அவரின் அணுகுமுறைகளை புரியாதவனா? ஆனாலும் சங்கடம் ஒருபுறமும், அவரின் மேல் பரிதாபம் ஒருபுறமும் தான் எழுந்தது.
தான் பிரமித்து பார்த்த ஒருவர் இப்போது இத்தனை தூரம் தன்னிடம் எதை கேட்டு நிற்கிறார் என அவனுக்கும் தெரிந்திருக்க இந்த ஜென்மத்தில் அதற்கு சாத்தியமே இல்லை என்பது அவனின் தீர்மானம்.
வேறு என்னவேண்டுமானாலும் அவர் கேட்டு இவன் செய்ய அத்தனை சித்தமாக இருந்தான்.
தன்னுடைய் வாழ்க்கையில் அவரின் வரவு இன்றி தன் உயர்வு இத்தனை சாத்தியமில்லை.
ஆனால் அதற்கு விலையாக எதை கொடுக்கவேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.
சாரங்கபாணியை பற்றிய யோசனையில் ஸ்ருதியை வர சொல்லியதையே மறந்திருந்தான் பார்த்திவ்.
ஸ்டூடியோ வந்ததுமே நேராக தனது அறைக்குள் சென்றுவிட அடுத்த பத்து நிமிடத்தில் சாரங்கபாணியும் வந்துவிட்டார்.
“குட்மார்னிங் ஸார்…” என எதையும் முகத்தில் காண்பிக்காமல் அவரை வரவேற்றவன்,
“வாங்க ரெக்கார்டிங் ரூம் போய்டலாம்…” என்று அவரை வேறு பேசவிடாமல் வேலைக்கு அழைத்து சென்றுவிட்டான்.
“எப்போ மூவி ரிலீஸ் ஸார்?…” என்று பார்த்திவ் அவரிடம் கேட்டுவிட்டு சுதந்திரத்திடம் சாரங்கபாணிக்கு குடிக்க சொல்லுமாறு தலையசைத்து உள்ளே சென்றுவிட,
“இன்னும் ஸாங் ஷூட்டிங், ரெண்டு ஃபைட் ஸீன் இருக்கு பார்த்திவ்…” என அவரும் அவனுடன் செல்ல,
“உட்காருங்க ஸார். பாட்டு கேட்டுடலாம்…” என்று அவரை அமர சொல்லி அனைத்தையும் தயாராய் வைத்திருந்த உதவியாளரிடம் தலையசைக்க முதல் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
“குட்…” என்றார் சாரங்கபாணி.
“இது ஓபனிங் ஸாங்…” என சொல்ல,
“பர்பெக்ட். ஹீரோ என்ட்ரிக்கு ரொம்ப மேட்சிங்…” என்று பார்த்திவ்வின் தோளை தட்டினார் சாரங்கபாணி.
இப்போது இந்த நிமிடம் முழுமையாய் ஒரு இயக்குநராக மட்டுமே அவர் அங்கே இருக்க பார்த்திவ்வும் சங்கடமின்றி அவருடன் உரையாடினான்.
“இந்த ஸாங் ரெண்டு சிங்கர்ஸ் பாடியிருக்காங்க. உங்களுக்கு எது வேணுமோ அதை ஸ்க்ரீன்க்கு நீங்க சூஸ் பண்ணிக்கலாம். ஆடியோல ரெண்டு பாட்டையுமே சேர்த்துப்போம்…” என்று பார்த்திவ் சொல்ல,
“நானும் இதை தான் நினைச்சேன்…” என்றவர் ஒரு பாடலை திரைக்கு தேர்வு செய்துவிட்டார்.
மற்ற பாடல்களும் கேட்டு முடித்திருக்க சாரங்கபாணிக்கு அத்தனை திருப்தி. அதை அவர் முகமே வெளிப்படுத்தியது.
“நான் கேட்ட அந்த ஸாங்…” என எதிர்பார்ப்புடன் அவர் கேட்கவும்,
“லாஸ்ட் கேட்கலாமேன்னு வெய்ட் பண்ணினேன். கேளுங்க…” என்றவன் ஸ்ருதியின் குரலில் அந்த பாடலை ஒலிக்கவிட கேட்டு முடித்தவர் இன்னும் அதன் தாக்கத்தில் கண் மூடி இருந்தார்.
