தன்னை மனைவியோடு சேர்த்து வைத்த பூஞ்சோலை ஊரை விட்டு வர மனமில்லாதவன் போல் அடுத்த பத்து தினங்களும் அவளோடு இணைந்து தோட்டம் துறவு ராஹியின் வீடு என்று கூடிக் கழித்தவன் தொழில் நிலை கருதி வேறு வழியின்றி சென்னை வந்த போதும் ஒவ்வொரு நாளிலும் அவனை அலுவலகம் கிளப்புவது இமாலைய சாதனையாகித் தான் போனது ராஹிக்கு.
ஆத்விக்கும் ஊரில் இல்லாததால் அஸ்வினுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்ற மனைவியின் கூற்றை அப்படியே ஏற்று தேன்நிலவுக்கும் எந்த ஏற்பாடும் செய்யாதவன் அதைச் சொல்லியே வீட்டை மட்டுமல்லாது அலுவலகத்தையும் கூடலின் கூடாரம் ஆக்க முனைய, கணவனின் காதலோடு இணைந்த காமக் கணைகள் தாளாது தவித்துப் போனது அவனின் தேன் சுவை கொண்ட தியாப்பாவை.
முன்பு காதலைப் புரிவதில் இருவருமே சற்றுத் தடுமாறினாலும் இக்கணம் அக்காதலை வெளிக்காட்டுவதில் இருவருமே போட்டி போட்டு நேசத்தோடு முத்தங்களையும் மோகங்களையும் பரிமாறிக் கொண்டவர்கள் தங்களுக்கென பூலோக சொர்க்கத்தையே படைத்தனர்.
நேசம் கொண்ட கணவனின் அருகில் ராஹியின் நாட்கள் அழகாய் மாறியது என்றால், காதல் பெண்ணவளின் சிறு சிறு செயல்களிளெல்லாம் ஆதியின் உலகமே புதிதாய்த் தோன்றியது.
பறவையின் இறகும், இரவின் நிலவும், ஓடும் நீரும், அதில் நீந்தும் மீனும், நீலக் கடலும், அதில் துரத்தும் அலையும் என்று அனைத்தும் அவனோடு ரசித்து மகிழ்ந்தவள், பாடும் குயிலும் ஆடும் மழையையும் கூட அவனுக்கு அறிமுகம் செய்விக்க… விபரம் தெரிந்த நாளில் இருந்து பல நாடுகளில் சுற்றி இருந்தாலும் தொழிலே மதியாய் இருந்தவன் தன்னவளின் விழிகளின் வழியே இன்று உலகத்தையே ரசிக்கக் கற்றுக் கொண்டான் ஆதி.
மனைவியோடு சேர்த்து அனைத்தும் கண்டு ரசித்தவன், அவளையே முழு நேர உணவாகவும் உண்டு புசித்து புது புது வித்தைகள் கற்க, கற்பனையில் கூட கண்டிராத அளவு இனிமையிலும் இனிமையாய்க் கழிந்த ஐந்து மாதங்கள், ஐந்து நாட்கள் போல் உருண்டோடிப் போனப்பின் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பியிருந்தனர் அந்த நேசப் பறவைகள்.
அன்றைய நாளின் காலை வேளையில் தன்னறைக்குள் நின்றிருந்த ஆதி, “ஹேய் தியா… ஹனி எங்கயிருக்கடி? வாஸ்ரூம் டேப்ல வாட்டர் வரல என்னன்னு கொஞ்சம் பாரேன். ஹனி நான் குளிக்கணும்டி சீக்கிரம் வா” என்று தலையை மட்டும் வெளியே நீட்டி மனைவியை கூவி அழைக்க…
ஆதியின் அந்தச் சத்தம் கீழே அடுக்களையில் மதிக்கு உதவியாக காலை உணவு வேளையில் இறங்கியிருந்த ராஹியோடு அவளருகில் நின்றிருந்த மதியின் செவிகளையும் வந்து நிறைத்தது.
