தேடல் – 9
தன் எதிரில் முறைத்தபடி நின்றுகொண்டிருந்த கல்பனாவை உள்ளம் படபடக்க அச்சத்துடன் பார்த்தாள் ஸ்டெபி.
“ஏசுவே இவரிடம் இப்படி சிக்கவைத்துவிட்டாயே? என் இதயத்தின் இதத்தை ஒழிக்கவென வந்திருக்கிறாரே. அவர் எதுவும் பேசிவிடாமல் என்னை காத்துவிடு இறைவா”
ஸ்டெபியின் வேண்டுதல் இறைவனுக்கு கேட்டதோ இல்லையோ அவள் கணவனுக்கு கேட்டுவிட்டது போல. உடனே விரைந்தான் தர்ஷினியின் ரூபத்தில்.
அங்கிருந்து நகரமுடியாமல் ஆணியடித்தது போல அப்படியே நின்ற ஸ்டெபியிடம் நெருங்கிய கல்பனா பேச வாயை திறக்கும் முன்,
“ஸ்டெபி உன்னை எங்கலாம் தேடறது? ஆரவ் உன்னை கூப்ட்டுட்டே இருக்கான். நீங்க இங்க இருக்கியா?…” என்றவர் அவளை விட்டு அகலாது கைகளோடு கைகோர்த்து பிடித்துக்கொண்டு, அப்போதுதான் கல்பனாவை பார்ப்பது போல பாவனை புரிந்த தர்ஷினி,
“அடடே வாங்க கல்பனா, பாருங்களேன் உங்களை நீங்க வந்ததை கவனிக்கவே இல்லை. உங்களோடதான் உங்க மருமக பேசிட்டு இருந்தாளா? கோச்சுக்காதீங்க ப்ளீஸ். ஆரவ் ஏதோ முக்கியமான விஷயமா பேசனும்னு இவளை கூட்டிட்டு வரசொன்னான்…”
வலிய புன்னகையை வரவழைத்துகொண்டு கல்பனாவிடம் பேசியவர் அவரை பேசவிடாமல் ஸ்டெபியை இழுத்துக்கொண்டே சென்றுவிட்டார். சென்றவர் நேராக அர்ஜூனிடம் ஸ்டெபியை ஒப்படைத்துவிட்டு ஒரு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். ஸ்டெபி அர்ஜூனை கேள்வியாக பார்க்க அவனோ,
“அவங்க ஏதாவது பேசினாங்களா?…” எனவும் தான் இது அர்ஜூனின் வேலை என்பதை உணர்ந்து அவனை பாராட்டுதலாக பார்த்தவள்,
“அவங்க எதுவுமே பேசலை. முறைச்சுட்டே கிட்ட வந்தாங்க. அதுக்குள்ள தர்ஷிமா வந்து கூட்டிட்டு வந்துட்டாங்க…”
“உனக்கு வாயெல்லாம் என்னிடம் தான். என்னை மட்டும் தான் எதிர்த்து கேள்வி கேட்ப. இல்லையா?…”
“என்னை பிடிக்காதவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட பேச என்னைக்குமே இந்த ஸ்டெபிக்ஷா விரும்பமாட்டா. அவங்க பேசிருந்தாலும் நான் பதில் பேசிருக்கமாட்டேன்…”
இந்த பதிலில் அர்ஜூனின் கண்களில் சிறு குறும்பு தோன்றி மறைய அதை கண்டுகொண்டவள் தான் கூறியதன் அர்த்தம் அவனுக்கு விளங்கியதை உணர்ந்துகொண்டாள்.
“நீ போய் ஆரவ் பக்கம் இரு. இல்லைனா பாட்டி தாத்தா பக்கம் இரு. தனியா இருக்க வேண்டாம்…” எனவும் இவள் தலையசைக்க பின் அவனாகவே,
“டாக்டர் மேத்தா வந்திருக்கார் ஆஷா. நிலாவை பத்தி கொஞ்சம் பேசவேண்டியதிருக்கு. அவர் இப்போ கிளம்பிடுவார். பேசி அனுப்பிட்டு வரேன்…”
அர்ஜூன் விடைபெற்று நகர தானும் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். நிலா, ஆரவ்வை தொந்தரவு செய்ய விரும்பாமல்.
அர்ஜூன் செல்வதையே பார்த்துகொண்டிருந்தவள் அவன் கார்த்திக்கிடம் கோவமாக ஏதோ பேசுவதை கண்டாள். கார்த்திக்கிற்காக இவள் பாவப்பட்டாள். தன்னால் தான் அவனுக்கு இந்த திட்டு விழுகிறது என்பது ஸ்டெபி அறிந்ததே.
“எப்படி என்னை பார்த்துகொள்கிறான்” என்று சில்லாகித்த ஸ்டெபியின் இதயம் முழுவதும் தன் மீதான அர்ஜூனின் காதலே வியாப்பித்திருந்தது.
