“நீ அத்தான் கூட சந்தோஷமா வாழ ஆரம்பிச்ச அப்புறம் உன்கிட்ட உண்மைய சொல்லிடனும்னு தான் நோட்டை கிழிச்சு போடாமல்வெச்சிருந்தோம்” என்று கூறி முடிக்கும் போதே தங்கையை வேகமாக அணைத்துக்கொண்டாள் நக்ஷத்ரா.
“அம்மா உங்களுக்கு எப்படி?”என்று ரூபா அதிர, “நான் உங்ககிட்ட ஒரு தடவை ஃபோன் பேசும்போது அம்மா கேட்டுட்டாங்க அதனால எல்லாம் தெரிஞ்சுப்போச்சு சாலாம்மா” என்று கூறிவிட்டு தலைகுனிந்தாள் கண்ணம்மா.
“ஆமா…ரொம்ப கோபமாத்தான் நான் இங்கே வந்தேன்!ஆனால் இந்த ஒருவாரமா நிறைய யோசிச்சேன்.அன்னிக்கு அப்படியொரு விஷயம் நடக்கலைன்னா ஆதிராவுக்கு இந்த உலகத்துலயே சிறந்த அப்பா கிடைச்சிருக்கமாட்டாங்க.எனக்கும் வேர்ல்ட் பெஸ்ட் ஹஸ்பண்ட் கிடைச்சிருக்கவே மாட்டாங்க” என்று நக்ஷத்ரா ஏக்கம் கலந்த சந்தோஷத்துடன் கூறிக்கொண்டிருப்பதை அனைவரும் சந்தோஷம் கலந்த வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“சோ தீரஜ் என்னை காதலிச்சது உங்க மூணுப்பேருக்கும் முன்னாடியே தெரியும்” என்று குறும்பாக மூவரையும் பார்த்துக்கேட்ட நக்ஷத்ராவிடம், “எனக்கும் தெரியும் உமையா” என்று குரல் வந்தது அருணாச்சலத்திடமிருந்து, அதைக்கேட்டு அனைவருமே அதிர்ந்தனர்.
“அன்னிக்கொருநாள்,போனவாரம் நம்ம கடைக்கு ஒரு பையன் வந்து அவர் பெயர் தீரஜ்னு அவர் வேலைப்பாக்குற இடத்தைச்சொல்லி உங்க பொண்ணுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ண அவங்க சம்மதிச்சால் கண்டிப்பா என்னைத்தவிர வேறயாரும் கணவனாக இருக்கமுடியாதுனு நிமிர்வா சொல்லிட்டு போனப்போதே எனக்கு அவரைப் பிடிச்சிப்போச்சு ஆனாலும் ஒரு தடவை நானெடுத்த முடிவு தப்பாப்போனதுனால அமைதியாயிருந்தேன்.“
“அன்னிக்கு உன்கிட்ட நான் அவர் பெயரைக் குறிப்பிடலை மீனாட்சி மாப்பிள்ளை அண்ணன் பெயரை பத்திரிக்கைல குறிப்பிடும்போதுக்கூட அவர் தான்னு நான் நினைக்கலை.மனோஜ் மாப்பிள்ளையோட அண்ணாவா ஏர்போர்ட்ல பார்க்கும்போது அவ்வளவு அதிர்ச்சி ஆனாலும் நான் வெளிக்காட்டிக்கலை!”
“அவர் ஆதிராக்கிட்ட பாசமா நடந்துக்கிட்ட விதம்,அவருடைய நடவடிக்கை என்னை ரொம்பவே ஈர்த்திடுச்சு. அவர் இடத்துல வேற யார் உமையாக்கு தாலி கட்டிருந்தாலும் நான் இப்படி அமைதியாகியிருக்கமாட்டேன்.நான் அவர்மேல வெச்ச நம்பிக்கையை அவர் காப்பாத்திட்டாரு” என்று சொல்லிமுடிக்கும்போதே,அனைவருக்கும் அதிர்ச்சியில் நாயெழவேயில்லை என்றால் நக்ஷத்ராவிற்கோ மூளையே செயல்பட மறுத்தது!எதனால்?தீரஜின் உண்மையான அளவில்லாத தன்மேலுள்ள இக்காதலால்!
ஒருநாள் இரவு தாய் மற்றும் தந்தை பேசியதை ஒட்டுக்கேட்ட ரூபா, மனோஜிடம் கால்வந்த வேகத்தில் சென்றாள்!அப்போது தான் இவ்விஷயத்தை மனைவியிடம் குறிப்பிட்டார் அருணாச்சலம். அதற்கு பின் மகளுக்கு திருமணமானதால் மீனாட்சியும் அதைப்பற்றி நோண்டவில்லை.