இன்று மட்டுமல்ல திருமணம் முடிந்த சில தினங்களில் இருந்தே மகனின் இது போன்ற அழைப்புகளை அறிந்து ஒரு வெட்கப் புன்னகையை உதிர்த்துக் கொண்ட மதியும் தன்னைப் பார்த்து அசடு வழிந்து சிரித்த மருமகளிடம், “ஆதி ஆபிஸ் கிளம்புற வரை நீ அவன் கூடவே இருமான்னு சொன்னேன்ல உன்ன” என்று வாஞ்சையாக நோக்கியவள், “சீக்கிரம் போடா இல்லனா அதுக்கு வேற திட்டப் போறான்” என்றும் அனுப்பி வைக்க…
“தேங்காய் சட்னிக்கு உப்புப் போட்டுடுங்க அத்தை. சீக்கிரம் வந்தர்றேன்” என்று மட்டும் சொல்லி விட்டு வேகமாக மாடி ஏறினாள் ராஹித்தியா.
‘இவங்களுக்கு தினமும் இதே வேலையா போச்சு. முன்ன அம்மாக்காக நடிப்புன்னு பண்ணதெல்லாம் இப்போ நிஜமாவே பண்றாங்க’ என்று கணவனுக்குத் திட்டிக் கொண்டபடியே வேகமாக அறைக்கதவைத் திறந்தவள் சுற்றியும் முற்றியும் ஆதியைத் தேட…
அவனோ ராஹி அறைக்குள் நுழைந்த மறுகணம் அறைக்கதவை அடித்துச் சாற்றி விட்டு மனைவியை பின்னிருந்து அணைத்து அவள் கழுத்தில் வாசம் பிடிக்கத் தொடங்கி விட்டான்.
கணவனின் செயலில் கிறங்கத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்த ராஹியும், “அய்யோ விடுங்க ஆதித்தான். ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை. இப்படியா தினமும் சமைக்கிறப்ப கூப்டு தொல்லை பண்ணுவீங்க? அத்த நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?” என்று கோபமாகத் தொடங்கிய வார்த்தைகள் ஆணின் இதழ்கள் கொண்ட பயணத்தில் தேய்ந்து குழைவாகவே ஒலித்தது.
அதில் ஒரு மந்தகாசப் புன்னகையை உதிர்த்துக் கொண்டவனும், “அதெல்லாம் மாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க ஹனி. அவங்களும் கபில்ஸ்ஸா இருந்து பேரண்ட்ஸ் ஆனவங்க தானே” என்று அவளுக்கு மேல் குழைந்தவன் அவளுக்கே தெரியாது அவளை மஞ்சம் நோக்கி நகர்த்தி வந்திருந்தான்.
கணவனின் குரலிலும், கரத்திலும் தன்னையே இழக்கத் தொடங்கியவள், “அய்யோ உங்களுக்கு ஒன்னும் புரியாது உங்களுக்கு வேண்டியது கிடச்சதும் ஆம்பளக நீங்க பாட்டுக்கு வெளிய போயிடுவீங்க. ஆனா வீட்டு மருமகளா வேலைக்காரங்களக் கூட பேஸ் பண்றது நான்தானே” என்று சிலிர்த்துக் கொண்டவள்…
“எல்லாரையும் பொருத்தவரை நம்மளுக்கு மேரேஜ் ஆகி ஒன் இயர் ஆகப் போகுது ஆதித்தான். இன்னமும் நியூ கபில்ஸ் போல நீங்க பண்ற அலும்பு தாங்கள. எனக்கு ரொம்ப சையா இருக்கு. இனிமேல் இப்டிலாம் பண்ணாதீங்க” என்றும் பேசிக் கொண்டே சென்றவள் ஒரு கட்டத்தில் தன் மேனியில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து பேச்சிழந்து விழிக்க…
அதற்குள், “இனிமேல் பண்ண மாட்டேன் ஹனி. ஆனா இன்னிக்கு மட்டும்” என்று கண்ணடித்துச் சிரித்து போர்வையோடு போர்வையாய் பெண்ணவளை மூடியவன் அடுத்த பல மணித்துளிகளுக்கு “ஆதித்தான் ஆதித்தான்” என்ற அவனின் நாமத்தை மட்டுமே மனைவியை உறுப்போட வைத்திருந்தான்.
