மன பாரங்களை எல்லாம் கடவுளிடம் கொட்டி விட்டு, மெதுவாக சோர்ந்த நடையோடு வீடு வந்தாள் பூர்ணா.
வீட்டின் உள் நுழையும் போதே சந்தை கடை போல அவ்வளவு சத்தம். குரலை வைத்தே அடையாளம் கண்டு கொண்டவள், பெரிதாக யோசிக்க வில்லை. உடன் பிறப்புகள் ஒன்று சேர்ந்தால் பேச்சும், கும்மாளம் தான்.
“ஏய் பூரி! உம் மூணு மாமியாரும் வந்தாச்சு. என்னவோ தெரியலை, வந்ததில இருந்து ஒரே சத்தம் தான். யாரன்னு தெரியலை! அடிக்கணும், கொல்லணும்ன்னு பேசிக்கிட்டாங்க. எதுவும் சொத்து பஞ்சாயத்தா?” என்று கவிதா வினவ.
“என்னனு தெரியலையே கவித்தாக்கா. இந்த மனுசன் வேற அங்குட்டு, இங்குட்டு சுத்திட்டு என்னை தான புடிப்பாக!. நானும் நேரம் காலம் தெரியாம, சாமியே கதின்னு கெடந்தென். முத என்னன்னு பாக்குறேன், வாரேங்க்கா!” என்று பதட்டமாக சொல்லி உள்ளே சென்றாள்.
வீட்டில் கதிரவன், அவனின் அக்கா, தங்கைகள். அவர்களின் கணவர்கள் என்று குடும்பமே கூடி நிக்க. எதுவும் தெரியாத பூர்ணா,
“வாங்க அண்ணே, வாங்க மதினி! நல்லா இருக்கீங்களா!. ஏங்க கறிக்கு சொல்லிட்டீங்கள!” என்று வீட்டு ஆளாக உபசரிக்க செய்தால், இல்லையென்றால் கதிரவனின் இன்னொரு முகத்தை காண நேருமே!
“இப்படி பசப்பி தான், உன்னை நல்லவன்னு எங்க எல்லார்கிட்டயும் காட்டிட்டு. உம் இஷ்டத்துக்கு ஊர் சுத்துற!” என்று மாலதி ஆரம்பிக்க.
“ ஊர் மேய்றான்னு ஓடச்சு சொல்லு?” என்று வேணி எடுத்து கொடுக்க.
பூர்ணா மேனி நடுக்கம் கண்டது. என்ன மாதிரியான வார்த்தை இது! அதுவும் அண்ணன் முறையில் மூவரையும் வைத்து கொண்டு.
“ மதினி பார்த்து பேசுங்க. வார்த்தையை விடாதீங்க. அப்புறம் நம்ம உறவு பேச்சு வார்த்தையில் முடிஞ்சு போகும்” என்று தாங்க முடியாமல் பூர்ணா பேச.
“என்னடி வாய் நீளுது. இல்லாத வீட்டு பிள்ளையை கட்டுனா, காலத்துக்கும் அடங்கி கெடப்பான்னு தான, ஊர்ல இல்லாத அழகியா உன்னை கட்டுனோம்! ஒண்ணுக்கும் வக்கு இல்லன்னாலும் வளர்ப்பு சரியா இருக்கும்ன்னு தான் நினைச்சேன். அதுவும் தற்குறியா?. அப்பன் இருந்து அடிச்சு வளத்திருக்கணும் இல்லைன்னா அண்ணன், தம்பி யாராவது இருந்தா பயம் இருந்துருக்கும். நீயே ஒரு மொட்டு கட்டை? அதான் கண்ட மாதிரி திறியிற?” என்று பெரிய மதினி சுமதி பேசவும், அதிர்ந்து போனவள்.
