பதறிக்கொண்டு கீழே அமர்ந்த பிரியா, “நீ அந்த பொறுக்கிக்கிட்ட ரொம்ப தைரியமா பேசினேனு சந்தோஷமா இருந்தேன் டி. அவனெல்லாம் ஒரு ஆளுனு அவன் பேசினதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணிட்டிருக்க” என்று தோழியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
“தீரஜ் எனக்கு விதைச்ச தைரியத்துல அந்த திடத்துல தான் இன்னிக்கு அந்த பொறுக்கிக்கிட்ட அப்படி பேசினேன்.ஆனால் அவன் என்ன சொன்னான்னு கேட்டத்தானே நீ.எவ்வளவு கீழ்த்தரமா” என்று முகத்தை மூடி அழுதவள் பிரியாவை வேகமாக உலுக்கி, “எனக்கு ரொம்ப பயமாயிருக்கு பிரியா… தீரஜை கண்டுப்பிடிச்சி அந்த மாதிரி எங்களுக்குள்ள நடந்ததை அசிங்கமா சொல்லி. தீரஜ் என்னை வெறுத்து அவர் வாழ்க்கையைவிட்டு விலக்கிடுவாரா?” என்று முழுதாக முடிக்கமுடியாமல் திணறல் கலந்த கதறலுடன் அழுதுக்கொண்டே கேட்டவளின் மனதில் எங்கே தீரஜின் உறவை இழந்து விடுவாளோ என்கிற பயத்தை கண்ட பிரியாவிற்கு பாவமாகவேயிருந்தது.
நக்ஷத்ராவின் வாழ்க்கைக்காக, தீரஜின் உண்மையான காதலுக்காக மட்டுமே தோழியை அவ்வளவு திட்டினாள் பிரியா.இப்போது கதறும் தோழியை ஆறுதலுடன் அணைத்து முதுகை வருடியபடி, “தீரஜ் அண்ணா உன்னை எப்போவுமே வெறுக்கமாட்டாரு டி.இந்த பொறுக்கியால ஒண்ணும் கிழிக்கமுடியாது!நீ பயப்படாத” என்று கையோடு அவள் கண்ணீரை துடைத்து, காரில் ஏற்றிவிட்டாலும், பிரியாவிற்குமே கார்த்திகேயனையெண்ணி அச்சுறுத்தலாகத்தான் இருந்தது.
மனம்முழுக்க தன் மனைவி மற்றும் மகள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்க அவர்களை நினைத்து தவித்த மனதை கட்டுப்படுத்தமுடியாமல், தன் மனதை திசைத்திருப்ப அன்று மாலை பிரைவேட் டெரேஸ்ஸில் வலிகள் சூழந்தபடி ஓவியத்தை வரைந்துக்கொண்டிருந்தான் தீரஜ்.
“நீ பேசு” என்று வினோத் மனோஜை தீரஜ் புறந்தள்ள, “அண்ணா பிளீஸ் நீங்க போயி பேசுங்க. எனக்கு பயமா இருக்கு” என்று மனோஜ் முணுமுணுக்க, அவர்கள் இருவர் இருப்பதுத்தெரிந்தும் கண்டுக்கொள்ளாது பிரஷ்ஷை ஓவியப்பலகையில் வைத்திருந்தவனின் மனம்முழுக்க மகளுடன் செலவழித்த அழகான நாட்கள் தான் கண் முன்னே வந்தோடியது.அப்போது தீரஜின் ஃபோன் ஒலிர, அதை எடுத்து பார்த்தவனோ, ‘பிரியா’ என்று யோசித்தபடி வேகமாக ஃபோனை எடுத்து, “சொல்லு பிரியா. நக்ஷத்ராவுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று பதற்றத்துடன் கேட்டான்.