ஸ்டெபி ரெஸ்ட்ரூம் பக்கம் செல்வதை எப்படி எதேர்ச்சையாக கண்டானோ அதே போல தன் தாயும் பம்மி பம்மி செல்வதை கண்டுவிட்டான். நொடியின் விசயத்தை கிரகித்தவன் தர்ஷினியை அழைத்து ஸ்டெபியை கூட்டிவரும் படி கூறி அனுப்பிவைத்துவிட்டான்.
இப்போது கார்த்திக்கையும் வசைமாரி பொழிய ஆரம்பித்து அவனை எச்சரித்து வைத்த பின் தான் அங்கிருந்து நகர்ந்தான். சிறிது நேரத்தில் கார்த்திக் அர்ஜூனின் பெற்றோரை அழைத்துகொண்டு கிளம்பியது தெரிந்தது.
“இவன் இருக்கிறானே ஊரையே மிரட்டி வைப்பான்” கணவனின் அன்பில் மகிழ்வோடு திளைத்தாள் ஸ்டெபி. அவளுக்கு தெரியவில்லை. இன்று முதல் தனது சந்தோஷத்தின் எல்லைகள் விரிவடைந்து கிடக்கின்றன என்று.
வீட்டிற்கு கிளம்புகையில் நாராயணன் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க நினைக்க அதற்கு வாய்ப்புகொடுக்காமல் ஆரவ்வே வீட்டிற்கு அழைக்கவும் மறுபேச்சில்லாமல் சிறுபிள்ளை போல கிளம்பிவிட்டார்.
“என் பேரன் கூப்பிட்டான், என் பேரன் கூப்பிட்டான். அதுக்காக மட்டும் தான் வீட்டுக்கு வரேன்…” என தண்டோரா போடாத குறையாக கூவ ஆரவ்வினாலே சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவரின் அன்பில் இவனது மனம் கனிந்தது. ஆனாலும் அவனுக்கு இது போதாதே. இந்த அன்பும் பாசமும் அதற்கும் மேலான உரிமையும் தனது தாய்க்கு கிடைக்கவேண்டுமே. அந்த அங்கீகாரம் கிடைத்த நிமிடம் தஞ்சையில் தஞ்சமாக தயாராக இருந்தான் ஆரவ்.
அவரது வாயிலிருந்து வரும் மருமகளே என்னும் ஒரு அழைப்பிற்காக தர்ஷினியோடு தானும் சேர்ந்து காத்திருந்தான். அது மட்டும் நடக்கட்டும் இந்த கிழவனை பார்த்துகொள்கிறேன் என மனதிற்குள் கூறிக்கொண்டான்.
திருமணம் அனைவரும் மெச்சுபடி நல்லபடியாக நடந்துமுடிய இரவு சடங்கிற்காக ஆரவ்வின் வீட்டில் அனைத்தும் தயாராக ஆரம்பித்தன. அங்கு தொடங்கியது ஆரவ்வின் தவிப்பு.
ஒரு நிலையில் இல்லாமல் மனம் பரிதவித்தான். ஏதோதோ எண்ணங்கள். உணர்வுக்கும், மனதிற்கும் நடுவில் கிடந்து அல்லாடினான். ஒருமனமோ வேண்டும் என்க, இன்னொரு மனமோ வேண்டாம் என்க.
இரண்டுவகையான உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித்தவித்தான். ஏனோ கண்கள் நிலாவையே வட்டமிட அவள் அருகில் செல்லவே பயந்தான். உணர்ச்சிவேகத்தில் எதையாவது செய்துவிடகூடாதே என்று.
இவனது இந்த அலைப்புருதல் மற்றவர்களுக்கு தெரிந்ததோ இல்லையோ ஸ்டெபி கண்டுகொண்டாள். அத்தோடு நில்லாமல் அர்ஜூனிடம் கூற அவனோ,
“எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன். அவன் இப்படி இருக்க காரணம் புரியாமலா. கொஞ்சநேரம் ஆகட்டும். நான் பேசறேன்…” என ஒரு நமுட்டுச்சிரிப்போடு கூற,
“ப்ச், என்ன அஜூ இது விளையாட்டு. பாவம் அவன். நீங்க போய் பேசுங்க…” என்றவளை மேலும் பேசவிடாமல் தேக்கியது அர்ஜூனின் பார்வை.
“இதென்ன இப்படி பார்க்கிறான்? என்ன சொல்லிட்டோம் நாம்?” என யோசித்தவள் தலையில் பல்ப் எரிந்தது. அவனை கணவனாக நன்கு அறிந்தவள் ஆகிற்றே.
“சரி தான். ஏற்கனவே சார் காலையில இருந்து வேற ஒரு மூட்ல இருக்காரு. சிக்காம இருந்தோம். இப்போ நாமலே நல்லா இழுத்துவிட்டுட்டோமே” என திருதிருவென முழிக்க அவளின் பாவனையின் தனக்குள் கரைந்துகொண்டிருந்தான் அர்ஜூன்.