அங்கிருந்த மற்றவர்களை பார்த்தாள். ஆண்கள் நால்வரும் வாய் திறக்காமல், பெண்களை மட்டுமே பேச விட்டு வேடிக்கை பார்த்தனர். அதுவும் கதிரவன் முகம், பூர்ணாக்கு அப்படி ஒரு பயத்தை கொடுக்க. கணவனை மனதில் வைத்து மட்டுமே, கொஞ்சம் நயந்து போனாள். வேற வழியும் அவளுக்கு இல்லையே.
“மதினி! நீங்க என்ன பேசுறீங்கன்னே எனக்கு விளங்களை!. எதையும் ஒடைச்சு பேசி புடுங்க. எம் மேல தப்பா! கால்ல கூட விழுகுறேன்!” என்று பவ்யமாகவே பதில் சொன்னாள்.
“ இன்னும் புரியாத மாதிரியே நடிக்குறதை பாரு!” இது மாலதி.
“எங்களுக்கு எல்லாம் தெரியும். உம் பத்தினி வேசம் களைஞ்சு ரொம்ப நேரமாச்சு..!” இது கிருஷ்ணா வேணி.
“உம் வயித்துல வளர்ற புள்ளைக்கு எத்தனை மாசம்?” என்று எகத்தாளமாக சுமதி கேட்க.
ஒரு நொடி அதிர்ந்தவள், சின்ன சிரிப்போடு வயித்தில் கை வைத்து பார்த்தாள். அப்படி இருக்குமோ! நொடியில் உற்சாகம் பொங்க, மனம் உவகை கொண்டது. ஆனால், அடுத்த நொடியே இது எப்படி சாத்தியம்! தாங்கள் தான் சேரவே இல்லையே. என்ன சொல்கிறார்கள் இவர்கள்? என்று அதிர்ந்து போய் மற்றவர்களை பார்க்க, அவர்கள் முகம் கொடூரமாக இருந்தது.
பூர்ணா முகத்தில் தோன்றிய நொடி நேர மகிழ்ச்சியை கண்டு கொண்டவர்களுக்கு,அவள் மேல் துவேஷம் பொங்கியது. தன் மேல் தவறு இல்லை, அவர்கள் புரிதல் தான் தவறு என்று சொல்ல வாய் எடுத்தவளை, அதிரடியாக தாக்கினர்.
அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை பூர்ணாக்கு. ஆண்கள் அனைவரும் பெண்களை அடிக்க அமைதியாக பார்த்து தான் நின்றனர். அவள் தரப்பு நியாயம் சொல்ல கூட விடவில்லை. ஆண்கள் கை வைக்காமல் பெண்களை விட்டு அடிக்க விடுவதே, அவர்கள் நியாயமாக பார்த்தார்கள்.
“காசுக்கு எந்தம்பியும், கட்டிலுக்கு வேற ஒருத்தனையும் புடிச்சுடையாடி?” என்று சுமதி.
பூர்ணா தலை முடியை கொத்தாக பற்றி தரையில் இழுத்து போட.
“எவனுக்கோ புள்ளை சுமந்து, எங்கண்ணனை அப்பனாக்க பாக்குறையா? எங்களை என்ன சொம்பன்னா நினைச்ச!” என்று மாலதி, அவளின் முதுகில் ஓங்கி ஏத்து விட.
முகம் குப்புற விழுந்தவள், “அய்யோ மதினி! பாத்ரூம் போனாள் கூட நிமிச கணக்கு வச்சு கவனிப்பாங்க உங்க தம்பி. அவர்கிட்ட தப்பிக்க முடியுமா! புரியாம தப்பா பேசுறீங்க. உங்க தம்பி பொண்டாட்டி தான், என்னை அடிக்க கூட செய்ங்க. எம் ஒழுக்கத்தை தப்பா சொல்லாதீங்க. சத்தியமா உங்க தம்பிக்கு மட்டும் தான், நான் முந்தி விரிச்சேன்” என்று பொங்கி வரும் அழுகையோடு பூர்ணா பேச.
அவள் சொல் யாரின் காதிலும் விழ வில்லை. ஒரு பெண் தரங்கெட்டு போனாள் என்பதே மனதில் நின்றது.
