இதயம் எப்போது நிற்கும் என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி துடித்துக் கொண்டு இருந்தது. கையில் வைத்திருந்த பால் சொம்பை கெட்டியாக பிடித்து தன் நடுக்கத்தை மறைத்து ஒருவாறாக அவன் முன் நின்றாள் மேகலா.
அறையின் வாசலில் வரும் வரை தேவாவின் கிண்டலிலும், தோழியரின் சிரிப்பிலும், சிவந்தவளுக்கு அறைக்குள் நுழைந்ததுமே குப்பென்று வியர்த்து கைகால்கள் சில்லிட்டு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.
அதுவும் அறையின் அலங்காரமும், ஜெயசந்திரனும், அவளை பீதிக் கொள்ள வைத்திருந்தார்கள்..
ஜெயசந்திரன் அவள் கையில் இருக்கும் பால் சொம்பை வாங்கி வைக்கவும், மேகலா மயங்கி விழவும் சரியாய் இருந்தது. கீழே சரிந்து விழுந்தவளை அள்ளியவன் மெத்தையில் கிடத்தி,
“ஏ மேகலா… மேகா…. என்னாச்சி” என்று அவளின் கன்னம் தட்டி
குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்தான்.
சட்டென அவள் மயங்கவும், அவனுக்கும் பதற்றம் தொற்றியிருந்தது.
மயக்கம் தெளிந்து கண் விழித்தவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது. கண்களை கசக்கி தன்னை நிலைபடுத்தியவள் சந்திரனை கண்டு திருதிருவென விழித்தாள்.
அவள் பார்வையும், பதட்டமும், அவனை சாந்தப்படுத்த மேகலா கொண்டு வந்த பாலை அவளிடமே கொடுத்து “இந்தா குடி” என்றான் அனுசரனையாக.
“இல்ல வேணா…” என எழ முயற்சித்தவளை அமர வைத்தவன்
“முதல்ல இதை குடி… கொஞ்சம் பெட்டரா இருக்கும்…” என்றான். அவன் குரலில் என்ன கண்டாளோ
அதை தவிர்க்க முடியாமல் ம் என்று வாங்கிக் கொண்டவள், கடகடவென குடித்துவிட்டு சொம்பை அவனிடமே கொடுத்தாள். அதை வாங்கி டேபிள் மேல் வைத்தவன் என்ன ஆச்சி என்றான் சாவகாசமாக அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
அவன் பக்கத்தில் அமர்ந்ததும், குரல் தந்தியடிக்க, “அது வந்து… அது வந்து…” திக்கியவள் “இதை எல்லாம் பார்த்து மயக்கமே வந்துடுச்சி” என்றாள் உள்சென்ற குரலில்
பெரிய ஜோக்கை கேட்டவன் போல… சிரித்தவன் “ஏதோ என்னை வாரி சுருட்டி முந்தானையில் முடிஞ்சிடுவன்னு சொன்ன நீயா பயப்புடுற…?” என்றான் கிண்டலாக அவன் பார்வையில் ஏகத்திற்கும் நக்கல் வழிந்தது.
அவன் கிண்டலில் வெகுண்டவள் “பயம்னா!…. அது இந்த அறையை பார்தது வந்தது… உங்களை பார்த்து இல்ல” என வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றினாள்
“அப்போ என்னை பார்த்து பயமா இல்ல” ஒற்றை புருவத்தை உயர்த்தினான்.
“எதுக்கு பயப்படனும்.. நீங்க இரண்டு கை கால் இருக்க மனுஷன் தானே” என்றாள் கொஞ்சம் நக்கலாகவே,
“அப்போ பயமில்ல ரெம்ப தைரியமாதான் இருக்க…” சரி நான் உன்னை ஒன்னு கேக்கட்டுமா?” இலகுவான குரலில் கேட்டான்.
“கேளுங்க” அப்படி என்ன கேட்டு விட போகிறான் என நினைத்து சாதரணமாக கூறினாள்.
“நான் வம்பு பண்ணதுனால தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என்றான் சந்தேகமாக
“அப்படின்னு யார் சொன்னது”
“நான் தான்… அப்படி தானே என்னை கட்டிக்கிட்ட…”
“முகரகட்டை…அட என் மண்டு புருஷா இந்தா உன் போன் எனக்கு கால் பண்ணு” அவன் கரங்களில் போனை திணித்தாள்.
” என்னடி வாய் நீளுது” என்றவன் குழப்பமாகவே அவளை பார்த்தான்.
” அது அப்படித்தான்….” தெனவட்டாக கூறியவள்.
