“பேசாம தூங்குங்க. இன்னும் வீங்கிக்காம….” என்றுவிட்டு தேய்த்து முடித்தவன் கையை கழுவிவிட்டு வர சுந்தரியும் வந்துவிட்டார்.
“நீயே தேய்ச்சு விட்டுட்டியா?…”
“ஆமாம்மா, நீங்க தூங்குங்க. பாப்பா கூப்பிட்டா கால் பண்ணுங்க…”
“சரிப்பா…”
“இசைக்கு காய்ச்சல். அங்க வந்தா அவ கூட விளையாடுவா. பாப்பாவுக்கு ஒத்துக்காது…”
“புரியுதுப்பா…” என்றவர்,
“ஆனா கொஞ்சம் பொறுமையா சொல்லலாம். இன்னைக்கு தான் இசக்கி இங்க வந்திருக்கா. முதல் நாளே இத்தனை கோபம் அவளுக்கு எவ்வளவு கஷ்டத்தை குடுக்கும்…”
சுந்தரி அவ்வளவு தான் சொல்லியிருக்க அதுவரை அமைதியாக இருந்தவனுக்கு அப்படி ஒரு கோபம்.
“எல்லாம் உங்களால. நான் வந்திருக்கவே கூடாது ஊருக்கு. தேவையா எனக்கு? அங்க ஹாஸ்பிட்டல்ல என்னவோ நான் இசையை கட்டாயப்படுத்தி ரெண்டாவதா மேரேஜ் பண்ணிக்கிட்ட மாதிரி பேசறாங்க அந்த டாக்டர்…”