மணி நேரம் கடந்தப்பின்னும் விழிகளை மூடி தன் கைவளைவில் கிறங்கிக் கிடந்தவளின் செவியோர சிகையை மென்மையாக ஒதுக்கி,
“ஹனீ… ஓபன் யூர் ஐஸ்டா” என்று தன்னைப் பார்க்கச் செய்தவன்,
“இது நம்ம வாழ்க்கை ஹனி நமக்கு பிடிச்ச போல அத நாம வாழறோம். யாருக்காகவும் எதுக்காகவும் நம்மோட சின்ன சின்ன சந்தோசங்களைக் கூட நான் விட்டுத் தர விரும்பல ஹனி” என்று சொன்னவன்…
“இதெல்லாம் உனக்கு கஷ்டமா இருக்கா?” என்றும் சிறு தவிப்போடு கேட்க…
அவளுக்கு அவன் எதைக் கேட்கிறான் என்று புரியவே இல்லை.
தன் கேள்வியில் மலங்க மலங்க விழித்துக் கிடந்தவளின் நெற்றியோடு நெற்றி முட்டி,
“மக்கு டெவில்” என்று முணுமுணுத்துக் கொண்டவன், சற்று முன் நடந்ததை எல்லாம் வார்த்தையாலும் விளக்க ஆரம்பிக்க…
அதில் நாணம் தாளாமல், “அய்யோ இல்ல ஆதித்தான்” என்று அவன் வாயில் கரத்தை வைத்து மூடியே விட்டாள் பெண்.
அதைப் பார்த்து இதழ் விரித்துச் சிரித்தவனும், “கஷ்டமா இல்லன்னா, அப்போ இஷ்டமா?” என்று அவள் செவி மடலை வருட ஆணவனின் செய்கையை விடவும் பேச்சே பேரவஸ்தையைக் கொடுத்தது பெண்ணிற்கு.
செவிமடலில் இருந்து இறக்கிய கரத்தை கழுத்தை விட்டும் மெல்ல மெல்ல இறக்கியவன் “பிடிச்சிருக்கா ஹனி?” என்றும் விடாது கேட்க…
“ம்ம்ம்” என்று மட்டும் முனகிய பெண்ணின் முகம் அன்னிச்சை செயலாய் ஆணின் மார்புக்குள் புகுந்து புரண்டது.
மார்புக்குள் புகுந்தவளின் மோவாயைப் பற்றி நிமிர்த்தியவன், “என்ன பிடிச்சிருக்கு ஹனி? என்னையா? இல்ல நான் கொடுக்குற இம்சையா…..???” என்று ஆரம்பித்தவனை முடிக்கக் கூட விடாது சட்டென்று அவன் இதழ்களைக் கொய்து கொண்டவள் சில நொடிகள் கடந்து, “எல்லாமே ஆதித்தான்” என்று மூச்சு வாங்கி விலக…
மனைவியின் அந்த அதிரடியில் பேச பேச்சின்றிப் போனான் ஆதி.
கணவனின் அமைதியில்,
“ஹேய் முசுட்டு மேங்கோ என்னடா பேச்சையே காணோம்?” என்று அவன் கன்னக்குழியை வருடியவளின் விரல்களைப் பற்றி, “தியா… யூ ஆர் கில் மீ வித் எவரிசெகண்ட்ஸ்டி” என்று ஒவ்வொரு விரலாக முத்தமிட்டு முடித்து அடுத்த சில கனங்கள் அவளது பேச்சையும் நிறுத்தியவன்…
“நான் நேத்து சொன்னதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே ஹனி?” என்றும் வினவ…
அவளோ ஆழ்ந்த மூச்செடுத்தவாறே, “எதக் கேக்கறீங்க ஆதித்தான்?” என்று புரியாத பாவனையில் கேட்டாள்.
