இன்னும் இடியும் மின்னலும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் சாரலாய்ப் பொழிந்திருந்த மழைநீரும் உள்ளம் திருடிய கணவனின் அருகாமையும் ராஹியின் பயத்தை ஓரளவு விரட்டியிருக்க, சிறிது சிறிதாக சமநிலைக்கு வந்து மழைநீரைக் கையில் பிடித்து விளையாடத் தொடங்கியிருந்தவளைப் பார்த்து,
“பயம் போயிடுச்சா ஹனி. உனக்கு இது பிடிச்சிருக்கா?” என்று கேட்டவனுக்கு…
அவளும் இதழ் விரிந்த புன்னகையினூடே,
“ம்ம்ம் ஓரளவு போயிடுச்சுத்தான். எனக்கு இந்த மழை ரொம்ப பிடிச்சிருக்கு. நைட் நேரம் இப்டி ஒரு இருட்டுல இடி மின்னலுக்கு மத்தில நான் மழைல நனையிறேன். என்னாலயே நம்ப முடில ஆதித்தான். இதுபோல நான் என்னிக்குமே ஹாப்பியா பீல் பண்ணது இல்ல” என்று கணவன் கரத்தைப் பற்றிக் கொண்டே மழையில் தத்தி தத்தி நடந்தவாறு சொன்னவளைக் கண்டு ஆதிக்கோ இதயம் வெளியில் வந்து துடித்தது.
மழையில் சிறு பிள்ளையாகவே மாறி விட்ட மனைவியை ரசிக்கவா புசிக்காவா என்ற இன்பத் தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று, “ஹனி லெட் மீ டான்ஸ்” என்று கையை நீட்ட…
அவளோ அந்த அறையிருளிலும் விழிகள் ஒளிர கணவனை ஏறிட்டவள், “டான்சா???” என்று திணறி, “ஆனா ஆனா எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாதே” என்று உள்ளே போன குரலிலே சொல்ல…
அவனோ, “நான் இருக்கப்போ டோன்ட் ஒர்ரி ஹனி. ஐ வில் டீச் யூ” என்று சொன்னவன் “கமான் தியா” என்று இன்னமும் கைகளை நீட்டியவாக்கிலே இருந்தான்.
கணவனின் கூற்றில் அஞ்சன விழிகளை மேலும் ஆழியாய் விரித்தவள், “உங்களுக்கு டான்ஸ் பண்ணவெல்லாம் தெரியுமா ஆதித்தான்? நான் உங்கள சரியான முசுட்டு…” என்று பேசிக் கொண்டே சென்றவள் நாக்கைக் கடித்து விழிகளை உருட்டி அவனை ஏறிட்டுப் பார்க்க…
அவனோ, “ம்ம்ம் சரியான முசுட்டு…??? மீதியும் சொல்லிரு ஹனி” என்று உந்தி புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அதில் தவறு செய்தவளாய் தலையைக் குனிந்து கொண்டவளின் இமைகளும் மேலும் கீழுமாய் நாட்டியமாட, தன் இதழ் முத்தங்களாலே அதன் ஆட்டத்தை நிறுத்தத் துடித்தவன், “ஹேய் கியூட் டெவில் எனக்கு நிக் நேம் வைக்கிறதுக்கு மட்டுமில்ல. வேற என்ன வேணா பேசுறதுக்கும் செய்றதுக்கும் கூட உனக்கு மட்டும் தான் முழு உரிமையும் இருக்குடி. சோ… நோ பீலிங் தியா. இப்போ இந்த நிமிஷம் மட்டும் தான் நிஜம். சில் பண்ணு ஹனி” என்று அவனே அவள் கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றியவன் ஒரு கையால் அவளின் இடையை வளைத்து, மறு கையால் அவள் விரல்களைப் பிணைத்து இடையை அசைத்து ஆடத் தொடங்கியவன் அந்த வான்மேகம் பூத்தூவிய சாரல் மழையோடு, தன் காதலாலும் பெண்ணின் மனதை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருந்தான் ஆதி.
