காலை பத்து மணிக்கே வெயில் மண்டையை பிளந்துக் கெண்டிருந்தது.
தேவா விசாகனின் செல்வ மகள் பிரணவி பிறந்து ஏழாம் மாதம் தொடக்கத்தில் இருக்க, அவள் பிரசவத்தின் போது தில்லை வேண்டிக் கொண்டதன் பேரில், அந்த சாமுண்டி தாயிக்கு பொங்கல் வைத்து வழிபட இரு வீட்டாரும் வேனில் செல்வதால் தேவா, மேகலாவை அடம் பிடித்து தன்னுடன் அழைத்து வந்திருந்தாள்.
இப்போதெல்லாம் பிரணவியின் ஆஸ்தான இடம் மாமன் மடிதான், அவளை போலவே அவளுடைய பிள்ளையும் அவனை நன்கு அறிந்து வைத்திருந்தது. அவனை பார்த்ததும் தன் பொக்கை வாயை திறந்து கிளுக்கி சிரிக்க, அருகில் அமர்ந்திருந்த விசாகனும் இதை பார்த்தான்.
“என்ன மாப்ள….. குடும்பஸ்தனுக்கு வேண்டிய அத்தனை பொறுப்பும் வந்துடுச்சி… எப்போ கல்யாண சாப்பாடு போட போறிங்க”… அமுதாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த சுந்தரன் கேட்கவும்,
விரிந்த புன்னகையே பதிலாய் கொடுத்த ஜெயசந்திரன், குழந்தையிடம் கவனத்தை வைத்தபடியே “அதை பத்தி இன்னும் யோசிக்கல மச்சான்”… என்றான்.
“என்ன பட்டுன்னு இப்படி யோசிக்கலன்னு சொல்லிட்டிங்க…. நல்ல வேலைஇருக்கு…. நல்லா சம்பாத்தியம் இருக்கு… இப்போ தானே பண்ணனும்… நாங்கலெல்லாம் அனுபவிக்கும் போது, நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?” என்றான் கிண்டலுடன்,
அவன் கேட்டதும் அங்கே சிரிப்பலை எழ, அர்த்தம் புரிந்த அமுதா, அவனை தொடையில் கிள்ளியதும் ஆவென்று அலறியவன், “உசிருக்கு உத்ரவாதம் இல்லைடியோ” என முனுமுனுக்க “என்ன மாப்ள ஏதோ அலறுன சத்தம் கேட்டது” என்றான் விசாகன் நக்கல் சிரிப்புடன்,
“அது ஏதோ கொசு மாப்ள என்னையே சுத்திசுத்தி கடிக்குது என்றான் அமுதாவை பார்த்தபடி “வாடி உனக்கு இருக்கு” என உதடு கூறினாலும் கணவனின் அவஸ்த்தையான முகம் பார்த்து அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
இத்தனைப் பேச்சுகளுக்கும் பெரியவர்கள் சிரித்தபடி வர, அமைதியாய் அமர்ந்திருந்த தேவசேனாவின் முகம் யோசனையில் இருப்பதை பார்த்த விசாகன் “ஏதோ பிளான் பண்றா போல இருக்கு… ” என்று நினைத்தான்.
பக்கத்தில் அமர்ந்த மேகலாவும் தோழியின் முகம் பார்த்தாள். இன்று அவளோடு மல்லுக்கட்டி வம்படியாய் அழைத்து வந்ததன் காரணம் புரியாமல் அமர்ந்திருந்தாள்.
மகனின் பதிலில் மணம் சுணங்கிய மரகதம் இன்றாவது சந்திரனிடம் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
அரைமணி நேரத்தில் கோவிலை அடைந்திட, மரகதம் பொங்கல் வைக்க செல்ல, குழந்தையை தமையனிடம் கொடுத்த தேவா தானும் உதவுகிறேன் என்று கூறி அவருடன் சென்றாள்.
