விடிய விடிய தொலைந்த தூக்கம் விடிந்த பின் தான் அவர்களை தழுவியது…
வெள்ளிக் கொலுசின் ஓசைக்கும், கண்ணாடி வளையல்களின் சிணுங்களுக்கும் சிறிது ஓய்வை கொடுத்திருந்த வேளையில், ஜன்னல் திரையின் இடைவெளியில் ஊடுருவிய சூரிய கதிர்களின் தழுவலில் கண்விழித்தான் விசாகன்.
மனைவியை விட்டு எழுந்துக் கொள்ள மனம் இல்லாமல் இமைகளை மூடி, அவளை அணைத்தாற் போலவே படுத்திருந்தான்.
கணவனின் கைவளைவில் தலை வைத்து இருந்தவளுக்கோ மெல்ல உறக்கம் கலைய விழி திறந்தவளின் அதரங்கள் இரவின் தாக்கத்தில் புன்னகையை சூடிக் கொள்ள, விசாகனின் முகம் பார்த்தவள் அவன் உறங்குகிறான் என நினைத்து, அவனின் உறக்கம் கலையாதவாறு மெல்ல விலகியவளை சட்டென இழுத்து அணைத்துக் கொண்டவன், “எங்கடி போற” என ஏக்கத்துடன் வினவியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
இந்த திடீர் தாக்குதலில் அதிர்ந்து பார்த்தவளின் இமைகள் வெட்கத்துடன் மூடிக்கொண்டது. அவனுக்கு எப்போதும் தேவாவின் அருகாமை வேண்டும்… இனி ஒரு நொடி கூட, அவளை விட்டு பிரிந்திருக்க மனமில்லாதவனுக்கு அவள் விலகி செல்வது அறவே கசந்தது.
அவன் அணைப்பிலும் அதில் தெரியும் வேகத்திலும் நெளிந்தவள்
“என்ன இது? விடுங்க விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது பாருங்க… வேலைக்கு ஆள் வந்து இருக்க போறாங்க” என மெத்தையிலிருந்து எழ முயன்றவளை, விடாமல் தன் மடிதனில் அமர வைத்தவனின் முகம் சட்டென வாடியது.
இதுவரை சிரிப்பும் கேலியுமாய் இருந்தவனின் முகம் வருத்தத்தில் தோயவும் அவனிடம் நெருங்கி அமர்ந்தவள், தன் விலகலால் தான் இப்படியோ என உள்ளுக்குள் பதறிப் போனவளாய் “என்னங்க ஏன் வருத்தமா இருக்கிங்க?” என்றாள்.
“எதுக்கு? ஏன் சாரி எல்லாம் கேக்குறிங்க?…” என்றாள் இப்போது என்னவோ என மனம் படபடவென அடித்துக்கொண்டது. நிமிடத்திற்கு ஒரு குண்டை போட்டாள் அவளும் என்ன தான் செய்வாள் பாவம் பரிதவிப்புடன் அவனையே பார்த்தாள்.
“அது வந்து நீ படிக்கிற… உன் படிப்பை காரணமா, வைச்சித்தான் உன்னை நெருங்காம இவ்வளவு நாளா தள்ளியே இருந்தேன்… ஆனா நேத்து ஒரு வேகத்தில்” மேலும் பேச முடியாமல் தயங்கியவன் அவள் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, சாரி” என்று முடிப்பற்குள் அவனை இறுக்கமாக அணைத்து அவன் இதழை தன் இதழால் சிறை செய்து இருந்தாள்.
மெல்ல அவனை பிரிந்து ம்கூம் என தலையை இடம்வலமாய் ஆட்டியவள் “உங்களை விலகி இருந்தா தான் என் படிப்பு டிஸ்டர்ப் ஆகும்… உங்களை நினைச்சே எல்லாத்தையும் விட்டுடுவேன் ஹீரோ….” என்றவள்,அவன் கண்களை சந்திக்க நாணம் கொண்டவளாக முகம் திருப்பிக் கொண்டாள்.
