வெளியே சென்று வந்த பிரதாபன் மதிய உணவு முடியவும் வினயச்சந்திரனோ கைனகரி சென்றான்.
“இருந்தாலும் உங்க அச்சச்சன் வீட்டைக் கொடுத்திருக்கக் கூடாது சேட்டா. அடமானம் வச்சா கூட அவங்க அங்க தங்க முடியாதப்போ எப்படி அவரை விட்டீங்க?” என்றான் வினயன் கோபமாக.
“கண்டிஷன் போட்டு கடன் தரவர்கிட்ட வேற என்ன எதிர்ப்பார்க்க முடியும்? என் அச்சனை காப்பாத்த உடனே பத்து லட்சம் வேணும்ன்றப்ப எங்கச்சச்சன் அவர் உயிரைக் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார் வினயா. தரவாட்டையெல்லாம் யோசிச்சிருக்க மாட்டார், எப்படியும் அச்சன் பொழச்சிடுவார் நான் படிச்சு முடிச்சு மீட்டுடுவேன் நினைச்சிருப்பார். ராஜகோபாலனுக்கு எப்படியாவது அடுத்தவங்க சொத்து வேணும்னு நினைக்கும்போது அவங்க லீகலாவோ இல்லை நேர்மையாவோ நடக்க மாட்டாங்க” என்றான் பிரதாபன்.
இருவரும் நடந்தபடி ஆலப்புழாவில் படகுகள் நிறுத்தி வைத்திருக்குமிடம் சென்றடைய, ஷிபு வந்தான்.
“ஞான் போகும்டா ஷிபு. நீ வீட்டில் போ” என்று ஷிபுவை அனுப்பி வைத்தவன் அவர்களின் சிறிய கட்டுவள்ளத்தில் வினயச்சந்திரனோடு பயணம் செய்தான்.
“போற வழியில ஒருத்தரைப் பார்க்கணும் வினயா. அப்புறம் நேரம் ஆகிடும், ராவிலதான்(காலையில்) நம்ம ஊருக்குப் போகலாம். ஷரியானோ?” என்று கேட்க
“சரி சேட்டா” என்றான் கொஞ்சம் சுணக்கமாக. பிரதாபனின் கவனம் அங்கில்லாததால் வினயச்சந்திரனின் சுணக்கம் தட்டுப்படவில்லை.
‘முன்னாடி இவரோட பேசணும்னு நினைக்கிறப்ப வீட்ல விட்டுட்டுப் போவாரு, இப்போ வீட்ல எனக்கு ஆளிருக்கும்போது இவரோட சுத்த வேண்டியிருக்கு. பாவம்டா வினயா நீ!’ என்று சுய வருத்தத்தில் இருந்தான்.
பிரதாபன் கட்டுவள்ளத்தில் பயணித்து கைனகரிக்கு முன்பே ஆலப்புழாவின் காயல் பரப்பில் படகினை நிறுத்தினான். அங்கே சுற்றுலா வந்த மக்கள் எல்லாம் புகைப்படம் எடுக்க சிறிது நேரம் படகுகள் நிற்கும், திரைப்பட படப்பிடிப்பு கூட அவ்விடம் நடக்கும். அங்கே ஷிகாரா ஒன்று வந்து நிற்க, பிரதாபன்
“ஸ்டீபனேட்டா!” என்று அந்த ஷிகாராவில் நின்று கையசைத்த நபரை அழைத்தான்.
“நான் பேசிட்டு வரேன்” என்று கட்டுவள்ளத்திலிருந்து இறங்கி அங்கிருக்கும் சிறு பாலத்தில் நடந்து ஷிகாராவுக்குப் போனான். வினயச்சந்திரன் அண்ணன் தன் மீது கோபமாக இருப்பதால் அவனுக்குப் பேசலாமென்று அழைத்தான். சிறு பாலத்தில் உட்கார்ந்தபடி நீரில் கால்களை விட்டான். வானமும் நீரும்
“ஹலோ ஜெய்ய்ய்ய்ய்” என்று ராகமாய் அண்ணனை அழைக்க
“என்னடா பட்டி?” என்றான் ஜெய்ச்சந்திரன் கோபமாக.
