சின்ன இரவு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும் ஆள் அரவமே இல்லாத அந்த மொட்டை மாடியில், “சாஹி பீல் பண்ணுவா. அப்பா சங்கடப் படுவாங்க. இதெல்லாம் உன் பிரச்சனை. இதுபோல ஜூஜூபி ரீசன்கெல்லாம் உன்ன நான் வேலைல வச்சுக்க முடியாது” என்று சீறிய ஆதியின் சப்தத்தில் மிரண்டவள், தன்னையே அறியாமல் அவனை இன்னும் ஒரு அடி நெருங்கி வந்து நின்று ஹஸ்கி குரலில்…
“அய்யோ கத்தாதீங்க ஆதி சார் நா பேருக்கு தான் உங்ககிட்ட ஒர்க் பண்றேன் சொல்றேன். ஆனா அது வெளி உலகத்துக்கு… நெஜத்துல வேலையே பாக்காம சும்மா இருந்துட்டு என் ரேஞ்க்கு உங்க கம்பெனி செட் ஆகலனு சொல்லி கொஞ்சம் நாள்ள நானே வேற வேலை தேடிட்டு விலகிடறேன்… அதுக்கு நீங்க எனக்கு சம்பளம் கூட தர வேணாம். கொஞ்ச நாள் ஆகிட்டா யாரும் பெருசா எடுக்க மாட்டாங்க, நீங்களும் உங்க டாட்கிட்ட சமாளிக்க வேண்டி வராது” என்றாள் ராஹி ஏதோ பெரிய திட்டத்தைக் கூறியது போல்.
அவனோ கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு, புருவத்தை உயர்த்தி அவளை நோக்கி நடக்கத் துவங்கியவன் ஏளன புன்னகையுடன், “எப்படி எப்படி? நீ வேலை பாக்குறதுக்கு என் கம்பெனி உன் லெவல்க்கு இல்லையா?” என்றான்.
ஆதித்யாவின் ஒவ்வொரு எட்டிற்கும் ராஹித்யாவின் கால்கள் தன்னை போல் பின்னால் சென்றுகொண்டே இருக்க பெண்ணவளின் அதரங்களோ “லெவல் இல்… இல்ல… ரேஞ்” என்று உதிர்த்தது.
அவனோ கிண்டலாக அவளை பார்த்துச் சிரித்தவன் கால்கள் நிற்காமல் பெண்ணை நோக்கி வந்துகொண்டே இருக்க ஒரு கட்டத்தில் சுவரும், தண்ணீர் தொட்டிக்கு செல்ல கட்டியிருந்த இரும்பு ஏணியுமே துணை நின்றது.
அவள் உயரம் வரை குனிந்து நெருங்கி வந்தவனுக்கு பெண்ணின் மனமும், அவள் எப்பொழுதாவது பயன்படுத்தும் சந்தன மணம் கொண்ட பெர்ப்யூமும் எந்த வித சலனமும் ஏற்படுத்தவில்லை போலும் சற்றும் அசராமல் அவள் கண்களை மட்டுமே கோவம் கலந்த கிண்டலில் பார்த்தவன்.
“என்னோட டாட்ட எப்டி சமாளிக்கனும் எனக்குத் தெரியும் மிஸ் ராஹித்தியா, இந்த நேரத்துல உதவி தேவப்படுறது உனக்கு மட்டும் தான். சோ உனக்கு இத செய்றதால எனக்கு என்ன பெனிபிட்? நான் எதையும் எந்த விதமான ரிட்டர்ன் கிபிட் இல்லாம செய்ய மாட்டேன்… யூ க்நோ ஐம் பிசினஸ்மேன்…!!” என்றான். குரலில் மேலும் அழுத்தத்தைக் கூட்டி.
அவனை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கவே பெண்ணிற்கு எரிச்சலாக இருக்க அவளோ “இந்த உதவிக்கு பதிலா நீ என்ன சொல்றியோ நான் அத பண்ணித் தொலையிறேன்… மூவ் அவே நொவ்” என்றாள் மரியாதை பன்மை கூட மறந்து கோவமாக.
