நம் உலகமே வீட்டில் தொடங்கி வீட்டில் முடிகிறது. உலகில் எங்கே சுற்றினாலும் இறுதியில் வீடு வருகிறோம். நமக்கென்று ஒரு இடம், நம் இடம்! அதுதானே வீடு.
ஓய்வெடுக்கவும் உரிமைகோறவும், வாழவும் அழவும் ஆனந்திக்கவும் எல்லாருக்கும் ஒரு வீடு தேவையாக இருக்கிறது. நம் சொந்தமாய் ஒரு சொத்து, சொத்து என்பதை விட வீடென்பது ஒரு உணர்வு!
பூவம்பள்ளில் வீடு பிரதாபனின் உணர்வில் கலந்தவொன்று. கல்லாலும் மண்ணாலுமான கட்டிடம்தான்! அம்மாவை பிரிந்த அவனுக்கு, அப்பாவின் துணை கிட்டாத அவனுக்கு வீடு என்பது ஒரு ஆறுதல், அடைக்கலம், அரவணைப்பு. மெல்ல எழுந்து வீட்டினை நனைத்த தூவலில் அவனும் நனைந்து, சமையலறைப் பக்கம் போனான்.
அவன் அச்சம்மாவின் ஆட்சி நடந்தமிடம், அவரின் இழப்பு அக்கணம் பலமாக தாக்கியது. அப்படியே நடந்து பின்பக்கமிருக்கும் ஆம்பல் குளம் வந்தான். அந்த ஆம்பல் குளம் மிகவும் பெரியது, ஏழெட்டு படிகள் கடந்துதான் கீழேயே இறங்கலாம். மிகவும் பழமையான, பிரமாண்டமான தரவாட்டில் மட்டுமே அப்படியான குளங்கள் உண்டு. பாசிபடர்ந்த படிகள் அத்தனையும் இப்போது சுத்தம் செய்யப்பட்டிருந்தன, பெய்துகொண்டிருந்த பெருமழை குளத்தை நிறையச் செய்ய, தலையில் சொட்டிய நீரோடு கடைசி படியில் உட்கார்ந்து காலினை நீரினுள் விட்டிருந்தான் பிரதாபன். உள்ளும் புறமும் குளுமை நிறைத்தது.
அவனுக்குப் பிடித்த இடம். அவன் நீச்சல் பழகியது இங்குதான். பெய்த மழையும் அவன் வீடும் பிரதாபனை நனைத்திருக்க, மீண்டும் முற்றத்திற்கு வந்து நின்றான். முற்றத்தில் கிடந்த பெரிய நாற்காலியில் ஈரத்தோடு சாய்ந்தமர்ந்தவனை, சட்டைப்பையிலிருந்த அலைப்பேசி கலைத்தது.
எடுத்துப்பார்த்தால் வினயச்சந்திரன். அப்படியே அழைப்பைத் துண்டித்தான். அழைப்பை எடுக்கவில்லையென்றதும், வினயன் குறுஞ்செய்திகளாக அனுப்பினான்.
‘சாரி சேட்டா! உங்களை ஏமாத்தணும்னு என் இண்டன்ஷன் இல்லை’
‘வந்த புதுசுல நான் மின்மினியைப் பார்க்கக் கூட இல்லை, மின்மினியை லவ் பண்ணி நான் அங்க வரல, உங்களை லவ் பண்ணிதான். ப்ச்.. இல்லை தாரிணி உங்களை லவ் பண்றானுதான் வந்தேன்’ குரல்வழியாக செய்திகள் அனுப்பிக்கொண்டே இருந்தான்.
‘ப்ளீஸ் சேட்டா! என்னை மன்னிச்சிடுங்க, அச்சம்மாவுக்கு நீங்க சொந்தம்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருந்தாலும், எனக்குப் பயமா இருந்தது. மின்மினி அவ பர்த்டே அன்னிக்கு உங்ககிட்ட சொல்ல இருந்தா, அன்னிக்குக் காலையில கூட இதை சொல்லத்தான் நான் வந்தேன். டைமிங் மிஸ் ஆகிடுச்சு’
வினயனின் செய்திகளைக் கேட்டாலும் பிரதாபனின் மனம் அத்தனை இலகுவில் சமாதானம் ஆகவில்லை. பதில் பேசாமல் விட்டான்.
வினயன் பிரதாபனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சோகமாகக் காத்திருக்க, காஞ்சி சந்தோஷ செய்தியைக் கொடுத்தது. வினயனின் அண்ணன் ஜெய்ச்சந்திரனுக்கு மூன்றாவதாக குழந்தைப் பிறந்திருந்தது, வினயனுக்கும் பாலச்சந்திரனுக்கும் ஒரே சந்தோஷம். பாலச்சந்திரனுக்கு அன்றே ரெயிலில் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்தான் வினயன். பாலச்சந்திரன் பேரனைப் பார்த்துவிட்டு அடுத்த நாளே கிளம்பிவிட, ஜெய் மனைவிக்குத் துணையாக அங்கேயே ஒரு வாரம் இருந்தவன் தேவிகுளம் வரும்போது, மகளை அவனோடு அழைத்து வந்தான்.