இதன் ஸ்க்ரீன்ப்ளே என்னவாக வைக்க முடியும் என்ற சிந்தனை தான் இப்போது அவருக்குள்.
அத்தனை அழகாக அவர் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வந்திருந்தது அந்த பாடல்.
“பிரமாதம். பிரமாதம் பார்த்திவ்…” என்றவர்,
“இந்த ஸாங் பாடினது யாரு? இந்த குரல் கேட்ட மாதிரி இல்லையே? புது சிங்கரா?…” என்றவர்,
“நல்ல வேரியேஷன் காட்ட கூடிய குரல். இந்த பாட்டுக்கேத்த ஸீன் நான் கரெக்ட்டா யோசிக்கனும். இல்லைன்னா பாட்டை கெடுத்த மாதிரியாகிட கூடும். அந்தளவுக்கு வெய்ட்டேஜான ஸாங். வெல்டன் பார்த்திவ்…” என சில்லாகித்தார்.
“நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை அழகா இந்த இசை, குரல் ரெண்டுலயும் கொண்டுவந்துட்டீங்க. மெல்ட்டிங் ஸாங். நிச்சயம் விருதுக்கான பாட்டாவும் இருக்கும்…” என்று சொல்ல இன்னுமே புன்னகை பார்த்திவ் முகத்தில்.
சந்தோஷமாக இருந்தது அவனுக்கு. ஸ்ருதியின் குரல் இந்த திரையுலகிற்கு அறிமுகமாக போகிற பாடல்.
அதுவும் புகழ்பெற்ற இயக்குனர் வாயில் அவன் கேட்ட வார்த்தைகளில் மகிழ்ந்து தான் போனான்.
இதை சாரங்கபாணி சொல்லியதும் எப்போதும் அமைதியாக எந்த பாராட்டையும் ஏற்றுக்கொள்ளும் பார்த்திவ்வின் முகத்தில் புன்னகையை தாண்டிய ஒரு பாவனை.
சட்டென ஒளி பெற்றதை போல அவனின் முகத்தில் ஒரு மாற்றம். உணர்வுகளை சரம் தொடுத்து திரையில் விருந்தாக்குபவர் கண்களுக்கு அது தப்பவில்லை.
“நானும் அதை தான் நினைச்சேன் ஸார். இந்த பொண்ணுக்கு ஜானகியம்மா, ஸ்வர்ணலதாம்மா மாதிரி எல்லா வித பாடல்களையும் பாட கூடிய திறமை இருக்கற பொண்ணு…” என பாராட்டி சொல்ல தலையை அசைத்தவருக்குள் என்னவோ குத்தியது.
யார் அது என கண்டுகொள்ளும் ஒரு ஆர்வமும், வேகமும் தலைதூக்க அது வார்த்தையாகவும் வந்துவிட்டது.
“பார்த்திவ்வே இவ்வளவு பாராட்டுறதுன்னா அந்த சிங்கரை நான் பார்த்தாகனுமே?…” என்றார் சாரங்கபாணி.
“அதுக்கென்ன? பார்க்கலாம் ஸார். எப்படியும் உங்களுக்கு அறிமுகப்படுத்த தானே போறேன்…” என்றவன் சாரங்கபாணி முகத்தின் மாற்றத்தை கவனித்துவிட்டான்.
“என்னாச்சு ஸார்? எனிதிங் ராங்?…” என்று கேட்க,
“நத்திங் பார்த்திவ்…” என்று சொல்லியவர்,
“எல்லாமே பர்பெக்ட். ஐம் இம்ப்ரெஸ்ட்…” என்று சொல்ல அறையின் கதவு தட்டப்பட்டது.
“எஸ்…” என்றான் பார்த்திவ்.
சுதந்திரமோ, இல்லை வேறு யாருமோ என பார்த்திவ் நினைக்க வந்ததென்னவோ ஸ்ருதி தான்.
அவளை வர சொல்லியதை எப்படி மறந்தோம் என பார்த்தவன் திகைப்பை ஸ்ருதி கண்டுகொள்ளவில்லை.
“ஹலோ ஸார்…” என வந்தவள் பார்வையில் சாரங்கபாணி எல்லாம் விழவே இல்லை.