அமுதாவும் குழந்தையை சுந்தரனிடம் விட்டுவிட்டு மேகலாவுடன் தண்ணீரை எடுக்க குளக்கரைக்கு சென்றிருந்தாள்.
பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தபடி “அடியேய் என்னடி இவன்… கல்யாணத்துக்கு ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறான்… அமுதா புருஷன் கேட்டதுக்கும் யோசிக்கலாங்கறான்” என்றார் மரகதம் வருத்தமாக
“நீ எதுக்கு மா கஷ்டப்படுற மா அதுல்லாம் நடக்கும்… நான் சொல்றா மாதிரி மட்டும் பேசு, இன்னும் ஒரே வாரத்துல உன் மக கல்யாண தேதிய குறிச்சிடலாம்…” என்றாள் தேவா நம்பிக்கையாக.
“என்ன பேச சொல்லுறடி” என்றதும் எவரும் வருகின்றனறா என்று பார்த்தவள் மெதுவாக அன்னையிடம் விளக்கிவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல அமர்ந்தாள்.
தண்ணீரை எடுக்க சென்ற மேகலாவும் அமுதாவும் வந்ததும். அவர்களிடம் கோவில் உள்ளே பழங்களை நறுக்கி அபிஷேகத்துக்கு கொடுக்க சொல்லி, ஒரு வேலையை கொடுத்து அரைமணி நேரம் வராமல் பார்த்துக்கொண்டவள், அண்ணன் தன்னை நோக்கி குழந்தையுடன் வருவதை பார்த்துவிட்டு, பேசுமா என்று தாயை ஊக்கினாள்.
“என்னடி அந்த மேகலாப்பொண்ணு இப்படி சொல்லிடுச்சி” என்றார் வருத்தமான குரலில்.
“அடியாத்தி!!!….. நீ ஏன்மா அவள கேட்ட? அவ வீட்டுல கேக்கலையா? அதான் நான் கூப்பிட்டா கோவிலுக்கு வரமாட்டேன்னு அடம் புடிச்சாளா!” என்றாள் ஒன்றும் அறியதவள் போல,
இவையனைத்தும் கேட்டவனுக்கு கோவம் சுறுசுறுவென ஏற அங்கிருந்து நொடியில் அகன்ற ஜெயசந்திரன், முகத்தை சாதரணமாக வைத்துக்கொள்ள அரும்பாடுபட்டான்.
“என்ன தைரியம் இருந்தா என்னை வேண்டான்னு சொல்லி இருப்பா” என்று உள்ளுக்குள் கருவினான்.
“என்ன மாச்சா போனவுடனே திரும்பிட்ட?” சந்திரனிடம் விசாகன் விசாரிக்கவும் “ஒன்னுமில்ல மாப்ள ஒரே புகைச்சலா இருக்கு…. குழந்தைக்கு மூச்சி முட்டுன்னு வந்துட்டேன்… நீங்க தேவாவை கூப்பிடுங்க குழந்தை பசியில் அழறா” என்றான் அந்நிலையிலும் மருமகளை விடாமல்,
“இரு மச்சான் நான் போறேன்…” என்று அவளை அழைத்து வந்து குழந்தையை கொடுத்து விட்டு அமுதாவை மரகதத்துடன் இருக்க வைத்தான்.
சுந்தரனும் குழந்தைக்கு விளையாட்டை காட்டியபடி இருந்தான். மரநிழலில் விரித்திருந்த பெட்ஷிட்டில் தில்லையும், சௌந்தரலிங்கமும் அமர்ந்திருந்தனர்.. ஆக, மொத்த குடும்பமும் இங்கேதான் இருந்தது மேகலா ஒருவளை தவிர
அவளை தேடி கோவிலுக்குள் சென்ற சந்திரன் படியில் அமர்ந்து பழங்களை வெட்டிக் கொண்டு இருந்தவள் முன்னே போய் நின்றான்.