அவன் இத்துணை தினங்கள் அவள் வீட்டினரிடம் காட்டிய நெருக்கமும் அன்புமே அவளை ஏகத்துக்கும் இளக்கி இருக்க, இன்றோ பெண்ணின் சிறு சிறு ஆசைகளுக்கும் மதிப்புக் கொடுத்து அவள் பயத்தைப் போக்கி அவளோடு சேர்ந்து அவனும் அத்துணையும் ரசித்துக் கொண்டாடி மகிழ்ந்த தருணங்கள் பெண்ணின் மனதில் சொர்க்கத்துத் தேன் துளிகளாய் பதிவாக, அவள் பிடிவாதமாய் பிடித்து வைத்திருந்த மிச்சம் மீதி கோபம் ஏக்கம் கலக்கம் அனைத்தும் மழைத்துளிகளின் உதவி கொண்டு தாபமாய் உருவேற்றினான் ஆதி.
பெண்ணின் புறம் தீண்டி அவளை கிறங்க வைக்காது மனைவியின் அகம் கொண்ட ஆசையை நிறைவேற்றி அவளின் மழலை மனதை முற்றும் முழுதாய் தன் வசப்படுத்தியவன், தற்சமயம் நடனம் என்கிற பெயரில் மென்மேலும் அவளை உருகிக் கரைய வைத்தான்.
சாரல் போன்ற மிதமான மழைதான் என்றாலும் இத்துணை நேரத்தில் இருவரின் உடைகளோடு உடலும்
சிறிதும் மிச்சமின்றி நïனைந்திருக்க ஆணவனின் அழுத்தம் கொண்ட விரல்கள் இடையில் கொடுத்த அவஸ்தை போதாதென்று அவன் வளைந்து நெளிந்து ஆடும் பொழுது பட்டும் படாது உரசிக் கொண்ட அக்கங்கள் எல்லாம் தீப்பற்றி எறியத் தொடங்கியது பாவைக்கு.
தன்னுடைய ஒவ்வொரு அசைவின் போதும் பெண்ணின் முகம் கொண்ட மாறுதல்களையும், செவ்விதழ் கடிப்பின் கிறக்கத்தையும் ரசித்தபடியே சிறிது சிறிதாக தங்களின் இடைவெளியைக் குறைத்துக் கொண்டே வந்தவன் இனியும் தாளாது ஒரு கட்டத்தில் அவளை இறுக்கி அணைத்து பாவையவளின் பவளக் கழுத்து வளைவில் தன் சூடான இதழ்களையும் புதைத்து விட,
அதில் “ஆதித்தான்” என்று அவன் சிகையைப் பற்றி இழுத்தவளின் மேனியோ ஜன்னி கண்டு விட்டது
போல் நடுநடுங்கத் தொடங்கியது.
இதழ் புதைத்த இடம் கொடுத்த தீராப் போதையில் மணித்துளிகள் பல அங்கேயே இளைப்பாறி மேலும் மேலும் பெண்ணவளின் மேனியை உதறல் எடுக்க வைத்தவன், பெண்ணின், “ஹக்” என்ற பலமான சப்தத்தில் தான் அவளின் நிலையை உணர்ந்து விலகி, “ஹனி நனைஞ்சது போதும் வா உள்ள போலாம்” என்று மீண்டும் அவளைத் தூக்கி வந்து படுக்கையில் இறக்கி விட்டு ஒரு துவாலையோடு அவளை நெருங்கினான் ஆதி.
மழைநீரின் ஜில்லிப்போடு, மனம் கொய்த மன்னவனின் உமிழ் நீரின் உஷ்ணமும் சேர்ந்து பூவையவளின் பூமேனி ஏகத்துக்கும் உதறல் எடுக்க, அவள் நிலையை உணர்ந்து விரைவாய் செயல்பட்டு அறைக்கதவு ஜன்னல் எல்லாம் அடைத்தான்.
