எதிரே அமர்ந்து சுழல் நாற்காலியில் ஆடிக்கொண்டே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவனை ராஜசேகரும் சுதர்சனும் வித்தியாசமாய் பார்த்தனர். ராஜசேகர் பக்கவாட்டாய் ஷைலஜாவை பார்க்க, அவர் கண்களில் தவிப்பை கண்டவள், ஒருமுறை பூபதியை பார்த்துவிட்டு பின், அவரிடம் தனியே வருமாறு தலையசைத்து நகர்ந்தாள்.
அந்த அறையிலேயே சற்று தள்ளி நின்ற ஷைலஜா, “என்ன ப்ரோப்ளம் சார்?” என்றாள்.
“என் பொண்ணு சம்யுக்தாவை காணலை மேடம்! கம்ப்ளைன்ட் பண்ண வந்தா இவர் என்ன இப்படி லெதாஜிக்கா பேசுறாரு!?” என்ற ராஜசேகர் திரும்பி பூபதியை பார்த்தார்.
“அவர் அப்டிதான்!” என்று ஒருவார்த்தையாய் முடித்த ஷைலஜா, “எப்போ இருந்து காணலை?” என்றதும், தன் மகள் சென்ற இடத்தையும், காரணத்தையும் சொன்னவர், “கூடவே என் மருமகனையும் காணலை! என் பொண்ணு கிட்ட ஜி.பி.எஸ் இருக்கு, அது அந்த காட்டை காட்டுது! அங்க போறதா சொல்லி தான் போனா… ஆனா, அவக்கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை! ஆள் விட்டு தேட ட்ரை பண்ணேன், பாரஸ்ட் கார்ட்ஸ் அலோவ் பண்ணல” என்றார்.
அத்தனையும் கேட்ட ஷைலஜாவுக்கு கோபம் தான் வந்தது. ஏதோ ஒரு காட்டுக்கு ஒருவன் பின்னே செல்கிறேன் என்று வந்து நின்ற மகளை புத்தி சொல்லி வீட்டில் இருத்தாமல் அவள் போக்கிற்கு எங்கோ அனுப்பிவிட்டு இப்போது வந்து இங்கே நின்றால், என்ன செய்ய வேண்டுமாம் இவருக்கு?
காடு வரை சென்று தேடி பார்க்க முயன்றுவிட்டு முடியவில்லை என்றதும் தான் இங்கே வந்திருக்கிறார்! பணபலம் இருந்தால், என்ன கிறுக்குத்தனம் வேண்டுமானாலும் செய்துபார்க்கலாம் போல!? என்று தோன்றியது அவளுக்கு.
“இப்போ நாங்க என்ன செய்யணும்ன்னு எதிர்ப்பார்க்குறீங்க சார்?” என்று முகத்தில் எதையும் காட்டாமல் வினவினாள்.
“காட்டுக்குள்ள சர்ச் பண்ண பர்மிஷன் வேணும்! கமிஷ்னர் வரதராஜன் இருப்பாருன்னு நினைச்சு தான் நான் இங்க வந்தேன்! எனக்கு இவரை பார்த்தா நம்பிக்கையே இல்லை! நான் நேரா ஐ.ஜி’யை பார்த்து பேசிக்குறேன்!” என்றார் ராஜசேகர்.
ஷைலஜா பேசும்முன்னே, “நீங்க நேரா அங்க போய் நில்லுங்க, அவரு நேரா இங்க வந்து நின்னு, ‘எனக்கு ரொம்ப வேண்டியவரு… பார்த்து செஞ்சுக்குடு’ன்னு கெஞ்சட்டும்!” என்றான் பூபதி. அவன் எப்போது அலைபேசியில் பேசி முடித்தான், எப்போது இவர்கள் பேசியதற்கு செவிமடுத்தான் எதுவுமே புரியவில்லை அவருக்கு.
ராஜசேகர் ஒன்றும் பேசவில்லை. சுதர்சனத்தை பார்த்து, “நீங்க யார்?” என்றான் பூபதி.
திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த பூபதி, “செத்துப்போனவனை பத்தின ஃபுல் பையோகிராஃபி வேணுன்னு கேட்டேனே என்னாச்சு?” என்றான். விக்கி திருதிருவென முழிக்கவும், “அவன் பையோகிராஃபி கேட்டா, இவர் கோரியோகிராஃபி பத்தி சொல்லிட்டு இருக்க! போ, போய் சொன்ன வேலையை முதல்ல செய்! போ!” என்றான், இழுத்து வைத்த பொறுமையுடன்.