இரண்டாவது மகனும் சிறு குழந்தை. பிறந்த குழந்தையையும் கவனிக்க வேண்டும், சுஜாதாவை இந்த வருடம் பள்ளிச் சேர்க்க வேண்டும், அதைவிட வீடு மனைவியும் பிள்ளைகளும் இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. வீட்டிற்கு அழைத்து வர, சித்தப்பாவைக் கண்டு சுஜாதாவுக்கு ஒரே சந்தோஷம்.
சுஜாதா வந்த ஓரிரு நாட்களில் ஊர்மிளாவின் பெற்ற அப்பாவும், அச்சுதன் பத்மினியின் மகனுமான பிரிகடியர் ராஜீவன் தேவிகுளம் வந்துவிட்டார். காலை முதல் பேத்தியோடு தன் வீட்டிலிருந்தவர், மாலை பேத்தியைத் தூக்கிக் கொண்டு தன் நண்பனின் வீடான பாலச்சந்திரனின் இல்லம் வந்தார்.
தேவிகுளத்திலும் அப்போதும் மழை லேசாய்த் தூறலைத் தொடங்கியது. அதற்குள் ராஜீவன் பேத்தியோடு வந்துவிட, பாலச்சந்திரன் நண்பனை காணவும்,
“என்னடா ஒரே தெருவில இருந்துட்டு உனக்கு இப்போதான் வர நேரம் கிடைச்சதா?” என்று கேட்டவர் நண்பனுக்குச் சூடாக கட்டஞ்சாயா கொடுத்தார். வினயன் உறங்கியிருந்த அண்ணன் மகளை அவன் அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தான்.
“நீங்க வீட்ல இல்லைனு ஜெய் சொன்னான், டேய் வினய்! எந்தா இது? தலையில காயம்.” என்று சிறு ப்ளாஸ்டர் ஒட்டியிருந்த வினயச்சந்திரனைப் பார்த்து ராஜீவன் கேட்க
“ஹ்ம்ம்! ப்ரேம ப்ராந்தனுங்க லிஸ்ட்ல இந்த சின்ன தடிமாடும் சேர்ந்திடுச்சு. அதான் அடி வாங்கிட்டு வந்திருக்கு” பாலச்சந்திரன் நக்கலாக சொல்ல,
“ஏடா மோனே! உங்கச்சன் சொல்ற மாதிரி லவ்வா? லவ் பண்ணினா அடிச்சவன் யாரு? இந்த ஜெய் ஒன்னுமே சொல்லல, டேய் நம்ம பையனை எவனோ அடிச்சிருக்கான், ஒன்னும் கேட்காம இவனை பேசுற?” ராஜீவன் நண்பனை கடிந்தார்.
“அடிச்சது உன் பையன் தான்” என்று பாலச்சந்திரன் சொல்ல, ராஜீவன் விழித்தார்.
“ஏடா! எனக்கு எல்லாம் மருமகனுங்க தானே? அது யாரு மகன்?”
“பூவம்பள்ளில் ஷங்கரன் மகன்” என்றதும் ராஜீவனுக்குச் சட்டென விளங்க, அவர் முகத்தில் ஒரு பளிச்சிடல்.
“ஷங்கரன் பையனா? அம்மா சொல்லிருந்தாங்க முன்னாடி அவனுக்குப் பையன், பொண்ணு இருக்கிறதா.” அவரின் சின்னம்மா மகனை பற்றி பேசவும் ராஜீவனுக்கு சிறு வயது நினைவில் வந்தது.
“என்ன மாமா? முதல்ல யாரு அடிச்சானு அடிக்க போற மாதிரி கேட்டுட்டு இப்போ உங்க தம்பி பையனதும் அமைதியா இருக்கீங்க?” வினயன் முகம் சுருங்க கேட்டான்.
“டா வினயா! இப்பவும் உன்னை அடிச்சா நான் யாரா இருந்தாலும் கேட்பேன். உங்கப்பன் ஏதோ ப்ரணய கதைனு சொல்றானே, நீ முதல்ல விஷயம் பர டா” என்று ராஜீவன் ஆர்வமாகக் கேட்க, வினயச்சந்திரன் தாரிணி காதல் தொடங்கி, அவனுக்கும் மின்மினிக்குமான பிரியத்தின் கதை வரை சொன்னான்.
“ஏடா பாலா! இவன் ஜெய் மாதிரி இல்லடா. கள்ளன் எவ்வளவு வேலைப் பார்த்துருக்கான் பாரேன்.” என்று சத்தமாக சிரித்தார் ராஜீவன். பாலச்சந்திரன் நண்பனின் சிரிப்பை கண்டு தானும் சிரித்தார், அவர் ராஜீவன் இப்படி சிரித்து பல வருடங்கள் ஆகியிருந்தன. ஊர்மிளா தேவிகுளம் வந்த பின்னே தான் அவரும் தேவிகுளத்திற்கு மீண்டும் வந்தார்.