“ஏன் ஜெய் கோவமா இருக்க?” பாவமாக வினயன் கேட்க
“வர வர ரொம்ப ஊர் சுத்துற நீ? சொல்லாம போறளவுக்கு என்ன உனக்கு அவசரம்? எந்த ப்ரண்டைப் பார்க்க போன? எங்க போன?” என்று வரிசையாகக் கேள்விகள் வர
“ஜெயேட்டா!” என்று அவனை நிறுத்தியவன்
“ஒன், டூ, த்ரீ டேய்ஸ்ல அங்க இருப்பேன். சத்தியம்” என்றான் ராகமாக. அண்ணனிடம் எதையும் மறைத்ததில்லை, கொஞ்ச நாள் கழித்தாவது சொல்லிவிடுவான், அண்ணன் என்ற மரியாதையிருந்தாலும் மிகவும் நெருக்கமான நட்பு அவர்களுக்குள். தனக்கும் காதல் வந்துவிட்டதை பகிர மனம் பறந்தாலும் ஜெய்க்குப் பொறுமை கிடையாது. உடனே பெண் கேட்கிறேன், காதலித்தால் கல்யாணம் தானே? என்று ஆரம்பிப்பான்.
பிரதாபனிடம் பக்குவமாக தன் விஷயம் பகிர்ந்து, அவனை சம்மதிக்க வைத்து சந்தோஷமாக தன் திருமணம் நடக்க கனவு கொண்டவன்,
“நான் ஆலப்புழாவுலதான் இருக்கேன் ஜெய். மூணு நாள்ல அங்க வந்துடுவேன், வந்து உனக்கு எல்லாம் சொல்றேன்.” என்றிட
“இல்லடா, அப்புறம் ஊர்மி எப்படி இருக்கா? எப்போ காஞ்சிபுரம் போற?” என்று விசாரிக்க
“போகணும்னா நீ இங்க வரணும், அப்பாவை தனியா விட்டு எங்க போறது? ஊர்மிக்கு டெலிவரி டேட் சொல்லிட்டாங்க, இன்னும் ரெண்டு வாரமிருக்கு” என்று வீட்டு செய்திகள் பேசி வைத்தான்.
பிரதாபன் இருபது நிமிடத்தில் திரும்பினான். அவன் முகம் பிரகாசித்தது. கண்களின் சிரிப்பைக் கண்டுகொண்டான் வினயன்.
“என்ன சேட்டா? எதாவது சந்தோஷமான விஷயமா?” என்ற வினயனின் கேள்வியில்
“வினயா! நீ எங்க பூவம்பள்ளில் தரவாட்டைப் பார்த்ததில்ல அல்லே?” என்றான் கட்டுவள்ளத்தை மெல்ல செலுத்தியபடி.
“இல்லையே சேட்டா, வெளியே பார்த்துருக்கேன்”
“சீக்கிரம் உள்ள போய் பார்க்கலாம்.” என்றான் நிம்மதி பெருமூச்சோடு. மின்மினிக்கு அழைத்தவன்,
“அச்சச்சா! நம்ம தரவாடு நமக்கு சீக்கிரம் வரப்போகுது. இந்த மாசத்துல நம்ம சுத்தம் பண்ணி பெயிண்ட் வேலை முடிச்சிடலாம். நம்ம குடிபோக நல்ல நாள் பாருங்க, நம்ம உன்னிமா கல்யாணம் அங்கதான் திருவிழாவா நடத்தப்போறோம்” என்று பிரதாபன் பேச பொன்னச்சன் கண்களில் கண்ணீர்.
“நிஜமாவா பிரதாபா?” என்றார் நம்பமுடியாமல். அவரின் தலைமுறையினர் தந்த தரவாட்டை அவருக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தர முடியாது போகுமோ என்று தலையிறக்கத்திலும் நித்தமும் பேரன் மீது இத்தனை சுமை வைத்துவிட்டோமே என்று நொந்த மனதுக்கு இந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்க எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. பிரதாபனை நம்பினார்.