ஒரு முக்கிய அமைச்சரின் மகன் இறந்த வழக்கை தான் இப்போது மும்மரமாய் விசாரித்துக்கொண்டிருந்தான் ரகுனந்தபூபதி. இந்த வழக்கிற்காகவே இவனை பிரத்யேகமாக வரவழைத்திருந்தனர். இதில் அவனுக்கு உதவியாக இருக்க தான், ஷைலஜாவும், விக்கியும்!
விக்கி சென்றதும், “வணக்கம் சார், நான் சுதர்சன்! டான்ஸ் மாஸ்டர்! என் ஒரே பொண்ணு பவித்ராவை காணோம்!” என்றார்.
“என்ன? எங்கே? எப்போது? ஏன்? எப்படி?” என்ற பல கேள்விகளை கேட்டு பதில் வாங்கிக்கொண்டிருந்தான் பூபதி.
“சோ, பொண்ணுக்கு மேரேஜ்’ல விருப்பம் இல்லாம ஓடிட்டாங்க! அப்படியா?” என்றான் அவன்.
‘இல்லை’ என்று மறுக்கவெல்லாம் இல்லை அவர். உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டார்.
“மேரேஜ் ‘கால் ஆஃப்’ பண்ண சொல்லி ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணா! நான் கேட்கல! அதுல தான் கோச்சுக்கிட்டு போயிருப்பா!” என்றவர், “ஆனா, அவளோட சேர்த்து என் மாப்பிள்ளையும் காணோம்! நைட் மூணு மணிக்கு முன்னாடியே சேனல் செட்டை விட்டு கிளம்பிட்டான்னு சொல்றாங்க! ஆனா, அவனையும் இப்போ காணோம்!” என்றார்.
கேட்டவனோ, “சோ, யூ ஆர் சஸ்பெக்டிங் யுவர் ‘வுட் பி சன் இன் லா’?” என்றிட, “இல்ல சார்! அவன் நல்ல பையன்! அவன் மேல சந்தேகம் இல்ல… ஆனா, ரெண்டு பேரையும் காணலங்கும்போது யோசனையா இருக்கு!” என்றார்.
“உன் பொண்ணு மேல ரொம்ப லவ்வோ? அந்த பையனுக்கு!?” என்று கேட்க, “பிடிக்கும் சார்!” என்றார் சுதர்சன் ஒரே வார்த்தையாய்.
“ஒருவேளை உங்க பொண்ணு கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுல கோபப்பட்டு அவனே எதாவது செஞ்சுருந்தா?” பூபதி வினவியதுமே, “இல்ல சார்!” என்று மறுத்தவர், “பவிக்கு இதுல விருப்பம் இல்லன்னு தெரிஞ்சதும், என்கிட்ட வந்து கல்யாணத்தை நிறுத்திடலாம், அவளுக்கு பிடிக்காம பண்ண வேண்டாம்ன்னு அவனே சொன்னான்! பிறகு, நான் தான் அவனையே கன்வின்ஸ் பண்ணேன்!” என்றார் சுதர்சன்.
“ம்ம்ம்!” என்று யோசனையாய் இழுத்த பூபதி, தன் நாற்காலியில் ஆடிக்கொண்டே அவர் சொன்ன தகவல்களை நூலில் கோர்க்க, அப்போது ராஜசேகர் ஐ.ஜி’யை தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
“சார், இம்மீடியட்’டா டிபார்ட்மென்ட்’லையே ரொம்ப எப்ஃபிஷியன்ட்டான ஆளுக்கிட்ட சொல்லி எப்படியாவது என் பொண்ணை கண்டுப்பிடிச்சு குடுங்க சார்!” என்றார் லேசாக பூபதியை முறைத்தபடி. மறுபுறம் நம்பிக்கையாய் உறுதி கொடுக்க, போனை வைத்தவர், சற்று மிடுக்குடன் அங்கிருந்த நாற்காலில் சென்று அமர்ந்தார்.