அதைப்பார்த்து, “ஹேய் டெவில் நடிக்காதடி” என்று அவள் தலையில் செல்லமாய்க் குட்டியவன், “ஒன் ஆப் தி சேர்மனா எப்போ ஆபிஸ் வர்ற நீ?” என்று விடாது கேட்க…
அதில் திருதிருவென்று விழித்தவள், “இல்ல ஆதித்தான் எனக்கு அதெல்லாம் வேணாம் என்ன விட்டுடுங்களேன்” என்று கெஞ்சினாள்.
அதற்கு அவனும், “இப்டி சொன்னா எப்படி ஹனி. நீயும் நம்ம பிஸ்னஸ்ல எல்லாம் தெரிஞ்சிக்கணும்டி. நீ என்னன்னா இப்போல்லாம் சரியா ஆபிஸ்க்கே வரமாட்டிற” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவனை அவஸ்தையாகப் பார்த்தவளும்…
“ப்ளீஸ் ஆதித்தான் எனக்கு இதெல்லாம் இன்ட்ரெஸ்ட்டே இல்ல. நான் அத்தக்கி ஹெல்ப்பா வீட்லயே இருந்துக்கறேன்” என்று கண்ணைச் சுருக்கிக் கொஞ்சியவளைப் பார்த்து…
“தியா நீ நல்லா புரிஞ்சு தான் பேசுறியா? உன்னோட ட்வின் சாஹி கூட ஓவ்னா கம்பனி ரன் பண்ணப்போறா அதுவும் ஐடி பீல்ட்ல. வாழ்க்கைல உனக்குன்னு ஒரு அடையாளம் வேணாமாடி?” என்று சற்று ஆதங்கமாகவே கேட்டான் ஆதி.
என்னதான் மனைவியின் எளிமையான எண்ணங்களை அறிந்திருந்தாலும், அவளை தனக்கு ஈடான இடத்தில் வைக்க விரும்பியவன் மனைவிக்கென்று தனி அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்க…
அவளோ, “உங்களோடது எல்லாமே உங்க ஹனிக்குத்தானே ஆதித்தான். அப்றம் எனக்கு எதுக்கு தனி அடையாளம்?” என்று கணவனைக் காதலாய்ப் பார்த்தவள்…
“அத்தோட அவங்கவங்களுக்கு என்ன வருமோ அத செஞ்சாத்தான் சரியா இருக்கும் ஆதித்தான். சாஹி நல்லாப் படிச்சவ, நாளும் தெரிஞ்சவ அவளுக்கு இதெல்லாம் செட்டாகும். ஆனா எனக்கு சரிவராது ஆதித்தான்.” என்று கூறியவளை முறைப்பாய் ஏறிட்டவனும்…
“அப்போ நீ இனிமேல் ஆபிஸ் வரப்போறதில்ல. நம்ம பிஸ்னஸ்ல எந்த பொசிசனும் எடுக்கப் போறதில்ல. அப்டித்தான?” என்று கேட்டவனின் குரலில் மெல்லிதான கோபமும் ஏமாற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
கணவனின் குரல் பேதத்தைக் கண்டு கொண்டவளும், “அய்யோ அப்டி இல்லங்க. ஆரம்பத்துல இருந்தே எனக்கு படிப்பு ஆபிஸ் கம்ப்யூட்டர் இதெல்லாம் அலர்ஜி. நான் சென்னை வந்ததே சாஹிக்காகத்தானே. நாலு வார்த்தை இங்கிலிஷ்ல பேசக்கூட வராது எனக்கு. அதனால நீங்க சொல்றபோல போஸ்ட் எதுவும் எனக்கு வேணாங்க. வாரத்துல டூ டேஸ் நா உங்க கூட ஆபிஸ் வந்து நம்ம பிஸ்னஸ்ஸோட வளர்ச்சிய தெரிஞ்சிக்கறேன். சரியா?” என்று கணவனின் தோளில் சலுகையாய் சாய்ந்தவளை…
“வாரத்துல ரெண்டு நாளா?. அப்றம் மிச்ச நாள் நீ எல்லாரோடவும் ஜாலியா இருப்ப. நான் மட்டும் ஆபிஸ்ல தனியா அவஸ்த்தைப் படணுமா?” என்று சிறு பிள்ளை போல் மூக்கை விடைத்தான் ஆதி.
