கைனகரியின் தெற்குப் பகுதி நோக்கி பிரதாபனின் கட்டுவள்ளம் பயணித்தது. வினயன் கட்டுவள்ளத்தில் முன்னே நின்றபடி கண்முன் தெரிந்த காட்சிகளை நிறைத்து புத்துணர்வோடு நின்றான். காதல் கை கூடிய மகிழ்ச்சி, பிரதாபனுக்கும் தாரிணியைப் பிடிக்கும் என்று தெரிந்ததால் வந்த உவகை, வரப்போகிற மின்மினியின் பிறந்த நாள் என்று கொண்டாட்டங்களை எல்லாம் நினைத்து சந்தோஷமாக நின்றான்.
கட்டுவள்ளத்தின் வேகம் மெல்ல மெல்ல குறைந்தது. தென்னைமரங்களின் நிழல்களும் நீலோற்பலம் மலர்களின் இலைகளும் நீரில் சந்தித்து நலம் விசாரிக்க, மேகமும் வானமும் நிழலாய் நீரில் மிதந்தன. தாமரை இலைகள் தண்ணீரில் மிதக்க மலர்ந்த பூக்களின் இதழ்கள் நீரில் மிதந்து கிடந்தன. கட்டுவள்ளம் நிலத்தின் ஓரமாய்ப் பயணிக்க ஓரமெல்லாம் காட்டுச்செடிகள்.
“சகாவு(காம்ரேட்) ஜேக்கப் எங்க கட்சிக்காரர்தான். அவர் தாத்தா சகாவு சாமுவேல் எஸ்டேட்காரங்களுக்கு எதிரா போராடி மக்களுக்கு நல்ல சம்பளம் வாங்கிக்கொடுத்தவர். ஜேக்கப் ரொம்ப வருஷமா துடுப்புப் போடுறவர், இங்க ஆலப்புழாவுல போட் ரேஸ் நடக்குமல்லே? அது சம்மந்தமா அவரைப் பார்த்துட்டுப் போய்டலாம்” என்று அவ்விடம் வந்ததற்குக் காரணம் சொன்னான்.
“ஓணத்துக்கு இன்னும் நாலு மாசம் கிட்ட இருக்கே சேட்டா?” வினயச்சந்திரன் இவ்வளவு சீக்கிரமா என்று ஆச்சரியத்தில் கேட்க
“எந்தோ? நாலா? மூணு மாசம் கிட்டதான் இருக்கு. மூணு மாசமும் ப்ராக்டீஸ் பண்ணினாதான் வள்ளங்களி’ல ஜெயிக்க முடியும். சுண்டன் வள்ளம்(பறவையின் அலகு போல முன்பகுதி இருக்கும் படகு) செய்ய ஒரு வருஷம் ஆகும் தெரியுமா?” என்றவன் “பார்த்து கால் வச்சு இறங்கு டா” என்றபடி கட்டுவள்ளத்தை நிறுத்தினான். குயில்களின் சத்தமும், காலை நேர காற்றில் இயல்பாக பறவைகளின் சத்தம் கலந்திருந்தது.
நீரில் மரப்பலகைகளில் போடப்பட்டிருக்க நடந்து சென்றால் நிலப்பரப்பு. அங்குதான் சுண்டன் வள்ளம் செய்தனர்.
“ஏடா பிரதாபா, சுகமானோ?” என்று விசாரித்தான் சிவப்பு சட்டையும் வெள்ளை வேஷ்டியுமணிந்திருந்த ஜேக்கப் பள்ளத்துருத்தி.
பிரதாபன் ஜேக்கப்பைப் பார்த்துப் புன்னகைத்தவன் அவனிடம் வினயனை அறிமுகம் செய்துவைத்தான். பிரதாபனும் ஜேக்கப்பும் பேச, வினயனின் பார்வை அந்த நீண்ட சுண்டன் வள்ளத்தைச் சுற்றியது. நூறடிக்கும் மேல் இருக்கும் என்று பார்வையில் கண்டுகொண்டான்.