ஓடிக் கொண்டிருந்த காற்றாடியையும் நிறுத்தி விட்டு தும்பை வண்ண துவாலையோடு ராஹியிடம் ஓடியவன் தலை முகம் கை கால் என்று அனைத்தும் பரபரவென்று துடைத்து குளிர் போக்கும் முயற்சியில் ஈடுபட்டவன், “ஹனி ஹனி இப்போ நீ ஓகேவா. சாரி பேபி. நான்தான் டான்ஸ் ஆடலாம்னு ரொம்ப நேரம் உன்ன நனைய வச்சிட்டேன் சாரி பேபி.
சாரி பேபி” என்றபடியே பின்னலிடப்பட்டிருந்த அடர்சிகையையும் பிரித்து விடத் தொடங்கினான்.
அவன் செயலில் மேலும் மேலும் உருகிய பெண்ணிற்கு குளிர் இன்னும் மட்டுப்படாதிருக்க, “அய்யோ ஹனி உடம்பு இப்டி நடுங்குதே. இங்க ஹீட்டர் கூட இல்லியே. என்ன மடத்தனம் பண்ணிட்டேன்” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவன் அப்பொழுது தான் அவளின் ஈர உடைகளைக் கவனித்து, “ஹோ சிட்… வெட் டிரஸ்ஸ ரிமூவ் பண்ண மறந்துட்டனே” என்று பெயருக்குத் தோளில் கிடந்த பெண்ணின் மாராப்பின் மீது கையை வைக்க,
அதைப் பார்த்த ராஹிக்கோ தூக்கிவாரிப் போட்டு இமைகள் ரெண்டும் மேல் நோக்கி நட்டுக் கொண்டது.
வெளியே இருளில் நனைந்திருந்த பொழுது கருத்தில் பதியா ஈர உடைகள் கொடுத்த தோற்றம், அறைக்குள் பரவியிருந்த டியூப்லைட் விளக்கின் வெளிச்சத்தில் கணவனின் கண் முன்னில் அனைத்தும் அப்பட்டமாய் கடைபரப்பியதிலே ஏகத்துக்கும் நாணத்தின் உச்சியில் இருந்தவளுக்கு கணவனின் வார்த்தைகள் கொடுத்த படபடப்பும் சேர்ந்து தோளில் கை வைத்தவனின் கரத்தை சட்டென்று பற்றியவள் ஒரு மருண்ட பார்வையோடு “வேணாம்” என்று தலையாட்ட அப்பொழுது தான் அவள் இருந்த தோற்றமும் புத்தியில் உரைத்தது ஆதிக்கு.
அத்தோடு அவளின் மறுப்பையும் உணர்ந்து உள்ளத்தில் எதுவோ தைக்க, “இன்னும் என்ன அந்நியனாத்தான் நினைக்கிறியா ஹனி?” என்று விழிகளில் வலியைக் காட்டியவாறே மெல்ல அவளை விட்டு விலகினான்.
“ஆனா நீ அப்டி நினைக்கிறதுல தப்பே இல்ல ஹனி” என்று தொடர்ந்தவன், “நான் ஒப்புக்கறேன் தியா நம்ம மேரேஜ்க்கு முன்னவும் மேரேஜ் ஆன புதுசுலயும் நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கேன். உன்கிட்ட ரொம்ப திமிரா நடந்திருக்கேன் ஹனி. அதோட உச்சகட்டம் தான் நான் டிவோர்ஸ் கேட்டதும். ஆனா அதுக்கு பின்ன வந்த பல சந்தர்ப்பங்கள்ள உன் அருகாமை என்ன பொண்ணுடா இவன்னு தான் எனக்கு தோண வச்சுச்சு. இவகிட்டப்போய் ரூடா நடந்துட்டமேன்னு நிறைய தடவ பீல் பண்ணிருக்கேன். ஆனா எல்லாத்துக்கும் மேல நீ எனக்காக கைல வெட்டுப் பட்டுக் கிடந்தப்போ தான் அன்னிக்கு சொன்னமாறி ஆதின்னு ஒருத்தன் உயிரோட இருக்கணும்னா அவனோட ஹனி அவனோடவே இருக்கணும்னு உணர்ந்த நொடி அதுதான். ஆனா அது