“அண்ணா” என்று பயத்துடன் ஆரம்பித்தவள்,கார்த்திகேயன் வந்ததிலிருந்து அவன் மிரட்டிய அனைத்தையும் மட்டும் கூறிவிட்டு நக்ஷத்ராவின் தீரஜீற்க்கான உணர்வுகளை கூறாது தவிர்த்து, கார்த்திகேயன் நக்ஷத்ராவை பாலியல் துன்புறுத்தல் செய்ததையும் கூறிமுடிக்க! இங்கே தீரஜின் முகமோ பிரியா கூறுவதைக்கேட்டு கோபத்தில் செந்தணலாய் சிவந்துக்கொண்டிருந்தது.அதிலும் கார்த்திகேயன் நக்ஷத்ராவை கொடுமைப்படுத்தியதைப் பற்றிக்கேட்ட அந்நொடி அவனின் கை முஷ்டிகள் இறுகி கார்த்திகேயனை கொலை செய்யும் வெறிவந்து அக்கோபம் உடலில் உஷ்ணத்தைக் கொடுத்து,போனில் கத்தாது அதை செயலில் உணர்த்தும் விதமாய் பிரஷ்ஷை போர்டில் பலமாக குத்திக்கொண்டே தன் கோபத்தின் உக்கிரத்தை காட்ட பிரஷ்ஷே உடைந்துவிட்டது. முழுவிஷயம் தெரியாத மனோஜ் மற்றும் வினோத்,பிரியா தான் பேசுகிறாளென்று தீரஜ் பேசுவதிலறிந்தும் அவனின் கோபமுகத்திலும் செயலிலும் ஏதோ தப்பாகயிருக்கிறது என்பதை உணர்ந்தனர்.
“எனக்கு அந்த பொறுக்கி நாயோட அட்ரஸ் உடனே வேணும் பிரியா… உடனே வந்தாகணும்” என்று கோபத்துடன் கர்ஜித்து உடைந்த பிரஸ்ஸை ஆக்ரோஷத்துடன் தூக்கி வீசியபடி கால்லை துண்டித்தவனின் முகம்முழுக்க ரௌத்திரம் மட்டுமே! அதே ரௌத்திரத்துடன் வேகமாக நடந்து கார் கீயை எடுத்துச் செல்ல, வினோத் மற்றும் மனோஜ்ஜும் தீரஜிற்குத் தெரியாமல் பின்னாடியே வினோத்தின் காரில் சென்றனர்.
நக்ஷத்ரா வீட்டிற்குள் வரும்போதே அங்கு ரூபா வந்திருந்தாள். ”சாலா எப்போ பெங்களூர்லயிருந்து வந்த” என்று சோர்வாக தங்கையின் கை பற்றியவளின் கையை அவளிடமிருந்து பிரித்த ரூபா தன் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக்கொண்டாள்.
‘ஆதிரா அழுதுதழுது முகமே வீங்கிப்போச்சு.உமியும் பயங்கரமாக அழுதிருக்காள் ஆனாலும் எவ்ளோ பிடிவாதம்’ என்று நினைத்தபடி ஆதங்கப்பட்டவள், அக்காவின் மனதை ஆராய உண்மையை சொல்லாது தள்ளிப்போட்டாள்.
“அம்மா, சாலா என்கிட்ட பேசாமப்போறாள்” என்று கவலையுடன் சொன்ன நக்ஷத்ராவிடம், “பேசுவாள்… இவ்வளவு நேரம் ஆதிரா அழுததைப் பார்த்து டல்லாயிட்டாள். ஆதிராவை சாலா தூங்கவைச்சிட்டாள். நீ சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு.உன் ஆச்சி வேற இங்கயே பார்த்துட்டு இருக்காங்க” என்றார் மீனாட்சி கடுப்புடன்.
“பசிக்கலைமா” என்று சோர்வாக அறைக்குள் சென்ற மகளை கண்களில் கவலையுடன் பார்த்தார் அன்னை.
“நாளைக்கு காலைல நான் எழுந்திருக்கும் போது அந்த தீரஜ் நரசிம்ம ரெட்டியோட மொத்த டீடெயில்ஸ்யும் வந்திருக்கணும்” என்று தோட்டத்தில் வேகமாக நடந்தபடியே பேசிக்கொண்டிருந்த கார்த்திக்கேயன் கால்லை அணைக்கும் பொழுது, வாசலின் முன் வேகமாக சீறிப்பாய்ந்த காரிலிருந்து இறங்கிய தீரஜ் அங்கிருந்த வாட்ச்மேனிடம், “கார்த்திகேயன் எங்கே?” என்று கோபக்குரலுடன் கத்த, “நீங்க யாரு சார்?” என்று வாட்ச்மேன் பதற்றமடைய,அவர்களைக் கண்ட கார்த்திகேயனோ, “யாரது முத்தையா?” என்று தீரஜை பார்த்தபடி கேட்க,
“உங்களைத் தேடி தான் சார்” என்று அவர் பதிலளித்துக்கொண்டிருக்கும் போதே, அவன் தான் கார்த்திகேயனென உணர்ந்த தீரஜ் அடுத்தநொடியே சினங்கொண்ட சிங்கமாய் கார்த்திகேயனைத் தாக்கி சர மாறியாக அடிக்க ஆரம்பிக்கவும், வினோத் மற்றும் மனோஜ் உள்ளேவரவும் சரியாக இருந்தது.
