அவளுக்கு மனப்பிறழ்வு சிறிது சிறிதாக அதிகமாகி விட்டது..
அதிகம் குழந்தையுடன் இருந்து புழங்கியதால் குழந்தை மட்டும் அவளுக்கு தெரிகிறது அதுவும் குழந்தை அழுதால் பால் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் நினைவில் உள்ளது..
ஏனய அனைத்தையும் வள்ளி தான் பார்த்துக் கொள்வாள்..
அடுத்து இரட்டை குழந்தைக்கு ஆசைப்பட்டவளுக்கு இன்னும் ஒரு குழந்தையும் தாங்காததால் மீனாட்சி குழந்தையை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது..
மலரும் தங்கை பாப்பாவுடன் தாயுடன் சேர்ந்து நன்றாக விளையாடுவாள்..
கோதையும் மீனாட்சியையும் தன் பேத்தி போல் பார்த்துக் கொண்டார்..
மனைவிக்கு தன்னை யார் என்று அடையாளம் தெரியவில்லை..
அதை நினைக்கும் போது தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேண்டும் என நினைத்து மனதால் மரித்து விட்டான் பாண்டி..
அவளை இப்படியா பார்க்க வேண்டும்.. இதற்காகவா அவன் நாடு கடந்து போய் உழைத்து அனைவரையும் நன்றாக வாழ வைக்க வேண்டும் என நினைத்து கஷ்டப்பட வேண்டும்..
அவனது வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள்.. அவளும் அவனிடம் உண்மையை மறைத்து விட்டாள்..
மனைவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியா தாய் மீது கோவத்துடன் இருந்தான்.. அதில் ஒரு துளி கூட குறையாமல் மீனாட்சியின் மேலும் பாண்டிக்கு கோபம் இருந்தது..
மதியிடம் கூறிக்கொண்டு மீனாட்சியின் கையைப் பிடித்து குழந்தையை வாங்கிக்கொண்டு அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான் பாண்டி ..
வீட்டு ஹாலில் இருந்து அவனின் அன்னை டிவி பார்த்துக் கொண்டிருக்க லலிதா பாண்டியும் வந்திருந்தால் லீலா பாண்டியும் அங்கேதான் இருந்தாள்..
இன்னும் இரண்டு நாட்களில் மகனிடம் இருந்து பணம் வந்துவிடும்.. அதையும் அவர்கள் எடுத்து நன்றாக செலவு பண்ணலாம் என காத்திருந்தார்கள்..
வீட்டு வாசலில் நின்று அன்னையின் பெயரைச் சொல்லி பாண்டி அழைத்து கத்தியதும் அடித்து பிடித்து என்னவோ என்று வந்து சேர்ந்தார்கள் வெளியே..
இரண்டு வருடத்தில் மகன் சொல்லாமல் கொள்ளாமல் அவளையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு இந்த கோலத்தில் வந்து நின்றதை பார்த்ததும் அவனின் அன்னைக்கு சற்று ஆட்டம் கண்டு விட்டது..
அவன் ருத்திர மூர்த்தியாக நின்றான்..
லீலா பாண்டியும் லலிதா பாண்டியும் அன்னைக்கு பின் ஒளிந்து கொண்டார்கள்..
இப்படி கல் நெஞ்சம் படைத்தவர்களுக்காகவா தான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என நினைத்து வருந்தினான்..
முன்புதான் அவனை தாய் மதிக்கவில்லை.. தற்பொழுது தன்னை மதித்து தன் வாழ்க்கையை காப்பாற்றி வைப்பார்கள் என நினைத்திருந்தால் வாழ்க்கையை அழித்து விட்டார்கள்..
அவன் எத்தனை இரவுகள் ஏன் தன்னிடம் தன் குழந்தை வரவில்லை என ஏங்கி அழுது இருப்பான்.. என்பது அவனுக்கு தான் தெரியும்..
அன்று அவன் அழுத கண்ணீர் அனைத்தும் இன்று வீணாக தெரிந்தது…
அவன் எதிர் பார்த்தது போன்று அவனுக்கு குழந்தை பிறந்து விட்டது..