ஒவ்வொன்னுத்துக்கும் வாய பிளக்காம கால் பண்ணுயா…” என்றாள் கெத்தாகவே
‘என்னது யா வா …? போக போக வாடா போடான்னு கூப்பிடுவா போல இருக்கு’ பெருமூச்சை விட்டவன் அவளுக்கு போன் செய்ய தன் போனை எடுத்து அவனுக்கு கண்பிக்க அது மை மூன் என்ற பெயரை தாங்கி வந்தது.
“ஹேய்… என் பெயர் சந்திரன்… இதுல வேற இருக்குடி” என்றான் அப்போதும் புரியாமல்
“ஆமா .. சந்திரனுக்கு இங்கிலிஷ்ல என்ன?”
“மூன்”
“இப்போ இதை படிச்சி பாருங்க”
“என் சந்திரன்”
“புரியுதா” என்றாள் வெட்கத்தோடு
இனிமையாக அதிர்ந்தவன் “அப்போ பார்க்கும் போதெல்லாம் முறைச்சிக்கிட்டே சுத்தினது”
“சும்மா உங்களை சீண்டி பார்த்தேன்… நீங்க எத்தனை வாட்டி என்னை வம்பு பண்ணி இருப்பிங்க அதான் இப்போ நான் பண்ணேன்”.
“அப்போ காலைல தாலி கட்டும் முன்னாடி அழுதது என்னை பிடிக்காம இல்லையா”
“அட என் மக்கு புருஷா… ஓம குண்ட புகை கண்ணுல பட்டு ஒரே தண்ணீ… அதை போய் அழுதேன்னு, அவளை கூப்பிட்டு என்ன பாடுபடுத்தினிங்க…” கிண்டலாக கூறியவள் அவன் முகம் போன போக்கை கண்டு அடக்க மட்டாமல் சரித்துவிட்டு,
“நீங்க தான் ஒரு பீலிங்சும் இல்லாம கிணத்துல போட்ட கல்லாட்டம் இருந்திங்க… உங்க தங்கச்சி மட்டும் உக்களை உசிப்பி விடாம இருத்திருந்தா என்னை கல்யாணம் கட்டிருப்பிங்களா?” என்றாள் ஆதங்கமாக,
“கட்டியிருக்க மாட்டேன்” என்றதும் அவள் முகம் வாடிவிட “உன்னை தவிர வேற யாரையும் கட்டியிருக்க மாட்டேன் டி” என காதலாக கூறி அவளை மலர வைத்தான் சந்திரன்.
அவள் மலர்ந்த முகத்தை கண்டவன் “தட்ஸ் குட்… மை பேபி… இப்படியே இருக்கனும்” அவளின் கன்னத்தை தட்டியவன்
“நீ தானேடி சொன்ன எனக்கு காதலிக்கவே தெரியாதுன்னு… அப்புறம் எப்படி உன்கிட்ட இது எல்லாம் சொல்றது” என யோசிப்பவன் போல பேசிட அவள் கண்கள் கொண்ட காரத்தில் “சரி சரி சொல்றேன்” என்று கூற ஆரம்பித்தான்.
“தேவா சொன்னான்னு மட்டும் உன்னை தேடி வரல மேகா… எப்படியாவது உன்னை சம்மதிக்க வைக்கனும்னு தான் உன்னை தேடி வந்து வலுக்கட்டாயமாக பேசினேன்… உன்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவும் வைச்சேன்….”
அவன் சொல்லிய விதத்தில் விழிவிரித்து கணவனை பார்த்தாள் மேகலா.
“என்ன பாக்குற… என்னடா இந்த கல்லு இப்படி உருகுறான்னு ஆச்சர்யமா இருக்கா?..
என்றான் அவளின் உணர்வுகளை படித்தது போல,
ஆம் என தலை அசைத்தவளின் நாடியை நிமிர்த்தியவன், அவள் கண்களை தன் கண்களோடு மோத விட்டு
“திமிரா பாக்குற இந்த கண்ணுல நான் எப்பவோ விழுந்துட்டேன் மேகா… பட்டு பட்டுன்னு நினைச்சதை பேசற உன் உதட்டுல நான் சொக்கி நின்னு இருக்கேன்.. ஆனா இது எல்லாம் சொல்ல மனசு வரல… என் தேவா வை பழி சொன்னா என்னால உன் மேல இருக்க விருப்பத்தை சொல்ல வார்த்தை வரல… குற்றவுணர்வா இருந்துச்சி மேகா… சத்தியமா தேவா உன்னை பத்தி பேசி இருக்கலனா நான் காலம் முழுக்க கல்யாணமே பண்ணாம இருந்திருப்பேன் மேகா”,
“எனக்குள்ளயே முடி வைச்சிக்க பார்த்தேன்… ஆனா ஏதோ ஒரு விதத்துல அது வெளிப்பட்டு என்னையே ஆட்டி படைக்க ஆரம்பிச்சிது… அப்போதான் காதலோட வலியையும் அதோட ஆழமும் புரிஞ்சுதுடி… என் தேவாவை பத்தியும் புருஞ்சிது…” என்றான் ஆழ்ந்த வேதனையான குரலில்.