வயதான முத்தையாவோ,“ஐய்யயோ! வீட்ல சிவகாமிம்மா வேறயில்லையே. கார்த்திகேயன் சார்” என்று பயத்தில் அலறியபடியே தீரஜை தடுக்க முயன்றவனை தீயென முறைத்த தீரஜின் பார்வையில் முத்தையா நடுங்க, வாட்ச்மேன் பெயரை குறிப்பிட்டதை வைத்து அடிவாங்கும் பிரகஸ்பதி கார்த்திகேயனென உணர்ந்தனர் வந்தவர்களிருவரும்.
“பெரியவரே!என் மூஞ்சு வீங்கிப்போன பூசணிக்காய் மாதிரியிருக்கா?அதுக்கு காரணமே இதோ இப்போ அடிக்கிறாரே அந்த வளர்ந்தவர் தான்” என்று தீரஜை குறிப்பிட்டுக்காட்டிய வினோத்,முத்தையாவின் தோளில் கைபோட்டபடியே, “பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கீங்க…போனவாரம் வாங்குன அடியிடைய வீக்கமே எனக்கின்னும் குறையலை! அப்படிப்பட்டவன் உங்களை ஒரு அடி அடிச்சான்னுவைங்க நேரா கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு டிக்கெட்டே வாங்காமல் ஃபிரியா போயிடுவீங்க. அதனால விலகியேயிருங்க” என்று வினோத் பயமுறுத்த, முத்தையாவோ என்னசெய்வதென்று தெரியாமல், “கார்த்திகேயன் சார்” என்று அலற, அவரின் வாயைப் பொத்தினான் வினோத்.மனோஜோ அவரின் கையை சிறைப்பிடித்திருந்தான்.
திணற திணற அடிவாங்கிக்கொண்டிருந்த கார்த்திகேயனுக்கு அடிப்பவன் யாரெனவும் தெரியவில்லை. அவனை திருப்பியடிக்கவும் முடியவில்லை தன்னை காக்கவும் முடியவில்லை. ஏனெனில் அடிப்பது நரசிம்மன் ஆயிற்றே! அவனின் பலம் முன் கார்த்திகேயனால் துரும்பையும் அசைக்கமுடியாது.
“பொண்ணுங்கனா உனக்கு அவ்வளவு கேவலமாப்போச்சா பொறுக்கி நாயே! என் நக்ஷத்ராவை நான் அன்னிக்கு தவறவிடலைன்னா கண்டிப்பா உன்கிட்ட மாட்டிருக்கமாட்டாள். சந்தோஷமா நிம்மதியாயிருந்த பொண்ணை சிதைச்சிட்டியே பிளடி **** **** உன்னை” என்று ஆக்ரோஷத்துடன் அடித்துக்கொண்டே கர்ஜித்த தீரஜ் கார்த்திக்கேயனின் கையை திருகி வளைத்து முறுக்கி அவனின் முதுகில்,முகத்தில்,கால்களில் வெறியுடன் அடித்தாலும் இன்னும் வெறி ஏறிக்கொண்டேதான் இருந்தது.
