அறைக்குள் வந்த ஜானகி அமைதியாக இருக்கவும் “நான் அவளைக் கவனிக்கலைன்னு கோபமா இருக்காளா? இப்ப எப்படி இவளை சமாதானப் படுத்துறது?”, என்று எண்ணினான் ஸ்ரீராம்.
அதனால் அவளை சமாதானப் படுத்த “சாரி ஜானு, ரம்யா கால் பண்ணினாளா? அதான் நீ வந்ததைக் கவனிக்கலை. அதுக்கு முன்னாடி உனக்காக தான் காத்துட்டு இருந்தேன்”, என்றான்.
அவனே ரம்யா பற்றி பேசியதும் அது வரை இருந்த கூச்சம் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு அவனை முறைத்துப் பார்த்தவள் “ஓஹோ, அப்படின்னா அவ கால் பண்ணினா என்னை மறந்துருவ? அப்படித் தானே?’, என்று கேட்டாள்.
அவள் கேள்வி புரியாததால் “அப்படி எல்லாம் இல்லை ஜானு. அவ வேற. நீ வேற. அவளுக்காக உன்னை எப்படி மறப்பேன், சொல்லு”, என்றான்.
“ஆமா டா, அவ வேற நான் வேற தான். அவ உன்னோட முன்னாள் மற்றும் இந்நாள் காதலி. ஆனா நான் இளிச்ச வாய் பொண்டாட்டியாச்சே?”
“ஏய் எதுக்கு இப்ப லூசு மாதிரி பேசிட்டு இருக்க? ரம்யா ஒண்ணும் என் காதலி கிடையாது. இன்னொரு தடவை தப்பா பேசாத ஜானு”, என்று கொஞ்சம் அழுத்தமாக சொன்னான்.
‘ஐயோ ஜானு, அதுக்கு நானே உனக்கு விளக்கம் சொல்லணும்னு நினைச்சேன். அன்னைக்கு எனக்கே தெரியாம தான் எல்லாம் நடந்துச்சு. நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் சேந்து தான் படத்துக்கு போனோம். ரம்யா தான் என்னை விரும்புறா. அதனால தான் முத்தம் கொடுத்தா. ஆனா நான் வெளியே வந்து அவளை நல்லா திட்டி விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் அவளும் என்னை பிரண்டா தான் பாக்குறா. அன்னைல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு அவ ஃபிரண்ட் மட்டும் தான்”
“அப்படியா? கதை நல்லா தான் இருக்கு. ஆனா நம்ப தான் முடியலை”
“ஓ அதைப் பாத்துட்டு தான் அப்ப இருந்து கோபத்துல இருக்கியா? நிஜமாவே நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை ஜானு. எனக்கு அவளைப் பாக்கும் போது சின்ன பிள்ளை மாதிரி தான் தோணும். நான் எப்பவும் அவ மேல அவ்வளவு கேர் எடுத்துப்பேன். அதை தான் அவளும் லவ்ன்னு தப்பா நினைச்சிட்டா. ஆனா இப்ப அவளுக்கு புரிய வச்சிட்டேன். நீ மட்டும் தான் எனக்கு எல்லாமே ஜானு. என்னை நம்பு”, என்ற படி அவள் அருகில் வந்தவன் “இந்த பால் எனக்கு தானே? படத்துல எல்லாம் வர மாதிரி பாதி பாதி குடிக்கலாமா?”, என்று கண்களில் ஆர்வத்துடன் கேட்டான்.
கொதிநிலையில் இருக்கும் போது அவன் சாதாரணமாக பேசவும் அவளுக்கு எரிச்சலாக வந்தது. “இவன் என்னை என்ன லூசுன்னு நினைச்சானா? லூசுன்னு நினைச்சு தானே என்னைக் கல்யாணம் பண்ணிருக்கான்? அதான் இப்படி நடிக்கிறான்”, என்று கோபமாக எண்ணியவள் “பால் தானே? இந்தா குடி”, என்று சொல்லி அவனுடைய தலையில் அப்படியே அதை கொட்டினாள்.
முதலில் திகைத்த ஸ்ரீராம் “ஏய் லூசா டி நீ?”, என்று சொல்லிய படியே முகத்தில் வடிந்த பாலைத் துடைத்தான்.
“ஆமா டா ஆமா. நான் லூசு தான். என்னை பைத்தியக்காரின்னு நினைச்சு தானே என்னைக் கல்யாணம் பண்ணுண? என்னைக் கல்யாணம் பண்ணினா உன் திருட்டுத் தனத்தை எல்லாம் கண்டுக்காம இருப்பேன்னு நினைச்ச தானே? அதுக்கு வேற ஆளைப் பாரு. யாருக் கிட்ட உன் வேலையைக் காட்ட நினைக்கிற?”
