அறைக்குள் நுழைந்ததும் கவிழ்ந்து படுத்து போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்த சுபஷ்வினி மேல் தனது கை பையை ஓங்கி வீசினாள் ஸ்ருதி.
“எப்பே…” என்று பதறி எழுந்தவள்,
“பிராந்தி…” என்று கத்தான்,
“யார் நானா? நீ பிராந்தி. உன் க்ரஷ் ஒரு விஸ்கி. உங்க டோட்டல் க்ரூப்பே ஒரு ஒரு…” என்று கோபத்தில் என்ன சொல்வதென யோசித்த ஸ்ருதி,
“இரு, நான் போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு வரேன். பசிக்குது…” என உள்ளே சென்றாள்.
“இவளுக்கு என்னாச்சு?…” என்ற சுபஷ்வினி எழுந்து சென்று பாத்ரூம் கதவை தட்ட,
“பாத்ரூம் கூட போக விடமாட்டீங்களாடா?….” என கத்தினாள் ஸ்ருதி.
“இன்னைக்கு மோளேக்கு யார் வேப்பில்லை அடிச்சிருப்பா? மாரியாத்தா ரேஞ்சுல கொந்தளிக்கிறாளே…” என்று சுபஷ்வினி அவள் வரும்முன் சாப்பிட எல்லாம் எடுத்து வைத்துவிட்டு இன்னும் ஸ்ருதி வராததில்,
“இன்னும் உள்ள என்ன பன்ற நீ?…” என்றாள் சுபஷ்வினி கதவை தட்டி.
“வரேன் வரேன். எனக்கு ஒரு ட்ரெஸ் எடுத்து தா அஷ். அதை மறந்துட்டு வந்துட்டேன்….”
“சுத்தம், வெளில வா பேசிக்கறேன்…” என்று சொல்லிய சுபஷ்வினி அவளுக்கு உடையை எடுத்து தந்துவிட்டு வந்தமர்ந்தாள்.
ஸ்ருதி வந்ததும் ஒரு கேன் தண்ணீரையும் முழுவீச்சில் குடித்து முடிக்க ஆவென்று பார்த்தவள்,
“என்னாச்சு ஸ்ருதி? பேமென்ட் எதுவும் ஹோல்டாகிருக்கா? ஒன்னுமில்லையே?….” என பதறி பார்த்தாள்.
ஒருபக்கம் அதற்கெல்லாம் அசரும் ஆள் அல்லவே ஸ்ருதி. எதையும் சமாளிப்பவள் இப்படி இருக்க கண்டு சுபஷ்வினிக்கு தான் மண்டை காய்ந்தது.
“நிஜமா தான். இந்த தடவை தப்பு என் மேல தானே? அதனால கொயட்டா இருந்துட்டேன்…” என்றவளை சுபஷ்வினி நம்பமுடியாமல் பார்க்க,
“ஆனாலும் கிளம்பும் போது மட்டும் இனிமே திட்டி சொல்லி தராதீங்க ஸார், என் மண்டையில ஏறாதுன்னு சொல்லிட்டு வந்தேன்…” என்று ஸ்ருதி சொல்ல,
“அதானே பார்த்தேன்…” என்றாள் சுபஷ்வினி.
“என்ன பார்த்த? என்னால டெய்லி இப்படி திட்டினா நிச்சயம் தாக்குப்பிடிக்க முடியாது அஷ். ஒருமாதிரி எம்பேரிசிங்கா போச்சு தெரியுமா? எப்படி நான் சைலண்டா இருந்தேன்னு எனக்கே தெரியலை….” என்றதும்,
“ஹப்பா உன்னை வாயடைக்க வைக்கவும் இருக்காங்க பாரேன் இந்த உலகத்துல….” என்று கிண்டல் பேசினாள் சுபஷ்வினி.
“போ அஷ், ஆனாலும் ரொம்ப தான் வாத்தியா இருக்கார். இவரே இப்படின்னா இவங்க மாஸ்டர் எப்படி இருந்திருப்பார்?…” என்றவள் அங்கு நடந்ததை எல்லாம் சொல்ல கேட்டு சுபஷ்வினி அப்படி ஒரு சிரிப்பு.