அவளின் வார்த்தைகளும் முக திருப்பலும் அவனுக்கு புது சுவராஸ்யத்தை கூட்ட “இந்த வெட்கமும் பேச்சும் தானே என்னை இன்னும் உன்கிட்ட நெருங்கிட சொல்லுது ” என அவளை தன் புறம் திரும்பினான்.
செந்நிறமாய் சிவந்தவளின் தேன் சுலைகளை கொள்ளையிட்டவன் மீண்டும் அவளையும் கொள்ளை கொண்ட பின்பே விட்டான்.
❤️❤️❤️❤️
அமுதாவின் திருமண பத்திரிக்கை வரவும் தில்லை குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்றார்.
தேவா, விசாகன், அமுதாவுடன் முதல் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு வைத்து வணங்கி விட்டு வரவும், தில்லைக்கு மனதில் அத்தனை நிம்மதி.
குலதெய்வ வழிப்பாட்டிற்கு பின் சுந்தரன் குடும்பத்திற்கு சம்மந்தி முறை பத்திரிக்கை வைக்க சென்று வந்த விசாகன் அடுத்ததாக வந்து நின்ற இடம் தேவாவின் தகப்பனார் வீடு….
தேவா அவனிடம் சொல்லவில்லை என்றாலும் கூட மனைவியின் மனதை பெற்றவர்களின் நினைவும், உடன் பிறந்தவனின் நினைவும் வாட்டுவதை அறிந்துக் கொண்டதனால் சௌந்தரலிங்கம் வீட்டிற்கு வர முடிவெடுத்தான்.
வீட்டு வாசலில் வெளிவேளையில் இருந்த மரகதம் சற்று துரத்திலயே விசாகனின் கார் வருவதை பார்த்தார். காரிலிருந்து விசாகனும் தில்லையும் இறங்கி வருவதை கவனித்ததும் “வாங்க மா… வாங்க மாப்பிள்ளை..” என இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்தார்.
அவர் அழைத்ததும் “ஏத்தா மரகதம் எப்படி இருக்க?… வீட்டுக்கு ஒருக்கா வர்றது….” என மரகத்தினுடன் பேசியபடி, தில்லை உள்ளே சென்று இருக்க, பின் தங்கி நடந்து வந்த விசாகன் தனக்கு ஏற்பட்ட முன் அனுபவத்தில் வாசலில் தயங்கியபடி நின்றவனை கண்டவர்,
“எய்யா அங்கயே நிக்குற? உள்ள வாயா…” என்றதும் தயக்கத்தை விட்டெறிந்தவனாக உள்ளே வந்தான்.
வந்தவர்களுக்கு தண்ணீரை எடுத்து வந்து உபசரித்தவர் “செத்த இருங்க மா…. இதோ வந்துடுறேன் மாப்பிள்ளை…” என உடனே கணவருக்கு அழைத்து விட்டு அவர்கள் வந்திருந்த விஷயத்தை கூறிட, தில்லை என்ற பெரிய மனுஷியின் பெயரில் சீக்கிரமே வீடு திரும்பி இருந்தார் சௌந்தரலிஙகம்.
“இதோ இப்ப வந்துடுவாங்க… தோப்புல கொஞ்சம் வேலை… அதான், வெள்ளனவே போயிட்டாக” என்றவர் அவர்களுக்கு குடிக்க காபியை கொண்டு வந்து நீட்டினார்.
