ஸ்ருதகீர்த்தி பாடும் ம்யூஸிக் ட்ரூப்பில் முக்கியமானவனும் அவளின் நண்பனுமாகியவன் நரேஷ்.
“ஹ்ம்ம், நாட் ஆன் இஷ்யூ நரேஷ்…” என்றவள் சோர்வை ஒதுக்கி மிச்சமிருந்த வேலைகளை எடுத்து வைத்திருந்தாள்.
சரியாக உண்ணாதது, உண்டதும் தொண்டைக்குள் நிற்பதை போலிருக்க, அடுத்தடுத்து பாடியது என தொண்டையும் கரகரப்பாய் இருக்க இதமாக வெந்நீர் குடிக்க வேண்டும் போலிருந்தது.
அந்த திருமணம் மண்டபம் இங்குமங்குமாய் சிலரை மட்டும் காட்டியது. மறுநாள் காலை தான் திருமணம்.
முதல்நாள் இசை நிகழ்ச்சிக்கு வந்திருக்க சற்று முன்னர் தான் முடிந்திருந்தது. அரைமணி நேரம் என்றவன் ஒருமணி நேரமாக்கி இருந்தான்.
ஒருவழியாக எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களின் வேன் கிளம்ப அங்கிருந்து இரண்டு மணி நேரமாகிவிடும் தன்னுடைய பெண்கள் விடுதிக்கு செல்ல.
“ஸ்ருதி ஏதாவது வேணுமா?….” என ஆசுவாசமாய் வந்து அவளருகே அமர்ந்தான் நரேஷ்.
“எதுவும் வேண்டாம். கொஞ்ச நேரம் என்னை தூங்க விடு நரேஷ்…” என்றவள் ஜன்னல் பக்கம் தலையை சாய்த்தாள்.
நரேஷ் அவளின் முகத்தையே அளவிட அதன் உள்ளுணர்வில் கண்ணை திறந்தவள்,
“ஓகே, எல்லாருக்கும் ஓகேனா ஒரு டீ ஷாப்ல ஸ்டாப் பண்ணு. சூடா ஏதாவது குடிக்கனும்…” என்றாள்.
அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதை போல அவன் பார்த்தாலும் பரவாயில்லை என கண்ணை மூடிக்கொண்டவள் அசதியில் அயர்ந்து உறங்கிவிட்டாள்.
“ஸ்ருதி…” என்றவன் அழைப்பு கிணற்றுக்குள் இருந்து கேட்பதை போலிருக்க வலிந்து இமை பிரித்து விழித்தாள்.
“இறங்கு, டீ குடிக்கலாம்….” என்றதும் தலையசைத்தவள் கீழே இறங்கினாள்.
தன்னுடன் வந்தவர்களும் இறங்கி நிற்க தானும் கீழே இறங்க தூக்கி போட்டிருந்த கூந்தல் அவிழ்ந்து முழங்காலை தொட்டது.
“ஸ்ருதி மோளே…” என சிரித்தாள் சுபஷ்வினி.
அவளுடன் ட்ரூப்பில் பாடும் இன்னொரு தோழி. உயிர் தோழியும் கூட. இருவரும் ஒரே விடுதியும்.
எப்போதும் ஸ்ருதியின் நீண்ட கூந்தலின் மேல் அவளுக்கு தீராத ஆசை. அதுவும் பேராசை. தனக்கும் அத்தனை நீளம் வேண்டும் என்று.
“என்ன எண்ணெய் தேய்ச்சும் வளருவேனான்னு சேட்டை பண்ணுது பாரேன் என் முடி…” என்பாள் சுபஷ்வினி.
ஸ்ருதியின் கூந்தல் அவிழ்ந்து விரிந்தால் போதும் அவளின் கண்கள் அதில் மட்டுமே மையம் கொள்ளும்.
“போதும், போதும்…” என்றவள் உடனே கூந்தலை சுருட்டி உச்சியில் கொண்டையிட்டு ஸ்டிக்கை சொருகினாள்.
“பக்கா சைனீஸ் பொம்மை…” என்றான் நரேஷ்.
“ஸ்யப்பா டீக்கு வழி பண்ணுங்கய்யா…” என அந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டாள் ஸ்ருதி.
டெனிம் ஜீன்ஸும், டீஷர்ட், அதன் மேல் முழு நீள அங்கி போல தொளதொளவென கோட் அணிந்திருந்தாள்.
“இந்த அவுட்பிட் எல்லாம் எங்க தான் நீ பர்ச்சேஸ் பன்றியோ?…” என அடுத்ததாக நரேஷ் சொல்ல,
“உனக்கு கல்யாணம் ஆகட்டும். உன் வொய்பை கூட்டிட்டு போய் காமிச்சிடறேன்…” என்றவள் அவன் நீட்டிய டீயை வாங்கி பருகிக்கொண்டிருந்தாள்.