மறுநிமிடம் அங்கிருந்த லேண்ட்லைன் ஒலித்தது. சிறு சிரிப்புடன் அதை ஸ்பீக்கரில் போட்டவன், “ரகுநந்த பூபதி ஸ்பீக்கிங்!” என்று சொல்ல,
“நான் ஐ.ஜி பேசுறேன் பூபதி! ஐ நீட் எ ஃபேவர் ப்ரம் யூ!” என்றவர், ராஜசேகருக்காக இவனிடம் உதவி கேட்க, ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த ராஜசேகருக்கு குன்றலாகி போனது.
“உன்னை விட்டா யாரு இருக்கா பூபதி! சின்ன கேஸ் தான், எனக்காக முடிச்சு குடு!” என்றவர் பேசிவிட்டு வைத்துவிட்டார்.
சிரிப்பு மறையாமல், “ஷைலுமா…!?” என்றான்.
“சார்…!”
“இவர்கிட்ட காணாம போன ரெண்டு பேரோட மொபைல் நம்பரும் வாங்கி ட்ரேஸ் பண்ண குடுத்துடு!” என்றான். அதே போல ஷைலஜாவும் அவரிடம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகரப்போக,
“ஒரு நாள் ஆகும்ன்னு சொல்லுவான்! ஒரு மணி நேரத்துல குடுக்கலன்னா, பூபதி சார் நேர்ல வருவார்ன்னு சொல்லு!” என்றான் கணினி திரையை பார்த்தபடி.
சிரிப்பு வரப்பார்க்க, அதை மறைக்கவே வேகமாய் அங்கிருந்து சென்றாள் ஷைலஜா. சுதர்சனம் வெளியே இருந்த இருக்கையில் அமர்த்திவைக்கப்பட்டார்.
ராஜசேகரிடம் இப்போது விசாரணை நடந்தது. வித்தகனை பற்றி சொன்னவர், அவன் நண்பனோடு செல்வதாக இருந்த திட்டத்தை சொல்ல, “அந்த பிரண்ட் எங்க? அவனை வர சொல்லுங்க!” என்றான் அவன். இப்போது ராஜசேகரும் வெளியே அமர்ந்துக்கொண்டார்.
ஒரு மணி நேரம் முடியும் தருவாயில் ‘நிவாஸ்’ என்பவன் வெளிறிய முகத்துடன் அங்கு வந்து சேர்ந்தான்.
வித்தகனும் அவனும் சேர்ந்து காட்டுக்குள் போக இருந்த திட்டத்தை அவன் வாயாலேயே ஒருமுறை கேட்டறிந்தவன், அவன் போகாததற்க்கான காரணத்தை கேட்க, “நானும் போனேன் சார். ஆனா, வண்டி வழில நின்னுடுச்சு! சரி பண்றதுக்குள்ள விடிஞ்சுடுச்சு! பாரஸ்ட் கார்ட்ஸ் வந்துட்டாங்க!” என்றான் தலைகுனிந்து.
ஒன்றுமே சொல்லாமல் அவனை முறைத்துக்கொண்டு பூபதி தன் அறையை விட்டு வெளியே வர, அவனை கண்டதும் சுதர்சனும் ராஜசேகரும் எழுந்து நிற்க, சரியாய் ஷைலஜாவும் வந்து சேர்ந்தாள்.
“ட்ரேஸ் பண்ணியாச்சா?” என்றான்.
“எஸ் சார்! ரெண்டு பேரோட மொபைலும் ஒரே இடத்தை தான் காட்டுது!” என்றவள் சொல்ல, சுதர்சனத்தை பார்த்தவன், “எங்க?” என்றான்.
“நன்மங்கலம் காட்டுப்பகுதி!”
விழி விரித்த ராஜசேகர், “என் பொண்ணும் அங்க தான் இருக்கா!” என்றார்.
இப்போது வியப்பாய் விழி விரித்த பூபதி, “நாலு பேரும்… ஒரே இடத்துல…! இண்ட்ரஸ்டிங்!!!” என்றான்.
கதவை திறந்துகொண்டு வேகமாய் வந்தவள், “பயமா இருக்குன்னு சாமி பாட்டு பாட சொன்னா, என்ன பண்ற நீ?” என்றாள் கோபமாக.
“டக்குன்னு சாமி பாட்டு கேட்டா நான் எங்க போக? இது தான் நியாபகம் வந்துச்சு!” என்றான் அவன் அசட்டையாய்.