தன் முன்னால் நிழலாடவும் என்வென்று நிமிர்ந்தவளுக்கு அய்யனார் அறுவாளுடன் நிற்பது போல இருக்க, எதற்கு இப்படி கோவத்துடன், கடுகடுவென தன் முன்னால் நிற்கிறான் என்று தான் தோன்றியது.
“என்னை வேண்டாம்னு சொன்னியாம்” என்றான் கடுப்பாக
அவன் கூறியதில் ஒன்றும் புரியாது நின்றவள், தானே ஒன்றை யூகித்தவளாக “ஓ…. இந்த பழம் வெட்டுறதை சொல்றிங்களா!… வாங்க வந்து வெட்டுங்க ” என்றாள் மேகலா சற்று மரியாதையாகவே, சந்திரன் தேவாவுடன் ராசியானதிலிருத்து அவன் மீது கொஞ்சம் மரியாதை வந்திருந்தது.
“பழத்தை வெட்டனுமா! வா பேசின உன் நாக்கை இழுத்து வைச்சி வெட்டுறேன்… என்னை பார்த்தா கிண்டலா தெரியுதாடி…
“இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி தையதக்கான்னு குதிக்கிறிங்க… வந்திங்க நின்னிங்க நீங்களா ஒன்னை நினைச்சி திட்டுறிங்க” . அவளும் பதிலுக்கு பேசினாள்.
“என்னமோ என்னை கட்டிக்க மாட்டேன்னு சென்னியாம்.. மகாராணிக்கு என்னை கட்டிக்க கசக்குதா” அவன் அதட்டி கேட்க,
அவன் கல்யாணம் என்று சொன்ன செய்தியில் அதிர்ந்து நின்றவள் அடுத்ததாக அவன் கூறிய வார்த்தைகளில் சண்டை கோழியாக சிலுப்பிக் கொண்டு நின்றாள்.
“அட என் முகர கட்டைக்கு என்ன குறைச்சல கண்டிங்க… நான் ம் சொன்னா எட்டு ஊரு ஜில்லால இருந்து, எங்க அப்பா உங்கள விட நல்ல மாப்ளைய இறக்குவாறு… உங்களை கட்டிக்கிட்டு வாழ்க்கை பூரா கண்ணை கசக்க எனக்கு என்ன பைத்தியமா?” என்றாள் கிண்டலாகவே,
“அடிங்க… அப்படி என்னடி குறைய கண்டுட்ட என்கிட்ட சொல்லுடி… சொல்லு…” என்று அவன் சீறினான்.
“ம்கூம் உன்னை தெரிஞ்சிக்க ஒரு வருசா கோர்ஸா பண்ணனும் பக்கத்துல இருந்து பாத்தேனே இது பத்தாது” என்று முனுமுனுத்தவள்
“என்னை புடிக்குதோ புடிக்கலையோ… என்னை கட்டிக்கமாட்டன்னு சொன்ன நீ தான் அந்த கஷ்டத்தை அனுபவிக்கனும்… வேற யாருக்கும் அந்த கஷ்டத்தை கொடுக்க விருப்பம் இல்ல” என்றான் வம்படியாக.
“ஹாங்…”. என்று அதிரந்தவள் “அது முடியாது” என்றாள் சட்டென
“அப்போ, உனக்கு என்னை கண்டா பயம்… அதை ஒத்துக்க அதனால தானே என்னை கட்டிக்க முடியாதுன்னு சொல்ற… இதுல பேச்சை பாரு “
“அப்படியா சொல்றா … அதையும் பாத்துடுவோம்… உன்னால நான் கஷ்டபடுறேனா? இல்ல என்னால நீ கஷ்டபடுறாயான்னு…” என்றான் சவலாக,
“எனக்கு என்ன அய்யோ பாவமேன்னு உங்களுக்காக தான் பார்த்தேன்… என்று அவள் நக்கலாக கூறவும்
“அப்போ ரெடியாயிட்ட… சரி நான் போயி கல்யாணத்துக்கு நாளை குறிக்க சொல்றேன்… நீயும் என்னை வாறி சுருட்டி போட தயாரா இரு” திமிராக அவளை பார்த்து கூறியவன் அங்கிருந்து அகன்றான்.