அந்த டீக்கடையில் இருந்த சிறிய டிவியில் முதல்நாள் இரவு நடந்த ஒரு நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு ஓடிக்கொண்டிருந்தது.
அது முன்னணி இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா. மிக பிரமாண்ட அமைப்பில் வெளியாகி இருந்தது.
இப்போது வலைதளங்களிலும் அதுவே ஹாட் ந்யூஸ். ஒவ்வொருவரின் போனிலும் ஸ்டேட்டஸ், ஸ்டோரீஸ், ஷார்ட்ஸ் என எல்லாவற்றிலும் அந்த திரைப்படத்தின் பாடல்களின் தொகுப்பு தான்.
திரும்பும் திசையெங்கும் அதுவே ஒலித்துக்கொண்டிருந்தது. படத்தை பார்க்கும் ஆர்வத்தையும் கூட்டியிருந்தது.
“இந்த சாங்ஸ் செம்ம வைப்ல ஸ்ருதி. நாளை மறுநாள் அந்த டைரக்டர் சாரங்கபாணி பொண்ணுக்கும், அந்த படத்தோட ம்யூஸிக் டைரக்டர் பார்த்திவ் கிருஷ்ணாவுக்கும் எங்கேஜ்மென்ட்…” என்றாள் சுபஷ்வினி.
“எஸ், எனக்கும் தெரியும். ரெண்டுபேருக்கும் அவ்வளவு பொருத்தம். மேட் ஃபார் ஈச் அதர்ன்னு சொல்லுவாங்களே?…” என்றான் நரேஷும்.
“அஷ் என்னோட பேக்ல ஒரு பாராசிட்டமால் எடுத்துட்டு வா…” என்றவள்,
“நரேஷ் ஒரு கப் ஹாட் வாட்டர் வேணும்னு கேளு….” என்று சொல்ல இருவரும் பேசுவதை விட்டுவிட்டு அவளிடம் நெருங்கினார்கள்.
“என்னாச்சு ஸ்ருதி?….” என சுபஷ்வினி அவளை தொட்டு பார்க்க காய்ச்சல் கொதித்தது.
“என்னடா இவ்வளோ ஃபீவர்….” என தொட்டு பார்க்க அதற்குள் நரேஷ் ஓடி சென்று ஸ்ருதியின் பேக்கை எடுத்து வந்தான்.
“டேப்லெட் எடுத்து வர சொன்னா இவன் பேக்கையே தூக்கிட்டு வந்திருக்கான்….” என்றவள் தானே எடுத்து பிரித்து வெந்நீரை வாங்கி மாத்திரையை முழுங்கிகொண்டாள்.
“அதான் இவ்வளோ டயர்டா நீ? இல்லைன்னா எப்பவும் ப்ரிஸ்க்கா இருப்பியே?…” என உடன் வேலை செய்பவர்களும் சூழ்ந்துகொள்ள,
“அடேயப்பா வெறும் பீவர்டா. நீங்க பாட்டுக்கு விசாரிச்சு அதை தங்க வச்சிராதீங்க. போய் தூங்கி எழுந்தா சரியாகிரும்….” என கூட்டத்தை கலைத்துவிட்டாள்.
“சரி வா, உள்ள போகலாம்….” என்று சுபஷ்வினி சொல்ல எழுந்து நின்றவளுக்கு தலை சுற்றியது.
அதிலும் மண்டபத்தில் உண்ட உணவும் செரிமானம் ஆகவில்லை. மொத்தமாக வெளிவர குடலே வந்துவிடும் போலிருந்தது.
“பேசாம ஹாஸ்பிட்டல் போய்டுவோமா?….” என நரேஷ் கவலையானான்.
“ஹப்பா இப்பதான் ரிலாக்ஸா இருக்கு. இந்த ஃபூட் பண்ணின வேலை தான் இவ்வளவும்….” என்றவள்,
“எதுக்கு முகத்தை தூக்கி வச்சிட்டிருக்கீங்க? நாளைக்கே கப்பாவும், மீன் கறியும் கழிச்சா செரியாவும் தனே?…” என்று கண் சிமிட்டினாள் ஸ்ருதி.
“ஓகே ஓகே, வா. அதான் இப்போ ஓகே சொல்லிட்டேனே?….” என்றவள் வேனில் ஏறிக்கொள்ள பின்னே வந்த நரேஷ் அவளருகே அமரும் முன் சுபஷ்வினியை பிடித்து அமர்த்திக்கொண்டாள் ஸ்ருதி.