அவன் குரலில் இருந்த வேதனையை புரிந்தவள் “சாரி உங்கள காயப்படுத்தனும்னு பேசல… என்னை பிடிக்காதேன்னு தான் கேட்டேன்” என்றாள் தவறு செய்து விட்டவளை போல்
மனைவியின் குரலில் தன்னை இயல்பாக்கி கொண்டவன் “ஹேய் மேகா… என்ன இது இப்படி எல்லாம் சட்டுன்னு அடங்கிப் போயிட்டா… எப்படி என்னை வாரி சுருட்டி உனக்குள்ள வைச்சிக்குவ” என்றான் சற்றே துள்ளலான குரலில், மனைவியின் கன்னங்களை வருடி,
“பச்… போங்க என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கிங்க” கணவனின் கைகளை பற்றி தடுக்க “இது கிண்டல் இல்ல மேகா… உண்மையா தான் சொல்றேன்…” என்று அவள் இதழ்களை வருடவும் கண்மூடி அவன் தொடுகையில் சிவந்தவளை இன்னும் முன்னேறி சிவக்க வைத்தவன் அவளை காதல் என்னும் ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து அன்பு என்னும் முத்தை விதைக்க தொடங்கி இருந்தான்.
……….
வெப்பம் நிறைந்த ஆதவன் ஓய்வை எடுக்கவும் இரவின் குளிர்ந்த காற்றும் மனதை அமைதிக்கொள்ள வைக்க, கட்டிலின் ஒரு புறம் தன் மடிக்கணிணியுடன் அமர்ந்திருந்தான் விசாகன்.
கையில் பாலுடன் அறையில் நுழைந்தவள் உறங்கிய குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கணவனிடம் பாலை நீட்டினாள்.
“இந்தாங்க மாமா…”
“அப்படி வைச்சிடு..”
“குடிச்சிட்டு வேலைய பாருங்க”
“வைச்சிட்டு போடி” என சிடுசிடுத்தான்.
“எதுக்கு இப்போ சிடு சிடுன்னு இருக்கிங்க”
“காரணம் தெரியாதா உனக்கு?”
“தெரியாததுனாலதான் கேக்குறேன்… என்ன காரணம் சொல்லுங்க”
அவனும் தேவாவின் மேல் படிப்பிற்கு விண்ணப்பத்தை வாங்கி வைத்து இரண்டு நாட்களாகிறது… என்ன சொன்னாலும் வேண்டாம் என்பவளை என்ன செய்வது என்று கோபமானான்.
“அதுதானா… நீங்க இன்னும் விடலையா அந்த பேச்சை… புரிஞ்சிக்க மாமா… இவளை வைச்சிக்கிட்டு எப்படி படிக்க முடியும்… அது ,அது அப்போ அப்போ நடந்து இருக்கனும்… எனக்கு இப்போ இன்டிரஸ்ட்டே இல்ல” என்றாள் அவன் அருகில் அமரந்து.
“குழந்தைய காரணம் சொல்லாத சனா… அது எல்லாம் படிக்கலாம்… படிக்க படிக்க தன்னால இன்டிரஸ்ட் வந்துடும் டா… குரல் கனிவாக மாறியது.
“மாமா என்று சிணுங்கியவளின் கைகளில் காகிதத்தை திணித்தவன் ஒழுங்கா கையெழுத்தை போடு… நான் எல்லாம் பில் பண்ணிட்டேன்…. இப்போவே எல்லாம் முடிஞ்ச பாட்டி மாதிரி பேச வேண்டியது… உன்னோட கனவையே மறந்து தொலைச்சிட்டல… என்றான்.
