அடுத்தநாள் சனிக்கிழமை மாலை, எப்போதும் போல் தந்தையோடு சுற்றிக்கொண்டிருந்தாள் ஆதிரா.அப்போது தீரஜிற்கு கால் செய்த வினோத், “மச்சான் சிஸ்டம்ல ஏதோ வைரஸ் இருக்கு… நானும் நிறைய சாஃப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணிட்டேன் ஆனாலும் நோ யூஸ்… நீ ஃப்ரீயா இருந்தால் வா” என்று வைத்தான்.
தீரஜ்,வினோத்தின் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்க, “நானும் வரேன்ப்பா” என்று வந்து நின்றாள் ஆதிரா.
“அம்மாக்கிட்ட சொல்லிட்டு வாங்க அம்மாயி” என்று தீரஜ் கூற, வேகமாக தன் அன்னையிடம் சொல்லச்சென்றாள் ஆதிரா.
நக்ஷத்ரா மறுப்பதிற்கெல்லாம் வாய்ப்பில்லை. ஆனாலும் ஆதிராவை வெளியில் அழைத்துச்செல்லும் பொழுதெல்லாம் அது நக்ஷத்ராவிற்குத் தெரியவேண்டும் என்று எப்போதும் தீரஜ் நினைப்பான்.
“வாங்கப்பா போலாம்” என்று தந்தையின் கையை வேகமாக மகள் பிடித்துக்கொள்ள, “சரிங்க பெரிய மனுஷி” என்று சுட்டி மகளின் தலையில் மெதுவாக தன் கரம் வைத்து ஆட்டியவன், மகளோடு வினோத் வீட்டிற்குச் சென்றான்.
வினோத்தின் சிஸ்டத்தை ரொம்ப நேரமாக தீரஜ் சரிப்பார்த்துக் கொண்டிருக்க, ஆதிராவிற்குத் தான் போர் அடித்தது. வினோத் ஆதிராவிற்கு ஸ்நாக்ஸ்ஸெடுக்க கிச்சன் சென்றிருந்தான்.
“அப்பா வீட்டுக்கு போலாம்” என்று ஆதிரா சிணுங்க ஆரம்பிக்க,
“குட்டிமா இன்னும் பத்து நிமிஷம் தான் முடிச்சிட்டு கிளம்பிடலாம்” என்று ஸிஸ்டமில் முக்கால்வாசி வேலையை முடித்த தீரஜ் கூறியதோடு, அங்கிருந்த டிராவைத் திறந்து அதிலிருந்த ஒரு நோட்டை பார்த்து, “வினோத் டிரால இருக்குற நோட் ஆபிஸ் யூஸ்க்கு வைச்சிருக்கியா?” என்று சத்தமாகக் கேட்டான்.
இங்கு டீ கலந்துக்கொண்டிருந்த வினோத்தோ, “அவசரத்துல சர்க்கரையைப் போட்டோமா இல்லை உப்பை போட்டோமோ!” என்று முணுமுணுத்தபடி தலையைச் சொறிந்து யோசித்துக் கொண்டிருக்க,தீரஜ் கேட்கவும் வேகமாக, “எடுத்துக்கோ டா தேவையில்லை” என்று கூறியதோடு, டீயை சுவைத்துப் செய்துப்பார்த்தவன் முகத்தை சுளித்தான்.
“ஆத்தாடி உப்பைத் தூக்கி போட்டிருக்கேனே! இதை மட்டும் தீரஜ் குடிச்சிருந்தால் என்னை கைமா பண்ணி பொடிமாஸ் ஆக்கிருப்பான். நல்லவேளை தப்பிச்சோம்” என்று புலம்பியபடி மறுபடியும் டீ போட ஆரம்பித்திருந்தான்.
அங்கிருந்த நோட்டை எடுத்தவன் மகளிடம் கொடுக்க, தன்னிடமிருந்த பென்னையும் கொடுத்தான். அப்போது வினோத் வீட்டிலிருந்து ஃபோன் வர, பேசியபடியே ஆதிராவிற்கு ஸ்நாக்ஸ் கொடுத்துவிட்டு,பால்கனியில் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தான்.
அதற்குள் வேலையை முடித்த தீரஜ், ஆதிராவை வீட்டில் விட அழைக்க கையிலிருந்த நோட்டையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள் மகள்.
பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தபடி நக்ஷத்ராயிருக்க, ரோகிணி சமையல் செய்துக்கொண்டே அவர்களுடன் பேச்சில் இணைந்திருந்தார்.
மகளை உள்ளேவிட்டவன், நக்ஷத்ராவை அழைத்து பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு மறுபடியும் வினோத் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
“ஆது, இது என்ன டி நோட்?” என்று மகளிடம் சாதாரணமாக கேட்க, “இதுல நான் டிராயிங் வரையிறேன்… வினோத் அங்கிள் நோட்டு” என்று கூறியபடியே விளையாட்டாக ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப “வாவ், இதுலயும் ஸ்டோரி இருக்குமா” என்று உற்சாகமாகக் கூறினாள் ஆதிரா.