“நக்ஷத்ரா என் பொண்டாட்டி.ஆதிரா என் பொண்ணு. அவங்கமேல இனி உன் நிழல் பட்டால் கூட நீ பொணமாயிடுவ! இப்போ கூட உன்னைக் கொலைப் பண்ணினால் தான் என் வெறியடங்கும்! ஆனால் உன்னை கொலைபண்ணி நான் ஜெயிலுக்கு போயி என் பொண்டாட்டியையும் என் பொண்ணையும் தவிக்கவைக்க நான் விரும்பலை” என்று கர்ஜித்தவன் நக்ஷத்ராவின் கணவன், தீரஜ் நரசிம்ம ரெட்டியென அப்போது தான் உணர்ந்த கார்த்திகேயனின் சட்டைமுழுதும் ரத்தம் ஆறாயிருக்க, அவனால் பேசக்கூட முடியவில்லை.
கார்த்திகேயனுக்கு கண்களிருட்ட, அதைக்கண்ட தீரஜீற்கு அப்போதும் கோபம்,ரௌத்திரம்,ஆத்திரம்,வெறி அடங்கவேயில்லை. அவனின் கண்ணுக்குள் முதல்முறை பார்த்த சந்தோஷமான பொம்மாயியும் தற்போதுயிருக்கும் வாடிய பொம்மாயியும் வந்து வந்து அவனை மேலும் வெறியேத்த தன் அடியில், பிடியிலிருந்த கார்த்திக்கேயனை வேகமாக தரையில் தள்ளிவிட்டு,தோட்டத்தில் கீழேகிடந்த மண்வெட்டியை ஆக்ரோஷத்துடன் எடுத்து, ”இதை வெச்சுத்தானே என் பொம்மாயியை கொடுமைப்படுத்தின! அவள் உன்கிட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருந்திருப்பாள். அவள் சந்தோஷம்,நிம்மதி எல்லாத்தையும் சிதைச்ச உன்னை” என்று கார்த்திகேயனின் ஆணுருப்பை வெட்டப்பாய்ந்த தீரஜின் கரத்தை வேகமாக பற்றிய மனோஜ் மற்றும் தீரஜ், அவனை கஷ்டப்பட்டு இழுக்க முற்படும்போதே, “கார்த்திகேயன் சார்” என்று விடுதலை அடைந்தபின் ஓடிப்போய் தன் எஜமானனை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு தூக்கி வேகமாக வீட்டினுள்ளே அழைத்துச்சென்று கதவைச் சாற்றினார் முத்தையா.
“டேய் தீரஜ் அவனை விட்டுடு!அவன் ஏற்கனவே நீ அடிச்சதுல பாதி செத்துட்டான்” என்று வினோத் பதற, இருவரும் அவனை எப்படியோ கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு காரில் அமரவைக்க,அவர்களை தீயென முறைத்த தீரஜ், ஆக்ரோஷமுகத்துடன் பேசாமலே காரையெடுத்து வேகமாகச் சென்றுவிட்டான்.
அன்றிரவு நக்ஷத்ராவால் உறங்கவே முடியவில்லை. மனமெல்லாம் அவன்… அந்த அவன் அவளின் கணவன் தீரஜ் மட்டுமே! அவனுடனிருக்கும் பொழுது கண்ணீர் சிந்த விடமாட்டானே! தன் கண்ணில் வழியும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் அவன் வருந்துவானே! அவனுடனிருக்கும் பொழுது பாசிட்டிவ்வாக சந்தோஷமாகயிருந்த வாழ்க்கை அவனின்றி இப்போது அழுகையும் சோகமுமாக வெறுமையுடன் வெறுப்பாகயிருக்கிறதே!
“பிரியா சொன்ன மாதிரி நான் தான் அவசரப்பட்டு இப்போ வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறேன்.மூணு மாசமா அவர்கிட்டயிருந்த ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் யோசிச்சுப்பார்த்திருந்தாலே தீரஜ் இந்த விஷயத்தை பண்ணிருக்கமாட்டார்னு நான் நம்பியிருக்கணுமே! நான் ஏன் பண்ணலை?” என்று முகத்தை மூடி கதறி அழுதவள், என்ன நினைத்தாளோ! தன் கண்களை வேகமாகத் துடைத்து, “இல்லை, நான் அழுதால் அது தீரஜ்க்கு கண்டிப்பா வலிக்கும் அதுவும் இந்த பொறுக்கி கார்த்திக்கேயனுக்காக கண்டிப்பா அழவே மாட்டேன்!” என்று கதறல் அழுகையுடன் ஆரம்பித்து திடத்துடன் முடித்தவளின் ஆழ்மனதில் கார்த்திக்கேயன் என்ன சொன்னாலும் தன் கணவன் தன்னை வெறுக்கமாட்டான் என்று நம்பச்சொல்லியது. தீரஜின் ஆழ்மனதின் ரீங்காரம் அவளுக்குக் கேட்கத் தொடங்கியதோ!