கட்டிலில் உருண்டு விழுந்து சிரிக்க ஸ்ருதியின் பேச்சுக்கள் நிற்கவே இல்லை சொல்லி முடிக்கும் வரை.
“ஆனா அந்த ஆள் இருக்காரே. அவர் லுக்கே சரியில்லை…” என்று சாரங்கபாணியை சொல்ல,
“என்னாலையும் நம்ப முடியலை ஸ்ருதி. அவர் மேல ஒரு நல்ல இமேஜ் இருந்துச்சு…”
“என்ன இமேஜோ? அப்படி ஒரு பார்வை. அவருக்கு கீழ் அப்படின்றத நான் ஃபீல் பண்ணேன் தெரியுமா? என்ன இவர் பெரிய மனுஷன்?…” என்றாள்.
“விடுடா மோளே. இப்பலாம் முகமூடி மனிதர்கள் தான் அதிகமா இருக்காங்க. அவருக்கு என்ன கோபமோ?…” என சுபஷ்வினி அவளை சமாதானம் செய்ய,
“ப்ச், அஷ் நான் அவரை ஒரு ஆளாவே நினைக்கலை. அவர் யார் என்னை ஜட்ஜ் பண்ண? ஆனாலும் அந்நேரம் என்னவோ சரியில்லை. சட்டுன்னு அவருக்கு என் மேல அப்படி ஒரு வெறுப்பான பார்வை. பிடிக்காத மாதிரி இருந்துச்சு…” என்றாள் ஸ்ருதி.
அத்தனை சீக்கிரம் சுருதி இந்த கணிப்பிற்குள் வந்துவிட மாட்டாளே? நரேஷை வைத்து அவள் அப்படி பேசுவதாக இருந்தால் கூட இதுவரை வேறு யாரையும் இப்படி சொல்லியதில்லை.
சாரங்கபாணியை பற்றி சொல்லவுமே சுபஷ்வினிக்கும் அவள் சொல்வதில் பிழையில்லை என்று தான் தோன்றியது.
“சரி இருந்துட்டு போகட்டும். நீ இப்பதான் இந்த பீல்டுக்குள்ள போற. கொஞ்சம் பார்த்து இருடா மோளே…” என ஸ்ருதியின் கன்னம் பற்ற,
“அதெல்லாம் பார்த்துப்பேன். அதான் உன் க்ரஷ் இருக்காரே?…” என அவளை வம்பிழுக்க,
“அவருக்கு வேற வேலை இல்லை பாரு…” என்றாள் சுபஷ்வினி.
“உன் வாய்ஸ் கேட்டு எப்போ கூப்பிடுவாரோன்னு இருக்கு அஷ். நீயும் வந்தா நல்லா இருக்கும்ல…” என ஸ்ருதி.
“ஆமாமா, நீ ஸ்கூலுக்கு போற. நானும் உன்கூட வர…” என்றவள்,
“ஒழுங்கா என்ன கத்துக்கிட்ட அதை சொல்லு…” என்றதும் ஸ்ருதி முழிக்க,
“என்ன மோளே?…” என சுபஷ்வினி மீண்டும் கேக்க,
“இந்தியன் அக்காடமி இஸ் த பெஸ்ட் அக்காடமி கில்லி பட கதையா போச்சு. சொன்னதையே சொல்லிட்டு வந்துட்டேன். காய்ச்சி எடுத்துட்டார் கவனமில்லைன்னு….” என ஸ்ருதி சொல்லவும்,
“மோளே…” என்ற சுபஷ்வினி மீண்டும் வயிற்றை பிடித்துவிட்டாள்.