“நீ ஏதாவது பேரகிராப் பார்த்தாலே ஸ்டோரின்னு சொல்ல ஆரம்பிச்சிடுவ” என்று துணிகளை மடித்தபடியே மகளிடம் கூறியவள், எதேர்ச்சையாக திறந்திருந்த நோட்டைப் பார்த்தவள்,அதை கூர்ந்து பார்க்க அவளின் கண்கள் பேரதிர்ச்சியில் உறைந்தது.
அன்று இரவு எப்போதும் போல் மகளை தூங்கவைத்துக்கொண்டிருந்தான் தீரஜ். அவனுக்கும் நக்ஷத்ராவிற்கும் விஷயமின்றி பேச்சில்லை என்பதால் வினோத் வீட்டிலிருந்து வந்தப்பின்னர் அவளின் மௌனத்தின் பின்னால் இருக்கும் பூகம்பத்தை அவன் கவனிக்கவில்லை.
ஆதிராவை தூங்கவைத்துவிட்டு அறைக்குச் செல்லவிருந்தவனை, “பிளான்னெல்லாம் பக்காவா போட்டு எக்ஸ்ஸிகியூட் பண்ணிருக்கீங்க… வெல் டன் மிஸ்டர் தீரஜ்” என்று கோபம் கலந்த ஆதங்கத்துடன் கைத்தட்டினாள் நக்ஷத்ரா.
அவளின் த்வனியைக் கண்டு புருவத்தை சுருக்கிய தீரஜ், “என்ன சொல்ற நீ?” என்று கைகளைக் கட்டியபடி புரியாமல் கேட்டான்.
“புரியலையா!” என்று விரக்தியாக கலங்கிய கண்களுடன் மேஜை மீதிருந்த அந்த நோட்டையெடுத்தவள், “நீங்க போட்ட மாஸ்டர் பிளானைத் தெரியாமல் நீங்கள் நல்லவன்னு நம்பி இவ்வளவு நாள் முட்டாள் மாதிரி என் பொண்ணு உங்களை நம்பியிருக்காள்” என்று கண்ணீர் அருவியைப் போல் கொட்ட, ‘நானும் நம்பி ஏமாந்துட்டேன்’ என்று மனதில் அலறியபடி அவனை ஆதங்கத்துடன் பார்த்தாள்.
அந்த நோட்டைப் புரியாமல் பார்த்த தீரஜ், “இப்போ எதுக்கு அழுதுட்டிருக்க நக்ஷத்ரா” என்று அப்போதும் கூட அக்கறையில் கேட்டவனின் கரம் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டப் பிறகு தான் பின்சென்றது.
‘ஏன் தீரஜ் இப்படி பண்ணீங்க? உங்களுடனான வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நிம்மதியா இருந்தேனே! எல்லாத்தையும் இப்படி சுக்குநூறா உடைச்சிட்டீங்களே’ என்று மனதில் மருகியவளுக்கு அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கி கத்தி கதற வேண்டும் என்றே தோன்றினாலும் சோர்வில் செயலலிழந்தாள்.
அவனை விரக்தியாகப் பார்த்தபடி, அந்நோட்டை தீரஜிடம் நீட்டி, “படிச்சிட்டேன்.. இனி உங்களால என்னை ஏமாத்த முடியாது” என்று வெறுமையுடன் சொல்ல, அதை வேகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தவனின் கண்கள் அதிர்ச்சி கலந்த கோபத்தில் இடுங்கியது.
“நக்ஷத்ரா, நான் இதைப் பண்ணேன்னு நீ நம்புறியா” என்று தன் தலையைக் கோதியபடி கோபத்தை அடக்கியபடி கேட்டான் தீரஜ்.
“நீங்க பண்ணிருக்காமல் வேற யாரு பண்ணிருப்பாங்க…என் பொண்ணை உங்கள் பிளான்ல இழுத்து டிரம்ப் கார்ட்டா யூஸ் பண்ணி என்னையடைய முயற்சி பண்ணிருக்கீங்க… அந்த கார்த்திகேயனாவது கெட்டவன்னு வெளிப்படையாயிருந்தான்…ஆனால் நீங்கள் நல்லவன் யோக்கியவன்ற முகமூடியிலயிருந்துட்டு எவ்வளவு கீழ்த்தரமான வேலை பண்ணிருக்கீங்க” என்று அவள் கோபத்தில் வார்த்தையைக் கக்க, ‘உனக்கு கார்த்திகேயனே மேல்’ என்று சொல்லாமல் சொல்லிய வாக்கியத்தில் தீரஜ் மண்டையில் சுத்தியலால் அடிப்பது போன்ற வலி… உறைந்தே விட்டான்… இப்போது ஆறடி ஆண்மகனின் தோற்றம் வெளியிருந்து பார்க்க கம்பீரமாகத் தான் தெரியும் ஆனால் மனதளவில் ரொம்பவே கூனிக்குறுகிவிட்டான் தன்னவளால்… அவளின் தேள் தொடுக்கும் வார்த்தைகளால்…
“ஸ்டாப் இட் நக்ஷத்ரா… எனக்கு இந்த உலகத்துல எல்லாத்தையும் விட உன் மானம், மரியாதை ரொம்ப முக்கியம்.. நான் அதை உடைச்சிருப்பேனா! உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு நான் நினைச்சேன் தான் ஆனால் இப்படி உன் பெயரை கேவலப்படுத்திட்டுயில்லை.. உன் சம்மதத்தோடு நேர்வழியிலயே மட்டும் தான் அப்படியில்லைன்னா கடைசி வரைக்கும் இந்த தீரஜ் தனி மனுஷன் தான்” என்று முடித்தவனால் அதற்கு மேல் தன்னை நீருபிக்க முடியவில்லை… காரணம், இதில் தீரஜின் தலையீடலில்லை என்பதற்கு எந்தவொரு ஆதாரமுமில்லை… அதே போல் தீரஜின் தலையிடல் இதில் இருக்கிறதென்று நக்ஷத்ரா கொதிப்பதில் தவறுமில்லை.