“ எனக்கு அப்பவே தெரியும். பிள்ளை இல்லன்னு கோவில் கோவிலாக போகும் போதே! யார்டையாச்சும் புள்ளையை வாங்கி வருவான்னு” என்று வேணியும் வீட்டின் மூலையில் கிடந்த விளக்கமாறை வைத்து அடி நொறுக்கி விட்டாள்.
“ இவ மட்டும் தான் இப்படியா..! இல்லை இவ அம்மாவும் இப்படி தானா..! ஏன்னா, அவளுக்கும் புருசன் இல்லை பாரு” என்று மாலதி பேச,
“ஏய்!/ வாயடக்கி பேசு. எங்கம்மைய பத்தி பேசுறதுக்கு உங்க யாருக்கும் தகுதி இல்லை. நான் தப்பு செஞ்சேன்னு தோணுச்சுன்ன என்வீட்டாளுகள கூப்பிட்டு வச்சு பேசுங்க. ஊர் முன்னாடி தான கட்டியாந்திங்க, இந்த ஊர் சனத்தை கேளுங்க எம் ஒழுக்கம் என்னன்னு” என்று வாங்கி அடியும் பொருட் படுத்தாது பூர்ணா தன் தரப்பு நியாயம் பேச தொடங்கினாள்.
“உங்காத்தாள பேச எங்களுக்கா தகுதி இல்லை, இருக்காது தான். புருசன் செத்தும் இன்னும் கிழங்கு மாதிரில திரியிறா! உம் கைகாரியே அவ தான.… அவளும் ஒரு ஆம்பிளைய பார்த்தா வந்திருப்பா” என்று வன்மம் தூக்க பேசியது வேணி தான்.
இனி மிச்சம் என்ன இருக்கு. இப்படி ஒரு வாழ்வு தேவை தான?. தன் தாயை பேசிய பின்னும், தனக்கான வாழ்வை யோசிப்பேனா!
வேணியின் கன்னம் கன்றி போகும் அளவுக்கு பூர்ணா கொடுத்தாள் ஒரு அடி. ஐந்து மாத கருவை தாங்கிய வேணி, வயிற்றை பிடித்து கொண்டு விழ.
பதறி போனார்கள் அனைவரும். தப்பும் செய்து விட்டு, தங்களையே எதுத்து அடிக்கும் பூர்ணா மேல் கட்டுகடங்கா கோபம் பெருக. அடுத்து என்ன? ஆண்களும் கை நீட்ட தொடங்கினர்.
தைரியமான, துணிச்சலான பெண் தான் பூர்ணா என்றாலும். ஒரு குடும்பமே சேர்ந்து தாக்கும் போது அவள் பலம் வலுவிழந்து போனது. தன் சத்திக்கு மீறி வாங்கிய அடி, அவளை தன்னைப்போல் வாய் திறந்து கத்த வைத்தது.
பேச்சும், கூச்சலும் அதிகமாக கேட்க, வெளிய ஓடி வந்தாள் கவிதா. பூர்ணாவின் கதறல் கேட்கவும், பதறி போய் தன் கணவனை எழுப்பினாள்,
“எந்திரியா! அந்த வீட்டுல சத்தம் கேட்குது. பூர்ணாவ தான் போட்டு அடிக்கிறாங்க போல, அவ அலருற சத்தம் தான் கேட்குது. நீயி போய் என்னன்னு பாரு?. நான் போய் பக்கத்து வீட்டு ஆளுகள திரட்டி வாரேன். ஆளும் பேருமா போனா தான், அந்த வாத்தியார் வீட்டு பொம்பளைங்க கொஞ்சம் அடங்குங்க” என்று அவசரமாக சொல்லி கணவனை அனுப்பியவள்.
“ஜெயாக்கா கொஞ்சம் மாமன கூட்டிட்டு வாங்க. அந்த புள்ளை பூர்ணாவ போட்டு அடிக்கிறாங்க! என்னன்னு கேப்போம்..!”