“உன் அலும்புல பேய் பயம் கூட இல்லாம போய்டுச்சு!” என்றவள், அந்த கழிவறையின் கதவை நன்றாக மூடிவிட்டு வந்தாள்.
நால்வருக்கும் மீண்டுமொரு முறை கதவை திறக்க முயற்சித்து பார்த்தாள் என்னவென்று தோன்றியது!!
வீட்டின் அத்தனை புறத்திலும் அகண்ட யன்னல்கள்! அவற்றை திறக்க முடிகிறதா என்று முயற்சித்து பார்க்கவும் தோன்றியது அவர்களுக்கு. ஆளுக்கொரு இடமாய் போகாமல், ஒன்றாக சென்று, ஒரு யன்னலை திறக்க பார்த்தனர். ஒரு நூல் கூட அசையவில்லை. துருப்பிடித்து இறுகியிருந்த தாழ்ப்பாள்கள் அசைந்துக்கொடுக்காது இருக்க, கதவுகளை திறக்கும் முயற்சியை கைவிட்டனர். கதவை திறக்க முடியவில்லை என்றாலும் அதை மூடியிருந்த துணியை விலக்கலாம் என்று எண்ணினர்.
யன்னலை மூடியிருந்த துணி கம்பிகளோடு ஒட்டிக்கொண்டதை போல அசையாமல் இருக்க, அதை பிரிக்கவே அதிக சிரமம் அவர்களுக்கு.
“என்கிட்ட சிஸ்ஸர் இருக்கு!” பவி சொல்ல, “என்கிட்ட கூட தான் இருக்கு, ஆனா லைட்டர் இல்லையே!” என்றான் பிரஷாந்த். மூவரும் அவனை முறைக்க, பவி கொடுத்த கத்திரிக்கோல் வைத்து அந்த துணியை வெட்ட ஆரம்பித்தான் வித்தகன்.
சம்முவிடம் இருந்த கத்தி கொண்டு பிரஷாந்த் ஒருபக்கம் வெட்ட, அவர்கள் முயற்சியை வீணடிக்காமல் அந்த கனத்த துணி கிழிந்தது. உற்சாகமாய் அந்த துணியை முழுவதும் நீக்கி வீசியவர்களுக்கு, அந்த கண்ணாடி யன்னல் வழி வெளிப்புறம் மிக நன்றாக தெரிந்தது.
ஆனால், வெளிச்சம் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை! அதேபோல மீதமிருந்த யன்னல் துணிகளையும் கிழித்தெறிந்தனர். மேல் மாடியில் செய்ததை போலவே கீழ்த்தளத்தின் யன்னல் துணிகளையும் விளக்க, ஏதோ ‘விடுதலை’யே கிடைத்ததை போல உற்சாகம் அவர்களுள்.
அதே உற்சாகத்தோடு உலாவினர். இரு ஆட்கள் தாராளமாய் அமரக்கூடியதாய் இருந்த அந்த யன்னல்கள் ஒன்றில் சம்முவும் ப்ரஷுவும் அமர்ந்து என்னென்னவோ வம்பிழுத்து பேசி அடித்துக்கொள்ள, அவர்களை சின்ன சிரிப்புடன் பார்த்துக்கொண்டே மற்றொரு யன்னலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வித்தகன்.
அவனருகே இருந்த வெற்றிடத்தில், மௌனமாய் வந்து அமர்ந்த பவித்ராவின் பார்வையும் வித்தகனை தொடர்ந்தது.
இப்போது வித்தகன் பார்வை அவர்களை விடுத்து பவித்ராவின் மேல் விழுந்தது.
“ஏன் அப்டி சொல்ற? அவ்ளோ கொடுமை பண்ற பொண்ணா நீ!?” சிரிப்பை அடக்கி அவன் கேட்டதும், போலியாய் முறைத்தவள், “அவரால பேசாம இருக்கவே முடியாது! என்னால தேவையில்லாம பேச முடியாது! எங்க ரெண்டு பேருக்கும் கண்டிப்பா ஒத்து வராது!” என்றாள் அயர்வாய்.