தன் மனைவியையும் இவ்வளவு கஷ்டப்பட வைத்து தன் குழந்தை பிறப்பையும் தன்னிடம் இருந்து மறைத்து குழந்தையையும் கஷ்டப்பட வைத்து வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று நினைத்துக் கொலை வெறி தான் உண்டானது..
லதாவுக்கு அண்ணன் நாட்டுக்கு வந்து விட்டான் என தெரிந்ததும் அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்…
வீட்டு வாசலில் முன்பு வைத்து தான் பாண்டி அனைவரும் வேடிக்கை பார்க்கவே தாயை வசை பாடினான்..
“ இனி நான் எதுவுமே பேச விரும்பல..
என் பொண்டாடியும் பிள்ளையும் நல்லபடியா கவனிச்சுக்கிட்டதுக்கு உனக்கு ரொம்ப நன்றி.. இனி நான் உனக்கு மகனும் இல்ல.. நீ எனக்கு அம்மாவும் இல்லை.. எனக்கு இந்த குடும்பமும் இல்லை.. சொந்தமும் இல்லை.. இந்த வீடும் வேண்டாம்.. நீங்க யாரும் வேணாம்.. இன்னும் ஒருத்தி கல்யாணத்துக்கு நிக்கிறா அதுவும் என்னோட பொறுப்பு என்பதால் கல்யாணத்துக்கு தேவையான பணம் மட்டும் கல்யாண வயது வந்ததும் கட்டாயம் வந்து சேரும்.. அண்ணா இருக்கான் அண்ணி இருக்கா? என்று இனி யாரும் சொந்தம் கொண்டாடி அந்த வீட்டு பக்கம் வந்து விடக்கூடாது..
பெத்த கடமைக்காக மாதமாதம் பணம் மட்டும் வீட்டை வந்து சேரும்..
நீ என்ன நெனச்சி என் புள்ள பிறந்ததை எனக்கு தெரியாம மறச்சியோ ஆனா உன்னை மாதிரி நான் கீழான கேவலமான பிறவி இல்லை…
இரண்டு பேர் கல்யாணம் முடிச்சுட்டாங்க இன்னும் ஒருத்தி கல்யாணம் பண்ணாம இருக்கா அவளோட பொறுப்பையும் நான் ஏற்று பணம் அனுப்வேன்..
நீ இந்த வீட்டில தனியா இரு.. உன் பொண்ணுங்களும் இல்லாம நானும் இல்லாம செத்து புழுத்து பொணமா கிடந்தாலும் பக்கத்துல இருக்குறவங்க பார்த்து சொன்னாலும் உன் பொணத்துக்கு கூட கொல்லிப்போட நான் வரமாட்டேன்.. இதுதான் நீ எனக்கு செய்ததற்கு நான் உனக்கு கொடுக்குற தண்டனை..” என்று கூறிவிட்டு
கடைசியாக அந்த வீட்டிற்குள் சென்று அவனுக்கு சில பொருட்களை எடுத்துக்கொண்டு அவனது அங்கிருந்த உடைகளையும் எடுத்து கொண்டு மனைவியை ஒரு கையிலும் குழந்தையை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்..
தாயிடம் தன் கோவத்தை காட்டி விட்டான்.. ஆனால் மனைவி இப்படி இருக்கும் போது கோவத்தையும் வெறுப்பயும் காட்ட முடியாமல் நேராக மாமியார் வீட்டுக்கு சென்று அவர்களிடமும் ஒரு முறை கத்திவிட்டு உடனடியாக மதியின் மூலம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே குடி பெயர்ந்து விட்டான்..
அவனுக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக் கொள்வான்.. ஆனால் அவன் குழந்தைக்கும் அவன் மனைவிக்கும் இவர்கள் செய்த அநீதியை அவனால் பொறுக்க முடியவில்லை..
அவன் கையில் கொஞ்சம் பணம் இருந்தது.. ஆனால் உடனடியாக அதை கார் வாங்க போட வேண்டாம்.. முதல் மனைவியை குணப்படுத்தலாம் என்று பண்ணையார் முன்பு போய் நின்றான்..