“நான் என்ன டி செஞ்சேன்? நீ பேசுறது செய்றது எதுவுமே எனக்கு புரியலை. பிடிக்கவும் இல்லை ஜானு”
“நல்லாவே நடிக்கிற ராம்”
“நான் ஏன் நடிக்கணும்? முதல்ல நான் என்ன செஞ்சேன்னு சொல்லு”
“உலகத்துலே முதலிரவுக்கு தாலி கட்டின பொண்டாட்டி ரூமுக்கு வரும் போது முன்னாள் காதலி கூட போன்ல பேசிட்டு இருக்குற உத்தமன் நீயா தான் டா இருப்ப. இது உனக்கு தப்பா தெரியலையா?”, என்று கேட்டவள் தம்ளரில் இன்னும் கொஞ்சம் பால் மிச்சம் இருக்கவும் அதை மீண்டும் அவன் முகத்தில் ஊத்தினாள்.
“ஏய்”, என்று கத்தினான் ஸ்ரீராம்.
“என்ன ஏய்? உண்மையைச் சொன்னா கசக்குதா? அவளை லவ் பண்ணினா அவளையே கல்யாணம் பண்ணித் தொலைக்க வேண்டியதுதானே? எதுக்கு என் வாழ்க்கையைக் கெடுத்த? உங்க போதைக்கு நான் ஊருகாயா டா? என்னை உன் வீட்ல பொண்டாட்டின்னு பேர்ல டம்மி பீசா வச்சிக்கிட்டு வெளிய அந்த ரம்யா கூட கூத்தடிக்கலாம்னு நினைச்சியா? விட மாட்டேன் டா. நீ நினைச்சதை நான் நடக்க விட மாட்டேன்”
“சே நீயெல்லாம் பொண்ணா டி? இவ்வளவு தூரம் சொல்றேன். மறுபடியும் இப்படியே பேசுற? உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?”
“நீ எப்படி என் கிட்ட பேசுவ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசின உன் காதலி கிட்ட போய் பேசு போ”, என்று எரிச்சலுடன் அவள் கத்தியதும் அவளை முறைத்த படியே குளியல் அறைக்குள் சென்று விட்டான்.
குளித்து முடித்து அவன் வெளியே வரும் போது கொட்டிய பாலை துடைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி. அவள் செய்கையை வியப்பாக பார்த்தவன் “என்னை உன்னால புரிஞ்சிக்கவே முடியலை ஜானு. என் மேல கோப பட்டு தான் பாலை என் மேல கொட்டின. இப்ப நீயே அதை துடைகிற? இதுல இருந்தே தெரியலையா? நீ நல்லவ ஜானு. நாம பொறுமையா பேசினா எல்லாம் சரியாகிரும். பேசலாமா? நான் சொல்ல வரதைக் கேக்குறியா?”, என்றான்.
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உன் மேல எனக்கு கொலை வெறியே வருது. உன்னைக் தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு வேகம் வருது. ஆனா முழு மாடு மாதிரி இருக்குற உன்னை எபப்டி அடிக்க? அதனால தான் உன்னோட சட்டையை எடுத்து இதை துடைச்சிட்டு இருக்கேன்”, என்று சொன்னாள் ஜானகி.
“அடப்பாவி, என்ன டி சொல்ற? இந்த சட்டை என்னோடதா? ஐயையோ அது நம்ம கல்யாண சட்டை டி”, என்று உண்மையாகவே அலறினான்.
“ஆமா ஆமா கல்யாணமே கனவா போச்சு. இதுல இந்த சட்டை ஒண்ணு தான் கேடு. சட்டை மட்டும் போச்சேன்னு சந்தோஷப் படு. எனக்கு இருக்குற கோபத்துக்கு உன்னை ஏதாவது செஞ்சிற போறேன். இனி அந்த நூடுல்ஸ் மண்டை கூட பேசின அதுக்கு அப்புறம் நீ வேற ஜானகியை பாப்ப”
“நான் எதுக்கு அவ கிட்ட பேச போறேனாம்? அதான் எனக்குன்னு நீ இருக்கியே?”, என்று மையலுடன் அவள் அருகே வந்தான்.
“இப்படி தான் நடிக்காதேன்னு சொன்னேன்”, என்று அவள் சொன்னதும் அவனுக்கு சலிப்பாக இருந்தது.
“ப்ச், எதையும் புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சா என்ன அர்த்தம் ஜானு?”, என்று எரிச்சலாக கேட்டான்.
“உன்னை நான் நம்பலைன்னு அர்த்தம். உன்னை பேசச் சொன்னாலும் நீ பொய் தான் சொல்லப் போற? உன்னைப் பாத்தாலே எனக்கு எரிச்சலா வருது”
“அப்புறம் எதுக்கு டி என்னைக் கல்யாணம் பண்ணின?”