அவர்கள் பேசட்டும் என்று சுண்டன் வள்ளத்தைப் பார்வையிட்டவன் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவனிடம் பேச்சுக்கொடுத்தான். செருப்பின்றி அருகே வர சொன்னவனின் பெயர் கோபிகுட்டன். முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்தான்.
சுண்டன் வள்ளத்தில் முன்புறம் பறவையின் அலகினைப் போல் கூர்மையாக இருக்கும். 100 முதல் 138 அடி வரை நீளமாக இருக்கும். அதன் பின்பாகம் 20 அடி உயரத்தில் இருக்கும். வள்ளம் செய்ய அயனி மரம்(அஞ்சிலி), தேக்கு, கடம்ப மரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வள்ளத்தை ஆண்கள் மட்டுமே தொடலாம், அவர்களும் மரியாதையாக செருப்பணியாமலே வள்ளத்தைத் தொட வேண்டும். நீரில் ஊறாமல் இருக்க, மீன் எண்ணெய், தேங்காய் ஓட்டின் சாம்பல் முதலியவற்றை படகின் வெளிப்புறத்தில் பூசுவர்.
குட்டன் சொல்லிவிட்டு அந்த படகுக்குப் பாலிஷ் போட்டான். அவனை போல் இன்னும் ஏழெட்டுப் பேர் ஒவ்வொரு பகுதியாக அழகுப்படுத்த, மரத்துகள்கள் காற்றில் பறந்தன.
“துபாய்ல நல்ல ஏஜெண்ட் இருந்தா சொல்லுங்க, வினயனுக்கு நல்ல சம்பளத்துல அங்க ஜோலி கிடைச்சா நல்லாயிருக்கும்” என்றும் கேட்டிருந்தான். பிரதாபனை சிறு வயது முதலே ஜேக்கப்புக்குத் தெரியும், குட்டநாட்டுக்காரர்கள் என்பதால் சினேகம். வயலுக்கு வரும்போது நல்ல பழக்கம். கல்லூரியிலும் பிரதாபனின் சீனியர் அவன். பிரதாபனின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அறிந்தவன். பிரதாபன் உதவி கேட்க மறுக்காது ஒத்துக்கொண்டான்.
“பின்னே ஆஹ் பெண்ணு பெயரந்தா? ஆஹ்ன் தாரிணி. அவளோடு சம்சாரிக்குமோ? (அவகிட்ட பேசுவியா?)” என்று ஜேக்கப் கேட்க, ‘இல்லை’ என்று தலையாட்டியவன் பதில் சொல்லவில்லை. பிரதாபனை தெரியும் என்பதால் ஜேக்கப்பும் அதிகம் கேட்கவில்லை.
“அவளை மிஸ் செய்யண்டா மோனே” என்று மட்டும் சொல்ல, பிரதாபன் அதற்கும் பதில் சொல்லாது புன்னகைத்தான்.
இருவரும் வினயன் இருந்த இடம் நோக்கி நடந்தனர். “எந்தாடா?” என்றபடி இதனை வேடிக்கைப்பார்த்த வினயனின் அருகே வந்தான் பிரதாபன்.
“இப்போதான் சேட்டா நான் படகு செய்றதைப் பார்க்கிறேன். டீவியில போட் ரேஸ் பார்த்துருக்கேன். செமையா பண்றாங்க, இவ்வளவு வேலையிருக்குனு எனக்குத் தெரியல” என்றான்.
“நாட்டில் எவிட?(ஊர்ல எங்க)” என்று ஜேக்கப் வினயச்சந்திரனைக் கேட்க
“இடுக்கி சேட்டா” என்றான்.
“அங்க இதெல்லாம் பழக்கமில்லல, அதான் புதுசா பார்க்கிறான்” பிரதாபன் சொல்ல
“வள்ளங்களி சமயத்துல இவிட வரணும் வினயா” என்று ஜேக்கப் அழைப்பு விடுத்தான்.