முன்பு அவளுடன் முட்டிக்கொள்ளும் நாட்களில் இருந்தே அவளிடம் மட்டுமே வெளிப்படும் கணவனின் சிறு பிள்ளைப் பாவனையில் அவனை மையலாகப் பார்த்தவளும், “இல்லங்க எனக்கும் எப்பவும் உங்க கூடவே இருக்கணும்னு ஆசை தாங்க. ஆனா நான் அத்தை கூடச் சேந்து மகளிர் சங்கம் மூலமா பூக்கடை மல்லி மாதிரி இருக்க பெண்களுக்கு நம்மால முடிஞ்ச ஹெல்ப் பண்லாம்னு நினைச்சிருக்கேன் ஆதித்தான். அதுக்கு அங்கிள் கூட சப்போர்ட் பண்றதா சொல்லி பஸ்ட் பண்டா பிப்ட்டி லாக்ஸ் டொனேசன் கொடுத்துருக்காங்க தெரியுமா?” என்று நயனங்கள் ஒளிரக் கூறியவளை…
‘என்ன பொண்ணுடா இவ?’ என்பது போலத்தான் பார்த்திருந்தான் அவள் கணவன்.
அவளைப் பற்றிய அவனின் ஆரம்பகால எண்ணங்கள் என்ன? இன்றோ எத்துணை உயர்ந்த பண்புகளால் தினம் தினம் அவனை ஆதர்சிக்கும் பெண்ணவளை மனைவியாய்ப் பெற்றதற்கே ஒவ்வொரு நொடியும் பெருமையும் பூரிப்பும் கொண்டான் ஆதித்யவர்மா.
பெண்ணவளின் அந்த மகிழ்வில் அவனது முகமும் பூவாய் மலர, “ஹனீ…” என்று அவளை மார்போடு இறுக்கிக் கொண்டவன்,
“நீ சொல்றது எல்லாம் சரிதாண்டி. ஆனா உனக்குன்னு தனிப்பட்ட ஆசை எதாவது இருக்கணும்ல தியாமா?” என்று கேட்டவனுக்கு…
அவளும், “அதெல்லாம் இருக்கே” என்று பட்டென்று சொல்ல…
“என்ன ஆசை ஹனி?” என்று ஆவலாக வினவினான் ஆதி.
கணவனின் ஆவலில் அவனை புன்னகையோடு ஏறிட்டவளும், “எனக்கு, எனக்கு, எனக்கு, எனக்கு குட்டி ஆதித்யாவ சீக்கிரம் பாக்கணும்ங்கறது தான் இப்போ இருக்க ஆசை, ஆதித்தான்” என்று வெட்கப் புன்னகையோடு சொல்ல…
“தியா…” என்ற கூவலோடு அவளை இறுக்கியிருந்தவனுக்கு
‘உன் உதிரத்தை என்னில் சுமக்க வேண்டும்’ என்கிற மனைவியின் கூற்று அளவில்லா கர்வத்தைத் தந்தது.
“இப்டி ஒரு ஆசைய நீ சொல்லுவன்னு நான் சத்தியமா எதிர்பாக்கலை ஹனி” என்று என்புகள் நொறுங்கும் அளவு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன், “என் தியாகுட்டிக்கு அதுக்குள்ள குட்டி ஆதியப் பாக்கணுமா?” என்றும் கேட்டுக் கேட்டு கண்ணோரம் சுருங்குமளவு வாய்விட்டே சிரித்தவன், “ஏற்பாடு பண்ணிடுவோம்” என்றும் அவள் கழுத்து வளைவை மென்மையாகக் கடிக்க…
அதில், “ஆதித்தான்” என்று அவன் கழுத்தை வளைத்த பெண்ணின் உடலோ வெடவெடக்கத் தொடங்கியது.