“ஆத்தா எதுக்கு இப்படி பதறுற சித்த உக்காறேன்…. நீ அல்லாடுறது எனக்கு சங்கடமா இருக்கு” என்றவரின் அருகில் சென்ற மரகதம்,
“வராதவங்க வந்து இருக்கிங்க… அந்த சந்தோஷமே எனக்கு இப்படி ஆகுது… அதை விடுங்கமா நீங்க எப்படி இருக்கிங்க…., தேவா எப்படி இருக்கா…?” என்றதும்,
அதில் சிரித்தவராக “நல்லா இருக்கேன்த்தா… என் பேத்தியும் நல்லா இருக்கா… என்ன நீ இல்லையேன்ற ஒரு குறை தான் அவளுக்கு… என் பேத்தி மருமகளா, அந்த வீட்டுக்கு வந்த நேரம் எல்லா நல்ல விஷயமும் நடக்குது” என தேவாவை பற்றி சிலாகித்து கூறிட பெற்றவராய் மரகதத்திற்கு உச்சி குளிர்ந்து போனது.
அதற்குள் சௌந்தரலிங்கமும் வந்து விட, மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்றவனிடம் கை கூப்பி “வாங்க தம்பி… வாங்க உட்காருங்க…” என்றார் முகம் திருப்பாமல்,
அவரும் கேள்வி பட்டுக் கொண்டு தானே இருக்கிறார், மகள் வாழும் வாழ்க்கையை அப்படி ஒரு நிறைவான வாழ்க்கையை கொடுக்கும் மாப்பிள்ளைக்கு இந்த அளவு மாரியாதை கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி என்று நினைத்துதான் முகம் திரும்பாமல் பேசினார்.
ஆனாலும் கல்யாண விஷயத்தில் இன்னும் விசாகன் மேல் அவருக்கு கோவம் இருக்கத் தான் செய்தது அது கௌரவம் சம்மந்தப்பட்டதாச்சே உடனே விட்டுவிட முடியாமல் மருகினார்.
“வாங்க மா” என தில்லையை அழைத்து வணக்கத்தை வைத்தவர் “மரகதம், காபி போட்டியா” என்றிட்டார்
துணின் பக்கம் நின்றபடியே “கொடுத்துட்டேனுங்க” என்றார் மரகதம். என்ன நடக்கப்போகிறதோ என்று அவருக்குள் பயபந்து உருண்டது.
சிறிது நேர அமைதிக்கு பின் விசாகனே மௌனத்தை கலைத்து பேச ஆரம்பித்தான். “அய்யா நீங்களும் அம்மாவும் சேர்ந்து நில்லுங்க” என்றான்.
அவனுக்கும் அத்தை மாமா என கூப்பிட ஆசைதான் ஆனாலும் உறவே இல்லை என்று கூறும் போது எப்படி அழைப்பது என தயங்கியவன் மரகதத்தை அம்மா என்று அழைத்திருந்தான்.
அவன் சொல்லியபடி எழுந்து நிற்க அப்பத்தாவை அழைத்தவன் தட்டை கொடுக்க சொல்லவும் “கண்டிப்பா அமுதா கல்யாணத்தை நீங்க தான் முன்ன இருந்து நடத்தி தரனும்”. என விசாகன் தட்டை கொடுக்க கை நீட்டி வாங்கியவருக்கு என்ன பதிலை சொல்வது என்று பார்த்தார்.
நொடியில் அவரது நிலையை புரிந்து கொண்ட தில்லையோ “நிச்சயம் வரனுங்க அய்யா” என்றதும், அவருக்கு மதிப்பை கொடுத்து வருவதாக தலை அசைத்தார் சௌந்தரலிங்கம்.
“நீங்க தேவாவுக்கு, அப்பா அம்மாவா வரவேண்டாம் எனக்கு மாமனார் மாமியராகக் கூட வரவேண்டாம்… அமுதா… அமுதாவுக்கு… அப்பா அம்மா ஸ்தானத்துல வந்து முன்ன இருந்து இந்த கல்யாணத்தை நல்லபடி நடத்தி தரனும்…” என கையை கூப்பி கேட்க விசாகனின் கனிவான பேச்சு அவரை அசைத்து பார்த்தது.