“ஸாரி ஸார். பர்ஸ்ட் டே கிளாஸ்க்கு லேட்டா வந்துட்டேன். ட்ராபிக். நான் எதிர்பார்க்கவே இல்லை. ஸாரி…” என ஸ்ருதி மன்னிப்பை கேட்க,
“இட்ஸ் ஓகே…” என்ற பார்த்திவ்,
“ஸார் நீங்க கேட்ட அந்த புது சிங்கர் இவங்க தான். பேர் ஸ்ருதகீர்த்தி…” என அறிமுகம் செய்து வைக்க ஸ்ருதிக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி.
முன்னணி இயக்குனர் சாரங்கபாணி அவள் எதிரே. சந்தோஷத்துடன் புன்னகைத்தவள்,
ஸ்ருதியை ஒரு சிரிப்புடனே பார்த்திவ் அறிமுகம் செய்து வைத்ததோட அவளிடம் காட்டிய கனிந்த முகம் சாரங்கபாணியின் புருவங்களை உயர்த்த செய்தது.
அதிலும் அவளுக்கு இவன் கிளாஸ் எடுக்கிறானா என அத்தனை எண்ணியவருக்கு ஆச்சர்யம்.
அவரின் மனதில் என்னென்னவோ எண்ணங்கள். சரியா, தவறா, தன் யூகம் பொய்யோ என நிறையவே நினைத்தார்.
விளையாட்டாய் என்றோ ஆராதனா பார்த்திவ்விடம் தனக்கும் இசை கற்று கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்க,
“உங்கப்பாவுக்கு தெரியாத ஜாம்பவாங்களா? எத்தனையோ இசை மேதைகள் இருக்காங்க. நீ அங்க கத்துக்கோ. அதோட எனக்கும் டைமில்லை…” என பார்த்திவ் மறுத்தது அவருக்குமே தெரியும்.
அத்தனை சுலபத்தில் இதை எல்லாம் அவன் செய்ததில்லை. பாட வைக்கும் முன்னரே அவர்களை ஒருவழி செய்துவிடுபவனுக்கு கற்றுக்கொடுக்கும் பொறுமை கிடையாதென மகளை தான் சமாதானம் செய்தார்.
“விளையாட்டுக்கு எல்லாம் கத்துக்கற அளவுக்கு இசை ஈஸியா ஸார்?…” என நறுக்கென்றும் அவரிடம் பார்த்திவ் சொல்லியிருந்தான்.
இப்போது நடப்பதென்ன என அவர் ஸ்ருதியை அளக்கும் பார்வை பார்க்க அதனை கண்டு பார்த்திவ்வின் முகம் மட்டுமல்ல ஸ்ருதியின் முகமுமே ஒரு இலகுவற்ற தன்மையில் வந்து நின்றது.
‘இவர் தன்னை இத்தனை பார்க்கவேண்டும் என என்ன அவசியம்?’ என்று அவரின் பார்வையிலேயே கண்டு கொண்ட ஸ்ருதி பார்த்திவ்வை பார்க்க,
“என் ரூம்ல வெய்ட் பண்ணு ஸ்ருதி. சுதந்திரம் அங்கிள் வருவாங்க….” என்றான் பார்த்திவ்.
“ஓகே ஸார்…” என்றவள் சாரங்கபாணியிடம் விடைபெறாமலே சென்றுவிட அவர் முகத்தில் சட்டென்று ஒரு சுருக்கம்.
“ஜஸ்ட் எ மினிட் ஸார்…” என்ற பார்த்திவ் சுதந்திரத்திற்கு அழைத்து ஸ்ருதி வந்திருப்பதாக சொல்லி வைத்தான்.
“நீ இல்லாத நேரம் உன் ரூம்ல அந்த பொண்ணை அலோவ் பன்றியே பார்த்திவ்? தெரிஞ்ச பொண்ணா?…” என்ற கேள்வியில்,
“ஆமா ஸார்…” என்றான் பார்த்திவ் அயராமல்.