“இதெல்லாம் ஒரு காரணமா? எப்பவுமே எதிர் எதிர் இயல்பு இருக்கவங்க தான் சேருவாங்க! அதுதான் இன்ட்ரஸ்டிங்’காவும் இருக்கும்! டோன்ட் யூ க்னோ தட்?” என்றான் வித்தகன்.
“ஐ க்நொவ்! பட் திஸ் பார்முலா வோன்ட் வொர்க் எவ்ரிடைம்!” என்றவள், “என் அப்பாக்கு டான்ஸ் தான் எல்லாமே! என் அம்மாக்கு டான்ஸ்’ல பெரிய ஆர்வம் இருந்தது இல்ல… அம்மாக்கு மீடியா, லைம்லைட் எதுலயும் விருப்பம் இல்ல… அவங்க ஆசையே வேற! ரொம்ப நல்ல வரைவாங்க! அம்மா வரைஞ்சதெல்லாம் ஒரு ரூம் புல்லா அடுக்கி வச்சுருக்கேன்! அவங்களுக்கு ஒரு ஆர்ட் எக்சிபிஷன் கண்டெக்ட் பண்ணனும், அங்க அவங்க ஆர்ட்ஸ் எல்லாத்தையும் வைக்கணும்ன்னு ரொம்ப ரொம்ப ஆசை!” என்றவள், விரக்தியாய் சிரித்து,
“இல்ல… எங்க அப்பா மாதிரி நான் இருந்துடுவேனோன்னு பயப்படுறேன்!” என்றவளை வியப்பாய் பார்த்தான் அவன்.
“எனக்கு டான்ஸ்ல கொஞ்சமும் விருப்பம் இல்ல, ஆசையா பார்க்க கூட செய்ய மாட்டேன்! அப்பாவுக்கே நான் இப்படி இருக்கிறது வருத்தம்! அதனால தான் வரப்போற மாப்பிள்ளை அவர் பீல்ட்’டா இருக்கனும்ன்னு பிரியப்பட்டார்!
தன்னோட தொழிலை, திறமையை, கனவை தன்னோட மனைவி புரிஞ்சுக்கணும், அதுக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு நினைக்கிறது இயல்பு தானே!? ஆனா, என்னால முடியாது!
அவர் குணத்துக்கும் எனக்கும் பொருந்தாது!
அவர் தொழிலுக்கும் எனக்கும் பொருந்தாது!
அவர் இயல்புக்கும் எனக்குமே பொருந்தாது!
இதை அவர் புரிஞ்சுக்க மாட்டேங்குறார்! கல்யாணத்தோட வாழ்க்கை முடியாது, அங்க தான் ஆரம்பிக்கும்! எனக்கு இப்போவே புரியுது, இவருக்கு தகுந்த மாதிரி என்னால மாற முடியாதுன்னு! அதனால தான் ‘நோ’ சொல்றேன்!” என்றாள்.
வித்தகன் அவள் சொன்னதை உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருக்க, “நான் என்னை ரொம்ப நல்லவளா காட்டிக்கனும்ன்னு இதை சொல்லல! இதுல என்னோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு! என் தொழிலுக்கு இன்டலக்சுவல் பர்சொனாலிட்டி பார்ட்னரா கிடைச்சா, எனக்கு ரொம்ப சப்போர்டிவ்வா இருக்கும்!” என்றாள் சிறிய குரலில்.
“அப்போ பிரஷாந்துக்கு அறிவில்லன்னு சொல்றியா?” சிரித்துக்கொண்டே அவன் கேட்க, “நான் எதிர்ப்பார்க்குற அளவுக்கு இல்ல தான்!” என்றாள் அவள்.
அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகையை தொடர, “ஸீ… ஐ மே சவுன்ட் ரூட்! ஆனா, யோசிச்சு பார்த்தா நான் சொல்றதுல தப்பு இல்லன்னு கண்டிப்பா புரியும்! கல்யாணங்குற ஒரு கமிட்மென்டுக்குள்ள போயிட்டு, அப்பறம் சரிவரல, ஒத்துவரலன்னு பேக் அடிக்கிறது அசிங்கம்! எல்லாம் பார்த்து, மனசுக்கு பிடிச்சு செய்ற கல்யாணமே பெயில் ஆகுறப்போ, நான் பிடிக்கலன்னு சொல்றேன்… கட்டாயப்படுத்தி கட்டி வச்சு என்ன சாதிக்க போறாங்க சொல்லுங்க!?” என்றாள்.
