இடையில் கட்டப்பட்ட ஒரு சிறு துண்டோடு, மலை நிகர்த்த தேகத்திலிருந்து நீர் சொட்டச் சொட்ட அவன் அறைக்கு வந்தும் இரண்டு நிமிடங்களாகிற்று!
இருப்பினும் சற்றும் பொருட்படுத்தாத அலட்சியத் தோரணையுடன் மார்புக்குக் குறுக்காக கை கட்டியபடி சாரளமருகே நின்றிருந்தவளின் பார்வை, சுவற்றில் அணி வகுத்து ஊர்ந்த எறும்புகளை வெறித்திருந்தது.
கோபம் சுள்ளென்று தலைக்கேற, “ஏய்!” என கடித்த பற்களுக்கு இடையே ஒற்றை வார்த்தையைத் துப்பி அவளை சொடக்கிட்டு அழைத்தான்.
தோள்களை உலுக்கினாளே தவிர, யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அசையாமல் தான் நின்றாள், ரோஷக்காரி!
“ஹனி..”
“…”
“ஷ்.. ஸ்ரீமதி!” – பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு மீண்டுமொரு முறை அழுத்தமாக அழைத்துப் பார்க்க,
“வசுமதி!” என்றாள், கேலித் தொனியில்!
“ஏதோவொரு மதி! பாட்டி காலத்து பழம்பெயரா பார்த்து வைச்சா அப்படி இப்படி டங்கு ஸ்லிப்பாகத் தான் செய்யும், இங்க வா!” என்றவன் குரலில் அதிகாரம் தூள் பறந்தது.
மற்றவர்களைக் காலுக்குக் கீழ் அடிப்படுத்தி பணிவிடை செய்ய வைத்துப் பழகியதாலோ என்னவோ, இயல்புத் தொனியும் கட்டளை இடும் பாவனையில் தான் வெளிவந்தது.
உனக்கு நானும் சளைத்தவள் அல்ல எனும் விதமாக, “இந்த பழைய கிராக்கிய கலியாணம் பண்ணிக்க துள்ளுனது யாருனு இவ்ளோ சீக்கிரம் மறந்துட்டா எப்படி!” என குரலில் ஒட்டிக் கொண்ட கேலியின் மிச்சத்தோடு கூறியபடி அவனருகில் வந்து நின்றாள், வசுமதி.
“பொண்ணு தானே நீ? அடக்க ஒடுக்கமா பேசுனா என்ன.. கிராக்கியாம், கிராக்கி!” என வெளிப்படையாகவே முகம் சுளித்தவன் அவள் கூற வரும் பதிலைக் காது கொடுத்துக் கேட்க விரும்பாமலே,
“ஏன் துவட்டிக்க தெரியாதா.. முடமாகிட்டியா என்ன? உன் கை, காலுக்கு ஒன்னும் இல்லையே!” என புருவம் நெறித்தவளின் ஐயப் பார்வை அவனை மேலிருந்து கீழாக ஆராய்ந்தது.
அறிமுகமாகிய மூன்றே முக்கால் நாளில் அறக்கப் பறக்க திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு அவளை மனைவியாக்கிக் கொண்டதால் வந்த சந்தேகமிது!
“ஷட் யுவர் டேம்ன் மௌத்!” என்ற உறுமலுடன் ஓரடி முன்னகர்ந்து வந்தவன்,
“இந்த நையாண்டி செய்யிற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். ஜஸ்ட் டூ வாட் ஐ சே!” என இறுகிய குரலில் எச்சரிக்க,
“ப்ச்!” என எரிச்சல் பட்டுக் கொண்டவன், “இப்போ நீ துவட்டி விடறியா.. இல்லன்..” மேற்கொண்டு தொடர முன்பு,
“என்ன கொடுமை சரவணா! ஏன்யா, இதுக்கு முன்ன உனக்கு சேவகம் செய்ய மட்டும் கைக்கும், காலுக்குமா ஒரு லட்சம் வேலைக்காரர் வைச்சிருந்தியா என்ன?” என நொந்து கொண்டாள், வசுமதி.
“பேச்சை வைச்சிட்டு வேலைய பாரு!” என அவன் அதட்ட, துண்டைக் பறிக்காத குறையாக வாங்கிக் கொண்டு பிச்சிக் குதறி எடுக்கும் வெறியோடு தலை துவட்டி விட்டவள்,
“பேண்டும் போட்டு விடணுமா சார்?” என நெஞ்சில் கை வைத்தபடி இடை வரை குனிந்து பவ்யமாகக் கேட்டாள்.
நியாயமாகப் பார்த்தால் அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும், ஆனால் மாற்றமாக, “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டு, இல்ல? அதுலாம் அவசியப்படாது!” என சாதாரணமாகக் கூறி குண்டைத் தூக்கிப் போட்டது மட்டுமல்லாமல்,
இடுப்பில் கை குற்றி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி வசுமதி நின்றிருக்க, தலையில் கை வைத்து கட்டிலில் அமர்ந்திருந்தான், அவள் கணவன்.
“என்கிட்ட வம்பு வளர்க்கற வேலையெல்லாம் வேணாம்னு சொல்லி வைச்சிருந்தேனே! அடக்கி வாசி.. பார்த்துட்டு சும்மாருக்க மாட்டேன்.” என கேலியுடன் கூடிய எச்சரிக்கை பறந்தது, அவளிடமிருந்து.