மறுநாள், காலை கண் விழித்த வேலு கண்டது, மணிமாறன் வீட்டில் இருக்கும் தன்னை தான். தான் எவ்வாறு இங்கே என்று யோசித்தவனின் நினைவடிக்கில், நடந்தது அத்தனையும் ஒவ்வொன்றாக வந்து விழ பதறிபோனான். நன்றாக எழுந்து அமர்ந்தவனுக்கு வெளியில் செல்லும் துணிவே வர வில்லை. அசிங்கம், கேவலம் ஒரு பக்கம் இருக்க. திரும்ப எவ்வாறு வீடு செல்வது, மனைவி சும்மா விட மாட்டாள்! வார்த்தைகளில் உண்மை அவசியம் என்று எண்ணுபவள். சத்தியம் செய்து அதை மீறி விட்ட குற்றவுணர்வு ஒரு பக்கம் என்றால், நாலு பேர் பார்க்க கட்டிய மனைவியிடம் அடி வாங்கி விட்ட அசிங்கம் ஒரு பக்கம் கொன்றது.
இப்பவே ஊர் முழுக்க தெரிந்து நாறிருக்கும், யார் முகத்திலும் எப்படி விழிப்பது, தோட்டம் , தோப்பு, கடைக்கு, லோடு ஏத்த என்று எங்கும் செல்ல முடியாது. நேருக்கு நேர் கேட்காவிட்டாலும், ஒரு கேலி பார்வையே போதும் ஆளை சங்கட படுத்த. இந்த சொம்பு தன்னை தேடி அங்கு தான் வர வேண்டுமா? வீட்டிற்குள் வைத்து காலில் கூட விழலாம்! அதை விட்டு ஊர் பார்க்க அடிக்க விட்டால் தான் என்ன? என் மரியாதையை துளியும் யோசிக்க வில்லையே?.
எவ்வளவு நேரம் தனக்குள்ளே புலம்புவது. வெளியில் சென்று மற்றவர்களை பார்த்து தானே ஆக வேண்டும். மிகுந்த தயக்கத்துடன் வெளியில் சென்றான்.
“என்ன பங்கு! முத ராத்திரி முடிஞ்சு வார மாதிரி வெட்கப்பட்டு வாரவன்? அடி பலமோ!” என்று மணிமாறன் கேலி செய்ய,
அருகில் வந்து அவனை முறைத்தவன். பின்னாடியே காபி கொண்டு வந்த வனிதாவை பார்த்து தலை குனிந்து கொண்டான்.
வேலுவை எந்த வித சங்கடமும் படுத்தாமல், அமைதியாக காபியை வைத்து விட்டு வெளியேறி விட்டாள்.
“இந்த சொம்புக்கு எம்புட்டு தைரியம் பார்த்தியா பங்கு? சின்னதுல தான் நம்ம கிட்ட ஒரண்டை இழுக்கும்ன்னு பார்த்த! இப்பவும் சின்னது மாதிரி அடிச்சு விளையாடுதே? நமக்கும் வயசு ஏறி போச்சுல? புருசன்னு மரியாதை வேணாம்? ஊர் உலகத்தில யாரும் குடிக்கலையா? நாம்ம என்ன குடிச்சுட்டு யார்கூடையும் மல்லு கட்டுரோமா? அமைதியா வந்து படுத்துகுவோம்! அதுக்கு இந்த அக்கபோற. வேலு ரெண்டு நாலைக்காவது வீட்டுக்கு போகாத, கோச்சுட்டு இங்கேயே இரு. அப்பத்தான் இந்த சொம்புக்கு பயம் இருக்கும்!” என்று மணிமாறன் கூற,
அவனை முறைத்து வேலு, “ஏலே மணி! பொண்டாட்டிகிட்ட அடி வாங்குனதே அசிங்கம். யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாம நிக்கேன்! இதுல கோச்சுட்டு இங்க இருந்து இன்னும் கேவல பட சொல்றியா? வண்டிய எடுலே! என்னைய கொண்டு போய் வீட்டுல வீடு. அங்க என்ன காத்திருக்கோ!” என்று வாய்விட்டு புலம்பிய படு வேலு கிளம்ப,