கழுத்தைச் சுற்றி ஊர்ந்த ஆதியின் உதடுகள் மென்மையாக முன்னேறி ராஹியின் மென்னுடலெங்கும் தன் உஷ்ணத்தை விதைத்ததில் மெல்ல மெல்ல விழிகளை மூடத் தொடங்கியவள் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவளாய், “அச்சோ மறந்துட்டேன்ங்க. நம்ம இப்போ ஏர்போர்ட்க்கு கிளம்பனுமே. என்ன விடுங்க ஆதித்தான்” என்று காற்றில் கீதம் வாசித்தாள் ராஹி.
அதில் மெல்ல தலையுயர்த்திப் பார்த்து, “ஏர்போர்ட்க்கு எதுக்குடி?” என்று மட்டும் கிசுகிசுப்பாய் வினவிவிட்டு மீண்டும் அவள் இடையில் இசை மீட்டச் சென்றவன் கொடுத்த நூதன இம்சையில் அவன் சிகையைப் பற்றி இழுத்தவளும்…
“இன்னிக்குதான்… ஆ… ஆ… ஆ… ஆதுமாமாவும் சாஹியும் லண்டன்ல இருந்து வர்றாங்க. நாம அவங்கள பிக் பிக் பிக்கப் பண்ணப் போணும்னு நீங்க தானே சொன்னீங்க. இன்னும் ஒன் அவர்தான் இருக்கு ஆதித்தான் நாம கிளம்ப” என்று ஆத்விக்கும் சாஹியும் தொழில் பயிற்சி முடித்து வருகை தரும் விஷயத்தை ஞாபகம் செய்வதற்குள் மேல் மூச்சு வாங்கி போர்வைக்குள் நுழைந்து கொண்டவள் முகத்தையும் சேர்த்தே மூடிக்கொண்டாள் ஆதியின் அடுத்தடுத்த செயல்களில்.
இறங்கிய செயலிலே கண்ணாய் இருந்தாலும் மனைவியின் இன்னிசை போன்ற பேச்சிலும் கவனம் பதித்திருந்தவன், “அட இதெப்படி மறந்தேன்?” என்று கேட்டு முடிக்க அடுத்த கணம் ராஹி அந்தரத்தில் மிதந்திருந்தாள்.
காற்றில் மிதந்ததோடு நடையின் அதிர்வையும் உணர்ந்து விழிகளை விரித்தவள், “அய்யோ என்ன… எங்க தூக்கிட்டுப் போறீங்க ஆதித்தான்?” என்று பதட்டமாகக் கேட்க…
அதற்குள் அவளைச் சுமந்தபடியே குளியலறையை சமீபித்து விட்டிருந்தவன், “டைம் சேவிங்க் தியா. இருக்க ஒன் அவர்ல ஹனியும் வேணும். ஏர்போட்கும் கிளம்பணும்னா ஒன் ஸ்டோன்
டூ மேங்கோஸ் தான்” என்று கண்ணடித்துச் சிரித்தபடியே குளியலறைக்குள் நுழைந்து கதவை காலாலே அடித்துச் சாற்றியவன், “சால் வீ ஸ்டார்ட் ஹனி?” என்றும் கேட்டு கேட்கக் கூடாதவை எல்லாம் கேளாமலே அவளிடம் பெற்றுக் கொள்ள, ஈடில்லா சொர்க்கச் சுழலில் சிக்கித் தவித்தனர் இருவருமே.
மனைவியோடு இணைந்து கூடலோடே நீராடலும் முடித்தவன் அடுத்த ஒரு மணிநேரத்தில் சென்னை விமான நிலையத்தில் தன் அன்னப்பறவை பஹாணி ஹுய்ராவை பாந்தமாய்ப் பொருத்த, ஆத்விக் தம்பதியை சுமந்து வந்த விமானமும் சரியாக சென்னை வந்து இறங்கியது.