உன்கிட்ட சொல்ல நினைச்சப்போ நீ என்ன விட்டு ரொம்ப ரொம்ப விலகிப் போக ஆரம்பிச்ச. அதுக்குக் காரணமும் நானும் என்னோட முட்டாள் தனமான செயல்களும் தான்னு நான் இப்போ புரிஞ்சிக்கிட்டேன். ஆனா புரிஞ்சு என்ன பண்ண. இட்ஸ் டூ லேட் இல்லியா தியா?. செய்றதெல்லாம் செஞ்சிட்டு நான் சாரின்னு சொன்ன உடனே நீ என்ன ஏத்துக்கணும்னு எதிர்பாக்குறதும் என்னோட தப்புத்தான்” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டவன்…
“நா இதுவரை யாருக்காகவும் எதுக்கும் கலங்குனதோ, கண்ணீர் விட்டதோ, கதறுனதோ இல்லடி. ஆனா இந்த மூனையும் அளவுக்கு அதிகமாவே உன்னோட பிரிவு எனக்கு கொடுத்துச்சுன்னு சொன்னா நீ நம்புவியா தியா?. நான் உன்ன உதாசீனம் பண்ணப்போவெல்லாம் என் கூடவே இருந்த, ஆனா நான் காதலை உணர்ந்து நீதான் சகலமும்னு உன்மடியில தஞ்சம் புக வந்த நொடி என்ன விலக நினைச்சுட்டியே ஹனி. ரொம்ப வலிச்சுதுடி. ஆனா நீயும் என்னப் போலவே, என்ன காதலிக்கிறன்னு உணர்ந்த நொடி அந்த வலியெல்லாம் மாயமா மறைஞ்சுட்டுது ஹனி. என்னதான் உன் மனசுல நான் இருந்தாலும் நான் முன்ன பேசுனதெல்லாம் மறந்துட்டு என்ன ஏத்துக்க உனக்கும் கால அவகாசம் வேணும்னு எனக்குப் புரியுதுடி. ஆனா இந்த இடம் தான்” என்று இதயம் இருக்கும் பகுதியைத் தொட்டுக் காட்டியவன், “காதலனா இல்லாட்டியும் கணவனா மட்டுமாவது உன் பக்கத்துலயே இருக்கணும்னு என்னப் போட்டுக் குடையுது ஹனி. அதான் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்திட்டேன் சாரிம்மா” என்று தன் உள்ளக் கிடைக்கை எல்லாம் அவள் முன் கொட்டி ஒரு நொடி விழி மூடித் திறந்தவன்…
“நீயா மனசு மாறி ஏத்துக்குற வர எவ்ளோ நாளானாலும் மனசு முழுக்க லவ்வோட நான் காத்திருப்பேன் பேபி. இப்போ முதல்ல ட்ரெஸ்ஸ மாத்து. நான் வெளிய போறேன்” என்றும் சொல்லிவிட்டு தலை குனிந்தவாறே வேக எட்டுக்களால் அறையின் வாசல் கதவை நெருங்க…
அத்துணை நேரம் அவன் பேசியதெல்லாம் ஒரு வித அதிர்ச்சியோடு கேட்டிருந்தவள், “ஆதித்தான்… என்ன விட்டு எங்கையும் போகாதீங்க ஆதித்தான்.” என்று ஓடி வந்து அவனின் பரந்த முதுகை இறுக அணைத்து அவன் நடையை நிறுத்தினாள் அவன் மனையாள்.
மனைவியின் வார்த்தையிலே நடந்து கொண்டிருந்தவனின் கால்கள் ஆணி அடித்தார் போல் நின்றுவிட முதுகுப் புறம் உணர்ந்த அவளின் இறுகிய அணைப்பில் உடல் விரைக்க நிமிர்ந்தவன், வயிற்றை சுற்றிப் படர்ந்திருந்த பெண்ணின் மெல்லிய பூங்கரத்தையும் மெல்ல விலக்கி அவள் புறம் திரும்பியவன்…
“ஹனீ…” என்று தவிப்பாய் அழைத்து, இன்னும் எதையோ தேடி அலைப்புற்ற நீல நயனங்களை அவளில் பதித்தான்.