உன் தலையெழுத்து! வா வீட்டுல விடுறேன்” என்று வண்டியில் ஏற்றியவன்,
“ பார்த்தியா வேலு, சின்னது தொட்டே சொம்பு உங்கூட தான் திரியும். அது சோட்டு பொம்பளை பிள்ளைக கூட விளையாடி ஒரு நாளும் பார்த்தது இல்லை. ரெண்டு பேரும் காடு, மலை, கம்மாக்கரை எல்லாம் ஜோடி போட்டு சுத்துவீங்க. சாமி கடைசி வரைக்கும் சுத்துங்கண்ணு முடிச்சு போட்டு விட்ருச்சு போல, ஒரு நாளும் உன் சம்சாரமா நம்ம சொம்பு வரும்ன்னு நினச்சு கூட பார்க்கலவே. சின்னதுலே நியி நிறைய அடி வாங்குவ சம்முகிட்ட, பொண்டாட்டியாஅடிக்க தான் முன்னாடியே தோது பார்த்துருக்க” என்று கேலி செய்து மணிமாறன் சிரிக்க,
வேலு முகத்திலும் புன்னகை தான். அது, அவன் சிறு வயது நிகழ்வுகள் நினைவில் வந்ததால். ஏனோ, ஐந்து வயதில் பள்ளி செல்ல தொடங்கியதில் தொடங்கிய நட்பு. எதனால் ஏற்பட்ட பிணைப்பு என்றெல்லாம் தெரியாது. ஆனால், ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் சேர்ந்தே தான் இருப்பார். வயது சென்று பெண்பிள்ளை , ஆன் பிள்ளை என்றான போதும், இவர்கள் இருவரின் நெருக்கம் மட்டும் மாறவே இல்லை.
வெளி வாசலை கூட்டி கொண்டிருந்த பூர்ணா, வண்டி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க. பார்வையில் ஒரு தெனவெட்டு!
கையில் வைத்திருந்த வெளக்கமாறை பார்த்து, வேலுவை விட மணி மாறனுக்கு தான் பீதி கிளம்பியது. நேற்று நடந்தது படமாக ஓட, நொடி தாமதிக்காமல் வேலு இறங்கிய உடன் வண்டியை கிளப்பி விட்டான். வேலுவிடம் சொல்ல கூட இல்லை.
நம்ம வாயும் சும்மா இருக்காது. அவனவன் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கலாம். அடுத்தவன் பொண்டாட்டி கிட்டையுமா அடி வாங்க முடியும்!” என்று சத்தமாக புலம்பிய செல்ல.
அவனை பார்த்த வேலு, திரும்பி பூர்ணாவை பார்க்க.
“பின் பக்கம் போய் குளிச்சுட்டு வா வேலு! தண்ணி காயுது” என பூர்ணா ஏதும் நடவாது போல் பேச.
அதிர்ந்து பார்த்த வேலு, வெளி வாசலில் வைத்து ஒன்றும் பேச முடியாமல், அவள் சொல்வதை செய்தான்.
வெள்ளை துணியில் அரிசி உமியை கங்கில் காட்டி எடுத்து வந்தவள்.
“ஏலே வேலு! வடக்கு தலை வச்சு படுலே! ஒத்தடம் கொடுக்கணும். முதுகு கண்டி போய் கிடக்கு” என்று மனைவி சொல்லில் அவளை முறைத்து பார்த்த வேலு.
“ஏட்டி ! ஊர் சனம் பார்க்க மேல கைய வச்சு பிட்டு. ஏதும் நடக்காத மாதிரி கரிசனம் சொல்றவ ! நியி என்னைய அடிச்சையே, ஏத்து நான் ஒரு அடியாவது அடிச்சேனா! நான் வச்ச மரியாதையை நியி எம் மேல வைக்கலையே. வார்த்தை மீறுனது தப்பு தான். ஊர் உலகத்தில குடிக்காத ஆம்பிளைய பார்க்கவே முடியாதுலே. எல்லா இடத்திலும் நடக்குறது தான்” என வேலு நியாயம் பேச.