அவஸ்தையாக பார்த்துகொண்டிருந்தவளை அருகில் வா என தலையசைத்து அழைக்க அதற்கு மேல் ஸ்டெபியை சோதிக்காமல் தர்ஷினி வந்து காப்பாற்றினார். அவர் ஸ்டெபியை அழைத்து செல்லவும் ஊப் என மூச்சை இழுத்துவிட்டான் அர்ஜூன்.
அந்த மாயவலையில் இருந்து விடுபட்டாலும் இரண்டு வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த அடக்கிவைக்கப்பட்டிருந்த உணர்வுகள் மொத்தமும் அடி ஆழத்திலிருந்து கட்டவிழ்ந்து கிளம்பிய தாக்கத்தில் அங்கே அமரமுடியாமல் எழுந்து சென்றான்.
வெளியே சென்று நிற்க அங்கே ஏற்கனவே ஆரவ் நிலையில்லாமல் அங்குமிங்கும் நடைபயில அவனை பார்த்து வாய்விட்டு சிரித்தவன் அவனருகே சென்றான்.
“என்னடா சக்கு? இந்நேரம் வாக்கிங்? சொல்லிருந்தா துணைக்கு நானும் வந்திருப்பேனே?…”
“எதுக்கு? உன் சங்காத்தமே எனக்கு வேண்டாம். நானே குழப்பத்துல இருக்கேன். ஏன்டா நீ வேற படுத்தற?…” அவன் முகத்தில் தென்பட்ட குழப்பமுடிச்சுகள் அர்ஜூனிற்கு சிரிப்பை தான் வரவழைத்தது.
அவனையே ஆழ்ந்து பார்த்தவன் பின் தொண்டையை செருமிக்கொண்டு,
“ஆரவ் நிலா ஒரு இயல்பான திருமண வாழ்க்கையை வாழ எல்லா விதத்திலும் தயார் தான். உங்க தாம்பத்திய வாழ்க்கையால அவளுக்கு எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதனால நீ குழம்பாதே. உள்ள போ…” எனவும் ஆரவ்வின் முகம் தெளிவில்லாமலே தயங்கி இருந்தது.
“நான் சொன்னா கேளேன்டா. நேத்தே இது விஷயமா உன்கிட்ட பேசி உன்னை தெளிவுபடுத்ததும்னு நினச்சேன். உன்னை எனக்கு தெரியாதா?…” என்றவனை இழுத்து அணைத்துகொண்டான் ஆரவ்.
“ப்ரீயா இரு. இந்த நாள் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியமான நாள். எதையும் நினச்சு மனசை போட்டு குழப்பிக்ககூடாது புரியுதா? நீயும் நிலாவும் சந்தோஷமா இருக்கனும். இவ்வளோ போராடி கல்யாணம் செஞ்ச நீ நிலாவை கடைசிவரைக்கும் சந்தோஷமா வச்சுப்படா. அந்த நம்பிக்கை எனக்கு முழுமையா இருக்கு…” என்ற அர்ஜூனை பெருமை பொங்க பார்த்தவன்,
“லவ் யூ டா டக்கு…” எனவும் அவனோடு சேர்ந்து அர்ஜூனும் இதை கூற அங்கே,
“எனக்கெல்லாம் இல்லையா?…” என்றபடி ஸ்டெபி வர ஆரவ்வின் கண்கள் மின்னியது. அர்ஜூனை பார்த்து கண்ணடித்தவன்,
“பேப் என்கிட்டே இப்போ ஸ்டாக் இல்லை. என் டார்லிக்காக நான் சேவ் பண்ணிட்டேன். இந்தா உன் புருஷன். இவன்கிட்ட தான் எக்கச்சக்கமா இருக்கு. வேணும்ன்ற அளவுக்கு வாங்கிக்கோ…” என அர்ஜூனை ஸ்டெபியின் மேல் தள்ளிவிட்டு ஆரவ் உள்ளே ஓடிவிட்டான்.
அர்ஜூன் தன் மேல் விழுந்த வேகத்தில் நிலைதடுமாறிய ஸ்டெபி ஸ்திரமாக நிற்க முயன்று தோற்று கீழே விழ போக அர்ஜூன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளையும் பற்றி நிறுத்தினான்.
நிறுத்தியதோடு தன்னோடு அவளை சாய்க்க முதலில் திமிறியவள் பின் அவன் அணைப்பில் ஒன்ற,
“ஆஷா…” ஹஸ்கி வாய்ஸில் பேசியவன்,
“ஐ கான்ட் ஆஷா…” அவள் முகத்தை தனக்கு நேராக பிடித்து நிறுத்த அவன் செய்யவிருக்கும் காரியம் ஸ்டெபியை படபடக்கச்செய்தது. முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்ப முயல,
“ஆஷா ப்ளீஸ்…” என்றவன் ஒரு அழுத்தமான முத்தமொன்றை அவளின் இதழில் பதித்துவிட்டே விட்டான்.
அவளை விட்டு சிறிது நகர்ந்து நின்றவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பி பார்த்தால் ஸ்டெபி அந்த இடத்திலேயே உறைந்துபோய் நின்றிருந்தாள்.