மரகதத்திற்கு கணவர் என்ன சொல்லி விடுவாரோ என்று அவஸ்தையாய் இருந்தது… ஊரில் பெரிய மனிதனாய் மதிக்கும் மாப்பிள்ளையை அவமதிக்கும் படி ஏதாவது நடந்து விட்டால் காலத்திற்கும் மனதில் வடுவாய் நின்று விடுமே, என்ற பயம் அவருக்கு. அவர் நினைத்ததை போல் அல்லாமல் அமைதியாகவே வழியனுப்பி வைத்தார் சௌந்தரலிங்கம்….
💐💐💐💐💐
விசாகன் தங்கள் வீட்டிற்குத் தான் சென்று இருக்கிறான் என தெரிந்த கணத்திலிந்து தேவாவிற்கு ஒரே நடுக்கம் தான்… அங்கே என்ன நடக்கின்றதோ என்று…. ஏற்கனவே தாலி பிரித்து போடும் விசேஷத்திற்கு அழைக்க சென்ற போது நடந்தவைகளை அன்னையின் வாய்மொழியால் கேட்டு இருக்கிறாளே, அப்பா பேசிய பேச்சிக்களும், அத்தையின் ஆட்டத்தையும், அதனை நினைத்தே இப்போது உள்ளுக்குள் குளிர் பரவியிருந்தது.
குட்டி போட்ட பூனையை போல வாசலுக்கும் கூடத்துக்குமாய் நடையாய் நடந்தவளின் கையும் காலும் சில்லிட்டிருந்தது. இரண்டு மூன்று முறை மேகலாவிற்கு கூட அழைத்து விட்டாள்.
“எதுக்கு இப்ப பயப்புடுற புள்ள… எதுவும் ஆகாது… உன் அப்பாரு ஒன்னும் உன் அண்ணனை போல மோசமில்லை… உன் அண்ணன்காரன் இல்லாததே பெரிய விசயம்னு நினை… மாமா நல்லபடியாதான் பேசுவாக…” தேவாவிற்கு தைரியத்தை கூறி போனை வைத்து விட்டாள்.
காலையே அமுதாவும் தங்கள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அன்னையின் இல்லத்திற்கு சென்று விட, வாசலிலேயே அவர்களுக்காக காத்திருந்த தேவாவின் பொறுமை காற்றில் பறந்தது.
💐💐💐💐💐
“என்னங்க”
“ம்… சொல்லு சனா”
“ஹீரோ…”
ம் …. சொல்லுடி முக்கியமான பைலை பாக்குறேன்” என்றபடி பேச
‘அய்யோ வரமாட்டதே…’ என்று மனதில் புலம்பியவள் “மா… பச்… மாமா” என்றாள் திக்கி திணறியவளாக
அவள் மாமா என்றே அழைக்கவும் சட்டென தொடர்ந்திருந்த வேலையை விட்டு அவளை பார்த்தவன் “வா” என்று கை நீட்டி அழைக்கவும் சற்று தூரம் தள்ளி இருந்தவள் அவன் கைகளுக்குள் தன் கையை கொடுத்து அவன் அருகில் வந்தாள்.
“என்ன கூப்பிட்ட” என்றான் ஆசையாக, அவள் அழைத்தது உள்ளுக்குள் அவ்வளவு சுகத்தை தந்தது..
“அது வந்து மா.. மா.. ” என இடைவெளி விட்டு சொல்லவும்,
“இந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரவும், செம கிக்கா இருக்குடி” தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் “என்ன புதுசா மாமா எல்லாம் கூப்புடுற வழக்கமா ஹீரோன்னு தானே கூப்பிடுவ சனா” என்றான் அவளின் நெற்றியில் முட்டி.