“கண்டிப்பா சேட்டா” வினயன் ஆவலாக சொல்ல, ஜேக்கப் இருவருக்கும் கட்டஞ்சாயா கொண்டு வர சொல்ல சூடாய் ஏலக்காய் மணத்தோடு இருந்தது சாயா.
அதனை பருகியபடி பிரதாபனும் வினயனும் நிற்க, ஜேக்கப் வினயனைப் பார்த்து,
“செம்பகஸேரியோட ராஜா தேவ நாராயணா காலத்தில நிறைய போர் நடந்தது. அப்போ ஆலப்புழா தோக்குற நிலைமை வந்துச்சு, நம்ம படைபலத்தைக் காட்டணும்னு போர்ல வள்ளத்தை யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. போர் முடிஞ்ச பின்னாடியும் நம்ம கலாச்சாரத்தையும் வலிமையும் காட்ட வள்ளங்களி நடத்த ஆரம்பிச்சுட்டாங்க” என்றான்.
ஸ்தபத்யா வேதத்திலும் பழைய ஏடுகளிலும் படகுகள் பற்றி குறிப்புகள் இருக்க, அரசனும் அதனை பயன்படுத்திப் போரில் ஜெயித்தான். அது கேரளத்தின் கடற்படை பலத்தையும் கட்டிடக்கலையின் வலிமையும் காட்டுவதாக இருந்தது.
“அடிபொலி சேட்டா” என்ற வினயன் “நான் நேரு ட்ராபி போட் ரேஸ் டீவில பார்த்துருக்கேன், நேருஜிதான் ஆரம்பிச்சி வச்சார்னு நானா நினைச்சிகிட்டேன்” என்று சிரித்தான்.
“நேரு ட்ராபி ரேஸ் நேருஜிதான் ஆரம்பிச்சு வச்சார். அவர் இங்க வந்தப்போ வள்ளங்களி பார்த்துட்டு ஜெயிச்சவங்களுக்குப் பரிசு கொடுத்தார், அதிலிருந்து வருசம் வருசம் அவர் பேர்ல நடக்குது. ஆறன்முளா, புன்னமடா வள்ளங்களி எல்லாம் ரொம்ப பேமஸ்” என்றான் பிரதாபன்.
“எங்கண்ணா கூட ஆறன்முளா வள்ளங்களி பத்தி சொல்லியிருக்கான்” வினயனின் அண்ணன் ஜெய்ச்சந்திரனும் கலாச்சாரத்தை மிகவும் மதிப்பவன், ஆலப்புழாவில் இருக்கும் அவன் நண்பர்களோடு படகுப்போட்டி காண முடிந்தபோதெல்லாம் வந்துவிடுவான்.
“உன் ஏட்டா சொன்ன மாதிரி ஆறன்முளாவுல நடக்குற வள்ளங்களி ட்ராபிக்காக நடக்குற மாதிரி தீவிரமா இருக்காது, அங்க வஞ்சிப்பாட்டோட அந்த ஆறன்முளா கிருஷ்ணசாமியைப் பத்தி பாடி வேற விதமா நல்லாயிருக்கும்”
நெருப்பில் இரும்பை அடித்து சுண்டன் வள்ளத்தில் தேவையானவற்றை செய்தனர். தகித்த தீயின் ஜூவாலை அத்தனை பிரகாசமாக இருந்தது. காலை நேர அமைதியோடு அவ்விடம் ஒரு மென்பரபரப்போடு இயங்கியது. கடைசி கட்ட வேலைகள் மட்டுமே இருக்க, சுண்டன் வள்ளத்தின் ஒவ்வொரு பகுதியையும் அழகுற செதுக்கினர். சிறு சிறு மரச்சிற்பங்களும் சேர்த்து அலகு பகுதியினை மேம்படுத்தினர்.