அவளை தலைமுதல் பாதம் வரை அளவிட்டான். லைட்வெயிட் பட்டுச்சேலையில் பாந்தமாக இருந்தவள் தன்னுடைய சிறு கூந்தலை க்ளிப்பில் அடக்கி அதில் கொஞ்சம் பூவையும் வைத்திருந்தவள் வகிட்டில் அடர்வாக குங்குமத்தை வைத்து தனக்கு பிடித்தது போல அலங்கரித்து இருந்த ஸ்டெபியின் மேல் காதல் இன்னமும் பெருகியது.
ஒவ்வொரு செயலிலும் தன் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் ஸ்டெபியை நினைக்க நினைக்க அவனது மனம் நிலையில்லாமல் அவளை நெருங்க துடித்தது.
இவளை எப்படி தன்னால் பிரியமுடியும்? இல்லை தன்னை பிரிந்து அவளால் தான் இருக்கமுடியுமா? புரிந்துகொள்ள மறுக்கிறாளே என்ற ஆயாசம் படர்ந்தது அர்ஜூனின் மனதில்.
மேலும் இங்கேயே நின்றால் அவளை கட்டாயப்படுத்தி தன்னோடு அழைத்துசென்றுவிடுவோமோ என்று பயந்துவிட்டான்.
திகைத்து அசையாமல் நின்றிருந்த அவளின் தோற்றத்தில் தன்னையே கடிந்துகொண்டவன் உலுக்கியவன் அவளின் பார்வையில் மீண்டும் அவளுள் மூழ்க நினைக்க,
“அஜூ…” என்ற அவளது அழைப்பு அவனுக்கு இப்போது கோவத்தை குடுத்தது.
“ஏன் ஆஷா என்னை கொல்ற? உன்னை விடவும் மனசில்லை. உன் வார்த்தையை விட நீதான் எனக்கு முக்கியம்னு உன்னை நோகடிச்சு உன்னோட வாழவும் முடியலை. தினம் தினம் சித்ரவதையா இருக்கு ஆஷா…”
அவனது கோவத்தில் ஏதோ சொல்லவர அவனை கையமர்த்தி தடுத்தவன், “வா உள்ள போவோம்…” என முன்னால் நடக்க ஆரம்பித்துவிட்டான். பொங்கிவந்த அழுகையை அடக்கியவள் அவனோடு சேர்ந்து உள்ளே சென்றாள்.
எப்போதும் தைரியமாக இருக்கும் ஸ்டெபி ஏனோ இப்போதெல்லாம் கண்ணீரில் கரைய ஆரம்பித்து இருக்கிறாள்.
அன்றைக்கான நல்லநேரம் வடிவாம்பாள் பார்க்க அந்த நேரத்தில் நிலாவை ஆரவ்வின் அறைக்கு அழைத்துசென்று விட்டுவந்தாள் ஸ்டெபி.
சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து அனைவரோடு பேசிக்கொண்டிருக்க அர்ஜூன் பார்வை அவள்மீது விழவே இல்லை. நொடிக்கொருதரம் இவள் தான் அவனை பார்த்துகொண்டிருந்தாள்.
சிறிதுநேரத்தில் பேச்சின் திசை மாறி அர்ஜூன் ஆஷா எதிர்காலத்தை பற்றி வடிவே ஆரம்பிக்க குனிந்த தலை நிமிராமல் பதிலும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஸ்டெபி. அதைக்கண்டு ஆண்டனி வேதனைபட அதில் சற்றுமுன் மட்டுப்பட்டிருந்த அர்ஜூனின் கோவம் கூடியது.
காலையில் இருந்து அவளது அருகாமையும் அவள் உணர்த்திய நெருக்கமும் அவனை இம்சிக்க சற்றுநேரம் முன்பு பரிமாறிய முத்தமும் அணைப்பும் அவனது கோவத்தை தூண்டி பேயாட்டம் போடவைத்தது.
விளைவு அதுநாள் வரை ஸ்டெபிக்கே தெரியாத ஒரு ரகசியத்தையும் போட்டுடைத்தான். அவனது இந்த ருத்ரதாண்டவமே அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க துணைபுரிந்தது.