“கூல்… ஐ ஃபீல் யூ!” (எனக்கு புரியுது!) என்றான் வித்தகன்.
அடுத்துமே மௌனம் தான் அங்கே!!!
அப்போது பேசிக்கொண்டிருந்த இருவரில் சம்மு ‘ஆஆஆ’வென கத்த, வித்தகன் என்னவோ என்று எட்டிப்பார்க்க, “போடா எருமக்கிறுக்கு” என்று பிரஷாந்த் தலையில் கொட்டிக்கொண்டிருந்தாள் சம்யுக்தா. இப்போது அவன் தலையை பிடித்துக்கொண்டு கத்த, “என்ன சம்மு பண்ற?” என்றான் வித்தகன் அதட்டலாய்.
“பாருங்க ஜி இவனை… பார்க்க நாய் மாறியே இருக்கும், ஆனா, மூணு கால் தான் இருக்கும்… என்ன விலங்குன்னு கேட்டு என்னை இவ்ளோ நேரம் யோசிக்க வச்சுட்டு, கடைசில ‘நொண்டி நாய்’ன்னு கேவலமா கடிக்குறான்!” என்றாள் மூக்கை விடைத்துக்கொண்டு!
வித்தகனுக்கும் பவித்ராவுக்கும் மெலிதாய் சிரிப்பு எழ, “ஏன் நான் சொன்ன பதில்ல என்ன குத்தம் இருக்கு சொல்லு பார்ப்போம்!” என சண்டைக்கு நின்றான் பிரஷாந்த். ஆரம்பமானது அவர்கள் சொற்போர்!!!
அவர்கள் அடித்துக்கொள்வதை பார்க்கவே சிரிப்பாக வந்தது. நீண்ட புன்னகையுடன், “சம்மு எப்பவும் இப்படி தானா? உங்கக்கிட்ட பேசிட்டே இருப்பாளா?” என்றாள் பவி.
வித்தகனின் சிரிப்பில் இப்போது கஞ்சத்தனம் குடிக்கொண்டது.
“ம்ம்ம்!” என்று மட்டும் சொன்னான்.
“எத்தனை வருஷமா லவ் பண்றீங்க? முதல்ல யாரு ப்ரொபோஸ் பண்ணது?” பவி ஆர்வமாய் கேட்க, வித்தகன் சொல்ல தயங்கினான். ஏதோ இயல்பாய் பேசிவிட்டவள், அவன் தயங்குவதை கண்டதும், “சாரி… ஒரு க்யுரியொசிட்டில கேட்டுட்டேன்!” என்றாள் சங்கடமாய்.
ஒன்றும் சொல்லாமல் சில நொடிகள் வேறெங்கோ பார்த்தவன், “அவ தான் முதல்ல சொன்னா!” என்றான், மெல்லிய குரலாய். பவித்ரா மேற்கொண்டு அவனை துருவாமல் புன்னகைக்க, “நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்! அப்பறம் நாலு வருஷம் முடிஞ்சு தான் அவக்கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணேன்!” என்றான்.
வியப்பில் அவள் புருவங்கள் மேடேற, “நாலு வருஷம் வெயிட் பண்ண வச்சீங்களா?” என்றதும், லேசாக சிரிப்பு போல அவன் இதழ்கள் வளைந்தது.
பிரஷாந்திடம் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த சம்முவை கண்டு, “அவளுக்கு என் மேல பயங்கர க்ரஷ்! ஒரு பாட்டுல வரும்ல? ‘அவ தும்மல் அழகுடா, பிம்பிள் அழகுடா, சோம்பல் அழகுடா’ன்னு? அந்த மாதிரி நான் என்ன செஞ்சாலும் சைட் அடிப்பா!” என்றவன் பேச்சில் மெலிதான கர்வம் எட்டிப்பார்த்தது.
ஒரு ஆணுக்கு பெண் தன்னை ஆராதிப்பது கர்வம் கொடுக்காமல் போய்விடுமா என்ன?!
“ம்ம்ம்! அவ லவ் ஓகே! உங்க லவ் எப்படி?” பவி கேட்டதும், அவன் முகத்தின் வெளிச்சம் மங்கி ஒளிர்ந்தது.