அவரிடம் பேசியதும் மெல்ல அந்த கட்டுவள்ளம் கைனகரி கிராமம் நோக்கிப் பயணித்தது. அவர்கள் கைனகரி நெருங்கும்போது மாலை கவிந்துவிட்டது.
“எப்படி சேட்டா காலையில கூட அவர் தர முடியாதுனு சொன்னார்?” வினயன் மெய்யான மகிழ்வில் கேட்க
“என் தரவாட்டை அவர் என்ன தரது? ஒரு சான்ஸ் கொடுக்கத்தான் கேட்டுப் பார்த்தேன் வினயா. என் அச்சனோட கூட்டுக்காரன்னு நினைச்சேன், அவருக்கு அந்த மரியாதையைக் காப்பாத்திக்க தெரியல. நான் அப்போ காலேஜ் கூட முடிக்கல, எப்படியோ அச்சனை காப்பாத்தைப் பணம் வந்தா போதும்னு நினைச்சேன், அவர் ஏன் வீட்டைக் கொடுத்ததான் கடன் கொடுப்பேன் சொன்னார்னு எல்லாம் யோசிக்கல. அச்சன் போகவும்தான் எல்லாம் புரிஞ்சது.”
“அப்போ எப்படியோ டிரிட்மெண்ட்க்குப் பணம் கிடைச்சதுனு சந்தோஷப்பட்டேன். கொஞ்ச வருஷம் கழிச்சு அவரோட நோக்கம் புரிஞ்சப்ப எப்படி பணம் வந்ததுனு யோசிச்சேன். யாரும் வளர கூடாதுனு எண்ணமில்ல, பச்ஷே திடீர்னு வளர்ந்தா நமக்கு சோத்யம்(கேள்வி) வருமல்லே?” என்றதும் வினயச்சந்திரன் தலையசைத்து கவனமாகக் கேட்டான்.
“எண்ட அம்மே” என்று வினயச்சந்திரன் அதிர்ச்சியாகப் பார்க்க
“எண்ணெய் ஆட்டுற செக்கும் இரண்டு மூணு ஹவுஸ்போட்டும் வச்சிருக்க ஆளால எங்கனே இவ்வளவு பணம் வச்சிருக்க முடியும்? அதுவும் அப்போ அவர் துபாய்க்கு அடிக்கடி போய்ட்டு வந்திட்டு இருந்தார். அப்படித்தான் அவ்வளவு பணம் வச்சிருந்திருக்கார், சிலர் அப்போ லாட்டரினு சொன்னாங்க. இன்னிக்கு ஈவினிங்’குள்ள அவர் ஒரு முடிவுக்கு வரலன்னா ஈடி ரைட் போகும். நம்ம தரவாட்டை வச்சிருக்கிறதுக்கு அவரா லீகலா ரைட்ஸ் கிடையாது. எல்லாம் விசாரிக்கும்போது மாட்டுவார். அச்சச்சன் கிட்ட கொடுத்த பணத்துக்கு எங்ககிட்ட ஹாஸ்பிட்டல் ரிசிப்ட் இருக்கு, அவருக்கு அந்த பணத்துக்குக் கணக்கு கிடையாது. அதுக்கு மாட்டலன்னா கூட இப்போ அவர் எப்படியும் மாட்டுவார்” என்றிட
“இன்னும் அவர் என்னை அலையவிட்டார்னா ஐடி ரெய்ட் அவர் ஆபிஸ்ல நடக்கும். ஆலப்புழா எம்.பி எனக்குக் க்ளோஸ், இன்னும் இல்லாத கேஸ் கூட போடலாம், அதுக்கு விடமாட்டார்னு நினைக்கிறேன். அவர் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கார், எப்படியும் எல்லாத்தையும் சரி செய்ய பார்ப்பார்” என்று பிரதாபன் சொல்ல, அவனின் அரசியல் சகவாசமெல்லாம் ஏன் என்று விளங்கியது.