அப்போது தான் கூறிய வார்த்தைகளின் வீறியத்தை உணர்ந்து எச்சிலை கூட்டி விழுங்கியவளுக்கு, முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்து வழிந்தது. வந்தான், பேசினான் என் வாயலையே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைச்சிட்டான்… என்று உறைந்து நின்றாள்.
“அண்ணன் பேசிய பேச்சுக்களில் விதிர்த்து நின்ற மேகலாவிடம், “கலா, கோவமாடி அவன் பேசினதுல?” என அருகில் வந்தாள் தேவா..
தேவாவை பார்த்ததும் சற்று இயல்பானவள் “இல்லடி ஐஸ்கட்டில குளிச்சா மாதிரி, குளு குளுன்னு இருக்கேன்… ஏண்டி வயித்தெரிச்சல கிளப்புற” என்று எரிச்சலாக கூறிட
“சாரிடி உனக்கு அவனை பிடிக்கும்னு நினைச்சுதான் இப்படி ஒரு பொய்யை சொன்னேன்… உனக்கு பிடிக்கலன்னா இப்பவே அவன்கிட்ட சொல்றேன்… நான் சொன்னா அவன் கேட்டுக்குவான்… என செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தினாள் மேகலா.
“பிடிக்காதுன்னு இல்ல…. ஆனா… ஏதோ கொஞ்சம் பயமா இருக்கு” தயங்கிவாறு கூறினாள்.
“நீ பயப்புடுற அளவுக்கு எல்லாம் அவன் கெட்டவன் இல்லடி”
“அந்த ஈரவெங்காயம் எனக்கும் தெரியும்… உன் அண்ணன் மேல ஒரு டவுட் இருந்துச்சி… இன்னைக்கு அது கிளையர் ஆகிடுச்சி”
“என்ன டவுட்டு” என்றாள் தேவா ஆர்வமாக
“ஆன் அந்த நல்லவன், என்னை சைட்டு அடிச்சாங்குறது”
அப்போ மேடம் என்று கூற வர “போதும் போதும் ரகசியத்தை வெளியே சொல்லாத” அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் மேகலா.
ஒருவழியாய் சாமுண்டி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிப்பட்டவர்கள் மனதிருப்தியுடனே வீட்டிற்கு திரும்பினர்.
💐💐💐💐
கடிகார முள் 5.30.. நெருங்கி இருக்க
அதிகாலைச் சூரியன் கிழக்கில் தோன்றி ஒளி கதிர்களை வீச தொடங்கியிருந்தது, மெல்ல இருள் விலகி வானம் சற்றே வெளுக்க தொடங்கி இருந்த சமயம் அது,
வண்ண மலர்களின் வாசம் மேடை எங்கும் மணந்தது. மங்கள வாத்தியங்கள் இசையை முழங்கிட, சொந்த பந்தங்கள் பட்டாடை நகைகள் சகிதம் மண்டபத்தில் நுழைந்துக் கொண்டு இருந்தனர்.
அய்யர் மந்திரத்தை ஓத அக்னிகுண்டத்தில் இருந்து எழுந்த புகையில் சற்றே கண்கள் சிவந்து நீரில் பளபளத்த நிலையில் அமர்ந்து இருந்தாள் மேகலா.
அவளின் அருகில் வெண்பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவர்களை தலையசைத்து வரவேற்று அமர்ந்திருந்த சந்திரனுக்கு அவளின் நீர் நிறைந்த கண்களை கண்டு முகம் இறுகியது.
“சனா, இங்க என்னடி பண்ற?”