சடாரென எழுந்தவன், “அவளுக்கு அவளோட பிடிவாதமும் யாரோ சொன்ன வார்த்தைக்கான கோவமும் தான் பாட்டி பெருசு. பெத்த தகப்பன் தன்னோட வாழ்க்கையை நினைச்சு கலங்குறது தெரியாது…”
“வளர்த்த தகப்பனும், தாயும் வருந்தறது புரியாது. கட்டினவன் நான் அவளை பிரிஞ்சு அவளுக்காக ஏங்குவதும், தவிக்கிறதும் விளங்காது…” என்றவன்,
“ப்ச் நான் ஒரு மடையன் பாட்டி, அவ ஊருக்கே அர்த்தம் சொல்லுவா, அவளுக்கா இதெல்லாம் புரியாது. அவ கண்ணுல பட்டாலும் கண்டுக்காம இருக்கிறாளே? நாங்க காயப்பட்டாலும் பரவாயில்லை. அவளுக்கு அவளோட பிடிவாதமும் வறட்டு கௌரவுமும் தான் முக்கியம் பாட்டி…”
“இவளை நான் எப்படியெல்லாம் விரும்பினேன் தெரியுமா? நான் காதலிச்சவளா பாட்டி இவ? எப்போ இருந்து இப்படி சுயநலமா மாறினான்னே எனக்கு தெரியலை. எந்த இடத்துல இருந்து இவளை நான் கவனிக்காம விட்டேன்? எனக்கு புரியலை பாட்டி…” என தளர்ந்து அமர்ந்தவன்,
“எனக்கு குழந்தை வேணும்னு நான் கேட்டேனா? நான் குழந்தை குட்டியோட இருக்க பெருசா விட்டுகொடுக்கிறாளாம். யாருக்கு தேவை இவளோட பெருந்தன்மை. எனக்கு இவதான் வேணும் பாட்டி. அது இவளுக்கு புரியமாட்டிக்கே?. சொல்றதை காதுகுடுத்து கேட்க கூட மாட்டேன்றா…”
“அஜூ நான் உனக்காகத்தான். என்னால ………. உன..க்கு…. நா…. வேண்டாம் …. அஜூ….” என அழுகையோடே கூற இன்னமும் வெறியாகிவிட்டான் அர்ஜூன்.
“என்ன எனக்காக? எனக்கு தெரியாமையா நான் என்னோட உன்னை வாழ சொல்றேன்? பெருசா பேசவந்துட்டா….”
அவனால் இனியும் ஸ்டெபியை பிரிந்து இருக்கமுடியும் என நினைக்கமுடியவில்லை. ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் ஸ்டெபியின் அருகில் வந்தமர்ந்தான்.
“நானும் சொல்லவேண்டாம்னு தான் நினைக்கிறேன் ஆஷா. ஆனா என்னால உன்னை பிரிஞ்சு இனி ஒரு நொடி கூட இருக்க முடியாது. ஐம் சாரி டூ சே திஸ்…” என பீடிகை போட அனைவரும் ஏன் இப்படி சொல்கிறான் என்பது போல பார்க்க,
“பட் இப்போ இதை சொல்லலைனா நீ என்னை விட்டு இன்னும் விலகிட்டே தான் இருப்ப…” என்றவன் ஒரு நொடி நிதானித்துவிட்டு,
“ஆஷா உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும்…” புயலை அடக்கிய குரலில் கூற,
அதிர்ச்சியில் எழுந்தேவிட்டனர் அனைவரும். ஸ்டெபியோ சிலையென அமர்ந்துவிட்டாள். என்ன சொல்கிறான் இவன்? என்று இன்னும் விழிதெறிக்க பார்க்க,
“நம்ம மேரேஜ் பிக்ஸ் ஆகியிருந்தப்போ எனக்கு தெரியும். நம்ம ஹாஸ்பிட்டல்ல உனக்கு மந்த்லி டைம்ல ஓவர் ப்ளீடிங், ஸ்டமக் பெயின்னு வந்தப்போ ஒரு செக்கப் பண்ணினோமே ஞாபகம் இருக்கா?…”
அதை ஆமோதிக்க கூட முடியாமல் அவள் இன்னமும் உறைந்த நிலையிலேயே இருக்க,
“அப்போதான் உனக்கு ஸ்கேன் எல்லாமே எடுத்து பார்த்ததிலே உன்னோட யூட்ராஸ் குழந்தையை சுமக்கிற அளவுக்கு வளர்ச்சி அடையலைன்னு ரிப்போர்ட் வந்தது. அதை உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே நான் டாக்டர் தன்யாகிட்ட கேட்டு தெரிஞ்சுட்டேன்…”
“முதல்ல சொல்லமாட்டேன்னு தான் சொன்னாங்க. நான் தான் கட்டாயப்படுத்தி விஷயத்தை தெரிஞ்சுட்டேன். அதோடு இதை பத்தி உன்கிட்டயும், யார்க்கிட்டயும் சொல்லகூடாதுன்னும் கேட்டுகிட்டேன். அவங்க எனக்கு செஞ்சது ஒரு ப்ரெண்ட்லி ஹெல்ப்…”
“இப்போ சொல்லு. எனக்கு என்னோட வாரிசுதான் வேணும், அதுக்காகத்தான் கல்யாணம்னு நான் நினைச்சிருந்தா கல்யாணத்தை அப்போவே நிறுத்தியிருப்பேனே? நீ வேணும்னு நினைச்சதால தானே இப்போ வரைக்கும் உன்னோட போராடிட்டு இருக்கேன். அதை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க?…”
எல்லாவற்றையும் கூறிமுடிக்க ஆண்டனி வந்து அர்ஜூனை அணைத்துகொண்டார்.