வேகமாக அறைக்குள் ஓடிச்சென்றவள் தன் கைப்பையிலிருந்த பாதி கோர்த்திருந்த முத்துமாலையையெடுத்து முழுதாக கோர்த்து மாலையாக்கியபின்பு தான் மூச்சேவிட்டாள்.
“நீ வருவனு தெரிஞ்சு தான் தீரஜ் மாப்பிள்ளை என்னை இப்போ வீட்டுக்கு அனுப்பினாரு பொறுக்கி ராஸ்கல்” என்று தந்தையின் குரல் ஹாலில் கர்ஜிக்க,தந்தை சொல்வதை அதிர்ச்சியுடன் உள்வாங்கியபடி வேகமாக வெளியேவந்தவள் கண்டதோ,உடம்பில் கட்டுடன் நின்றிருந்த கார்த்திக்கேயன் மற்றும் அவனின் தாயைத்தான்.
கார்த்திக்கேயனை மரணத்தின் வாசலிற்கு கொண்டுச்சென்ற தீரஜ் உடனடியாக அருணாச்சலத்திற்கு கால்செய்து தான் அடித்ததைக் குறிப்பிடாமல் மற்ற விஷயங்களைக் கூறியதோடு தன் மகளையும்,மனைவியையும் பத்திரமாய் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கால்லை அணைத்தான்.இன்று பிரியாவிற்கு முன் அவன் கால் செய்ததும் மாமனாருக்குத்தான்!
தன் மகளை தோள்களில் சுமந்திருந்த கண்ணம்மாவை உள்ளே அனுப்பிக்கதவை சாற்றிவைத்துவிட்டு கோபத்துடன் வந்தாள் நக்ஷத்ரா.
இங்கே சொர்ணவள்ளி தீரஜைப்பற்றி அவதூறாகப்பேச ஆரம்பிக்க,அச்சாக்கில் தன்னுடைய மகன் கார்த்திக்கேயனை தீரஜ் அடித்ததுப்பற்றி சிவகாமி சபையில் மட்டம்தட்ட,நக்ஷத்ராவின் குடும்பம் வந்தவர்களை கத்துவதெல்லாம் கார்த்திக்கேயனுக்கு உரைக்கவேயில்லை.
‘அப்பா தீரஜ் சொல்லி இப்போ வந்தாங்களா?அப்போ கார்த்திக்கேயன் விஷயம் தீரஜுக்குத் தெரியுமா? இவனை தீரஜ் அடிச்சான்னு இந்த அயோக்கியனுடைய அம்மா பைத்தியம் கத்திட்டிருக்கு’ என்று யோசித்துக்கொண்டிருந்தவள்,
“என் புருஷன் எதுக்கு இவனை அடிச்சாரு!” என்று சிவகாமியிடம் கேட்டவளுக்கு ஓரளவு என்ன நடந்திருக்குமென யூகிப்பிருந்தது.
அவள் முன் வந்த கார்த்திக்கேயனோ தீரஜ் தன்னை எதனால் அடித்தானென்பதை கூறியதோடு, “அந்த தீரஜ்க்கு நான் எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் நக்ஷத்ரா அவனை உன்னைவிட்டு போக சொல்லிடு. எனக்கு நீ வேணும் நம்மப்பொண்ணு வேணும்” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு பேச,
தீரஜ் தனக்காக அவனை அடித்ததை நினைத்து பூரித்து,குளிர்ந்த பெண்ணவளுக்கு உடனே தன்னவனை பார்க்க உடலிலுள்ள ஒவ்வொரு செல்களும் துடித்தது. ஆர்வமாக!ஆரவாரமாக!
“நீ தான் ராசா உமையா புருஷன்” என்று சொர்ணவள்ளி ஆரம்பிக்க,இத்தனைநேரம் கணவனை நினைத்து இனிமையிலிருந்த பெண்ணவளின் ரத்தம் கொதித்தது.
“வாயை மூடுங்க ஆச்சி இனி இந்த மாதிரி பேசுனீங்கனா உங்க மரியாதை கெட்டிடும்” என்று அவ்விடமே அதிரும் அளவிற்கு கத்திய நக்ஷத்ராவின் இந்த அதிரடியைக் கண்டு இத்தனை நேரம் கத்திக்கொண்டிருந்த அவளின் பெற்றோர் மற்றும் ரூபாவே வாயடைத்துவிட்டனர். பிரியாவிற்கோ அத்தனை சந்தோஷம்.
“என்ன உமையா வாய்ரொம்ப நீளமாயிருக்கு!அருணாச்சலம்” என்று எப்போதும் போல பாட்டி ஆரம்பிக்க, “எங்கப்பாக்கிட்ட என்ன பேச்சு!உங்களையெல்லாம் முதல்லயே அடக்கியிருந்தால் இவ்வளவுதூரம் திமிரா ஆடியிருக்கமாட்டீங்க. பாட்டியா நீங்க?பஜாரி,பிசாசு ச்ச… நீங்களும் ஒரு பொம்பளை தானே!” என்று நக்ஷத்ரா கோபத்துடன் கத்த,மகளின் நியாயக்குமுறளுக்கு முதல்முறை மௌனியாகிவிட்டார் தந்தை.