அவரும் அவனைத் திடீரென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.. ஆனால் அவன் குடும்ப நிலையை கூறியதும் அவன் அனுப்பிய பணத்தில் அனைத்தையும் திருமணத்திற்கு கொடுத்து விட்டதாக பொய் கூறி அவனுக்காக ஒரு தொகை பணத்தை சேர்த்து வைத்திருந்தார்..
கஷ்டப்பட்டு அவன் உழைத்து அனைத்தையும் அவர்களுக்கு செலவழித்தால் பிற்காலத்தில் அவனுக்கு என எதுவும் மிஞ்சாது என அவர் நினைத்து தான் பணம் எடுத்து வைத்தார்..
அந்த பணத்தில் அவன் புதிதாக கார் வாங்க முடியும்..
அவன் பெயரில் அவரே அவனை அழைத்துச் சென்று கார் வாங்கி கொடுத்தார்..
அவனுக்கு தெரிந்த ஒரே தொழில் ட்ரைவிங்.
மனைவியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவன் பாசமாக பேசி அரவணைத்து அவளை மீட்க முயற்சி செய்தான்..
உழைக்கவும் வேண்டும் அதனால் அவன் கார் ஓட்ட சென்று விட்டால் மனைவிக்கு துணையாக ஆள் வேண்டும் என கோமதியை அழைத்து வந்தான்..
அன்புக்கு தெரிந்த ஒரே தொழில் சமையல் அதை அவன் சிறப்பாகவே செய்தான்..
ஒரு குழந்தையை பார்ப்பது போல் தன் குழந்தையும் பார்த்துக் கொண்டு தன் மனைவியையும் பார்த்தான்..
உணவு ஊட்டுவது குளிக்க வைப்பது பாத்திரம் கழுவி வைப்பது வீட்டு வேலைகள் செய்வது என அனைத்தையும் செய்து கையில் வைத்து தாங்கினான் மனைவியை..
சரியான முறையில் அவளுக்கு சிகிச்சை அளித்ததால் அவளும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகினாள்..
இப்படியே மூன்று மாத காலம் முழுமையாக அவன் அன்பில் இருந்ததால் அவள் பூரணமாக குணமாகி விட்டாள்..
நன்றாக குணமாகிய பின்பு தான் அவன் கோபத்தை அவளிடம் காண்பித்தான்..
நன்குணமாகிய பின் தன் கணவன் வந்திருப்பதை அறிந்து கொண்டாள்..
பாண்டி முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் கோபமாக இருந்தான்.. ஆனால் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் கண் கலங்கியது..
அவளுக்கு தெரிய வேண்டும் தன் கோபத்தின் வலிமை என்னவென்று.. இல்லையென்றால் அவள் தன்னை இளிச்சவாய் என நினைத்து இன்னும் வரும் காலத்திலும் இதே போல் பிழை செய்ய மாட்டாள் என என்ன நிச்சயம்..
அவன் சொன்னது போன்று மாதம் தவராமல் பணம் அனுப்பியதால் அவர்களுக்கு அவன் பிரிவு பெரிதாக தெரியவில்லை..
தன் மீது பிழை இருப்பதை உணர்ந்து கொண்ட மீனாட்சி கணவனிடம் கெஞ்சி கூத்தாடி அவனை தாஜா பண்ணி இன்று அவளுடன் பேசக்கூடிய அளவிற்கு கொண்டு வந்தாள்..
மகள் தான் அவர்கள் இருவருக்கும் பாலமாக இருந்தாள்..
காதலித்து கைப்பிடித்த மனைவியை கோபத்துடன் தள்ளி வைக்க அவனால் முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் சேர்ந்து சிரித்து பேசி வாழ ஆரம்பித்தார்கள்..
மனைவியை மன்னித்த அளவிற்கு தாயை அவனால் மன்னிக்க முடியவில்லை..
மீனாட்சி விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்து படித்தால்..