அவள் கூறுவதை எல்லாம் உடனே செய்ய இவன் என்ன ஆத்விக்கா?
அசராமல் அதே இடத்தில், அவளை விட்டு ஒரு இன்ச் கூட நகராமல் நின்றவன், “பி மை பி, ஏ. பார் எ ஹோல் இயர்” என்றான் ஆதி. குரலிலோ அத்துணை அதிகாரம்.
போன நிமிடம் வரை தன்னை வேலையிலிருந்து விரட்டத் துடித்தவன் இந்த நொடி ஒரு வருடம் பி ஏ வாக இரு என்று சொன்னவனின் வார்த்தையில் அவனை அதிர்ந்து பார்த்தவள் ஏதோ பெரிய திட்டத்துடன் தான் இதை கூறுகிறான் என்ற அவனின் நோக்கம் புரிந்தாலும் தன் உறவுகளுக்காக அதை ஏற்றுக்கொள்ளத்தான் அவளது மூளை தூண்டியது.
ராஹித்யாவின் குழம்பிய கண்களை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன் அவளிடமிருந்து விலகி மொட்டை மாடிக் கதவினை நோக்கி நடந்துகொண்டே, “ஒன் இயர் அக்ரீமெண்ட் சைன் பண்ண ரெடியா இருந்தா மட்டும் நாளைக்கு மார்னிங் 8 ஷார்ப் என் ஆபீஸ்ல இருக்கனும். எவென் யூ மிஸ் எ மினிட் நேத்து நீ ரொம்ப பொறுப்பா பாத்த வேலைய டாடி கிட்ட சொல்லி, அவர் வாயாலே உன்ன வெளிய அனுப்ப வைப்பேன்” என்று கலக்கத்தின் கடலில் அவளை தள்ளி விட்டவன், வாழ்க்கை தனக்கு வைத்திருப்பதை அறியாது மகிழ்ச்சியாகவே நடந்து சென்றான். ஆதித்யவர்மா.
அவள் எந்த முடிவு எடுத்தாலும் அது அவனுக்கு சாதகம் தானே என்ற மிதப்பில்.
அவன் அங்கிருந்து சென்று வெகு நேரம் ஆனப் பின்னரும் கூட அவன் கூறிச் சென்ற ஒரு வருடம் அவனது பிஏ வாக இருக்க வேண்டும் என்ற வார்த்தைகளே அவளின் செவியில் ரீங்காரமிட அவளோ அங்கிருந்து எப்படி கீழே வந்தாள், தங்கையுடன் சேர்ந்து எப்பொழுது தங்கள் ஹாஸ்டலுக்கு வந்தாள் என்று கூட அறியாத ஒரு குழப்ப நிலையிலே இருந்தவள் ஆதி சொன்னபடியே மறுநாள் காலை அவன் அலுவலகத்திலும் நுழைந்திருந்தாள் ராஹி.
‘தனக்கும் ஆதிக்கும் பிடித்தமில்லை, தான் இங்கு வேலை செய்வதில் அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை என்ற விபரங்கள் எதுவும் இப்போதைக்கு தங்கள் வீட்டினருக்கு குறிப்பாக தங்கைக்கு தெரியக் கூடாது என்று எண்ணியவள், அது மிகுந்த ஆசையோடு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்ந்திருக்கும் தங்கையின் மகிழ்ச்சியை மட்டுமல்ல தங்கள் பேச்சை மதித்து தங்களை சென்னை வரை அனுப்பி வைத்திருக்கும் பெற்றோரின் நிம்மதியையும் பாதிக்கும்’ என்கிற காரணத்துக்காக மட்டுமே ஆதியின் சிடுசிடுப்பையும் தாங்கிக் கொண்டு அவனுக்கு காரியதரிசி வேலை செய்வதற்காகத் துணிந்து வந்து விட்டாள் ராஹித்யா.
இரு வாரங்கள் பழக்கப்படி அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண்ணவளுக்கு மனதுக்குள் தொடர்வண்டி ஓட்டம் சற்று அதிகமாகத்தான் இருந்தது.