அவள் அப்போதும் அப்படியே நிற்க
அதில் கோவம் கொண்டவன் “என்னை கட்டினதுனால தான் உன்னோட கனவே கலைஞ்சிடுச்சின்னு, எனக்கு கில்டியா இருக்குடி … பரவாயில்லை இப்படியே இருக்கட்டும்… உனக்கு என்ன வந்தது, நீ போமா… போய் உன் பாட்டி கிட்ட சொல்லிட்டு… பண்ணையம் பாரு” என்றான் கடுப்பாக”
அவனுக்கு சங்கடமாக இருக்கு என்று கூறியதும் மறுப்பேதும் கூறாமல் அவன் நீட்டிய இடங்களில் தனது கையெழுத்தை இட்டவள் அகமும் முகமும் கணவனின் அன்பை எண்ணி இப்போதும் வியந்தது. “சாரி சாரி மாமா நான் படிக்கிறேன் உனக்காக நான் படிக்கிறேன்”. என்றதும்
எனக்காக இல்ல உனக்காக உன்னோட கனவுக்காக படிக்கனும் டி என்றான் அவளை தன்னை நோக்கி இழுத்து.
“ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்று தன் இதழால் அவன் கன்னத்தில் கவி எழுதினாள்.
“தேங்க்ஸ் இப்படி சொல்லக்கூடாது டி என் செல்ல பொண்டாட்டி” அவளை இழுத்து அணைத்தவன் அவள் இதழ்களில் முத்த கவி எழுதி மொத்தமும் அவளுள் கரைந்தான்.
இவர்களின் வாழ்வில் எப்போதும் சந்தோஷமும் நிம்மதி மட்டுமே நிறைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாமும் விடை பெறுவோம்
நன்றி வணக்கம்…..
🌺🌺🌺🌺
ஆறு வருங்களுக்கு பிறகு
சுந்தரனுக்கும் அமுதாவிற்கும் 7 வயதில் பூஜிதாவும் 4 வயதில் முகேஷ் என்ற மகனும் இருந்தனர். தொழிற்சாலையில் விசாகனுடன் பங்குதாரராக இருந்தாலும் அவர்கள் குடும்ப தொழிலான பைனான்ஸ் கம்பெனியையும் நடத்தி வந்தான். அமுதா அரிசி ஆலை மற்றும் விசாகனுடைய தோப்பு பண்ணை வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டாள்.
சந்திரனுக்கும் மேகலாவிற்கும் இரண்டு மகன்கள் மூத்தவன் மயூரன் 5 வயதிலும் இளையவன் பவன் 2 வயதிலும் இருந்தனர். ஜெயசந்திரன் பணியின் காரணமாக சென்னையில் இருந்ததால் மேகலாவின் வாஸஸ்தலமும் சென்னை என்றானது. ஊர் பாசம் போகாததால் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுக் கொண்டு இருக்கிறாள்.
இவர்களெல்லாம் இப்படி இருக்க விசாகனும் தேவாசேனாவும் வாழ்க்கையில் பல மாறுதல்களை அடைந்திருந்தனர். இந்த ஆறு வருடத்தில் விசாகனின் தொழிற்சாலை ஒருசில சறுக்கல்களை கண்டாலும் இப்போது நல்ல வளர்ச்சியை அடைந்திருந்தது. தேவாவின் ஊரில் கட்டிய வீட்டில் அவ்வப்போது குடும்பத்துடன் சென்று தங்கி பார்த்து பராமரிப்பு வந்தான். தோப்பு துறவு பண்ணை என்று சொத்துக்கள் பெருகியிருந்தது… தேவாசேனா தன் கல்லூரி படிப்பை முடித்தவள் தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக வேலைக்கு சேர்ந்து இத்தோடு ஒருவருடம் ஆகியிருந்தது
“நில்லு பிரணவி இத ஒழுங்கா சாப்பிடு”
“மா ப்ளீஸ் எனக்கு வேண்டாம் இது நல்லாவே இல்ல”
“என்னடி நல்லா இல்ல… உடம்புக்கு நல்லது.. நீ சாப்பிட்டே ஆகனும்” என்று ஆறு வயது மகள் பிரணவியுடன் மல்லுக் கட்டிக்கொண்டு இருந்தாள் 5 மாத கருவை வயிற்றில் சுமந்த தேவசேனா…
தொழிற்சாலைக்கு செல்ல கிளம்பி வந்த விசாகன் கீழே மகளிடம் மனைவியின் போராட்டத்தை கண்டு சிறு புன்னகையுடனே அவர்கள் அருகில் வந்தவன் “நீ போ சனா உனக்கு காலேஜிக்கு டைம் ஆகல”
“ஆகுது மாமா… இவள பாருங்க ஒரு வாய் கூட சாப்பிட மாட்டுறா”
“நான் பாத்துக்குறேன்… நீ போ போய் கிளம்பு” என்றவன் அவளை ஓரிடத்தில் அமரவைத்து உணவை சாப்பிட வைத்தான்.