“எல்லாம் இதே மாதிரி வள்ளம்தானா சேட்டா?” இருவரிடமும் வினயன் பொதுவாகக் கேட்க,
“இல்லை, இது சுண்டன் வள்ளம். இது போலே சுருளான் வள்ளம், கொச்சுவள்ளம், ஓடிவள்ளம், வெப்புவள்ளம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு காரியத்துக்கு ஒரு வள்ளம், நம்முட நாட்ல எல்லாத்துக்கும் வள்ளம்தானே? இடுக்கில ஜீப் போல” ஜேக்கப் சொன்னவன்
“பிரதாபா! நீ எப்போல் ப்ராக்டீஸ் வர? நம்ம போட் க்ளப் தானே? இல்லை தாமரகுளமா ப்ரீடம் க்ளப்பா?” என்று தெளிவுப்படுத்தக் கேட்டான்.
பிரதாபன் யோசித்து சொல்கிறேன் என்றவன் வினயனோடு கட்டுவள்ளத்தில் மீண்டும் ஆலப்புழாவின் மையப் பகுதி நோக்கிப் பயணித்தான்.
“என்ன சேட்டா? நீங்களும் போட் ரேஸ்ல கலந்துப்பீங்களா?” என்று வினயன் விசாரிக்க
“இரண்டு மூணு வருசம் முன்னாடி வரை கலந்துகிட்டேன், அப்புறம் வேலை பிசில கலந்துக்க முடியல. கைனகரி க்ளப்’ல நானும் மெம்பர்தான், இந்த முறை தாமரகுளம் சார்பாவும் வள்ளங்களி’ல கலந்துக்க கூப்பிட்டு இருக்காங்க. ஜேக்கப்பேட்டா வேற கூப்பிடுறார், அதான் யோசிச்சு சொல்றேன் சொல்லிட்டேன்”
“நீங்க அவரோட போகலன்னா கோச்சுக்க மாட்டாரா?”
“அதெல்லாம் அவர் புரிஞ்சிப்பார். தாமரகுளம் என் ஊர், அதே நேரம் நான் கைனகரி சார்பா கலந்துகிட்டாலும் நான் முன்னாடி நின்னு துடுப்புப் போட முடியாது, என்னை விட பெரியவங்க இருக்காங்க. தாமரகுளம்ல நான் முன்ன நிக்கலாம், பார்ப்போம்.” என்றான்.
“என்ன சேட்டா ஒரு கேம்தானே? எங்க பிடிக்குதோ பண்ணுங்க” என்ற வினயனின் இயல்பான பேச்சில் லேசாய்ப் புன்னகைத்தவன்,
“ஏடா கேம்தானா? நேரு ட்ராபி’ல யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு கொச்சி’ல பயங்கர மரியாதை கிடைக்கும். கட்சியிலும் அவங்களுக்கு செல்வாக்குண்டு. நிறைய இருக்குடா மோனே” என்றான்.
“அப்போ நீங்க பாலிடிக்ஸ்’ல தீவிரமா இருக்கீங்களா சேட்டா? நான் உங்க தரவாட்டுக்காகன்னு மட்டும் நினைச்சேன்” என்றிட
“எனக்குக் காலேஜ் படிக்கும்போதே இதுல இன்ட்ரஸ்ட் உண்டு. நம்முடே நாட்ல தானே புன்னபரா-வயலார் போராட்டம் நடந்தது. அரசியலும் புரட்சியும்தான் நிறைய மாற்றம் வர காரணமா இருந்திருக்கு. நீ என்ன அரசியல்ல இருந்து ஒதுங்கியிருக்கியா?” கிண்டலாக பிரதாபன் கேட்க
“நானெல்லாம் நியுஸ்ல அரசியல் பார்க்குறதோட சரி, வோட் போடுறது மட்டும்தான் என்னோட அதிகபட்ச அரசியல் தலையீடு.”
“ஓஹ் பின்னே நீ கேரள சிஎம் ஆக நினைக்கிறதா நசீரிக்கா சொன்னாரே வினயச்சந்திரன்” என்று பிரதாபன் சிரிப்பை அடக்கி சொல்ல,
“ஹஹா! அது சும்மா சொன்னேன் சேட்டா.”