“யாரு பூர்ணாவா…! அதுபாட்டுக்கு அமைதியா கிடக்குமே! இந்த கொள்ளி கண்ணி சிறிக்கிக வரும் போதே நினைச்சேன்” என்று பக்கத்து வீட்டு ஜெயாக்காவும் ஓடி வர.
அடுத்த நாலு வீட்டு கதவை தட்டினாள் கவிதா. அதற்குள் அங்கே எல்லாம் முடிந்து இருந்தது.
கட்டிய கணவன் இருக்க, அடுத்தவனோடு மானம் கெட்டு போனாள் என்று பூர்ணாவின் கற்றை கூந்தல் பாதியை வெட்டி விட்டனர். பெண்களின் முடிக்கு உள்ள மதிப்பு தெரிந்து தான் செய்தார்களோ என்னவோ! உள்ளாடை கிழிந்து வருமளவுக்கு அடிக்க, கத்தவும் தெம்பில்லாத பூர்ணா.
இனியும் இருந்தால் அடுத்த ஆண்கள் முன் ஆடை இல்லாமல் தான் நிற்க வேண்டும் என்று பயந்து, இருக்கும் மானத்தோடு சென்று விடுவோம் என்று தான் வெளியே ஓடி வந்தாள்.
தட்டி கேட்க வந்த அனைவரும் வாயடைத்து போனார்கள். பெண்ணுக்கு பெண்ணே இப்படி ஒரு காரியம் செய்ய துணிவார்களா! அதிர்ந்து நின்று விட்டனர். கிட்டத்தட்ட ஆறு வருடமாக உடன் இருந்த பெண்ணை, ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் பண்ணி விட்டார்களே!, இந்த பாவிகள்…!
இனியும் அவர்களிடம் என்ன நியாயம் பேச முடியும். கவிதா தான் ஓடி சென்று கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலையை எடுத்து வந்து பூர்ணா மீது போத்தி இறுக அனைத்து கொண்டாள்.
தனக்கு தெரிந்த முகம் பார்த்ததும், இதுவரை என்ன நிகழும் என்ற பயம் போய், துக்கம் பொங்க சரண் புகுந்தாள் பூர்ணா. ஒரே நாளில் தன் குடும்பமே தன்னை அந்நிய படுத்தும் என்று நொடியும் நினைக்கவில்லை.
கவிதாவின் கணவர் உடனே போலீசுக்கு தகவல் சொல்லி விட்டார். இவர்களிடமிருந்து எந்த பேச்சு வார்த்தையும் எடுபடாது என்று கண்டு கொண்டார் போல.
“ நீங்களாம் பொம்பளைகளா..! என்ன தப்பு செஞ்சாலும், இப்படி செய்ய ஒரு பொண்ணா என்னன்னு மனசு வந்துச்சு. ஆளுக்கொரு பொட்ட பிள்ளையை கைல வச்சிருக்கீங்க! சாமிக்கு பயப்படனும். மீனாட்சி பாக்குற மாண்ணு இது, ஒரு பொண்ணுக்கு அநியாயம் செஞ்சிட்டு நிலைச்சு நிக்க முடியாது…!” என்று வார்த்தைகளாக அள்ளி தெளித்தாள் கவிதா.
பூர்ணா நிலை, அவளை அப்படி பேச சொல்லியது. எவ்வளவு தைரியமான பெண். ஒரு நாளில் ஒடுக்கி விட்டார்களே! எந்த காலத்திலும் ஒரு பெண்ணை அடக்க, தேர்ந்தெடுக்கும் வழி. மானம் ஒன்னு தானே. அது மட்டும் தானே அவளை துவள செய்யும்.
கேஸ் எடுக்கப்பட்டு, பூர்ணா தாயிக்கும் தகவல் சொல்லப்பட்டது. பூர்ணா, ஒரு லேடி போலீஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டாள், உடன் கவிதா இருந்து கொண்டாள்.
பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்ய பட. கதிரவன் தானே முன் வந்து, குற்றங்களை தன் மீதே ஏற்று கொண்டார். தங்கை மற்றும் அவர்களின் கணவர்களை வெளி சொல்லவில்லை. விரக்தியாக எண்ணி கொண்டாள் பெண், தான் என்றும் அவன் வட்டத்தில் இல்லை என்று. அத்தோடு, பூர்ணா சொல்வது மட்டுமே சாட்சி. மற்ற யாரும் நேராக காணவில்லையே.
மகளின் நிலை கண்டு வள்ளி தன்னை தானே நொந்து கொண்டார். கவர்ன்மென்ட் மாப்பிள்ளை, மாமியார் இல்லாத வீடு, சொத்தும் இருக்க, சாமி தான் கண் திறந்து விட்டது என்று எண்ணியே கல்யாணம் செய்து கொடுத்தார். இப்படி அரை உயிராக மகள் கிடப்பதை பார்த்து, தன் முகத்தில் தானே அறைந்து கொண்டு அழுக தான் முடிந்தது.
சொந்தமாக யாரும் உடன் இல்லாவிட்டாலும், பழக்கவழக்கம் கொண்டு பலர் உடன் நிக்க, சீக்கிரமாகவே தேறினால் பூர்ணா.
அடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. தன் மனதிலே ஒரு யோசனை வைத்திருந்த பூர்ணா, யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கேசை வாபஸ் பெற்றவள். அத்தோடு விவாகரத்தும் கோரினாள்.
எல்லோருக்கும் அதிர்ச்சி தான் என்றாலும், அவள் முடிவில் தலையிடாமல் மெளனமாக பார்த்து நின்றனர். அவ்வளவு ஏன்? கதிரின் வீட்டாருக்கே அதிர்ச்சி தான். கதிருக்கு தண்டனை வாங்கி கொடுத்து, விவாகரத்து பெற்றாள் கூட சரி. இது என்ன..! அவனை வெளியேவும் விட்டு, விவாகரத்தும் கேட்பது.
அதை தான் கவிதாவின் கணவரும் கேட்டார். அதற்கு பூர்ணா,
“அண்ணே! அந்த மனுசனோட ஆறு வருசம் குடும்பம் நடத்திருக்கேன். நான் தப்பான பொண்ணு இல்லை, நான் கர்ப்பமும் இல்லைன்னு டாக்டர் சொன்ன பின்னாடி தான். அந்த குடும்பமே அமைதியா இருக்கு, இல்லைன்னா இது வரைக்கும் என்ன உசுரோட வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா..! என்னைய திரும்பவும் கூப்புட்டுக்க தான் இந்த அமைதி…!” என்று பொறுமலோடு பதில் சொன்னவள்.
“நான் மட்டும் அந்தாளுக்கு போட்டியா நின்னா, அவன் வேற ரூபம் எடுப்பான். நாங்க இல்லாதவங்க, கஞ்சிக்ககே வழி இல்லாத எங்கம்மை எப்படி கேஸ் நடத்தும். உங்க பிழைப்பை விட்டு எம்புட்டு நாளைக்கு எம் பின்னாடியே நிப்பீங்க. அந்தாளுக்கு சப்போட்டு அதிகம், ஆள் பலமும் இருக்கு, பெரிய இடத்து பழக்கமும் இருக்கு தான். தப்போ! சரியோ கூட பொறந்த பொறப்பு உடன் நிக்குது. நான் யாரு? எனக்கு யாரு இருக்க? சொல்லுங்க பாப்போம்” என்று விரக்தியாக சொன்னவள்.
“ நான் வாழ்ந்த வாழ்க்கை போதும். எந்த உறவுக்கும் நம்பிக்கை தான் அடிப்படை. அந்த நம்பிக்கை செத்து போச்சு. இனி தனித்தனி வழி தான். எங்கம்மையும் லேசு பட்ட ஆளு இல்லை. புருசன் தான் உலகம்ன்னு நிக்கும். எம் நிலையை பார்த்து கம்முன்னு இருக்கு. மாசம் போன, மனசு ஆறி போகும். அதுக்கு முன்ன நான் அங்கிருந்து வரணும்…” என்று பூர்ணா தெளிவாக எடுத்து சொல்ல.