படிப்பு முடித்ததும் அந்த ஊரிலேயே ஆசிரியர் வேலையில் சேர்ந்தாள்..
அவர்கள் மகள் தாரணிக்கு மூன்று வயதாகியது..
அவர்கள் வாழ்க்கை ஒரு அளவிற்கு இயல்பாக சென்றது..
சொந்த கார் என்பதால் பணத்தை ஓரளவுக்கு மிச்சம் பிடித்து இன்னும் ஒரு காரை வாங்கினான் பாண்டி..
அவனுக்கு செய்த கொடுமைக்கு அவன் தாயை தண்டித்து விட்டான்.. அதை தவிர வேறு அவனுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை.. அவன் கடமையும் அவன் சரியாகத்தான் செய்திருக்கிறான்..
அதனால் நிம்மதியாக தான் பாண்டி இருக்கிறான்..
இருவருக்கும் இடையே மீண்டும் காதலுடன் கூடிய அழகிய கூடல் நடைபெற்றது..
அந்த வாடகை வீட்டையே சொந்த வீடாக மாற்றிக்கொண்டான்..
அவன் மனைவி மகள் என ஒரு நிறைவான குடும்பமாக சந்தோஷமாக வாழுக்கிறான்..
அண்ணனின் வாழ்க்கையும் சீராகிவிட்டது. படிப்பும் முடிந்து விட்டது. அதனால் மெஸ் கணக்கு வழக்குகள் பார்த்து பொறுப்பாக நடத்தி வருகிறாள்..
மேலும் மெஸ் ஹோட்டலாக விரிவு படுத்தினார்கள்..
அதற்கு பாண்டி தங்கைக்கு பண உதவி செய்தான்..
அவர்களும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து இப்பொழுது லதா ஐந்து மாத குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள்..
மதியின் கடின உழைப்பிற்கு பின் தலைவர் முதலமைச்சராகி இந்தமுறை ஆட்சியை பிடித்தார்கள்…
இதற்கு முழு முதல் காரணம் மதி என அவர் பெருமையாக பேசினார்..
மதி அடுத்து எம்பி எலெக்ஷனில் நிற்க ஏற்பாடாகியது..
ராவணன் நோய் ஊற்று கை கால் செயல் இழந்து சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருந்தான்..
லீலா பாண்டி தாய்க்கு எந்த உதவியும் செய்யாததால் அவரே சமைத்து உண்டு வீட்டு வேலைகள் செய்வது என தனிமையை உணர்ந்து மிகவும் உடல் உபாதைகள் காரணமாகவும் கஷ்டப்படுகிறார்..
லலிதா பாண்டி இங்கு வந்தால் தாய் அதிகமாக வேலை செய்ய வைக்கிறார் என்பதால் இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை..
அப்பொழுது இருந்து இப்போது வரை இதுதானே மகளின் இயல்பு என தவறாக நினைக்காமல் ஏற்றுக் கொண்டார்..
செந்தூரப்பாண்டி சொன்னது போல் இதுவரை தாயை வந்து பார்க்கவில்லை.. மாதம் தவறாமல் அவர்கள் இருவருக்கும் பணம் வந்துவிடும்..
பணம் தானே வேண்டு..ம் மகனும் சொந்தமும் வேண்டாம், அதனால் அனுபவியுங்கள் என அவன் கண்டு கொள்ளவில்லை..
இங்கு மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கொஞ்ச காலங்களாக இரட்டை வாழை பழமே அதிகம் உண்டு நினைத்தது போல் அயராது கணவனுடன் உழைத்து இப்பொழுது இரண்டு குழந்தைகளை அவள் ஆசைப்படி வயிற்றில் தாங்கி நான்கு மாதங்களாக இருக்கிறாள் வள்ளி..
வள்ளியின் முகம் மிகவும் பூரித்து போயிருந்தது..
அவர்கள் வாழ்க்கை பாதையில் தடையாக இருந்த ராவணன் என்னும் அரக்கனை அவர்கள் ஒதுக்கி வைத்தபின் அவர்கள் வாழ்க்கையில் அனைத்தும் வசந்தமே..