“ஏத்து நீயி அடிச்சிருந்தா , திரும்ப நானும் அடிச்சிருப்பேன் வேலு. சரிக்கு சரி மல்லு காட்டிருப்பேனே தவர ஊர் உலகத்தில நடக்குறது தானேன்னு சகஜமா எடுத்துகிட மாட்டேன். குடிக்கிறது தப்புன்ன தப்பு தான். பல பேர் ஒரு தப்ப சேர்ந்து செஞ்ச, அது நியாயம் ஆகிடாதுலே. குடிக்காத ஒரு ஆம்பிளையா நான் உன்னையா பார்க்கணும்லே வேலு” என்று பூர்ணா தன் பக்க நியாயம் சொல்ல.
“குடிக்கிறவன் எல்லாரும் சாகுறது இல்லவே. ஏதோ ஒரு காயத்த ஆத்தா தொட்டேன்….. விட முடியல” ஒரு பெருமூச்சு கிளம்பியது.
“ நம்மளால விட முடியாத ஒன்னுண்ணு இந்த உலகத்தில எதுவுமே இல்லவே. உசுரா இருந்த உறவை தூக்கி குடுத்துட்டு வாழ நாம பழகல. ஆம்பிளையோ, பொம்பளையோ நல்ல மன வைராக்கியம் வேணும்லே. உம் உடம்ப உன்னாலே கட்டு படுத்த முடியலையா? அப்ப நான் அடக்குவேன்! அதுவும் அடிச்சு” என்க.
அரண்டு போய் பார்த்தவன். “சம்மு” என்று சத்தமில்லாமல் மெலிதாக முனங்க.
“அட ஆமாலே! குடிக்கிறது உனக்கு தப்பில்லைன்ன! அடிக்கிறது எனக்கு தப்பில்லை. ஆம்பிளைக தான் கௌரவகார கொம்பணுக ஆச்சே. உம் கௌரவம் காத்துகோ வேலு” என்று ஆணி அடித்தது போல் தன் நிலைப்பாட்டை சொல்லி உள்ளே சென்றால் பூர்ணா.
காலை பதினோரு மணிக்கு வேலு வீட்டு நிலவரம் அறிய மணிமாறன் மெதுவாக உள்ளே வந்தான். மெல்லிய வெள்ளை துண்டை உடலில் போர்த்தி, கூடத்தில் கிடந்த கட்டிலில், நாட்டு கோழி குழம்பில் நல்லெண்ணை மிதக்க ஊதி ஊதி குடித்து கொண்டிருந்தான் வேலு.
“ஏலே வேலு! நல்ல கவனிப்பு போல. இது என்னாலே துண்டு. அட! ஒத்தனம் குடுத்தியா. உம் முதுகுக்கு நியா எப்படி குடுக்க முடியும்” என்க.
எலும்பை எடுத்து கடித்தவாரு, “ சம்மு” தான் என வேலு பதில் கொடுக்க.
“ஓ…. அப்படியா! அடிக்கிற கை தான் அணைக்கும்ன்னு சரியாத்தான் சொல்லிக்காங்க” என மணி நக்கல் பேச.
“டேய் வாய மூடுறா! நீயா எதுவும் எட்டுகட்டி திரும்ப அடி வாங்க விட்ராத” என வேலு அலற
கையில் குழம்பு பாத்திரத்துடன் பூர்ணாவை பார்க்காதது போல, “ஏன் வேலு, அந்த காலத்துல எல்லாம் வீட்டுல கறி குழம்பு வச்சா பக்கத்து வீட்டுக்கும் கொஞ்சம் ஊத்தி குடுப்பாங்க! இந்த காலத்தில வீட்டுக்குள்ள வச்சு இழுத்து பூட்டிகீறாங்க!” என்று சோகம் போல் புலம்ப,
அவனை முறைத்து பார்த்தவள் . அவனருகில் இலை போட்டு சுடு சோறு பரிமாற, ஒரு விரிந்த சிரிப்போடு,
“ டேய்! அடி வாங்காம , பேசாம சாப்டு போல். அவ கிட்ட மாட்டுன நான் தடுக்க மாட்டேன்” என்று வேலு அதட்ட. அடுத்து உண்ணும் வேலை மட்டுமே அங்கு நடந்தது.
அடுத்த வந்த வெள்ளி கிழமையில் காலையிலேபூர்ணா மகள், கணவனை அழைத்து கொண்டு நாகம்மன் கோவிலுக்கு வந்து விட்டாள். ஏதோ ஒரு வேண்டுதல் போல என்று நினைத்து வந்த வேலுவும், தனக்கு கயிறு கட்ட தான் என்று அறிந்தவுடன் பதறி விட்டான்.