“அம்மா இந்த சீர் தட்டை கொடுக்கனும்னு சொன்னாங்க… அதான் எடுத்து வைக்க வந்தேன்… என்னங்க என்ன வேணும்”
“நீதான் வேணும்” என்றான் விசாகன் சட்டென
“ஹான்” என்று அதிர்ந்தவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துவிட்டு “என்ன பேசுறிங்க?” என்றாள் பல்லை கடித்து,
“நான் ஒழுங்காதான் பேசுறேன்டி… உன் யோசனைத்தான் அங்க போகுது….” அவள் தலையை ஆட்டிவிட்டவன் “அவன் ஏன்டி இப்படி அலும்பு பாண்றான்” என்றான் விசாகன் சலிப்பாக
“ம்க்கும்” என்று கணவனை முறைத்தவள் “யாரு அலும்பு பண்றா எதுக்கு இந்த சலிப்பு” என்று கேட்டபடியே தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.
“உன் பாசமலர் தான்… அப்போல இருந்து உன்னை தேடுறான்… சொன்னா கேட்க மாட்டுறான்… நானே போய் பாக்குறேன்னு மனையிலிருந்து எழுந்து வம்படிக்குறான் இவனை எதுல சேக்குறதுன்னே தெரியலடி”. என்றான் அலுப்பாக
“எதுக்கு தேடுறான்”
“தெரியல வா” என்று அவளை கையோடு இழுத்துச் செல்ல,
அதில் சங்கோஜப்பட்டவள் “கைய விடுங்க எல்லாரும் பாக்குறாங்க” அவனிடம் கையை விலக்கிக் கொண்டு மணமேடையை நோக்கி சென்றாள்.
“ரொம்ப பண்ற… உன்னை அப்புறம் கவனிச்சிகுறேன் டி” உள்ளுக்குள் மனைவியை செல்லமாய் கடிந்தவன் தன் வேலையை பார்க்க சென்றான்.
இழுத்து பிடித்த பொருமையுடன் அமர்ந்திருந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அங்க பாரு அவளை… எதுக்கு இப்போ கண்ணை கசக்கி இருக்கா? ” என்றான் கடுப்பாக
தோழியிடம் நகரந்தவள் “என்னடி ஆச்சி உனக்கு ஏன் இப்படி அழுது வடியுறா?”
“மனசாட்சி இருக்கா டி உங்களுக்கெல்லாம்… விடியகாலை 3 மணிக்கு எழுப்பிவிட்டு புகை முன்னாடி உட்கார வைச்சா, அழுது வடியாம சிரிக்கவா முடியும்…. ஏன்டி கடுப்பேத்தறிங்க உங்களுக்கு எல்லாம், ஒரு 6.00, 7.30… 7.30.9.00 ன்னு முகூர்த்தமெல்லாம் கிடைக்கலையா? 4.30…. 6.00 தான் கிடைச்சுதா!!”
“அடிப்பாவி… அதுக்குதான் இப்படி முகரைய வைச்சிக்கிறியா!!! அவன் நீ என்னமோ அவனை வேண்டான்னுதான் அழறயோன்னு நினைச்சிட்டு இருக்கான்… பாவம்… என்று அண்ணன் பக்கம் போக இருந்தவளை கைபிடித்து நிறுத்தியவள்,
“கதை அப்படி போகுதா… வாயை தொறந்த அவ்வளவு தான் சொல்லிட்டேன்… அவர் ரியக்ஷனை நான் பாக்கனுமே….” மெதுவாக தலையை திருப்பி அவனை பார்த்தவள் அவன் பார்க்கும் சமயம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனை கடுப்பேத்தினாள்..
சுற்றி இருந்த சொந்தமும் பந்தமும் அட்சதை தூவ, தேவாதி தேவரும் மூவரும் வாழ்த்த, மங்கள வாத்தியங்கள் இசை முழங்க, மேகலாவின் கழுத்தில் பொன்மஞ்சள் தாலியினை சூட்ட காதல் மோதலுடன் இனிய திருமண வாழ்வில் புகுந்தனர் இளம் தம்பதியினர். ……