“இல்லை நம்பிக்கையா ரூம்ல வெய்ட் பண்ண சொல்ற. நான் இதுவரைக்கும் இங்க அந்த பொண்ணை பார்த்ததில்லையே? அதான் கேட்டேன்…” என்றவரை அதிருப்தியுடன் பார்த்தவன்,
“நம்பிக்கைன்றது மனுஷங்களை வச்சு தான் ஸார். ஸ்ருதியை தாராளமா நம்பலாம். நம்பறேன்…” என்று பட்டென்று சொல்ல,
“எனிவே பார்த்துக்கோ…”
“ஓகே ஸார், வேற எதுவும் கேட்கனுமா?…” என்றவன் கேள்வியில் அவரை கிளம்பும் படி சொல்கிறானோ என பார்த்தார் சாரங்கபாணி.
என்னவோ அவரால் அதனை இலகுவாக கடக்க முடியவில்லை. என்ன நினைக்கிறோம் தாம் என யோசித்தபடி பார்த்திவ்வை பார்க்க அவன் முகத்திலிருந்து எதையும் கண்பிடிக்க முடியவில்லை.
“நோ பார்த்திவ். டிஸ்க் ரெடி பண்ணிடு. என் அசிஸ்டன்ட் வந்து வாங்கிப்பான்…” என்றவர்,
“அடுத்த ஒரு ப்ராஜெக்ட் டிஸ்கஷன் நாளைக்கு ஈவ்னிங் இருக்கு பார்த்திவ். அதுக்கும் நீ தான் ம்யூஸிக் பண்ணனும்ன்னு நினைக்கறேன்…” என்று சொல்ல,
“வித் ப்ளஷர் ஸார்…” என்றான் பார்த்திவ்.
“ஹ்ம்ம், ஓகே…” என அங்கேயே அந்த அறையை ஒருமுறை சுற்றி பார்த்தவர் முகத்தில் தான் பார்த்திவ்வின் விழிகள்.
மனது கனன்றது அவனுக்கு. ஸ்ருதியை அவர் இகழ்ச்சியாய் பேசியதை நினைத்து மௌனம் காத்தவன் கிளம்பட்டும் என காத்திருந்தான்.
“ஓகே பார்த்திவ். பை…” என்று சாரங்கபாணி அவனிடம் கை நீட்டவும் அதனை பற்றி குலுக்கியவன்,
“பை ஸார்…” என்றான்.
“இன்னும் ஒரு மாசத்துல அண்டர் ப்ரடக்ஷன் ஷூட் எல்லாம் முடிஞ்சிரும். அந்த மந்த என்ட் ஆடியோ லாஞ்ச் பண்ணிடுவோம்…” என்று சொல்ல,
“பண்ணிடலாம் ஸார்…” என்றான் பார்த்திவ்.
“ஓகே, பார்க்கலாம். கிளம்பறேன்…” என சொல்லிவிட்டு மனமின்றி கிளம்பியவருடன் பார்த்திவ்வும் வர அவரின் பார்வை அவனின் தனிப்பட்ட அறையில் பதிந்து விலகியது.
“நேத்து உங்ககிட்ட என்ன சொன்னேன்? டைம் கீப் அப் பண்ணனும்னு சொன்னே தானே?…” என்று சத்தமாய் இரைந்ததில் தூக்கிவாரி போட அவனை பார்த்தாள் ஸ்ருதி.
“பாட்டு கத்துக்கனும்னு நினைச்சா மட்டும் போதாது? அதுக்கான சின்சியாரிட்டி வேண்டாமா? ரெஸ்பான்ஸிபிளா இருக்க முதல்ல கத்துக்கோங்க. அப்பறம் இசை கத்துக்கலாம்….” என்று ஆரம்பித்துவிட்டான் பார்த்திவ்.
தான் தாமதமாக வந்ததற்கா இத்தனை கோபம் என்று அவனை பார்த்தவள் முகத்தில் அதிர்ச்சி பரவ,
‘அஷ் உன் க்ரஷ் பத்தி கேட்டது எல்லாம் நிஜமோ நிஜம்’ என சத்தமின்றி இதழசைத்து முணுமுணுக்க அங்கே பார்த்திவ் அவளுக்கு தாமதமாக வந்ததற்கு பாட்டு பாடிகொண்டிருந்தான்.
‘எரிமலை எப்படி பொறுக்கும். எண்ட அம்மே’ என அவனின் பேச்சுக்களை காது தீய கடுகடுவென கேட்டுக்கொண்டு இருந்தாள் ஸ்ருதி.