“ ஏட்டி சம்மு! என்னாவே இது. அடிச்சாலும், புடிச்சாலும் நம்ம வீட்டோட . சாமி காரியம் வேணால” என்று வேலு தடுக்க. பூர்ணா கேட்கவில்லை, வர மறுத்தவனை கையை பிடித்து தரதரவென இழுத்து வந்தாள்.
“சம்மு! இனி குடிக்க மாட்டேன்லே. என்னிய நம்புவே! சத்தியமலே” என்று வேலு மன்றாட,
“குடிக்க தான் மாட்டில. அப்புறமென்ன தைரியமா சத்தியம் பண்ணுலே” என்று பிடிவாதமாகவே கோவிலில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி, கையில் கயிறும் கட்டி விட்டாள். வேலு தான் மனைவியை ஓயாமல் அர்ச்சனை செய்தான், அதுவும் மனதில்.
அடுத்து வந்த நாள்களில் வேலு குடி பக்கம் கூட போக வில்லை. அதன் தொட்டு பூர்ணா,
“ஏலே வேலு! அடுத்த ஒரு வாரமும் புள்ளைக்கு லீவு தான். காட்டுலையும் பெருசா வேலை எதுவும் இல்லை. வண்டிய கட்டு ஒரு எட்டு வாணி மதினிய பார்த்துட்டு வந்துறுவோம்”
“அக்கா வீட்டுக்கு! என்னாலே சோழி?” என வேலு.
“ம்ம்ம், கோச்சுட்டு போன மாமியார கூட்டிட்டு வர தான்” என்க.
“ஆத்தாவைய ? இப்படிலாம் நான் போய் கூப்பிட்டதில்லையே! என்னாலே திடீர்னு. வேற எதுவும் விவரமா?” என கேள்வியாக வேலு கேட்க.
“ உமக்கு இந்த விவரம் போதும். வண்டிய கட்டுலே”
“வரவர எனக்கு மரியாதையே இல்லை சம்மு” என்று முணங்கியவாறு அடுத்து செய்வதை யோசித்தான்.
பவித்ராக்கு தான் ஒரே கொண்டாட்டம். இதுவரை விடுமுறை என்று எங்கும் சென்றதில்லை. வயதான அப்பத்தா, நேரமில்லாமல் சுற்றும் தந்தையை வைத்து கொண்டு எங்கும் சென்றதில்லை. சொந்த அத்தை என்று தெரியும், அப்பத்தாவும் அடிக்கடி சென்று வந்தாலும் உடன் அழைத்து சென்றதில்லை. தாமரையை கொண்டு மகளிடம் கேள்வி வருமோ என்ற பயம் தான் வேலுக்கு. ஆனால், இன்று குடும்பமாக வெளியில் செல்வது அவ்வளவு மகிழ்ச்சி அந்த சின்ன சிட்டுக்கு. நேற்று முதலே தன் தோழிகளிடம் எல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள்.
கிளம்புவதற்காக மகளும், மனைவியும் கட்டி வைத்திருந்த பெட்டிகளை பார்த்து அரண்டு போனவன்.
“பொண்ணு குடுத்த வீட்டுல குடுத்தனமா பண்ண போறீங்க! எதுக்கு இம்புட்டு சாமான்?” என இடுப்பில் கை வைத்து சிறு கோபத்தோடு வினவ,
“ எம்புட்டு சாமான்? இந்த பெட்டில பிள்ளைக்கு உடுப்பு. வயசு புள்ளை நல்லதா போட வேணாமா, அதுவும் அயித்த வீட்டுல?. அப்புறம் அந்த பெட்டில எம் உடுப்பு. நானும் எந்த நல்லதுக்கு போனேன். நாத்துநார் வீட்டுக்கு போன, நல்லதா நாலு இடத்துக்கு போவோம். நாங்க கௌரவமா உடுத்தினா தானே உனக்கு மரியாதை. உன்னியகெனக்க வெள்ளை வேஷ்டியும், சாயம் போன கலர்ல நாலு சட்டையும் மட்டும் போதுமா!” என பூர்ணா பதில் கேள்வி கேட்க.
சரி என்று தலையசைத்தான்.
“ இது என்ன மூட்ட முடிச்சு” என்க.