“பாருடா இந்த புள்ளைய… என் பேத்திய சாப்பிட அந்த பாடு பாடுத்தினா… இப்போ அப்பன் வந்தவுடனே அவ்வளவு அடக்கமா உட்கார்ந்து சாப்பிடுது” என தில்லை வாயில் கையை வைக்க
“பாட்டி அம்மான்னா கொஞ்சம் ஏமாத்தலாம்… அப்பாவை ஏமாத்த முடியாது.. அதுவும் சாப்பிடலன்னா ஐஸ்கிரீம் வாங்கி தரமாட்டாரே” பிரணவி பாவம் போல் முகத்தை வைத்து கூறிட,
கல்லூரிக்கு கிளம்பி வந்த தேவா “அதானே பார்த்தேன்… உன் அடம் எப்படி டா அவர்கிட்ட செல்லுபடியாகலன்னு… ரெண்டு பேரும் திருட்டு வேலையா பண்றிங்க.. ” அவளின் பேகை சரிசெய்து கொண்டே “உனக்கு நான்னா கிள்ளுக்கீரை டி.. அடுத்த வாட்டி ஜூரம்னு வந்து நில்லு டாக்டர் கிட்ட சொல்லி பெரிய ஊசியா போட சொல்றேன்” என மகளிடம் செல்ல கோபம் கொண்டாள் தேவா.
மனைவியின் சொல்லில் தேவாவின் கடந்த காலம் விசாகன் கண் முன்னே வர சட்டென எழுந்த சிரிப்பை அடக்கியவன் மகளிடம் திரும்பி “பிரணவி மாதிரியே இன்னொருத்தருக்கும் ஊசின்னா பயம்… அது யாருன்னு உனக்கு தெரியுமா பிரணவிமா” என்றான் மனைவியை பார்த்து நமுட்டு சிரிப்புடன்
தில்லைக்கும் அந்த நாளின் நினைவில் வாய் கொள்ளா சிரிப்புத்தான்… இருந்தும் தேவாவின் கோபம் அறிந்து அடக்கிக் கொண்டார்.
“யாரு… யாருப்பா?… “அது என்றது குழந்தை தெரிந்துக் கொள்ளும் ஆவலில்
அவள் அதட்டலில் வாயை முடிய குழந்தை விசாகனின் காதில் “அப்பா இவினிங் சொல்லுங்க நான் தமிழ் கொஞ்சம் எழுதனும் இப்போ தெரிஞ்சா அம்மா அதுக்கும் திட்டுவாங்க” என்ற மகள் சாப்பிடும் வேலையை தொடர்ந்தாள்.
கணவனை கண்களால் எச்சரித்தவள் தில்லையின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
“சனா பிரணவியும் ரெடி” மகளை அழைத்துக் கொண்டு மனைவியிடம் வந்தான்.
மகளை காரில் ஏறச்சொல்லியவள் கணவனிடம் குனிந்து “என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?”
“போதும் … பிரணவி முன்னாடி இதை சொல்லிடாதிங்க என் மானமே போகும்”
“டிரை பண்றேன் செல்லக்குட்டி”
அதற்குள் காரில் அமர்ந்த குழந்தை இரண்டு முறை ஹாரனை அலறவிட
“ஏய் வறேன் டி எதுக்கு இப்படி அலும்பு பண்ற”
“அப்பா… அம்மா… எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சி” கத்திக்கொண்டு இருந்த பிரணவி “அதுதான் உங்களை என் ஸ்கூலுக்கே டிச்சரா வரச்சொன்னேன்… ஊங்களால நானும் தப்பிச்சியிருப்பேன்ல” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு
“அடிங் உன் லொல்லுக்கு நான் ஆள் இல்லடி…” காரில் அமர்ந்தவள் “வண்டிய எடுங்க எனக்கும் பஸ்ட் அவர் கிளாஸ் இருக்கு” என்றாள்.
“அப்பா…”
“மாமா… “
இருவரும் ஒரே நேரத்தில் அழைக்க இவர்களின் செல்ல சண்டையை ரசித்தபடி
பயணத்தை தொடர்ந்தான் விசாகன்.
தன்னை நெருங்கவிடாமல் நெருப்பாய் தகித்தவனின் வாழ்வில் குளிர் தென்றலாய் வீசியவள் அவன் வாழ்வை பூ பூக்கும் நந்தவனமாய் மாற்றினாள் அவனின் இதயத்தை பூ போல் கொய்த தேவசேனா…..