“பாத்தியா அருணாச்சலம் அவள் பேசுறதை!” என்று சொர்ணவள்ளி பாட்டி ஆதங்கப்பட,ரூபா மனதிற்குள் குத்தாட்டமாட மீனாட்சிக்கோ உடம்பெல்லாம் குளிர்ந்தது.
இத்தனை வருடங்கள் அப்பாவியாகயிருந்த நக்ஷத்ரா இன்று எரிமலையாய் கொழுந்துவிட்டு எரிய, அதிர்ச்சியில் சொர்ணவள்ளி பாட்டி திணறினார்.
“நக்ஷத்ரா நான் திருந்திவந்துருக்கேன் புரிஞ்சிக்கோ!நான் பண்ணினதெல்லாம் தப்பு தான் அதுக்கு என்னை மன்னிச்சிடு” என்று கார்த்திக்கேயன் கெஞ்ச,
“கார்த்திகேயனோட வாழ்ந்து ஒரு பொட்டைப் பிள்ளையைப் பெத்து” என்று சொர்ணவள்ளி ஆரம்பிக்கும்போதே, அங்கே மேஜைமீதிருந்த ஆதிராவின் வுட்டன் ஸ்கேல்லை வேகமாகயெடுத்த நக்ஷத்ரா பாட்டி புறம் வேகமாக வந்து, “சொல்லுங்க… முழுசா சொல்லித்தான் பாருங்க” என்று ஸ்கேலை அவரின் முகத்தின் முன் காட்டியபடி அதட்ட,
“ஏய்… என்ன பண்ற பாவி! பாவி! ஒன்னோட ஆச்சியைப்போய் குச்சி வைச்சு மிரட்டுறியே… இதைப் பார்த்துட்டு கண்டும் காணாத மாதிரி இருக்குது இந்தக் கேடுகெட்ட குடும்பம்” என்று கத்தினார்.
“ஆச்சின்றதுனால தான் இன்னும் மிரட்டிட்டுமட்டுமிருக்கேன்! இனி ஒரு தடவை என்னை இந்த பொறுக்கிக்கூட சேர்த்துவைச்சு பேசித்தான் பாருங்க… ஆச்சின்னு கூட பார்க்க மாட்டேன்…உங்களை கொலை பண்ற அளவுக்கு வெறிவருது…உங்க வயசால மட்டும் தான் இன்னிக்கு என்கிட்ட தப்பிச்சிருக்கீங்க! இனி என்னைப்பத்தி என் புருஷனைப்பத்தி என் பொண்ணைப்பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது” என்று கத்தியவள், சொர்ணவள்ளியின் மீதிருந்த கோபத்தில் ஸ்கேலை அவர் பக்கத்து வெற்றிடத்தில் உக்கிரமாக அடித்தாள் அவரை அடிக்க முடியாத ஆதங்கத்தால்.அதில் சப்தநாடியும் அடங்கி வாயடைத்துவிட்டார் சொர்ணவள்ளி.
அவர்புறம் வேகமாக திரும்பிய நக்ஷத்ரா,“இந்த மாதிரி கேடுகெட்டவனை சப்போர்ட் பண்ற நீங்களும் என் ஆச்சியும் பொம்பளைங்களே கிடையாது! என் வீட்டுக்கு வந்து என்னையே பேய்னு சொல்றீங்களா… என் புருஷன் தீரஜ்க்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சால் உங்கள் ரெண்டு பேரையும் ஒன்னுமில்லாமல் ஆக்கிடுவாரு… இதோ நிக்குறானே இவன்கூட நீங்களும் என் ஆச்சியும் ஒரு நாள் இருந்துப்பாருங்க! உங்க ரெண்டு பேரையும் கூட விட்டுவைக்கமாட்டான்..சீரழிச்சிடுவான்.”
“பொம்மைக்கு சேலை கட்டினால் கூட பாழாக்கிடுவான்.அவனுக்கு செக்ஸ் இல்லாமல் இருக்கவேமுடியாது! தினமும் அதுக்காக என்னை அடிச்சான்,துன்புறுத்துனான்,டார்ச்சர் பண்ணினான்..” என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தியவள் கூறியதைக் கேட்டு அனைவருமே உறைநிலைக்கு சென்றுவிட்டனர்.ஏனெனில் அவன் தன்னை செக்ஷுவல் டார்ச்சர் பண்ணியது அவள் இப்போது தானே சொல்கிறாள்.