“தமாஷுக்காரன் டா நீ!” என்று சொல்லி பிரதாபன் சிரிக்க
“இப்படி அடிக்கடி சிரிங்க சேட்டா, எல்லா பிரச்சனையும் சரியாகிடும். சரியாகிடுச்சுன்னா தாரிணி கிட்ட பேசுவீங்களா?” என்று கேட்க, பிரதாபனின் சிரிப்பு சட்டென்று நிற்க, கோபத்தோடு
“வேண்டாத்த ஜோலி செய்து, என்னே தேஷியப்படுத்தரது” என்றான். (தேவையில்லாத வேலை பார்த்து என்னை கோவப்படுத்தாத)
“சரி சரி உடனே பல்லைப் பூட்டி சிரிப்பை லாக் பண்ணாதீங்க.” என்று வினயன் சொன்னாலும் தாரிணி பற்றி ஜேக்கப்பும் பேசியிருக்க, வினயனும் பேச உள்ளாடும் உணர்வினை வெளிக்காட்ட முடியாது உள்ளுக்குள் தவித்தான் பிரதாபன்.
இருவரும் ஆலப்புழா வந்து சேர, ஷிபுவிடம் கட்டுவள்ளத்தை ஒப்படைத்துவிட்டு பிரதாபன் அவன் காரில் தாமரகுளம் செல்ல ஆயத்தமாக, வினயன் காரை எடுக்கிறேன் என்றான். நேற்றிலிருந்து பிரதாபனே வள்ளத்தை செலுத்தியிருக்க, வினயன் அவனுக்கு ஒய்வு கொடுத்தான்.
“ராஜகோபாலன் பணத்தைக் கொடுத்துட்டு நம்ம பத்திரத்தை வாங்கிக்க சொல்றானாம். நீ எங்க இருக்க?” என்று கேட்க
“இன்னும் ஒன் அவர்ல இருப்பேன் சேட்டா. நீங்க உன்னிகிட்ட சொல்லிடுங்க” என்றான். நேற்று ஸ்டீபனிடம் பேசி ஆட்களை வைத்து மிரட்டியது வேலை செய்திருக்கிறது என்று புரிந்தது. ஒத்துக்கொண்டால் அப்படியே விடலாம் இல்லை அவரின் அத்தனை பொய் புரட்டுகளையும் வெளியே கொண்டு வரலாம் என்று நினைத்திருக்க, ராஜகோபாலனுக்குத் தரவாட்டினை தர மனதில்லாவிட்டாலும் தொழிலும், அவர் செய்த மற்ற மோசடிகளையும் தோண்டினால் மாட்டிக்கொள்வார், பெண்ணுக்குத் திருமணம் வைத்திருக்கும் சமயத்தில் வேண்டுமென்றே பிரதாபன் இப்படி செய்வதாக நினைத்தவர் வேறு வழியின்றி பணத்தை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார்.
வினயச்சந்திரன் சாலையில் கவனமாக இருந்தவன்,
“வேகமாக போகணுமா சேட்டா?” என்று கேட்க
“வேண்டா, நீ நார்மலா போ” என்றவன் போனில் சிலருக்கு அழைத்துப் பேசினான். ஒரு மணி நேரத்துக்குக் கொஞ்சம் கூடுதல் நேரமாகியிருக்க, வினயனும் பிரதாபனும் வீடு வந்து சேர்ந்தனர். வினயனை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு பொன்னச்சன், நசீரை அழைத்துக்கொண்டு தாமரகுளத்தின் ப்ரசிடெண்ட் இல்லம் சென்றான் பிரதாபன். போகும்போதே வீட்டிலிருந்து ராஜகோபலனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியும் முதலுமாக எடுத்துக்கொண்டான்.
