“நீ ஏன் இவ்வளோ சைலண்டா பேசற?…” என்றதும் அவனை பார்த்தவள்,
“ஓகே ஓகே. தூங்கு…” என்றான்.
“உங்களை கேட்டேன்ல. தேவைதான்…”
“என்ன?…”
“ராத்திரில யாராச்சும் கத்தி பேசுவாங்களா? இது ஒரு விஷயம்ன்னு கேட்கறீங்க?…”
“ஓஹ், அவ்வளவு அறிவு வாளியா நீ?…” என அவன் சிரித்துவிடவும் பேச்சை மறந்துபோனாள்.
“என்ன இசை?…” அவளின் அமைதியில் கேட்க,
“ஒன்னுமில்லையே…” என்று தலையாட்டிவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள் அவனை பார்த்தபடி.
கீர்த்தனன் முகத்தில் இன்னும் புன்னகை மிச்சமிருக்க பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.
ஏதோ ஒருவகையில் அவளின் மனதிற்கு அந்த புன்னகை ஆறுதலை தந்ததென்னவோ உண்மை.
ஓடி ஓடி ஓய்ந்தவளுக்கு இளைப்பாற இடம் கிடைத்துவிட்டதை போல ஒரு ஆசுவாசம்.
இருவருக்கும் ஒப்புதலின்றி ஒரு திருமணம். தன்னுடைய மனதோ, அதன் உணர்வுகளோ கொஞ்சமும் யாரின் கண்களுக்கும் புலப்படாமல் இருக்க இந்த வாழ்க்கை இன்னுமே பயத்தை தந்தது.
கீர்த்தனன், எப்போதும் சிரித்தும், கலகலப்பாக பேசிவிடாமல் வள்ளென்று விழும் குணமுடையவன்.
அடுத்த சிறைக்குள் தான் தன் வாழ்க்கை என்னும் விரக்தியில் தான் அவள் உன்மனம் இதனை ஒப்புக்கொண்டது.
நல்லவன், அதனை தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவன் சுந்தரி மகன்.
அது ஒன்றே அவளுக்கு சற்று நிம்மதி. அத்தனை பிடிக்கும் சுந்தரியை. இந்த வாழ்க்கையை விட்டு அங்கே சுந்தரியுடன்.
சமாளித்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்து வந்திருக்க தூரத்தில் வேறாக தெரிந்த ஒன்று அருகே வேறாக இருந்தது.
அவனின் கனிவு, அனுசரணை, கவனிப்பு என்று கணவனாக பார்க்க, கவனிக்க வைத்தவன் அவள் மனதில் நல்லவிதமாக நுழைந்திருந்தான்.
எதையும் கேட்கவில்லை, எதுவும் கிளறவில்லை. முண்டஹிய பிரச்சனையை அறிந்த சுடுசொல் எதுவுமில்லை.
பிடித்திருந்தது. அதனை வெளிப்படையாகவே மருத்துவரிடமும் அன்று சொல்லியிருக்க மீண்டும் சொல்லிப்பார்த்தாள் மனதிற்குள்.