“அதான் அன்னைக்கே சொன்னேனே? குடும்பத்துக்காக தான்னு. அதுக்கு தான் கல்யாணத்தை நிறுத்த சொன்னேன். நீ பெரிய இவன் மாதிரி பேசின. இப்ப அனுபவி. நீ உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்னு கனவுல கூட நினைக்காதே. இனி நீ என் இஷ்டப் படி தான் இருக்கணும். இருக்க வைப்பேன்”
“ஏய், நான் உன் புருஷன் ஓகே. இது நான் சொல்ல வேண்டிய டயலாக். கொஞ்சம் அன்பா பேசினா ஓவரா போற? நீ யாரு டி என்னைக் கண்ட்ரோல் பண்ணுறதுக்கு? என் அப்பா பேச்சையே நான் கேக்க மாட்டேன். இவ பெருசா என்னை அடக்க வந்துட்டா. நானும் கல்யாணம் நடந்துருச்சு. நாமளும் மத்தவங்க மாதிரி கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கலாம்னு பாத்தா ஓவரா துள்ளுற? எல்லா நேரமும் வாயை மூடிட்டு இருக்க நான் உன் அடிமை இல்லை சரியா?”
“அப்படீங்களா சார்? கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி புருசனுக்கு பொண்டாட்டி அடங்கி தான் போவா. அது நம்ம நாட்டு பழக்கம் தான். ஆனா புருஷன் ஒழுங்கா இருந்தா தான் அடங்கிப் போக முடியும். நீ என்னை காமெடி பீசா ஆக்குவ. நான் வாயை மூடிட்டு இருக்கணுமா?”
“அப்படியா? சரி ஒண்ணே ஒண்ணு கேக்குறேன். உங்க ரெண்டு பேருக்கும் இடைல காதல் அப்படிங்குற வார்த்தை வந்ததே இல்லைன்னு சொல்லு பாப்போம்”
“அதான் சொன்னேன்ல? அவ மட்டும் தான் என்னை விரும்பினான்னு. நான் அவளை உண்மையான பிரண்டா தான் நினைக்கிறேன் டி”
“இதை நம்ப நான் ஒண்ணும் இளிச்ச வாய் இல்லை ராம்”
“சரி இப்ப என்ன பண்ணுறதா உத்தேசம்? அதையாவது தெளிவா சொல்லு”
“என்ன பண்ண சொல்ற?
‘என்னை நம்ப மாட்ட. அப்படின்னா கண்டிப்பா என் கூட வாழவும் மாட்ட. அப்படி தானே?”
“டெபனைட்லி. உன் கூட எல்லாம் வாழ முடியாது”
“ஓஹோ, அப்ப என்ன செய்ய போற?”
“உன்னை வேவு பாக்க போறேன். நீ பண்ணுற தப்பை எல்லாம் கண்டு பிடிக்க போறேன்”
“உளவுதுறையா மாறப் போறேன்னு சொல்லு. சரி கண்டு பிடிச்சு என்ன செய்யப் போற?”
“மாமா கிட்ட போட்டுக் கொடுக்க போறேன்”
“ஏய் என்ன டி சொல்ற? எங்க அப்பா கிட்டயா? வேண்டாம் டி. ரம்யா விஷயத்தை எல்லாம் அவர் கிட்ட சொல்லிட்டு இருக்காத”
“ஏன்? சொன்னா என்ன?”
“அவர் கிட்ட போய் ரம்யா மட்டும் தான் பா என்னை விரும்புறா. நான் அவளை பிரண்டா தான் நினைக்கிறேன்னு சொன்னா கண்டிப்பா அவர் நம்ப மாட்டார் டி”
“மாமா மட்டும் இல்லை. யாருமே நம்ப மாட்டாங்க. நானும் தான். இங்க பாரு. நீ பிளான் பண்ணின மாதிரி நான் உனக்கு ஊருக்கு தான் பொண்டாட்டி. ஆனா நீ அவ கூட வாழலாம்னு கனவுல கூட நினைக்காத. அவ கூட பேசுறேன்னு எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு. மாமா கிட்ட எல்லாம் சொல்லி எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்கன்னு அவர் காலுல விழுந்துருவேன். அதுக்கு அப்புறம் அவர் உன்னைக் கவனிக்கட்டும்”
“எம்மா தாயே, ரம்யா என்ன? நான் யார் கூடவும் பேசலை போதுமா? நீ தேவையில்லாம இந்த விசயத்தை என் அப்பா கிட்ட போட்டுக் கொடுத்துறாத”
“அது அந்த பயம் இருக்கட்டும்”, என்று சொன்னவள் தன்னுடைய மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள்.
உள்ளே போன அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “ரம்யா லூசு, நீ கொடுத்த ஒரு முத்தத்தால என் வாழ்க்கைல எவ்வளவு பெரிய பிரச்சனை பாரு?”, என்று எண்ணிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான்.