ஊரில் பொதுவான மனிதர்களை வைத்துப் பேசி, பணத்தைக் கொடுத்துப் பத்திரத்தைப் பெற்றான். பிரதாபனும் அச்சச்சனும் அச்சனும் எழுதிக்கொடுத்த பத்திரங்கள் இரண்டையும் வாங்கி எல்லார் முன்னும் கிழித்துப் போட்டான். பணம் பெற்றதற்கு ராஜகோபாலன், உன்னியிடம் முத்திரைத்தாள்களில் கையெழுத்து வாங்கியவன் சாட்சிக்கு அங்கிருந்தவர்களிடமும் கையொப்பம் வாங்கினான். இனிமேல் ராஜகோபாலனுக்கு பிரதாபன் வீட்டினர் பணம் தர தேவையில்லை என்றும் கணக்குகள் முடிக்கப்பட்டன. இன்னும் ஒரே வாரத்தில் பூவம்பள்ளில் தரவாட்டினை காலி செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
“உங்களோட ஒரு ஊசி கூட என் தரவாட்டுல இருக்கக் கூடாது உன்னி. என் தரவாடு எப்படி உங்ககிட்ட வந்துச்சோ அப்படியே வேணும். ஒரு வாரத்துல ஒரு நிமிஷம் கூட அதிகம் கிடையாது” என்று கடினமான குரலில் சொல்லிவிட்டு பொன்னச்சனுடனும் நசீருடனும் வீடு வந்தான்.
************
எல்லாரும் சென்றதும் வீட்டில் வினயனும் மின்மினி மட்டுமே இருந்தனர். வினயச்சந்திரன் குளித்து உடைமாற்றி வர, சுட சுட தயாராகியிருந்தது காலை உணவு.
“உன் ஏட்டன் என்ன சாப்பிட்டாலும் வாயைத் திறந்து சொல்ல மாட்டார், ஆனா உனக்குத் தெரியுமா நேத்து என் மீன்குழம்பு சாப்பிட்டு நல்லாயிருக்குனு சொல்லிட்டார்” பெருமையாக வினயன் பகிர
“எந்தோ? மீன் கறியா?”
“ஆமா, நானும் அவரும் கட்டுவள்ளத்துல நைட் ஸ்டே பண்ணினோம். நாந்தான் சமைச்சேன்”
“நிங்கள் சமைக்குமோ?”
“மின்மினி என்னைப் பார்த்தா சமைக்குமோனு கேட்ட? நான் சமைச்சா இந்த ராஜாவெல்லாம் பொற்காசு கொடுப்பாங்களே அப்படி கொடுப்பாங்க.” என்று வினயன் சொல்ல
“உவ்வே”(கிண்டலாக பார்ப்பது, பொய் சொல்கிறார்கள் என்றெண்ணி) என்று உதடு சுழித்தாள் மின்மினி.
“சத்தியம் மினி” என்று வினயச்சந்திரன் சொன்னாலும் மின்மினியின் கிண்டல் பார்வை மாறிடவில்லை.
“ஏட்டன் இன்னும் சாப்பிடல” மின்மினி கவலையாக சொல்ல,
“உன் ஏட்டனுக்கு உங்க தரவாட்டை பார்த்தாலே பசியெடுக்காது” என்ற வினயன் நன்றாக உண்டு எழ, நசீர் அவனுக்கு வேலைகள் சொல்லிச் சென்றதாக மின்மினி சொல்ல அதனை செய்யத் துவங்கினான்.
களரிப்பள்ளி சுற்றிலும் அழகாய்ப் பாதை அமைக்க சொல்லியிருக்க, இந்த வேலையெல்லாம் வினயனுக்குப் பிடித்தவொன்று. மிகுந்த ஆர்வமாக அவன் செய்யத் தொடங்கினான். பெரும் கருங்கற்களை அந்த சதுர வடிவ பாதையில் சமமான இடைவெளியில் நிரப்பியவன், மீதியிருந்த இடங்களில் கூழாங்கற்களை போட்டான். பைப்பைத் திறந்துவிட்டு ஹோசிலிருந்து அந்த கற்கள் மீது தண்ணீர் பாய்ச்சினான்.