“நீயி சொல்றதும் சரிதான்மா! கதிரவன நம்ப முடியாது. நியும் அங்கிருந்து வர்றது தான் சரி. நான் பேசுறேன், அவன் அக்கா, தங்கச்சியை உள்ளே இழுத்து விட்ருவோம்ன்னு பயம் காட்டுனா! கொஞ்சம் மசிவான். சூட்டோட முடிக்கிறது தான் நல்லது. நம்ம தெரு மக்களும் ஒரு நாள், ரெண்டு நாள் கோர்ட் வருவாங்க. எல்லா நாளும் உனக்காக நிப்பாங்கள. இது என்ன சினிமாவா! போட்டி போட்டு ஒரே பாட்டுல முன்னேற..!” என்று வழக்கு தொடர்ந்தால், நிதர்சனமாக ஒரு பெண் தர்க்க மற்றும் பொருளாதாரத் ரீதியாக வரும் சங்கடங்களை சாமாளிக்க தெம்பு வேணுமே..!
மகளின் வாழ்க்கை முடிவுக்கு வருவதை கண்டு வள்ளி அழுகையும் கரைய,
“ எம்மா! நீயி மருமகன்னு பாக்குற மனுசனோட ஒட்டியும் நிக்க முடியாத..! வெட்டிக்கும் போக முடியாது. பானைக்குள்ள தலையை விட்டு கத்துனா மட்டும் வெளிய வர முடியாது. சூதானமா நாம தான் வெளிய வரணும். பொம்பளை மனசு எங்குட்டும் சரிகட்டி வாழனும்ன்னு தான் நினைச்சேன். அது தான் தப்பா போச்சு” என்று ஒரு பெரிய பெருமூச்சோடு சொல்ல.
“ நியி என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன் பூர்ணா. அவங்க ஒரு ஆளுன்னு, அதுகளுக்கு பயந்துட்டு நாம ஒதுங்கி போகணுமா..! நான் நிக்கேன் ஒரு கை பார்ப்போம் பூர்ணா” என்று தைரியம் சொன்னது கவிதா தான்.
“ எனக்கு நடந்ததுக்கு உமக்கு இருக்குற கோபம். ஒரு பொம்பளையா எனக்கும் இருக்கு. நெஞ்சு முட்ட கோபம் இருந்து என்ன செய்ய வக்கு இல்லையே..! நான் ஒரு புள்ளைபூச்சி, என்னை எது செய்தாலும் கேக்குறதுக்கு யாரு இருக்க! எங்கம்மை மூலையில உக்கார்ந்து அழும், தவிர வேறென்ன செய்யும். இது தான் தைரியமா எம் மேல கை வைக்க துணிச்சல் வந்துச்சு. இதுவே, இருக்கபட்ட மருமகள் மேல கை படுமா. அவங்களை பகைச்சா நானும், எங்கம்மையும் உத்திரத்துல தொங்க தான் வேண்டும். பெத்தவ வயசு பொம்பளையை எப்படி பேசினான்னு பார்த்து தான இருந்தீங்க. சொந்தமா நிக்குர உங்களையும் மாட்டி வைக்க விரும்பல. எம் பொழப்பு எங்கம்மை மாதிரின்னு போச்சு போல. கடவுள் கூலி கொடுக்கட்டும்…!” என்று கடவுள் மேல் பாரத்தை போட.
தப்பை எதிர்த்து போராட முடியாத பலரும் செய்வது போல, கடவுளை வைத்து நியாயம் பேசி, மன குமுறலை அடக்கி, ஒதுங்கி கொண்டாள்.