நரேஷின் எண்ணம் என்னவென்று இருவருமே யூகித்தது தான். முடிந்தளவு ஸ்ருதியும் தவிர்த்து மறுத்து ஒதுங்கி செல்ல நரேஷ் விடுவதாக இல்லை.
“பிஜி போகவும் நல்லா தூங்கனும். நாளைக்கு எந்த ப்ரோக்ராமும் இல்லை. நீ ஆபீஸ் போகனும்ன்னா போய்ட்டு வா…” என்ற ஸ்ருதி நரேஷை கவனிக்காதவாரு சுபஷ்வினியை பேச்சினுள் இழுத்துக்கொண்டாள்.
“ஸ்ருதி நரேஷ்…”
“ப்ச், வேற ஏதாவது பேசு அஷ்…” என்றவள் சலிப்பில் அஷ்வினியும் ஊரிலிருந்து வந்த அழைப்புகளை பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.
“அக்காவுக்கு எப்போ கல்யாணம்? இன்விடேஷன் குடுக்க ஆரம்பிச்சாச்சா?…” என ஸ்ருதியும் பேச அவர்களின் விடுதியும் வந்துவிட்டது.
“ஓகே பை நரேஷ்…” என்ற ஸ்ருதி உடனே இறங்கி செல்ல,
“எமர்ஜென்ஸினா கால் பண்ணு ஸ்ருதி. நான் உடனே வரேன்…” என்றான் அவன் சத்தமாக.
“அவசியம் இருக்காது. நீ வெய்ட் பண்ணவேண்டாம் நரேஷ்…” என்று அதே சத்தத்தில் சொல்லிவிட்டு சென்றாள் ஸ்ருதி.
அறைக்குள் நுழைந்து களைப்பு தீர குளித்து வெளியே வந்தவளை முறைத்தபடி நின்றாள் சுபஷ்வினி.
“காய்ச்சலோட குளிப்பாங்களா யாரும்?….” என ஸ்ருதியை திட்ட,
“நான் குளிப்பேன்….” என்றவள்,
“ஹெட் பாத் எடுக்கலையே. விடு விடு….” என்று வந்து பொத்தென்று கட்டிலில் விழுந்தாள்.
“நரேஷ் பாவம் ஸ்ருதி…” மெல்ல அவளருகே வந்து அஷ்வினி பேச்சை துவங்க,
“நான் தான் இந்த மேரேஜ், கமிட்மென்ட் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு சொல்றேன்ல…” என்றாள் ஸ்ருதியும்.
“உன்னோட அம்மாப்பாவுக்கு ஒத்து போகலை. பிரிஞ்சுட்டாங்க. திரும்ப அவங்களுக்கான லைஃபை தனி தனியா தேடிக்கிட்டாங்க. எல்லாரும் அப்படி இருப்பாங்களா என்ன?….”
“நான் யாரையும் குறை சொல்லலையே? எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. நரேஷை அப்படி ஒரு தாட்ல நான் பார்க்கவும் இல்லை. ப்ரென்ட் எப்பவும் ப்ரென்ட் தான்….” என்றவள்,
“இந்த லவ் எல்லாம் சுத்த ஹம்பக். லவ் பண்ணும் போது இனிக்கும். கல்யாணம்ன்ற நிதர்சனத்தின் போது கசக்கும். எனக்கு பேரன்ட்ஸ்ன்னு இருக்கறவங்க கூட தான் சின்ஸியரா லவ் பண்ணி கல்யாணம் பண்ணினவங்க. ஏன் ஒத்து போகலை?…” என கேட்ட ஸ்ருதியின் கேள்விக்கு அவளால் பதில் சொல்லமுடியவில்லை.
“ப்ச், விடு. அதை பேசினா யாருக்கும் பதில் கிடைக்காது…” என்றவள் தனது மொபைலை பார்க்க வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களில் பார்த்திவ் கிருஷ்ணாவின் பாடல்கள் சின்ன சின்ன கிளிப்பிங் அணிவகுத்திருந்தது.
“இவங்களோட? இன்னும் படம் ரிலீஸ் ஆகற வரைக்கும் இதுதான்…” என சிரித்துக்கொண்டே வந்தவள் புன்னகை அடுத்திருந்த புகைப்படத்தில் ஒரு நொடி நின்று பின் பெரிதாய் விரிந்தது.
“நான் ஒருத்தி புலம்பிட்டே இருக்கேன். நீ சிரிக்கிற?….” என்ற அஷ்வினியிடம் அதனை காண்பித்தாள் ஸ்ருதி.
“உங்கப்பாவா? சுத்தம்….” என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.