“இதுக்கு காரணமே உங்க அத்தை தான்… அதை நான் அப்புறம் சொல்றேன்… நீங்க அப்பாவை கூப்பிட போனிங்களே கல்யாணத்துக்கு வருவாங்களா?நீங்க என்ன நினைக்கிறிங்க” என்றாள் ஆசையாக,
அவளை வாகாக தன் மேல் சாய்ந்துக் கொண்டவன் “வருவாருன்னு நம்புவோம் சனா… நம்ம மேல கோவமா தான் இருப்பாரு… ஆனா இதுக்கு நிச்சயம் வருவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றான். அவளின் தளிர் விரங்களில் தன் முத்திரையை பதித்து.
பேச்சு திசை மாறிக் கொண்டு இருப்பதை கவனித்தவள் “மாமா” என அவனை மிரட்டிட அவளை மடி சாய்ந்தவன் அவளின் கன்னங்களில் இழைந்தபடியே “இப்போ சொல்லு இந்த மாமா எப்படி வந்தது” என்றான் ஆர்வமாக,
“அப்பா வீட்டுல என்ன நடந்துதோன்னு நான் அம்மாவுக்கு போன் செய்தேனா… இடையில உங்கள வாய் தவறி ஹீரோன்னு சொலிட்டேன்… அதுல ஆரம்பிச்சது அவங்க அர்ச்சனை உடனே டோர, க்ளோஸ் பண்ணுட்டு அவங்க சொல்லுக்கு சரின்னு சொன்னது தான் என்னை விட்டாங்க” என்றாள் சிரிப்புடன்.
“சரியான ஓட்டை வாய்டி உனக்கு” என்றவன் அதன் பிறகு அவளை பேசவே விடவில்லை.
கல்யாண வேலையும் படுஜோராகத்தான் நடந்துக் கொண்டு இருந்தது… சொந்தங்களை அழைப்பது கோவில் வழிபாடு பந்தக்கால் ஊனுவது என ஒவ்வொன்றும் திருவிழா போன்று நடந்தது.
இதோ அதோவென அவர்கள் எதிர்ப்பார்த்த திருமண நாளும் வந்துவிட முதல் நாள் பெண்ணிற்கு நலங்கு என்று அத்தை முறை மாமன் முறை இருப்பவர்கள் நலங்கு வைத்து சென்றனர்.
“தேவா ம்மா ப்ளீஸ் அண்ணனுக்காக இது ஒன்னு மட்டும் செய்டா” சுந்தரன் போனில் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
“முடியவே முடியாது…. நாளைக்கு இந்நேரம் எல்லாம் உங்க கூடதானே இருக்க போறாங்க… அதுக்குள்ள என்ன அவசரம்” என்றாள் இந்த பக்கம்
“என்ன தேவாம்மா, நீயும் லவ் மேரேஜ் செய்து இருக்க ஆனாலும் என் லவ்வுக்கு ஒரு ஹெல்ப் பண்ண மாட்டுறியே” குரலை பாவம் போல் மாற்றிக் கொண்டான்.
“அய்யே… இது செட்டே ஆகலண்ணே உன் மூஞ்சிக்கு…” அவனை படுத்தியவள் “அய்யோ அண்ணே உன் அப்பாரு உன் பக்கம் வாராரு போல இருக்கு” என்றதும்,
சட்டென நிமிர்ந்து சுற்றி முற்றி பார்த்தவன் பல்லை கடித்து படி “தேவா மா’ என்றான் கடுப்புடன்
“பொருண்ணே… அமுதான்னா சும்மா வா… இருங்க வறேன்” என்றவள் சந்தன நலங்குடன் இருந்த அமுதாவை நான்கு ஐந்து போட்டோ எடுத்து அனுப்பினாள்.
வெட்கத்தில் பூவாய் மலர்ந்திருந்தவளின் வதனத்தில் சொக்கிய சுந்தரனோ சீக்கிரமே இந்த பொழுது விடியனும் என்றபடி தன் வேலையை பார்க்க சென்றான்.