மனக் கட்டுப்பாடு ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதைப் போல் வார்த்தைக் கட்டுப்பாடும் ரொம்பவே முக்கியம்…
தீயினால் ஏற்பட்ட காயும் கூட ஆறிவிடும் ஆனால் நாவால் சுட்ட காயம் வடுவாக உடுமாறி இதயத்தோடு அழுத்திவிடும்…
நக்ஷத்ராவிற்கு எப்போதுமே வார்த்தை பிரயோகிப்பில் நாவடக்கமில்லை என்பதைத் தாண்டி விபரீதமான வார்த்தைகளை கோபத்தில் இலகுவாக அள்ளி வீசுவதில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே…
‘உன்னை அடைய நான் இவ்வளவு கீழ்த்தரமா பண்ணிருக்கேனு சொல்லி…என் காதலை அவமானப்படுத்தியே பொம்மாயி!’ என்று அவன் மனது சோர்ந்து உதிர்த்த அலறலுக்கு அவனின் இதயமே சாட்சி.
ஆராயாமல் தன் மேல் தப்பை உறுதிப்படுத்துவது நக்ஷத்ராவின் மேல் தீரஜிற்கு கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது… ஆனாலும் அவனால் அவளை வெறுக்கமுடியவில்லை காரணம் அவன் தன் பொம்மாயி மேல் வைத்திருக்கும் அந்தக் காதல்… மகளுக்குக் கொடுத்த சத்தியத்தால் அவனின் கையோங்கவில்லை… ஆனால் அவளிடம் கர்ஜிக்கச் சொல்லி தூண்டிய மனதை அடக்கினான்…எதனால்? இப்போது கூட அவனின் மனம் அவள் பக்க நியாயத்தை உணர்ந்து அமைதி காத்தது…
ஆம், தீரஜின் மீது தப்பில்லை… ஆனால் அவனின் பக்கம் தப்பியிருந்தது. அதைப் பார்த்து நக்ஷத்ரா இப்படி நடந்துக்கொள்வது நூறு சதவீதம் சரி என்பது தான் தீரஜின் எண்ணமும்… அவள் தன்னை சந்தேகப்பட்டு கேட்டியிருந்தால் கூட நடந்ததை அவனே ஆராய்ந்திருப்பானே. ஏனெனில் அவனுக்கும் இவ்விஷயம் பேரதிர்ச்சி தானே! ஆனால் நக்ஷத்ரா தீரஜின் மீது குற்றச்சாட்டு வைத்து உறுதியள்ளவா படுத்துகிறாள்…
அவள் அவனைக் குற்றம் சாட்டிய விதம், அவள் பயன்படுத்திய வார்த்தைகள் தீரஜை உருக்கொலையச் செய்தது.
ஆதாரமில்லாத இவ்விஷயத்திற்கு என்ன ஆதாரம்? நம்பிக்கை மட்டுமே ஆதாரம்… அந்நம்பிக்கை தன்மீது இதுவரைக்குமே நக்ஷத்ராவிற்கு வரவில்லை, இப்போதும் வரவில்லை, இனியும் வராது என்று தன்னுள்ளே குறுகிக் கொண்டிருந்தான் தீரஜ்.
தீரஜிற்கே தெரியாத இன்னொரு ஆதாரம் அவனின் கண்கள்… அவனின் இதயத்தின் விழிகளாக அவனின் கண்கள் இருப்பதை நக்ஷத்ரா நன்கு அறிந்தவள் என்பதை தாண்டி அதை உணர்ந்தவளும் கூட… அப்படி இருக்கும் போது இப்போதும் அவன் கண்கள் காட்டிய உண்மையை ஓரம்தள்ளி தன் குற்றச்சாட்டில் ஸ்திரமாயிருந்து தன் தலையில் தானே மண்ணை அல்லவா கொட்டியிருக்கிறாள்…