேலாக கணவன் அருகில் இல்லாத ஏக்கம் என்று விவாகா வயிற்றில் இருக்கும் போது உணர முடியாத சந்தோஷத்தை எல்லாம் இப்போது உணர்ந்தாள்.. உணர வைத்தான் ஹர்ஷவர்தன்…
ஹர்ஷவர்தனின் அன்னை தந்தை வந்து பார்த்து விட்டு போனதோடு சரி.. இது தான் உங்கள் எல்லை என்று தூரம் நிறுத்தி விட்டான்…
இதன் இடையில் ஹர்ஷவர்தன் இந்தியாவிலேயே தனிப்பட்டு ஒரு விளம்பர கம்பெனியை ஆரம்பித்து விட. எப்போதும் போல அவனின் நட்பு ஆதித்யன் இவனோடு கை கோர்க்க தன் மனைவி ஷாஷாவோடு அவனுமே இந்தியாவில் செட்டில் ஆகி விட.
ஹர்ஷவர்தன் என்ன தான் புதிய தொழில் ஆரம்பத்தில் பிஸியாக இருந்தாலுமே, தன் மனைவியை கவனித்து கொள்வதில் எந்த வித குறையும் வைத்து கொள்ளாது என்ன தான் வேலையாட்கள் இருந்தாலுமே, அவனே மனைவியை கவனித்து கொண்டான்.
மனைவியின் கற்ப காலத்தை ஜீவ ஜோதியோடு இவனுமே அனுபவித்தான். குழந்தையின் அசைவுகளை மகிழ்ச்சியோடு தொட்டு மகிழ்பவன்…
சுபாஷ் அவளின் பங்கை கொண்டு சென்னையில் ஒரு பிரான்ஞ்சை தொடங்க. அதன் மொத்த பொருப்பும் ஜீவ ஜோதியிடன் வந்தது..
தன் கற்பகாலத்தையும் அனுபவித்து தொழிலிலும் முன்னேறி என்று அவள் வாழ்க்கை கணவனின் துணையில் ..
மசக்கையின் கஷ்ட்டத்தை கூட இருந்து அவள் கஷ்ட்டத்திற்க்கு ஆறுதலாக அரவணைத்து என்று ஒவ்வொரு நாளுமே குழந்தையின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்து இருந்தவனுக்கு ஜனவரி முதல் நாள்…
அந்த ஆண்டு தொடக்கமாக மட்டும் இல்லாது அந்த வீட்டில் இன்னொரு வரவின் தொடக்கமாக ஆண் குழந்தை பிறந்து அந்த ஆண்டை அவர்களுக்கு விசேஷ ஆண்டாக மாற்றி விட்டது…
அந்த ஆண்டு மட்டும் அல்லாது.. வரும் வரும் அனைத்து ஆண்டும் அவர்களுக்கு விசேஷமாக இருக்கட்டும் என்று வாழ்த்தி இந்த கதையில் இருந்து விடை பெறுகிறேன்..
விஜயலட்சுமி ஜெகன்… நன்றி… வாசகர்களே… இடைவெளி விட்டு நான் கதை கொடுத்தாலும், என் கதையை தொடர்ந்து படித்து கருத்து சொன்ன அனைத்து வாசகர்களுக்கும் என் நன்றி…