“இதை முன்னாடியே பண்ணாம ஏன் சேட்டா லவ்வரப் பார்க்கிற மாதிரி உங்க வீட்டைப் பார்த்து பீல் பண்ணிட்டு இருந்தீங்க?” வினயன் ஆற்றாமையாகக் கேட்க
“ஏடா மோனே! லவ்வரா?” என்று சிரித்த பிரதாபனுக்குத் தாரிணியின் எண்ணம்.
“அவர் ஏமாத்த நினைச்சாலும் அவர்கிட்ட நாங்க பணம் வாங்கினது உண்மையில்லையா? அந்த பணத்தைக் கொடுத்துட்டு எதுவானாலும் பேசணும் இருந்தேன். பணமிருக்கு, எனக்குன்னு பேச நாலு பேர் இருக்காங்க. இருபது வயசு பிரதாபன்கிட்ட பணமுமில்ல, அவனுக்குப் பேச ஆளுங்கமில்லையே?” என்று பிரதாபன் கசப்பான புன்னகையோடு வினயனைப் பார்க்க, வினயனுக்கு அவனை நினைத்து வருத்தமாக இருந்தது.
“அப்போ இதுக்காகத்தான் கட்சியில இருக்கீங்களா?”
“இதுக்காகவும்” என்றான்.
“நமக்கு ஒன்னுமேயில்லாதப்போ மனுஷங்களை நம்ம தெரிஞ்சிக்கலாம் வினயா. அதுவும் எல்லாமிருந்தும் இல்லாம போறப்போ இன்னும் நல்லா தெரிஞ்சிக்கலாம், என் எதிரி கூட அப்படியொரு நிலைமை வர வேண்டாம்” என்றான் ஆழமான குரலில்.
“எங்க கேசவன் தரவாட்டுல இருந்தப்போ எல்லா பசங்களும் என்னோட ப்ரண்டா இருப்பாங்க, எங்க வீட்டுக்கு விளையாட வருவாங்க. அச்சம்மா எல்லாரையும் நல்லா கவனிப்பாங்க, ஆனா அவன் போனப்போ உன்னி தவிர யாரும் எனக்கு ஆறுதல் சொல்லல. அவனும் கூட அவன் அச்சன் விஷயத்தில் எனக்கு சப்போர்ட் பண்ணல” என்றான் அன்றைய நாட்களின் வருத்தத்தில்.
“அதுவரைக்கும் எல்லாரும் வேணும்னு நினைச்சிருந்தேன். அதுக்கு அப்புறம் யாரும் வேண்டாம்னு தோணிச்சு. தேவைக்கு மட்டும் பேச்சு” என்றவன் கைகளில் லாகவமாக கட்டுவள்ளத்தை செலுத்தின.
அதுவரைக்கும் மனிதர்கள் தேவையென்று பேசியவன் அவனின் தேவைகளுக்கு மட்டும் மனிதர்களிடம் பேசினான். தேவை தாண்டி வேறு எந்த உணர்வையும் யாரிடமும் வளர்த்துக்கொள்ளவில்லை, அவனுக்கென ஒரு எல்லை, அதனுள்ளே இருந்தவன் யாரையும் அனுமதிக்கவில்லை.
பிரதாபனுக்கு வீடு கிடைத்துவிடும் என்று பெரும் நிம்மதி வந்திருக்க வெகு வருடங்கள் கழித்து மனம் திறந்தான். இரவு ஏழு மணி ஆகிவிட கட்டுவள்ளத்தில் இரவு சமையலுக்குத் தேவையான பொருட்கள் இருக்க, வினயச்சந்திரனை சமைக்க சொன்னான். ஏற்கனவே அவனிடம் கேட்டுத்தான் எல்லாம் வாங்கிருந்தது.
“எதாவது ஹெல்ப் வேணுமா?” பிரதாபன் கேட்க
“சேட்டா! என் சமையலை நானே பாராட்டக் கூடாது. இருந்தாலும் உண்மை சொல்லணுமில்லயா? என் சாப்பாடு சாப்பிட்டா உங்க தரவாட்டை எனக்கே எழுதிகொடுத்துடுவீங்க” என்று வினயன் சொல்ல பிரதாபன் வாய்விட்டு சிரித்தான்.