அவனும் நேற்று அவள் கூறிய நான் என்ன வேணாலும் செய்யறேன் என்ற ஒற்றை வார்த்தையில் “என்ன வேணா செய்வியா? இருக்குடி உனக்கு” என்று தான் கறுவிக் கொண்டான் ஆதி.
அவள் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வேலை செய்யும் அனைவரும் வந்து பின்னர் ஆதியும் வந்து விட, அவனோ அவளின் காலை வணக்கத்தையும் கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்து கொண்டவனுக்கு அவளை காலையில் வரச் சொல்லியதே ஞாபகம் இல்லை போல.
நேற்றைக்கு முந்தைய நாள் அனைவரின் முன்னிலும் அவன் அவளைத் திட்டியிருந்ததால் அனைவரும் இப்பொழுது அவளை ஒரு மாதிரியாகப் பார்த்த வண்ணம் இருக்க, அவளும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஆதி அவனாக அழைப்பான் என்று வெகு நேரம் அவஸ்தையாக அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவளே எழுந்து சென்று ஆதியின் முன்னே நின்று விட்டாள்.
தன் பி ஏ சிவாவோடு ஏதோ முக்கிய வேலையில் இருந்தவன் தன் முன்னால் நின்ற பெண்ணவளை தலையூடு பாதம் வரை நோக்கி, “வாட்.?” என்று பார்வையாலே வினவ…
அவளோ, “நேத்து நேத்து நீங்க நீங்க சொன்னதுக்கு எனக்கு சம்மதம்” என்று சொன்னாள்.
அதற்கு ஆதியோ, “நான் நேத்து என்ன சொன்னேன்.?” என்று கேட்க… ராஹிக்கோ நேற்று மொட்டை மாடியில் அவன் பேசியது அனைத்தும் ஒரு நிமிடம் கனவோ என்று கூட தோன்றிவிட்டது.
அவள் அவனைக் குழப்பமாகப் பார்த்து, “நீங்க தான நேத்து மொட்ட மாடில்ல ஒன் இயர் உங்க பி ஏ வா இருக்கணும் சொன்னீங்க” என்று சொல்ல…
அவனோ ‘அதுக்கென்ன?’ என்பது போல் பார்த்தவன் அவளிடம் ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்தைக் கொடுத்து, “இத படிச்சிப் பாத்து கையெழுத்து போட்டுட்டு உன் சீட்டுக்கு போ” என்று அங்கே அவன் அறையின் வெளியே இருந்த ஒரு கேபினைக் கை காட்டினான்.
ஆதியின் அந்த ஏளனக் குரலே, “இனிமேல் நீ என் அடிமை” என்று சொல்வது போல் இருக்க அவளோ, ‘கடவுளே என் மேல உனக்கு அப்டி என்ன கோவம் திரும்ப திரும்ப இவன்கிட்டயே மாட்டி விடுறியே.? நா இந்தச் சென்னைல கால் வச்சதுல இருந்தே எரிஞ்சு எரிஞ்சு விழுறான் இப்போ பி ஏ ன்னு வேற சொல்லிருக்கான் என்னவெல்லாம் பண்ணுவானோ?’ என்று உள்ளூறப் புலம்பியவள்…
ஆதி கொடுத்த அந்த முழு நீள காகிதத்தில் இருந்த ஆங்கில எழுத்துக்களை ஒன்றும் புரியாமல் பேருக்கு ஆராய்ந்து விட்டு, “ராஹித்யா யுவராஜ்” என்ற தன் கையெழுத்தை அதில் பதித்து அவனிடம் நீட்டியவள்… அவனின் இறுக்க மூடிய அதரங்களைப் பார்த்து “முசுட்டு மேங்கோ” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் பெண்.