மனோஜின் மூலம் ரூபாவிற்கு கார்த்திக்கேயனின் விஷயம் தெரியவந்திருக்க,அடுத்தநாள் பாட்டி உறங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில்,ஆதிராவை கண்ணம்மாவிடம் கொடுத்து தோட்டத்தில் விளையாட வைக்கச்சொல்லிவிட்டு மெதுவாக கார்த்திகேயன் வந்து மிரட்டியதைப்பற்றி தந்தையில்லாத தருணத்தில் அன்னையிடம் கூறினாள் நக்ஷத்ரா.
அதைக்கேட்டு பதறிய மீனாட்சி, “உன் புருஷன் கூட இருக்கும் போது இந்தப் பிரச்சனை வந்திருந்தால் மலைப்போல அவர் இருக்காருனு எங்களுக்கொரு தைரியமிருந்திருக்கும். இதெல்லாதுக்கும் தானே நாங்க உன்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி போராடினோம்.போடி! உன் புகுந்த வீட்டுக்கு கிளம்பு உன் புருஷன் உன்னை அரண்மாதிரி பாதுகாக்கும்போது அந்த கார்த்திக்கேயனால ஒண்ணும் பண்ணமுடியாது” என்று தாய் கூறுவது உண்மையென நக்ஷத்ராவும் இப்போதுணர்ந்தாள். ஆனால்…
“தப்பெல்லாம் என் மேல தான்ம்மா. அவசரப்பட்டுட்டேன் அதனால இப்போ அவஸ்தையுடன் நிற்கதியாய் நிக்குறேன்!நான் அவரைக் காயப்படுத்திக் குத்திய வார்த்தைகள் உங்களுக்குத் தெரியாதும்மா!ஒரு மனுஷனை இதுக்கு மேல யாராலும் காயப்படுத்தவேமுடியாது. இனி எந்த முகத்தை வைச்சுட்டு நான் அவர் கிட்ட போவேன்! மனசு சுருக்குன்னு குத்துதுமா” என்று சோர்வுடன் அன்னையிடம் கூறிவிட்டுச் சென்றவளை, கவலையுடன் பார்த்தார் மீனாட்சி… அங்கு அமைதியாக அமர்ந்திருந்த ரூபாவிற்கோ முகத்தில் மெல்லிய புன்னகை… ‘கண்ணம்மா சொன்னது சரி தான் போல. உமி, நீ முழுசா உன் மனசை ஓபன் அப் பண்றவரைக்கும் நானும் உன்கிட்ட பேசப்போறதில்லை வீட்டுக்கும் போகப்போறதில்லை’ என்று மனதில் உறுதியாகியிருந்தவள், அன்னையிடம், “அம்மா, அவள் இனி எங்கேயும் தனியா வெளியே போகக்கூடாது” என்று தீர்மானமாக கூறிவிட்டு எழ,“நீ அவள்கிட்ட பேசாமல் இருக்குறது வேற அவளுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு சாலா” என்றார் மீனாட்சி கவலையுடன்.
“அவளைவிட எனக்கு ரொம்ப வலிக்குதும்மா! பட் இந்த வலிக்கு ஒரு விடை கிடைக்கும்னா இன்னும் எவ்வளவுநாள் வேணும்னாலும் இந்த வலியை தாங்கிப்பேன்” என்று கவலை கலந்த உறுதியுடன் கூறிவிட்டு நகர்ந்த மகளை கவலையுடன் பார்த்த மீனாட்சி தன் இரு மகள்களின் வாழ்க்கையை நினைத்துக் கடவுளை வேண்டினார்.
பிரியாவிற்கு கால் செய்த தீரஜ் கார்த்திக்கேயன் இனி நக்ஷத்ரா பக்கம் வர மாட்டான் ஆனாலும் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கால்லை அணைத்தவன், கார்த்திக்கேயனை கண்காணிக்கத் தொடங்கினான்.