தன் உயிர் உருக்கும் விழிகளால் அப்பார்வையை கவ்வியவள்,
“இன்னிக்கு மட்டும் இல்ல ஆதித்தான் நீங்க என்னிக்கு இந்தத் தாலிய என் கழுத்துல கட்டுனீங்களோ அன்னிக்கே உங்கள கணவனா என் மனசில வடிச்சிட்டேன் ஆதித்தான். அடுத்து வந்த நாட்கள்ள என்னையும் மீறி நான் உங்கள உயிர்ல சுமக்க ஆரம்பிச்சிட்டேன். உங்களோட கோவ குணத்தால எனக்குள்ள புகுந்த நீங்க கொஞ்ச நாள்ள உங்க அன்பாலையே என்ன கரைய வச்சிருக்கீங்க. இப்ப மட்டும் இல்ல எப்பவும் எனக்கு நீங்க யாரோவா, அந்நியனா தெரிஞ்சதே இல்லை. என்னோட அண்ட சராசரமும் நீங்க தான் ஆதித்தான். உங்களோட ஹனீங்கற ஒரு அழைப்புப் போதும் நான் உருகி கரையிறதுக்கு. உங்க ஹனிக்கு நீங்க வேணும் ஆதித்தான். இப்ப மட்டுமில்ல. அவ வாழ்நாளோட கடைசி நிமிடம் வரை இந்த மார்புக்குள்ளயே நான் புதஞ்சிருக்கணும் ஆதித்தான்” என்று உருக்கமும் அழுத்தமும் கலந்த குரலில் கூறி, காற்றுக் கூட துளி இடம் கொடாமல் மீண்டும் கணவனின் நெஞ்சோடு நெஞ்சாக இறுக்கத் தழுவிக் கொண்டாள் மாது.
அவன் எத்துணையோ தினங்களாகக் கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகள். உன்னை நேசிக்கிறேனடா என்று மனைவி கூறி விடமாட்டாளா என்று எத்துணையோ இரவுகள் ஏங்கித் தவித்த சொற்கள். இன்று மனைவி கூறிவிட்டாள். வெறும் வார்த்தைகளாக மட்டுமில்லாது வாழ்நாளின் கடைசி நொடி வரை உன் மார்பில் இடம் வேணுமென்று பெண்ணவள் அந்த மார்பிலே தஞ்சம் புகுந்ததில் அதைக் கேட்டிருந்த ஆணுக்கோ, பேச வார்த்தைகள் இருந்தால் தானே.
மனைவி சொல்லாலும் செயலாலும் உணர்த்திய நேசத்தின் உச்சத்தில் மூழ்கித் தத்தளித்து தன்னுள்ளே அவளைப் புதைத்துக் கொண்டவனுக்கு “ஹனீ… தியா…” என்ற அழைப்பைத் தவிர வேறு எவ்வார்த்தையும் கிட்டாது போனாலும் அவன் கைகள் அவளை எப்பொழுது பூச்செண்டாய் ஏந்தியது எங்கணம் மஞ்சத்தில் சேர்த்தது என்று இருவருமே அறியார்.
இருவருள்ளும் மாதக் கணக்கில் சொல்லாது அடக்கி வைத்த காதல் இன்றோ கட்டவிழ்ந்து காற்றாற்று வெள்ளமாய் பொங்கிப் பெறுக, அதில் அடித்துச் செல்லப்பட்டது அவர்களின் கோப தாபங்கள் மட்டுமல்ல பெயருக்கு இருந்த வஸ்திரங்களும் தான்.
அன்று மணமேடையில் மெட்டி போடுவதற்கே காலைத் தொடமாட்டேன் என்று மல்லுக்கு நின்றவன் இன்றோ தன் செயல்களுக்கு மன்னிப்பு வேண்டுபவன் போல் நேசப் பெண்ணவளின் பொற்பாதங்களுக்கே முதலில் இதழ் அபிஷேகம் செய்ய, அதில் இன்னும் இன்னும் அவன் காலடி தேடி ஓடியது காரிகையின் காதல் மனது.