“அர்ஜூன் என் ஜீசஸ் தான் உங்களை என் மகளுக்கு வாழ்க்கைத்துணையா அனுப்பிருக்காரு அர்ஜூன். இப்போ என் கண்ணுக்கு நீங்க கடவுளுக்கும் மேளாதான் தெரியறீங்க…” உணர்ச்சிக்குவியலாக மாறியிருந்த ஆண்டனியை சமாதானம் செய்ய யாராலும் முடியவில்லை.
எத்தனை பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக கூறிவிட்டான் இந்த அர்ஜூன். இவனால் எப்படி இது போலவெல்லாம் நடந்துகொள்ள முடிந்தது? என்ன மனிதன் இவன்? என வியக்காமல் இருக்கமுடியவில்லை மற்றவர்களால்.
ஆண்டனியின் அணைப்பில் திணறிய அர்ஜூனை பிரித்த ராகவன் அவரை தானே தேற்றினார். தர்ஷினி ஸ்டெபியை அழைக்க அவரது அழைப்பு காதில் விழுந்தாலும் ஸ்டெபியின் எண்ணம் முழுவதும் அர்ஜூன் கூறிய செய்தியை சுற்றியே வலம் வந்தது.
அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. தனக்காகவா? தன்மேல் கொண்ட காதலுக்காகவா? என நினைத்து அவன் கூறிய விஷயத்திலிருந்து வெளிவரமுடியாமல் தவித்தாள்.
“ஆஷா…” அர்ஜூனின் தீண்டலில் அவனது தோள் சாய்ந்தவள்,
“அஜூ…” என கதறியபடி அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அத்தனை நாள் மனதினுள் போட்டு அடைத்துவைத்த அந்த கதறல் பெரும் கேவலாக வெடித்து சிதறியது. அவளின் வேதனை தீருமட்டும் அழுது கண்ணீரில் கரைக்கட்டும் என்று அர்ஜூனும் அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்தான்.
அவனை விட்டு பிரிந்து அவன் வீட்டை விட்டு வெளியேறிய போது கூட கலங்காமல் இருந்தவள் அதன் பின்னும் இரண்டு வருடங்கள் பார்வையால் கூட அர்ஜூனின் புறம் மீண்டும் சாயாமல் கம்பீரத்துடன் வலம் வந்தவள் இப்போது தன் சக்திமொத்தமும் வடிய அழுகையில் தன் மனபாரங்களை கழுவி வெளியேற்றினாள்.
வடிவின் கண்ணசைவின் படி அவர்களுக்கு தனிமைகொடுத்து அனைவரும் அவர்களை விட்டு விலகி அவரவர் அறைக்குள் சென்று அடைந்துகொண்டனர். ராகவ் ஆண்டனியை தனியே விடாமல் அவரோடு சென்று அமர்ந்துகொண்டார்.
ஸ்டெபியின் அழுகை நிற்காமல் அர்ஜூனிற்கு பெரும் சோதனையை வைத்தது. தன் கைவளைவிற்குள் அமர்ந்திருந்தவளது உடல் குலுங்க ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கமாட்டாதவனாக அவளை இழுத்துகொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“ஆஷா…”
“ஆஷா…” இருமுறை அவளை சமாதானம் செய்யும் விதமாக அழைக்க அதில் மேலும் அவளது சத்தம் கூடியதே தவிர குறையவில்லை. இப்போது,
“இப்போ அழுகையை நிறுத்தபோறயா இல்லையா?…” சற்றே குரலுயர்த்தி அதட்ட சட்டென்று அழுகையை நிறுத்தியவள் மெல்லிய விசும்பலோடு அவனை பார்க்க,
“அழுததெல்லாம் போதும். இதுவரைக்கும் நீயும் நானும் பட்ட கஷ்டமும் போதும். திரும்பவும் பழைய பல்லவியையே பாடின நான் மனுஷனா இருக்கமாட்டேன்…” என முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அவளை அதட்ட,
அய்யனார் சிலை போல மிரட்டிக்கொண்டு நின்ற அவனை பார்த்தவள்,
“இப்போ மட்டும் மனுஷனை போலவா இருக்கீங்க?…” மூக்கை உறிஞ்சிக்கொண்டே அவனிடம் வாதாட,
“ஹ்ம் இதுதான் என்னோட ஆஷா. எப்போவுமே என்னோட ப்ரேவ் கேர்ள் ஆஷா தான் எனக்கு பிடிக்கும். அழுமூஞ்சி ஆஷா ம்ஹூம். வேண்டவே வேண்டாம்…” என கூறி சிரிக்க தானும் அவனுடன் கலந்துகொண்டாள் சிரிப்பில்.
இந்த சிலநாட்கள் அலைச்சலும் இதுவரை மனதில் சுமந்துகொண்டிருந்த வேதனையும் இன்று ஒரு முடிவிற்கு வந்துவிட்ட நிலையில் மனம் லேசாக இதுவரை அவனிற்கு தெரியாத சோர்வும் அசதியும் இன்று அவனிடம் ஓய்விற்கு கெஞ்சியது.