“வருசம் செண்டு போறோம், வெறும் கையை வீசியா போக சொல்றவன். நம்ம காட்டு நெல்லு, அவிச்சு எடுத்த பூமாதிரி சோறு வரும். இது கத்தரி, தக்காளி, மிளகாய் வத்தல், கடலை… அப்புறம், அந்த சாக்குல நம்ம வீட்டு முருங்கை கீரை, சுரக்காய், பூசணி.. அந்த வெள்ளை சாக்கு காட்டு நெல்லி, தோட்டத்து கொய்யா, வடு மாங்காய்”
“அப்புறம் அந்த கவர் முழுக்க வீட்டுல சுட்ட அதிரசம், முறுக்கு, சீடை, எள்ளு உருண்டை, கடலை புட்டு, கருப்பட்டி, மண்டை வெல்லம், குழம்பு மசால். அப்புறம் கடைசியா நம்மூர் குண்டு மல்லி” என மூச்சு வாங்க நிறுத்த.
“ஏட்டி சம்மு! சொல்லும் போதே மூச்சு வங்குதே. எதுக்கு இம்புட்டு? மதுரையவே தூக்கி போறீக! உம் மதினிக்கு கல்யாணம் முடிஞ்சு பதினெட்டு வருசம் ஆச்சு. வேற விடுற மாதிரி சீர் கொண்டு போறவ”
“உமக்கு என்னாலே தெரியும் பொம்பள மனசு? பொறந்த வீட்டு கடுகு கூட உசத்தி தான்” என பகட்டாக பூர்ணா பதில் சொல்ல
“சரிலே, உம் மதினிக்கு செய். அதுக்கு ஏன் இங்கிருந்து சுமந்துட்டு போனும்! திருச்சிலயே எல்லாம் கிடைக்கும். அங்க போய் வாங்கிக் கொள்ளாம்” என்றான் வேலு. அவனுக்கு இவ்வளவு சாமனையும் எப்படி இந்த சிறு வண்டியில் ஏற்றி செல்வது என்ற கவலை.
“ அங்க போய் வாங்கி குடுக்க. இங்கிருந்து நாம ஏன் போகணும்?” என்று பூர்ணா கழுத்தை ஒரு வெட்டு வெட்ட.
அமைதியாக அனைத்தையும் நான்கு பேர் மட்டும் போகும், வண்டியில் ஏற்றி விட்டான் வேலு.
மூன்று மணி நேர பயணம் உல்லாசமாக கழிந்தது. அந்த, சிறு குடும்பத்திற்கு. ஏதேதோ பேசி சிரித்த படியே திருச்சி வந்தனர். மூவருமே இத்தகைய சந்தோசத்தை எல்லாம் அனுபவித்திராததால், இந்த அனுபவம் தன் குடும்பம் என்ற பினைப்பையும், அன்பையும் கூட்டி சேர்த்தது.
வீட்டின் வாசலுக்கே வந்து ஆளாத்தி எடுத்து வரவேற்றனர் கலை தம்பதிகள். பெரியாத்தாவுக்கும் மனது நிறைவாக இருந்தது. குடும்பத்துடன் வந்திறங்கிய மகனை பார்த்து பூரித்து போனார். ஆரம்ப கட்ட நலவிசாரிப்பு எல்லாம் முடிந்து, ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பொருட்களை இறக்குமதி செய்ய. வேலுவை போலவே கலைவாணனுக்கும் அதிர்ச்சி தான். என்ன இது கூத்து! என்று கொஞ்சம் சிரிப்பும் வந்தது.
ஆனால், வாணி முகம் மலர்ந்து விகாசித்தது. அவள் முகம் இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது, “ எப்படி சம்மு சிரம்மம் பார்க்காம இம்புட்ட அள்ளி கொண்டு வந்த?”
“ஏன் மதினி, உங்களுக்கு பிடிக்கலையா” என்றாள் பூர்ணா. வேண்டுமென்றே கேட்ட கேள்வி தான். வாணியின் முகம் பதில் சொன்னாலும், வாய் வார்த்தையாக கேட்க தான் அவளுக்கு ஆசை. இதை போய் எவ்ளோ தூரம் தூக்கிட்டு போனுமா? என்ற வேலு கேட்ட கேள்விக்கு, வாணியிடம் பதில் தேடினால்.