இதைக்கேட்ட பின் சோர்வான நடையுடன் தலை குனிந்தபடி சிவகாமி சென்றுவிட,கார்த்திக்கேயனோ நக்ஷத்ரா புறம் வந்து, “நான் இப்போ மாறிட்டேன் நான் என்ன பண்ணினால் நீ சமாதானம் ஆவ நக்ஷத்ரா!” என்று கண்ணீர் மல்க கேட்டான்.
அவனின் கண்ணீரைக் கண்டு ஏளனமாக சிரித்த நக்ஷத்ரா, “அதெப்படி போன வாரம் வில்லன் மாதிரி கேவலமா மிரட்டுன.இன்னிக்கு திடீர் நல்லவன் மாதிரிப்பேசுற. நீ உண்மையாவே இப்போ நல்லவனா மாறியிருந்தாலும்,இது ஒன்னும் சினிமாவோ நாவலோயில்லை….கெட்டவனை மன்னிச்சு மறந்து ஏத்துக்க! வாழ்க்கை நிஜ வாழ்க்கை…இங்க நல்லவங்க மட்டும் தான் ஹீரோஸ்.ஆம்பளைன்றது ஒரு பொண்ணோட பலவீனமான உடலை ஜெயிக்குறதில்லை பலமான மனசை ஜெயிக்குறது… அந்தவகையில தீரஜோட ஈருடல் ஓருயிரா நான் என்னிக்கோ கலந்துட்டேன்” என்றாள் கர்வமாக.
“நக்ஷத்ரா, ஆதிராவுடைய பையோலாஜிக்கல் ஃபாதர் நான்! அவள் வளர்ந்து இந்த விஷயம்” என்று கார்த்திக்கேயன் பேசிக்கொண்டிருக்கும் போதே,
“அவளுக்கு எல்லாமே தெரியும்!நீ ஆஃப்டர் ஆல் ஒரு ஸ்பெர்ம் டோனர் அவ்வளவு தான். அன்னிக்கு என்ன சொன்ன நான் தீரஜ்கூட வாழ்ந்திருக்க மாட்டேன்னு தானே… அவர் கூட சந்தோஷமா வாழ்ந்து நிறைய குழந்தைகள் பெத்துப்பேன்! ஆனால் எங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் பிறந்தாலும் தீரஜ்க்கு ஆதிரா தான் முதல் முக்கியத்துவம்!ஏன்னா தீரஜூடைய உடம்புல ஓடுற ஒவ்வொரு உதிரத்துலயும் அவர் பொண்ணு ஆதிரா கலந்திருக்காள்.. போடா! உயிர் மேல ஆசை இருந்தால் கிளம்பு” என்று அழுத்தமாக கூறியவளின் கையைப் பற்றியவன், “நீ இல்லேனா நான் செத்துடுவேன் நக்ஷத்ரா” என்று கெஞ்சியவனின் கையை அருவருப்புடன் வேகமாக உதறியவள்,“செத்துப்போ!செத்துபோயிடு” என்று ஆக்ரோஷமாக அலறியவள்,
அதற்கு பின் ஒரு நொடி அவளால் அங்கு இருக்கமுடியவில்லை.“சாலா, ஆதிராவைத் தூக்கிட்டு என்னோட கிளம்பு நம்ம புருஷங்க வீட்டுக்கு” என்று வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தவள்,அங்கு கீ ஹோல்டரில் தொங்கிக்கொண்டிருந்த கார்க்கீயை கேட்டு எடுத்தவள், மகளை தூக்கிக்கொண்டு வந்த ரூபாவை காரில் ஏறச்சொல்லி, தன் கைப்பை மற்றும் ஆதிராவின் ஸ்டோரி பேக்கை மட்டும் வேகமாக எடுத்துக்கொண்டு தங்கை மற்றும் மகளுடன் காரிலேறி சென்றேவிட்டாள்.
டிரைவிங் கிளாஸ்ஸைத் தாண்டி முதல் முறை கார் ஓட்டுகிறாள் தன் LLR வைத்து! தன்னவன் வீட்டிற்குச் செல்கிறாள் தன்னவன் தனக்கு உணர்த்திய தைரியத்துடன் கூடவே அவனின் மேலுள்ள அளவுக்கடந்த காதலுடன்!
‘ஃபேஸ் தி ஃபியர்’ என்று தீரஜ் சொல்லி அறிவுறுத்திய தாரக மந்திரத்தால் இன்று காளி அவதாரமெடுத்து தீயவர்களை வார்த்தைகளால் துவம்சம்செய்து சிங்கப்பெண்ணாக மிளிர்ந்தவள்,தன்னுடைய ஆண் சிங்கத்தின் மார்பிற்குள் தஞ்சமடைய செல்கிறாள் ஆவலுடன், ஆசையுடன், காதலுடன்!