அவன் கண்களில் தெரிந்த அயர்வையும் நிம்மதியையும் உணர்ந்தவள், “அஜூ தூங்குவோமா?…” என்றவளை பார்த்தவன்,
“என் பார்வையை வச்சே எனக்கு என்ன தேவைன்னு சொல்ற நீ எப்படி என்னை விட்டு பிரியனும்னு முடிவெடுத்த ஆஷா? என்னால அதை தான் தாங்க முடியவில்லை…”
“ப்ளீஸ் அஜூ, இனியும் பழசை பேசவேண்டாமே. மனசை அறுக்குது. விட்ருங்க…” என அவனின் பேச்சை நிறுத்தியவள் அவனை உறங்க சொல்லிவிட்டு தன்னையும் அவனது கை வளைவிற்குள் திணித்துகொண்டாள்.
படுத்த நொடி எங்கிருந்துதான் உறக்கமது அர்ஜூனை அடைந்ததோ உடனே தூங்கியும் போனான். பழைய விஷயங்களை பேசவேண்டாம் என்று கூறிய ஸ்டெபியின் கண்களை பொட்டுத்தூக்கமும் அண்டவில்லை.
பழைய நினைவுகள் அனைத்தும் அலைமோதி அவளது நினைவலைகள் கரையேற ஆரம்பித்தது.
——————————————————————-
சிறுவயதிலிருந்தே ஆரவ், ஸ்டெபி, அர்ஜூன் அனைவரும் ஒன்றாக பயின்றாலும் வளர வளர அவர்களது நட்பு இறுகியது.
ஒரு கட்டத்திற்கும் மேல் ஆரவ்விடம் பேசுவது போல இயல்பாக அர்ஜூனிடம் ஸ்டெபியால் பேசவோ பழகவோ முடியவில்லை. தன்னையே ஆராய்ந்தபோது கிடைத்த விடைதான் காதல்.
ஸ்டெபியின் காதலை அர்ஜூன் உணர்ந்தாலும் அவளிடம் அதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டான். அதே போல அர்ஜூனும் ஸ்டெபியை விரும்பவும் செய்தான். இருவரது எண்ணமும் ஒரே அலைவரிசையில் எக்கணம் பயணிக்க ஆரம்பித்ததோ?
இருவருமே கண்களை தாண்டி அவர்களது காதலை வார்த்தையில் வடிக்கவில்லை. வார்த்தையால் காதலை கூறாவிடிலும் உள்ளத்தால் நொடிக்கொருதரம் பரிமாறிக்கொண்டனர் விழிகளின் வழி. ஆரவ்க்குமே இந்த விஷயம் தெரியும் என்றாலும் அர்ஜூனின் வார்த்தைக்காக தள்ளிநின்றான்.
ஸ்டெபி தனக்காக அர்ஜூனிடம் ஆரவ்வை பேச சொல்ல அர்ஜூனோ நீ என்ன அவளுக்கு தூதா அவளே வரட்டும் என விரட்ட அதற்கு மேலும் இந்த விஷயத்தில் தலையிடாமல் நாகரீகமாக இருந்துகொண்டான்.
இப்படியே நாட்கள் ஓட படிப்பையும் முடித்து ஹவுஸ்சர்ஜன் முடித்த மூவரும் ஆரவ் ஹாஸ்பிட்டலில் தங்களது பணியை தொடங்கினர். ஸ்டெபி அர்ஜூனிடம் காதலை கூற தயங்க அர்ஜூனோ அவளின் தயக்கத்தை உடைத்து அவளே முன்வரட்டும் என்று காத்திருந்தான்.
தன்னிடமே காதலை கூற தயங்குபவள் எப்படி வீட்டினரிடம் கூறி சம்மதம் வாங்குவாள்? மற்ற விஷயத்தில் இருக்கும் இந்த தைரியம் ஏன் இதில் இல்லை இவளுக்கு? என்ற சிறு கோவம் அர்ஜூனிற்கு.
அதனால் அவன் அமைதி காக்க ஸ்டெபிதான் தவித்துபோனாள். அவளது தயக்கத்தை உடைத்தெறியும் நாளும் ஆண்டனியால் உருவானது.
ஸ்டெபிக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக ஆண்டனி கூறவும் ஸ்டெபி அதிர்ந்துபோய் ஆரவ்விடம் முறையிட அவனோ உன் சங்காத்தமே வேண்டாம் என கும்பிடு போட அடித்துப்பிடித்துகொண்டு அர்ஜூனிடம் வந்து நின்றாள்.
வந்து நின்றது முதல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அர்ஜூனை ஒரு பார்வை பார்ப்பதும் அந்த அறையை அன்றுதான் பார்ப்பது போல கர்மாசிரத்தையாக பார்வையால் வலம் வரவுமாக இருக்க பொறுமை இழந்த அர்ஜூன் எழுந்துகொண்டான்.