ராஹி அங்கிருந்து சென்றதும் மீண்டும் அலுவலக வேலையில் மூழ்கிய ஆதித்யா சில கொட்டேசன் பேப்பர்களை தயாரித்து வைத்தவன் அதை சிவாவிடம் கொடுத்து, “இத சீக்ரட் பைல்ல சேவ் பண்ணு சிவா, இன்னும் போர் டேஸ்குள்ள பைனல் அமௌன்ட் டிக்லர் பண்ணி அனுப்பனும்” என்றவன் “இந்த டெண்டர் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு தான?” என்றும் வினவ
ஆதியின் கூற்றில் அவனை நோக்கி புன்னகைத்த சிவாவோ, “நீங்க அமௌன்ட் கோட் பண்ணிருக்கப்போ டெண்டர் நமக்கு கிடைக்காம போகுமா பாஸ், நிச்சயம் நமக்குத்தான் கிடைக்கும்” என்றான் அந்த விசுவாசம் மிகுந்த வேலைக்காரன்.
பதிலுக்கு ஆதியும் ‘இப்பொழுது சிரித்தானா என்ன?’ என்று சந்தேகிக்கும் வகையில் ஒரு புன்னகையை உதிர்த்து நெட்டி முறித்தவனுக்கு ஏதாவது குடித்தால் தேவலை என்று தோன்றியது போலும்.
அவனோ, “சிவா ஒரு கப்” என்று தொடங்கியவன் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் ராஹியின் இன்டெர்காமிற்கு அழைத்து, “ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வா” என்று சொல்ல…
அதற்கு அவளோ, “என்னது நா காஃபி போடணுமா.?” என்று கூவினாள்.
அதற்கு ஆதியும், “ஆமா நீதான்… பின்ன இதுக்காக வில்லேஜ்லயிருந்து உங்க அப்பத்தாவையா கூட்டிட்டு வர முடியும்?” என்று கேட்க…
ராஹியும், “எனக்கு அப்பத்தானா அவங்க உங்களுக்கும் அப்பத்தாதான்” என்று மூக்கைச் சுளித்தவள் தொடர்ந்து, “நா என்னோட யுவிப்பாக்கு கூட இதுவரை காபி போட்டுக் கொடுத்தது இல்லை” என்றும் விடாமல் கூறியவளுக்கு அவன் காஃபி போடச் சொல்லியதை விட தான் போடும் கேவலமான காபியை குடித்தால் அதற்கும் சேர்த்து அவன் மண்டகப்படி கொடுப்பானே என்ற எண்ணம் தான் மேலோங்கி நின்றது.
எதிர் முனையில் இருந்தவனோ, ‘ஒரு காஃபிக்கு எவ்ளோ ஆர்க்யூ பண்றா’ என்று உள்ளூற சலித்தவன்
“ஹேய் டெவில் உனக்கு பி ஏ க்கு மீனிங் தெரியுமா இல்லியாடி? பி ஏ ன்னா பர்சனல் அசிஸ்டன். எனக்கு பெர்சனலா என்னென்ன தேவைப்படுதோ அதெல்லாம் நீ செய்யணும் அதுக்கு ஓகே சொல்லித்தான் சைனும் பண்ணிருக்க நீ. ஐ வாண்ட் தட் காஃபி இம்மிடியன்ட்லி அப்டி உனக்கு இந்த ஜாப் பிடிக்கலைன்னா இப்போவே ரிசைன் பண்ணிட்டுக் கிளம்பு” என்று நீளமாகவும் எரிச்சலாகவும் மொழிந்த ஆதி இன்டர்காமை அணைக்க.
ஆதியின் பேச்சில் எரிச்சலுற்றவளும் வேறு வழியில்லாமல் எழுந்து அருகில் இருந்த காஃபி தயாரிக்கும் மேடைக்குச் செல்ல அங்கே இருந்தது என்னவோ மின்சாரத்தில் இயங்கும் ஒரு வெந்நீர் குடுவை மட்டுமே.