மின்மினி அவனிடம் “போகன்வில்லா செடி வைக்கணும்” என்று கேட்க
“அதுக்கென்ன வச்சிட்டா போச்சு” என்றவன் அவளோடு சென்று அந்த பெரிய பூந்தொட்டியைச் சுத்தம் செய்து, கத்தியை வைத்து செடியின் பின்பக்கம் நன்றாக சுத்தம் செய்து, சமமாக வெட்டி மண்ணைத் தட்டி தொட்டிக்குள் வைத்தான்.
பின் “அவிட வைக்கணும்” என்று மின்மினி சொல்ல,
“அப்போ ஹெல்ப் பண்ணு” என்றதும் மின்மினியும் வினயனும் அந்த தொட்டியைக் களரிப் பள்ளியில் முன்பக்கமாக வைத்தனர்.
“கொல்லாம்!” என்று அவன் அமைத்திருந்த பாதையைப் பார்த்து பாராட்டினாள் மின்மினி.
“மின்மினியே! உன் பர்த்டேக்கு என்ன ப்ளான்?” என்று வினயன் கேட்டபடி களரிப்பள்ளியின் வெளிவாசலில் இருக்கும் படிகளில் உட்கார்ந்தான்.
“நீ என்ன பண்ணு, உன் பர்த்டே அன்னிக்கு உன் ப்ரண்ட்ஸோட வெளியே போறேன், ஈவினிங்தான் வருவேன்னு சேட்டா கிட்ட சொல்லிடு. மின்மினியோட பர்த்டே முழுக்க என்னோடதான் இருக்க போறா” வினயச்சந்திரன் விழிகள் மின்மினியைக் களவாடி காதலாய், மிகுதியான ஆவலுடன் அவன் ஆவலைப் பகிர்ந்தான்.
“எந்தோ? கள்ளம்? ஏட்டன்கிட்டயா? நோ” என்று மறுக்க
“என் சக்கர இல்ல? என் வாவே இல்ல? ப்ளீஸ்டி. நான் உன் பர்த்டேக்கு நிறைய ப்ளான் வச்சிருக்கேன். அன்னிக்கு முழுக்க என்னோட இருக்கணும்னு உனக்கு ஆசையில்லையா? சொல்லு. வந்ததும் உன் ஏட்டன் கிட்ட நீ நம்ம விஷயத்தை சொல்லிடு” என்று வினயன் சொன்ன விதத்தில் மின்மினிக்கும் வினயச்சந்திரனோடு தன் பிறந்த நாளை கழிக்க ஆவல் பிறந்தது.
மின்மினி என்ன சொல்வாளோ என்று அவள் கண்களையே அவன் பார்க்க, அதிலும் அவனுக்கான ஆவல் தெரிய பரவசமாய் ஒரு உணர்வு.
“வரேன்” என்று மின்மினி சொல்ல, வினயச்சந்திரன்
“இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
அடி கண்ணே அழகு பெண்ணே” என்று உற்சாகமாக பாடிட, மின்மினி முகத்தில் வெட்கப்புன்னகை.
“எந்தோ? ஏட்டா கேட்டா அவ்வளவுதான்”
“உன் ஏட்டா அந்த ராஜகோபாலனை லெப்ட் ரைட் வாங்கிட்டு வர இன்னும் டைம் ஆகும்” என்ற வினயன் மீண்டும் விசிலடித்தான்.
“ஒன்னும் குழப்பமில்லா அல்லே?(ஒன்னும் பிரச்சனை இல்லை தானே?) மின்மினி தரவாட்டினை நினைத்து கவலையாக இருக்க,
“அதெல்லாம் சேட்டா எல்லாம் பார்த்துப்பார். நீ கவலைப்படாத” என்று சொல்லும்போதே வேனல்(வெயில் கால) மழை.
“மழா…” என்று மின்மினி தன் முகத்தை நனைத்த நீர்த்துளிகளைத் துடைத்தபடி சொல்ல