“ஆஷா நீ இந்த ரூமை பொறுமையா சுத்திப்பார்த்து முடி. அதுக்குள்ளே நான் ஓபி பேஷண்ட்ஸ் பார்த்துட்டு வந்திடறேன். அதுக்கப்பறமாவது உனக்கு விஷயத்தை சொல்லனும்னு தோணுச்சுனா சொல்லு…” என அங்கிருந்து கிளம்ப ஸ்டெபியும் எழுந்துகொண்டாள்.
“ப்ளீஸ் அஜூ…” என அவனை நிறுத்த அவளது முகத்தில் தென்பட்ட பதட்டமும் விழிகளில் தெரிந்த வெட்கம் கலந்த பயமும் அர்ஜூனை சுவாரஸியமாக்கியது.
ஸ்டெதஸ்கோப்பையும் தனது வொய்ட் கோட்டையும் மேஜையில் வைத்துவிட்டு அதில் சாய்ந்து கைகட்டி நின்றவன் குறுகுறு வென அவளையே பார்க்க அதில் மேலும் அவஸ்தைக்கு ஆளானாள் ஸ்டெபி. அதை கண்டவனுக்கு மென்மையான முறுவல் ஒன்று தோன்றியது.
“ஹ்ம் சொல்லு. உனக்கு இன்னும் பைவ் மினிட்ஸ் டைம் தரேன்…” என வாட்சை பார்க்க அவனை அறிந்தவள்,
“அஜூ டாடி என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. அவங்ககிட்ட நான் என்ன சொல்ல?…” தயங்கி தயங்கி இதை சொல்லும் போதே அவளது கண்கள் கலங்கியது. ஏனோ அது அர்ஜூனின் பிடிவாதத்தை தகர்க்க இனியும் அவளை படுத்த வேண்டாம் என முடிவெடுத்தவன்,
“உன் டாடிக்கிட்ட மேரேஜ் பண்ணிக்க சம்மதம்னு சொல்லவேண்டியது தானே?…” என நிறுத்தியவன் அவள் திகைத்து பார்த்துகொண்டிருக்கும் போதே,
“அர்ஜூனை மேரேஜ் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிருக்கவேண்டியது ஆஷா?. அதை சொல்ல உனக்கென்ன கஷ்டம்?…” என்று முடிக்கவில்லை,
“அஜூ…” என ஆனந்த பரவசத்தில் அவனது கைகளை பற்ற,
“சொல்லுவ தானே? இதை என்கிட்டே கேட்க இப்படி ஓடி வரனுமாக்கும்?…” அவளது விரல்களுக்கு அழுத்தம் குடுத்தவாறே அவளிடம் கேட்க,
“நீங்க தான் உங்க விருப்பத்தை என்கிட்டே சொல்லவே இல்லையே? பின்ன எந்த நம்பிக்கையில நான் டாடிக்கிட்ட சொல்ல?…”
“நீ என்ன லூஸா ஆஷா? நாம ஒன்னும் டீன் ஏஜ் பசங்க கிடையாது. அதுவும் இல்லாம இந்த ப்ளவர்ஸ் குடுத்து மண்டிபோட்டு லவ் ப்ரப்போஸ் பண்ண எனக்கு தெரியாது. எனக்கு வரவும் வராது. அர்ஜூன் வேற…”
“தென் என்ன சொன்ன? எந்த நம்பிக்கையில சொல்லன்னு கேட்ட தானே? உனக்கு எவ்வளோ தைரியம்? என்னோட பார்வையும் அது சொன்ன பாஷையும், என் மனசை அதிலிருக்கும் காதலை உன்கிட்ட சொன்னதில்லையா?. காதல் இதயத்தால் உணரவேண்டியது. வார்த்தைகளை விட அதற்குத்தான் சக்தி அதிகம்னு நான் நம்பறேன்….”
“உனக்கு என் மேல இருக்கும் காதலை நான் உணர்ந்தது போல நீயும் தானே உணர்ந்த? ஊரெல்லாம் நாங்க காதலிக்கிறோம்னு படம் போட்டு காட்டி அடுத்தவங்க பார்வைக்கும் விமர்சனத்துக்கும் நம்ம ஆளாகனுமா? என் ஆஷா வித்யாசமானவன்னு நான் நினச்சேன். நீயும் சராசரியா யோசிக்கலாமா?…”
அவனது பேச்சின் தாக்கத்தில் அதில் வெளிப்பட்ட பரிமாணத்தில் அசந்துவிட்டாள் ஆஷா.
“இப்போ சொல்லு, நானும் உனக்கு எல்லோரையும் போல காதலை சொல்லனும்னு நீ எதிர்பார்க்கிறாயா?…” நான் அதற்கும் தயார் என்பது போன்ற அவனது பார்வையில் அவனின் தோள் சாய்ந்தவள்,
“என் அஜூ இப்படியே இருக்கிறது தான் எனக்கு பிடிக்கும். நம் காதலை உணர உன்னோட பார்வையே போதும் அஜூ எனக்கு. வார்த்தைகள் தேவையில்லை…” என்றவளின் தலையில் தானும் நிறைவோடு தலைசாய்ந்து கொண்டான் அர்ஜூன்.