“கிண்டலா உனக்கு? என்னை திட்டினதுல எங்க என் மண்டையில ஏற? உன் க்ரஷ் பேசினது தான் என் காதெல்லாம் ஒலிச்சிட்டே இருந்துச்சு…”
“எல்லாம் பர்பெக்ட் தான். கொஞ்சம் கோபம். அந்தநேரம் ரோஷம் தான் கண்ணுமுன்னாடி நின்னு சாமியாடுது. என்னைக்கும் கோபத்துல நான் திருப்பி பேசிட கூடாது அஷ்…”
“அதுக்கு வாய்ப்பில்ல…”
“ப்ச், அதை பத்தி நாம கவலைப்பட வேண்டாம். ஆனா ரொம்ப நல்ல டைப். எங்கயும் எந்த இடத்துலையும் நான் அன்கம்பர்ட்டபிளா பீல் பண்ணவே இல்லை அஷ். ரொம்ப நாகரீகமான பார்வையும், பேச்சும் தான். திட்டினதும் கூட எனக்காக தானே?…”
“பார்ரா ஸ்ருதி க்ரஷை ஸ்நேகிக்கிது….”
“ஜென்யூன் அன்ட் ஜென்டில் மேன் தான். ஒரு டீச்சரா அப்படித்தான் இருக்கனும். என்னோட செல்ப் ரெஸ்பெக்ட் குறையாத வரைக்கும் எனக்கு பிரச்சனை இல்லை…”
“அப்போ கூடிய சீக்கிரம் நம்ம க்ரஷ்ன்னு டிக்ளர் பண்ணிடுவோமா?…” என சுபஷ்வினி கண்ணை சிமிட்ட,
“அந்த போஸ்ட்டிங் எல்லாம் சத்தியமா தரவே மாட்டேன். என்னைக்கும் உன் க்ரஷ் தான். எனக்கு வேணா குருவா இருக்கட்டும்…” என சொல்லிவிட இருவரின் அன்றைய சம்பாஷணையில் பெரும்பாலும் நிறைந்திருந்தது பார்த்திவ் மட்டுமே.
அவன் ஸ்டூடியோவில் வைத்து பேசியதற்கெல்லாம் ஞாபகப்படுத்தி ஒவ்வொன்றாய் சொல்லி அதற்கு இங்கே கவுன்ட்டர் கொடுத்துக்கொண்டு இருந்தாள் ஸ்ருதி.
“டெய்லி கிளாஸ் எல்லாம் இல்லையாம். வாரத்துல ரெண்டு மூணு நாள். அவ்வளோ தான். ஸார் ப்ரீயா இருந்தா கால் பண்ணுவாராம். வாய்ப்பிருந்தா பாட கூப்பிடுவாங்க. இதுவும் கொஞ்சம் ஜாலியா இருக்கு…” என ஸ்ருதி.
“சுகந்தன் திரும்ப நெக்ஸ்ட் வீக் ஒரு ப்ரோக்ராம் இருக்குன்னு மெசேஜ் பண்ணியிருந்தான். நான் நோ சொல்லிட்டேன்…” என சுபஷ்வினி சொல்ல,
“ஹ்ம்ம்…”
“இந்த வீக்கென்ட் வந்து பேசறேன்னு சொல்லியிருக்கான் ஸ்ருதி. உன்கிட்டயும் பேசனுமாம்…”
“ப்ச், அதை அன்னைக்கு பார்ப்போம். இப்போ நான் தூங்கறேன். தொண்டையெல்லாம் கவ்வுதேடான்னு கத்திருவேன்…” என சொல்லி இழுத்து போர்த்திக்கொண்டவள்,
“மார்னிங் எழுப்ப வேண்டாம். சமத்தா நீ கிளம்பி போவியாம். நான் எப்போ முழிக்கறேனோ அப்போ தான். இத்தனை நடு சாமத்துல எழுப்பி தூக்கமே மறந்து போச்சு…”
“புலம்பாம தூங்கு ஸ்ருதி…” என அவள் மேல் ஒரு குஷனை தூக்கி எறிந்த சுபஷ்வினியும் படுத்துக்கொண்டாள்.
மறுநாள் காலை ஸ்ருதி சொல்லியதை போல சத்தம் காட்டாமல் சுபஷ்வினி கிளம்பி சென்றிருக்க பதினோரு மணி போல அழைப்பு.
“ஸ்ஸ்ஸ் அஷ், உன்னை என்ன சொன்னேன்? தூங்க விடேன். சாப்பாடெல்லாம் வேண்டாம்…” என கண்ணை மூடியபடி சுபஷ்வினி என நினைத்து போனை எடுத்து தூக்கத்திலேயே பேச சில நொடிகள் நிசப்தம்.