“அவ மேல எவ்ளோ லவ் இருந்துருந்தா நாலு வருஷம் ஆகி கூட விடாம போய் ஓகே சொல்லிருப்பீங்க!?” என்று அவனை பற்றிய நல்ல எண்ணத்தில் பவி பெருமையாய் கேட்க, அவன் ஒன்றுமே சொல்லவில்லை.
“ஷி இஸ் வெரி லக்கி!” பவி உணர்ந்து சொல்ல, “நோ!” என்றான் வித்தகன் உடனடியாய்.
அவள் கேள்வியாய் பார்க்க, “ஷி இஸ் நாட்!” என்றவன், “என்னோட குற்றவுணர்ச்சி தான் என்னை இம்சை பண்ணுது” என்றான்.
“புரியல!”
“நான் இஞ்சினியரிங் படிச்சாலும் எனக்கு ஆர்வம் எல்லாம் டைரெக்ஷன்’ல தான்! நிறைய ஸ்க்ரிப்ட் வச்சுருக்கேன்! படிப்புக்கேத்த வேலை செஞ்சுட்டே, சைட்ல சினிமா சான்ஸ்’க்கு ரொம்பவே ட்ரை பண்ணேன்! நாலு வருஷமா ஒண்ணுமே கிடைக்கல! வீட்லயும் எனக்கு சப்போர்ட் இல்ல… இனி இது நமக்கு சரி வராதுன்னு நான் ஒதுங்கிக்க நினைச்சப்போ தான், சம்முவை பார்த்தேன்!” என்றவன் சில நொடிகள் நிறுத்தினான்.
“அவ பேக்க்ராவுன்ட் என்னனு எனக்கு அதுவரைக்கும் தெரியாது! அவ அப்பா யாருன்னு தெரிஞ்சப்போ பயங்கர ஷாக்! அப்போ என் பிரண்ட் ஒருத்தன் மூலமா படத்துல பாட்டு எழுத வாய்ப்பு வந்துச்சு! வந்ததை விடக்கூடாதுன்னு செஞ்சேன்!
அதுக்காக பேஸ்புக்’ல எனக்கு விஷ் பண்ணிருந்தா சம்மு! அப்போ தான் என் மூளை கேவலமா ஒரு விஷயம் யோசிச்சுது! என்னோட சுயநலத்துக்காக ரொம்ப ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டேன்!” என்றவனின் முகம் கசங்கிப்போனது.
“சம்மு சிங்கிள்ன்னு தெரிஞ்சதும், அவளை நேர்ல பாத்தேன்… ப்ரொபோஸ் பண்ணேன்! அவ ரொம்ப சந்தோசமா அவங்க அப்பாக்கிட்ட கூட்டிட்டு போனா! நான் நினைச்ச மாதிரியே அவர் எனக்கு படம் எடுக்க வாய்ப்பு கொடுத்தாரு! ஆனாலும், என் மனசாட்சி ரொம்ப குத்துச்சு! அதை இப்போதைக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டு, அவர் பேரை வச்சு நிறைய இடத்துல ஈசியா நுழைஞ்சேன்! நிறைய பேரை பாத்தேன்! இப்போ ஒரு படம் அமைஞ்சுருக்கு!” என்று முடித்தான்.
பவியால் அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை.
“அப்ப லவ்!?” அவள் கேட்க, “தெரியல!” என்றவன், “அவளை பாக்கும்போதெல்லாம் என்னோட சுயநலம் தான் நியாபகம் வருது! குற்றவுணர்ச்சியாக்குது! அதைத்தாண்டி அவக்கிட்ட உரிமையா என்னால போக முடியல பவி!” என்றவன் முகத்தை இருகைகளாலும் அழுந்த மூடிக்கொண்டான்.
அவன் செய்தது தவறு தான் என்று திட்டவட்டமாய் தெரிந்தாலும், ஏனோ அவன் மீது கோபமோ, வேறுவித எண்ணமோ அவளுக்கு வரவில்லை. உண்மையில், அவள் மனதுக்குள் மெல்லிய ஆசுவாசமும், விடுதலையும் தோன்ற, அது ஏன் என்று தான் அவளுக்கு பிடிபடவில்லை. இருவரும் வார்த்தைகள் இன்றி தங்களை பற்றி சுய அலசலில் மூழ்கினர்.