போதும் போதும் மட்டும் பெண்ணின் காலில் தொடங்கி, கைகள் கடந்து முகத்தையும் இதழ் முற்றுகையிட்டவனின் செயலில் பேச்சிழந்த பெண் மான், உஷ்ண மூச்சுக்களை வெளியேற்ற, பெண்ணவளின் பேரெழிலில் அந்த மூச்சுக் கூட கிட்டாது மூர்ச்சையாகிப் போனவனோ அமுதசுரபியான பாவையவளின் பால் அதரங்களில் புதைந்தே தன் உயிரை மீட்டுக் கொண்டான் ஆதி.
மூச்சைக் காக்க வேண்டி கொய்த பெண்ணின் அதரங்களோ அவனுள் அடங்கிக் கிடந்த மோகவேட்கை மொத்தமும் தட்டி எழுப்ப, அதன் பின் மூச்சுவிட மட்டுமே பிரிந்த அதரங்களால் “தியாமா… ஹனி” என்று பெண்ணவளின் நாமத்தை உறுப்போட்டபடியே அவளை மஞ்சத்தில் கிடத்தியவன், ஆழிப் பேரலையாய் அவள் மேல் படர்ந்து முன்னேற, உயிர் கொண்ட வேட்கையை உடல்களின் இணைவால் அணைக்க விளைந்தவளும் சிற்பிக்குள் அடங்கும் முத்தாய் தன்னவனின் கைகளில் தன்னை ஒப்புக் கொடுத்துக் கிறங்கிக் கிடந்தாள் ராஹித்தியா.
‘என்னை என்ன வேணுமானாலும் செய்து கொள். என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே உனக்கு’ என்று சொல்லாமல் சொல்லிய மனைவியின் அந்த மயக்கம் எந்த ஆணுக்குத் தான் கர்வத்தைத் தராது…
உள்ளமதில் கொட்டி வைத்த ஆழி நேசமதில் உடலெனும் ஆயுதம் கொண்டு உணர்வுப் போர்வையில் உயிர்த் தேடலைத் தொடங்கியவர்களுக்கு உதடுகள் கூட முத்தமிடும் கருவியாக மட்டுமே மாறிப் போக, அங்கு வார்த்தைகளுக்கோ வேலையே இல்லாமல் தான் போனது.
தன் ஒவ்வொரு இதழ் ஒற்றலுக்கும் சில்லிர்த்தடங்கிய பெண்மையின் மென்மையில் ஆணவனின் சித்தம் எல்லாம் சிதறிப் போக, தன் முன்னே முழுநிலவாய்க் கிடந்தவளை முத்தமிட்டு முத்தமிட்டே பிறைமதியாய் மாற்றியவன், நிலாப்பெண்ணவளின் நளின வளைவுகளில் கிறுகிறுத்து, “தியா… யூ கில் மீ டீ” என்று அவள் நெஞ்சோரம் புதைந்து, சொர்க்கப் பாதை நோக்கி தன் முதல் அடியை எடுத்து வைக்க, “ஆதித்தான்” என்று துடி துடித்து அடங்கினாள் பாவை.
மங்கையவளின் அந்த மயக்க விளிப்பில் இனியும் தாளாது பனியைச் சூளும் முகிலவனாய் பூவையவளை பூட்டிக் கொண்டவன் பூத்து நின்ற பூந்தேகமதில் இம்மியும் இடம் விடாது இதழ்களின் இசை மீட்டியவாறே புல்லாங்குழலில் பூட்டிய மென்கொண்டலாய் அவளுள் புதைந்து கரைந்து தன் பிறவியின் பலனை அடையத் தொடங்கினான் ஆதி.
தன் ஆண்கர்வத்தோடு
இருபத்தி ஒன்பது வருட பிரம்மச்சர்யத்தையும் தொலைத்து.
“செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
இனிய கொடுமை நீயே நீயே…
கொட்டும் வேர்வை அட்சதையாக
கொள்ளை அழகு வெற்றில்லையாக
மென்று விடுவேன் இதழ்கள் நூறாய் உடலும் உயிரும் வேதமாய்…