பெண்ணுக்கு எதிரான வழக்கு என்பதால் காரியம் துரிதமாக நடக்க தொடங்கியது. அதன் பிறகு தான் கொஞ்சம் பயம் எட்டி பார்த்தது கதிரவன் குடும்பத்திற்கு. அரசு பள்ளியின் வாத்தியார், ஓய்வு பெறும் நேரம் என்பதால் ஒரு கரும்புள்ளி இல்லாமல் வெளியேறுவது அவசியம் என்பதால் தான், பூர்ணாவின் நிபந்தனை ஏற்க பட்டது. தங்கைகளின் கணவர்களும் அரசு வேலையில் இருப்பதால், பெண் எதிரான வழக்கு என்றதும் அடங்கி விட்டனர்.
தன்னை போல் விவாகரத்தும் கிடைத்து விட்டது. பூர்ணா மேல் தவறு இல்லை என்று அறிந்ததும் தப்பு செய்து விட்ட உணர்வு தான் கதிரவன் வீட்டார்க்கு. ஆனால், தங்கள் நிலையிறங்கி மன்னிப்பு கேட்கும் மனது தான் இல்லாமல் போனது. விவாகரத்து செய்தாலும் தங்களை தாண்டி செல்ல மாட்டாள் என்பது தான் அவர்கள் கணிப்பாக இருந்தது.
ஆனால், அவர்களின் கணிப்பை பொய்யாக்கி கூலி வேலை, ஓட்டு வீடு என்றாலும் தன் தாயோடு நிம்மதியாக வாழ பழகி கொண்டாள் பூர்ணா. முழுதாக ஒரு வருடம் கடந்த பின் தான் கதிரவன் பக்கவாதம் வந்து விழுந்தது. வயதின் மூப்பா அல்லது மன அழுத்தமா எதுவென்று தான் தெரியவில்லை.
மனைவியை இழந்து, ஊரில் இருக்கும் நல்ல பேரும் கெட்டு , அதையும் விட தனிமை. அவரை உருக்கி விட்டது. விவாகரத்தின் பின் சில தடவை பூர்ணாவை கண்டார் தான். அவள் தான் நீ யாரோ? என்பது போல் கடந்து விடுவாள். அது தான் அவரை பாதித்ததோ..!
கட்டிட வேலைக்கு என்று சில நாள் மதுரை வரை வருவாள் பெண். பஸ் ஏறும் போது, தாய்க்கு பழம் வாங்கும் போது என்று சில தடவை பார்த்தாலும் கண்டு கொள்ள மாட்டாள். கதிரவன் அருகே வரும் போதே, சம் பூர்ணாவாக தெனவெட்டாக நின்று, திமிராக என்னை தொட்டு பார் என்னும் பார்வையில் நெருங்க முடியாமல் பின் தங்கி விடுவார் கதிரவன்.
தம் மனைவியாக இல்லாமல் யாரோவாக நிற்கும் பெண்ணை நெருங்க தான் முடியவில்லை. பக்கவாதம் வந்து விழுந்த போது பூர்ணாக்கும் சேதி அனுப்பப்பட்டது.
கவிதா தான் “பார்த்தியா பூர்ணா, புள்ளை இல்லாத சொத்து, அடுத்து நமக்கு தான்னு காவு கெடக்காளுக..! அள்ளி, கூட்டி ஒதுக்க நியி போகணுமா? என்னா நெஞ்சலுத்தம்! ஊருல ஒருத்தன் பேசமாட்டான். வாழ வந்த பிள்ளையை வெரட்டி விட்டுடாங்க ன்னு கெட்ட பேரு தான். சொத்து மட்டும் தான் பெருச நிக்க செய்யுது” என்று புலம்புவார்.
வைராக்கியம் பூர்ணா எட்டி கூட பார்க்க வில்லை. அவள் குணம் தெரிந்த பலர் நம்பினாலும், அறியாத சிலர் நடத்தை சரியில்லை என்று பேசதான் செய்கிறார்கள். கதிரவன் சாவில் கூட பூர்ணா போய் நிற்க வில்லை. மன வருத்தம் மனதோடு தான்.