இதோ மதி அமைச்சர் தேர்தலிலும் நின்று ஜெயித்து விட்டான்..
மதி உணவுத்துறை அமைச்சர்..
பாடசாலைகளில் மருத்துவமனைகளில் என பொது இடங்களில் உணவுகள் சுத்தம் இல்லாமல் கிடைக்கிறது அதனால் வேறு நோய்கள் வருவதால் அந்த துறையை அவனே தேர்ந்தெடுத்து அந்த துறையை சரி பண்ண ஆரம்பித்தான்..
நாட்டுக்கான கடமை அவன் தொழில் என அனைத்தையும் சம பங்காக கவனித்துக் கொண்டு மனைவிக்கு கால் பிடித்து விடுவது கால் வீங்கி இருந்தால் சுடு நீரில் ஒத்தடம் கொடுப்பது குழந்தையுடன் கொஞ்சுவது என இரவு நேரத்தில் மனைவியை கையில் வைத்து தாங்கினான் மதி..
இப்படியே நாட்கள் போக மதி வள்ளி ஜோடிக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என அழகிய இரண்டு குழந்தைகள் பிறந்தது..
மலருக்கு குட்டி தம்பியும் தங்கையையும் பார்த்து சந்தோசம் தாளவில்லை..
பள்ளி சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் அவர்கள் அருகில் தான் அவளது மிச்ச நேரம் செல்லும்..
கணவனின் வேலைப்பளுவை குறைப்பதற்காக மல்லிகை தோட்டம் ஜவுளி பூங்கா ரைஸ் மில் என அனைத்தையும் நேரம் கிடைக்கும் போது வள்ளி சென்று பார்த்து வந்தாள்…
அதனால் மதிக்கு இன்னும் அதிகமாக வீட்டில் நேரம் செலவழிக்க கிடைத்தது.
குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தான்..
மீனாட்சியும் மீண்டும் கருவுற்று அழகிய ஆண் குழந்தையை பெற்றாள்..
இந்த குழந்தையின் வளர்ச்சி துடிப்பு என அனைத்தையும் ரசித்து பார்த்து பார்த்து மனைவியை கவனித்து குழந்தை பேற்றயும் நன்றாக கவனித்துக் கொண்டான் பாண்டி..
வீட்டில் மீனாட்சி ஒரு வேலை செய்வதில்லை..
அவள் செய்வதில்லை என்பதை விட பாண்டி செய்ய விடுவதில்லை என்பதே சரி..
அவள் அவன் காதலுக்காக இழந்த அனைத்தையும் பாண்டி ஒவ்வொன்றாக அவளுக்கு மீட்டு கொடுத்தான்..
அவன் நாட்டுக்கு வரும் பொழுது அவனுக்கு இரண்டு கார்களும் ஒரு குழந்தையும் இருக்க வேண்டும் என நினைத்திருந்தான்..
அவன் நல்ல மனதுக்கு அது அனைத்தும் நடந்தது..
லீலா பாண்டி காதலித்து ஒருவனை திருமணம் செய்து சென்று விட்டாள்..
லதாவுக்கு ஆறுதல் கூறி உதவி செய்தது போன்று லீலாவுக்கு பாண்டி எந்த ஒரு உதவியும் செய்யவில்லை ஏன் என்றும் கேட்கவில்லை..
மகள்கள் மகள்கள் என அவர்களை தலையில் தூக்கி வைத்த பாண்டியின் அன்னை தற்பொழுது அந்த வீட்டில் யாரும் இல்லாமல் பேச்சுத் துணைக்கு கூட ஒருவரும் இல்லாமல் அவரே சமைத்து உண்டு அவரே அனைத்தையும் செய்து தனிமையில் மிகவும் வருந்தி வாழ்கிறார்..
உணவு இல்லாமல் பசியுடன் வாழ்வது ஒரு கொடுமை என்றால் உறவு என்று யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்வது அதைவிட பெரிய கொடுமை..
தனிமையில் கிடந்து அழுந்தி மரணிப்பதே அவருக்கு கிடைத்த தண்டனை..