ஆதியின் அலுவலகத்திற்க்கு வரத்தொடங்கியிருந்த இரண்டு வாரங்களில் காஃபி தயாரிக்கும் இடம் எது என்று அறிந்து கொண்டிருந்தவள் இப்பொழுது அங்கு வெந்நீர் குடுவை மட்டும் இருப்பதைப் பார்த்து “இங்க பாலும் இல்ல. அத காயவைக்க அடுப்பும் இல்ல. காபிதூள், சக்கர டப்பா எதுவும் இருக்க மாறி தெரியல்ல. எப்டி காபி கலக்குறது?” என்று புலம்பியவாறே ஆதிக்கு அழைத்தவள் அதை அவனிடமே கேள்வியாகவும் கேட்க…
அவனோ, “ஏன்டி மில்க், ஸ்டவ் இதெல்லாம் வச்சுருக்க இதென்ன ஹோட்டலா? விட்டா பில்டர் கூட கேப்ப போல” என்று சீறியவனின் சீற்றத்தில் அந்தப் புறம் ராஹியோ, “இப்ப என்ன கேட்டேன்னு இந்த மேங்கோ இப்டி கத்துது” என்று மீண்டும் புலம்ப…
ஆதியை நோக்கி வந்த சிவாவோ அவனிடம், “சார் அவங்க சென்னைக்கும், இந்த வேலைக்கும் புதுசுதான அதுவும் கிராமத்துல இருந்து வேற வந்துருக்காங்க, நா வேணா அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன் சார்” என்று இழுத்தான்.
சிவாவின் பேச்சிற்கு ஆதி எந்த பதிலும் கூறாமலே தன் கைபேசியில் மூழ்க அவனோ ஆதியின் மௌனத்தையே சம்மதமாகக் கொண்டவன் ராஹியிடம் விரைந்து அங்கிருந்த வெந்நீரில் பால்பவுடர், சர்க்கரை, மற்றும் காபி பொடிசல் பாக்கெட்டுக்களைக் கலந்து எப்படி உடனடி காபி தயாரிப்பது என்றும் கற்றுக் கொடுத்தான்.
அவன் செயல்களைப் பார்த்திருந்த ராஹி, “அய்யோ சூப்பர்ணே பால் காச்ச தேவையில்ல, அடுப்பு கூட இல்ல இப்டியும் காஃபி கலக்க முடியுமா?” என்று ஆர்ப்பரிப்பு செய்தவளைப் பார்த்து சினேகமாக புன்னகை சிந்திய சிவா…
“ஆமா மேடம் இங்க சிட்டில பெரும்பாலும் இப்படித்தான், எல்லாமே ஈஸியா இன்ஸ்டெண்டா ரெடி பண்ணலாம்” என்றவன் காபிக் கோப்பையை அவளிடம் நீட்டி “இந்தாங்க நீங்களே கொண்டு போய் சார் கிட்ட கொடுங்க” என்றும் சொல்ல அவளும் வேண்டா வெறுப்பாகவே ஆதியின் முன்னால் அந்த காபிகோப்பையை வைத்தாள்.
ஆதியும் அவளின் கூம்பிய முகத்தைப் பார்த்தே அவளுக்கு இந்த வேலைகளில் விருப்பமில்லை என்று அறிந்து கொண்டவன் அவளை சீண்டுவதற்காகவே அடுத்தடுத்த நாட்களிலும் அவளுக்கு அது போன்ற வேலைகளே கொடுக்க ராஹியோ இப்பொழுது சிறப்பாக காபி தயாரிக்கப் பழகியிருந்தவள் அதை அவனிடம் கொடுக்கும் பொழுதில் மட்டும் தன்னுடைய வட்ட விழிகளால் அவனை நோக்கி வாள் வீசித்தான் சென்றாள்.
ராஹியின் வாள் வீச்சிற்கு ஆதியும் சொல் வீச்சை பதிலாகக் கொடுத்தாலும் எப்பொழுதும் உணவுப் பொருளை வீண்விரயம் செய்யப் பிடிக்காதவனோ
இப்பொழுது ஒரு நாளைக்கு பல முறை காபி குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியிருக்க அவன் பி ஏ சிவாவோ, “பாஸ் என்ன இந்த பொண்ணுகிட்ட மட்டும் ரொம்ப வித்தியாசமா பிகேவ் பண்றாரு” என்று அவனை ஆச்சர்யமாகத்தான் பார்த்தான்.