அதையும் கவிதா தான் பார்த்து சொன்னாள், “நல்ல சாவு தான் படுக்கையிலே..! சொந்தம்ன்னு கொஞ்ச நாள் ஒட்டிக்கு திறிஞ்சாளுக. பொறவு, அவாவ பொழப்பு இருக்குல, பாக்க நாதியில்லை. ரொம்பவும் படுத்தாமா போய் சேர்ந்தாச்சு. கொஞ்ச நாள் தான் உனக்கு செஞ்சதுக்கு எல்லாம் அனுபவுச்சு தான் போனாரு மனுசன். அப்புறம் பூர்ணா சொத்து எல்லாம் ஏதோ அனாதை இல்லத்துக்கு எழுத்து வச்சுடாரம் மனுசன்!” என்று சொன்ன போதும் அமைதியாக கேட்டு கொண்டவள். அவர்கள் நினைப்பையே அழித்து விட்டாள்.
தன் தாய் மட்டும் தான் என்று புது வாழ்க்கை தொடங்க வசந்தம் வந்தது பவித்ரா மூலம் தான். வேலுவின் மகளாக தொடங்கிய உறவு தான் வேலுவின் நட்பை தாண்டி பலப்பட்டது. எங்கு ஆரம்பித்தது என்று தெரியாமல் பூர்ணா மனதில் இருந்த பிள்ளை ஏக்கம் பவித்ரா மேல் படர்ந்தது. தாய் அன்பு இல்லாத பவித்ராவும் ஒட்டி கொள்ள, தன்னோடு பிணைத்து கொண்டாள் பவித்ரா.
இத்தனை வருட வேண்டுதல்,விரதம், பரிகார பலன் பவித்ரா தான் என்று ஒன்றிணைய, சூழ்நிலையும் சாதகமாக அமைந்தது. இந்த வரம் உனக்கு தான் என்று மடியில் கிடத்த, சுகமாக மடி தாங்கினாள் பூர்ணா.
தன் கடந்த கசடுகளை களிப்பாக மாற்றிய மகவை வயிற்றோடு வருடி கொடுத்து கொண்டிருந்தவள். அம்மா! என்று ஒரு அழைப்பும், வரும் கொலுசு ஓசையும் கேட்க.
முகம் புன்னகையில் விரிய எழுந்து அமர்ந்தாள் தாய்.
“அம்மா! சாத்துக்குடி ஜூஸ், அப்பா குடுத்து விட்டாங்க” என்று கையில் கொடுத்த மகள் தள்ளி அமர.
“ ஏட்டி பவி! பள்ளியொடம் விட்டு வந்தா, மடியில தான உக்காருவ! இன்னைக்கு என்னா?” என்று தாய் சிறு கோபத்தோடு கேட்க.
“ வயித்துல குட்டி தம்பி இருக்கு! அதுக்கு வலிக்கும்ல அதான்ம்மா!” என்று சமத்தாக பதில் சொன்னாள் பவித்ரா.
“வயித்துல தான் குட்டி தம்பி இருக்கு. மடி எப்பவும் பவி குட்டிக்கு தான்” என்று சொன்னவள். மகளை மடியில் அமர்த்தி, பழச்சாற்றை எடுத்து மகள் வாயருகே கொண்டு செல்ல,
“வேணாமா, இது உனக்கு தான். நான் ஏற்கனவே குடிச்சுட்டேன்”…
“சரி. அப்ப கொஞ்சம் மட்டும் வாய் வச்சுக்கோ! உன்னை விட்டு எனக்கு மட்டும் குடிக்க மனசு ஒப்பாது” என்று மகளுக்கு புகட்ட.
அப்போது அங்கு வந்தமர்ந்தான் வேலு. அவனை பார்த்த பூர்ணா,
“ரொம்ப நிம்மதியா இருக்கேன் வேலு” என்க.
“சந்தோசமாக இருக்கேன்னு சொள்ளுலே! மாத்தி சொல்றவ”.…. என்று வேலு சொல்ல.
“இல்லவே! நிம்மதியா தான் இருக்கேன்” என்று சொன்னதோடு அவன் தோள் சாய.