திட்டமிட்டு வாழ்க்கை ஆரம்பித்தான் பாண்டி.. அந்த திட்டப்படியே பல கஷ்டங்களை தாண்டி வெற்றி பெற்றான் செந்தூர பாண்டி..
ராவணன் மருத்துவமனையில் இன்னமும் கை கால் செயலிழந்து அனைத்திற்கும் ஒருவர் உதவியை எதிர்பார்த்து கண்ணீர் வடித்து மரணத்தை வரமாக கேட்டு தவிக்கிறான்..
நிர்மலாவோ கமிஷனரோ அவனை எட்டியும் பார்க்கவில்லை..
எபிலாக்
ஒரு வருடம் கழித்து
லதா பாண்டி அன்பு.. மீனாட்சி செந்தூரப்பாண்டி.. வள்ளி மதியழகன் என மூன்று ஜோடியும் ஒன்றாக சேர்ந்து மதியழகன் வள்ளியின் தவப்புதல்வர்கள் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்..
மூன்று ஜோடியும் சந்தோசமாக கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு புகைப்படம் எடுத்து விருந்து உணவு உண்டு அன்றைய நாளை சந்தோஷமாக கழித்தார்கள்..
முதலமைச்சரும் வந்து குழந்தைகளை ஆசீர்வதித்து பரிசு கொடுத்து விட்டு சென்றார்..
அவர்களது நல்லாட்சியில் அடுத்த முறையும் அவர்களே ஆட்சிக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..
அடுத்து அவர் பதவியான முதலமைச்சர் பதவியை மதிக்கு தான் கொடுக்கத் திட்டம்..
வள்ளியும் மதியழகனும் அவள் தந்தையால் மிகவும் கஷ்டப்பட்டு பல துன்பங்களை அனுபவித்து வள்ளியின் தாயையும் இழந்து அவர்களது இளமை வாழ்க்கையும் மதி சிறையில் கழித்து விபத்துக்கு உள்ளாக்கி மீண்டும் பிழைத்து வந்து பல இன்னல்களையும் துன்பங்களையும் சந்தித்து கட்சித் தலைவர் தனது தற்போதைய முதலமைச்சர் ஐயா அவரின் உதவியுடன் எதிர்பார்க்காத அளவு நிமிர்ந்து உயரத்தில் இருந்தான்..
அவன் உயரத்திற்கு மனைவியும் முழு முதல் காரணம்..
இருவரும் காதலோடு சேர்ந்து ஒற்றுமையாகவே அவர்களது மிச்ச வாழ்க்கையும் கழிப்பார்கள்..
மீனாட்சி செந்தூரப் பாண்டியன் ஜோடியும் பாண்டி ஒரு திட்டம் தீட்டி அந்த திட்டத்தின் படி செயல்படுத்த தாயின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து காதல் மனைவியை விட்டுவிட்டு குடும்பத்திற்காக கடமைக்காக நாடு விட்டு நாடு உழைக்கச் சென்றான்.. அதனால் பலவற்றை இழந்து நாட்டிற்கு திரும்பும் போது மனைவி சுயநினைவு இல்லாமல் இருந்ததை பார்த்து தவித்து நொறுங்கிப் போய் மீண்டும் மனைவியை காதலோடு அரவணைத்து மீட்டெடுத்தான்..
அவன் வாழ்வில் அவன் தாய் தான் அவனுக்கு எதிரி..
அவன் திட்டப்படி அனைத்தும் நிறைவேறி சொந்தமாக உழைத்து குடும்பத்தை நன்றாக பார்த்து வருகிறான்..
அவன் வாழ்வில் உதவி செய்த பண்ணையாரை அவன் என்றும் மறக்க மாட்டான்..
இரண்டு ஜோடியும் அவர்கள் எதிரியையும் மறக்க மாட்டார்கள்.. காதலையும் மறக்க மாட்டார்கள்.. அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்களையும் மறக்க மாட்டார்கள்..
நன்றி மறவாமல் ஒற்றுமையோடு இரண்டு ஜோடியும் சந்தோஷமாக வாழட்டும்..