“மாமா! போதும் போதும். நானும் நீங்களும் ஒன்னு, ப்ளஸியத்தையும் ஆலப்புழா, என் மின்மினியும் ஆலப்புழா. ஆலப்புழகாரியெல்லாம் சுந்தரி அல்லே?” வினயச்சந்திரன் மின்மினியை நினைத்து பிரியத்தில் மிதந்து சொல்ல,
“ஆலப்புழகாரியெல்லாம் சுந்தரியான்னு எனக்கரியில்லடா பட் என் ப்ளஸி சுந்தரி. அது எனக்குத் தெரியும்!” ராஜீவன் காதலில் கவிந்து சொன்னார்.
“பிரேமம ப்ராந்தன்” பாலச்சந்திரன் முணுமுணுக்க,
“மாங்கதொலி! போடா” என்று சுள்ளென்று நண்பனின் முதுகில் அடித்தார் ராஜீவன்.
“மாமா! உங்க ப்ளஸி காயம்குளத்து சுந்தரி, என் மின்மினி தாமரகுளத்து சுந்தரி..”
“என் ஊர்மி காஞ்சிபுரத்தி சுந்தரி” என்றபடி ஜெய்யும் தம்பியின் மீது சாய்ந்து உட்கார்ந்தான்.
“அடப்பாவிகளா! எல்லாரும் தேவிகுளத்தை மறந்துட்டீங்களே” என்று பாலச்சந்திரன் மூவரையும் பார்க்க,
“ஏடா ஜெய்! நீயுமா?” என்று மகனை கேட்க,
“ஹாஹா! சும்மா பா. நம்ம ஊர்தான் சுந்தரமான ஊர். போதுமா?” என்று ஜெய் சொல்ல, வினயச்சந்திரன் உடனே
“நம்ம ஊர் அழகுதான், ஆனா ஆலப்புழாவும் அதோட காயலும், கட்டுவள்ளம். அது வேறொரு அழகு ஜெய்!” பிரதாபனோடு சுற்றிய இரவும், மின்மினியோட பாதிரா மணலை பார்த்ததும் வினயனுக்குப் புன்னகை தர
“எஸ்! ஆலப்புழா அது ஒரு தனி அழகு! காயலும் கடலும் காத்தும்!” ராஜீவன் பார்வை எங்கோ நோக்கிட, அவரும் அவர் காதல் மனைவி ப்ளஸ்ஸியும் ஆலப்புழாவை சுற்றியது நினைவில் வந்து அவர் முகத்தில் புன்னகையைத் தந்தது. அவரின் எண்ணங்கள் புரிந்தது போல், மற்ற மூவரும் அமைதியாக அவரையே பார்க்க, சிறிது நேரத்தில் நினைவேக்கத்தில் நனைந்த ராஜீவன் இயல்புக்கு மீண்டு வினயச்சந்திரனைப் பார்த்தார்.
“சரிடா உனக்கு அவன் எங்க குஞ்சம்மா பேரன் தெரிஞ்சதும் உண்மையை சொல்ல வேண்டிதானே?” ராஜீவன் கேட்க,
“அப்போ தாரிணிக்கு அவர் ஓகே சொல்லல மாமா” வினயன் சலித்திட
“இவன் ப்ராடு மாமா. நான் அங்க அச்சம்மாவை அழைச்சிட்டுப் போனப்போ கூட எஸ்கேப் ஆகிட்டான், நல்லா தேவைதான் இவனுக்கு” ஜெய் தம்பியைக் கிண்டலாகப் பார்த்தான்.
“ஜெயேட்டா!” என்று முறைத்த வினயன், “நீங்களே சொல்லுங்க மாமா, வெனீஸ் ஆஃப் தி ஈஸ்ட்க்குப் போய்ட்டு லவ் பண்ணாம வர முடியுமா?” என்று ராஜீவனை துணைக்கழைத்தான் வினயன்.
“நான் மின்மினியைப் பார்க்கணும் ஜெய், டாடி” என்று பாலச்சந்திரனை பார்க்க,
“ஏடா! உன் நடிப்பெல்லாம் எங்கிட்ட வேண்டாம்.” என்றார் அவர்.
அடுத்த நாள் அச்சுதன், பாலச்சந்திரன், வினயச்சந்திரனோடு ஜெய்ச்சந்திரன் தாமரகுளத்திற்கு அதிகாலையே புறப்பட்டான். ராஜீவனிடம் மகளை விட நினைக்க, அவளோ அப்பாவோடு போக வேண்டும் என்று கேட்க, வினயச்சந்திரனும்
“வாடா என் வாவே! நம்ம மின்மினி சித்தி பார்க்கலாம்” என்று மகளையும் அழைத்துக்கொண்டான்.