“வினோத்…” என உச்சஸ்தானியில் கத்தியவன் எச்சரிக்கும் பார்வை பார்த்துவிட்டு சுதந்திரத்தை போனில் அழைக்க அவரும் அங்கே வரவும்,
“அங்கிள் போலீஸ்க்கு கால் பண்ணுங்க….” என்றான் பார்த்திவ்.
“பார்த்திவ் ப்ளீஸ், நாங்க என்னன்னு கேட்றோம்…” என்று அங்கிருந்தவர்கள் சொல்ல,
“ஹீரோனா பெரிய இவனா நீ?…” என கேட்டவன் கோபத்தை உதடு கடித்து அடக்கினான்.
“பார்த்திவ் இப்ப கிளம்புவோம். இங்க வேண்டாம். இது ஸ்ருதி ப்யூச்சர் சம்பந்தப்பட்டது…” என்ற சுதந்திரத்தின் பேச்சில் கொஞ்சமே தணிந்தான்.
ஸ்ருதிக்கு இது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என அவன் அறிந்தது தானே?
இவ்விடத்தில் இல்லாமலே இப்படி நடந்தது என கேள்விப்பட்டால், ‘இந்த திரைப்படத்தின் அறிமுக பாடகிக்கு இப்படி ஒரு சம்பவம்’ என்று திரித்து பக்கம் பக்கமாய் கதை எழுதிவிடுவார்கள்.
அவளின் சந்தோஷம் முழுமையடையாமல் போய்விடுமே என யோசித்தவன் தன்னை சமன் செய்தான்.
“ஸ்ருதி கையை விடு…” என அவள் இன்னும் தன் பிடியில் வைத்திருந்த அந்த உடைந்த கண்ணாடி பாட்டிலை பிடுங்கியவன் வினோத்தின் பக்கம் விட்டெறிந்தான்.
“உனக்கு இருக்குடா…” என நாக்கை மடித்து எச்சரித்தவன் ஸ்ருதியுடன் அங்கிருந்து சென்றான். தான்யா அங்கே எட்டி கூட பார்க்கவில்லை.
மனதெல்லாம் தீயாய் தகித்தது. இன்னும் அவ்விடத்தை வெறித்து பார்த்தவள் கோபத்தில் பல்லை கடித்துக்கொண்டிருக்க,
“அங்க பார்க்காத ஸ்ருதி. வா…” என கிட்டத்தட்ட தூக்கிக்கொண்டு வருவதை போல அழைத்து வந்தான் பார்த்திவ்.
“சுபாஷ் காரை எடு…” என்ற பார்த்திவ் அவனுடன் கூடவே வந்த தயாரிப்பாளரிடம் திரும்பி,
“இங்க நடந்த ஒரு விஷயமும் வெளில போக கூடாது அங்கிள். இல்லை நம்மோட பாண்டிங்…” என்றவனின் ஒரு கையை பிடித்துக்கொண்டார் அவர்.
தன் இன்னொரு கையில் ஸ்ருதியை தன்னுடன் சேர்த்து வளைத்திருந்தான் பார்த்திவ்.
“ப்ளீஸ் பார்த்திவ், இதை நானே எதிர்பார்க்கலை. கண்டிப்பா எதுவும் வெளில போகாது. ப்ராமிஸ்….” என்று சொல்ல,
“நான் நாளைக்கு பேசறேன். இப்ப இருக்கற வேகத்துக்கு…” என்றவன் கார் கதவை திறந்து ஸ்ருதியை அமர வைத்துவிட்டு அவரிடம்,
“டூ மச். இதை நான் சும்மா விடமாட்டேன்…” என்றவன் பார்வை அவரை மட்டுமல்ல தூரமிருந்த சாரங்கபாணியின் நக்கல் பார்வையையும் கண்டு எரித்தது.
அந்த பார்வை கட்டுக்குள் இருந்த அவனின் சினத்தை விசிறிவிட்டது. சாரங்கபாணியும் உள்ளே நகர்ந்துவிட்டார்.
“ப்ளீஸ் பார்த்திவ்…” என்று அவர் மன்னிப்பை கேட்க பதில் சொல்லாமல் காரில் ஏறிவிட்டான்.
“ஷிட்…” என தலையில் அடித்துக்கொண்ட பார்த்திவ் ஸ்ருதியை பார்த்துவிட்டு மீண்டும் காரை விட்டு இறங்கி,
“ஸ்டுடியோவுக்கு கிளம்பு சுபாஷ். இப்ப நான் வந்திருவேன்…” என அனுப்ப,
“பார்த்திவ்…” என்று பதறினார் சுதந்திரம்.
“போங்கன்னு சொன்னேன்….” என்று அவர்களை அனுப்பினான்.
கார் வெளியேறவும் மீண்டும் சட்டையின் கையை மடித்துக்கொண்டு உள்ளே ஆவேசமாய் நுழைய அங்கே சாரங்கபாணி,
“விடு வினோத். தெரியாம தானே பண்ணின…” என சமாதானம் செய்துகொண்டிருக்க, வந்த வேகத்தில் பார்த்திவ் அவனை எட்டி உதைத்திருந்தான்.
மேஜையில் அமர்ந்திருந்தவாக்கில் வினோத் பின்னால் சாய்ந்து விழ பார்திவ்வை யாரும் நெருங்கவில்லை.
“என்ன பார்த்திவ் இது சில்லியா?…” என்ற சாரங்கபாணியிடம்,
“உங்க பொண்ணு பண்ணுனதை விடவா?…” என அவரின் காதிற்குள் சொல்லியவன்,
“இதையே சத்தமா சொல்ல எனக்கு ரொம்ப நேரமாகாது. உங்களை இவ்வளவு கீழாவும் நான் நினைச்சு பார்க்கலை. ஷேம் ஆன் யூ…” என்று சொல்ல,
“பார்த்திவ்…” என இரைந்தார் சாரங்கபாணி.
“நான் பார்த்தேன் ஸார் உங்களோட நக்கல் சிரிப்பை. உங்க பொண்ணு வயசு தானே அந்த பொண்ணும். அப்படி சிரிக்க எப்படி முடிஞ்சது? இதுதான் உங்களோட உண்மையான முகம் போல?…” என்று சொல்ல சாரங்கபாணி அதிர்ந்து போனார்.
“என்ன செய்வீங்க? ஸ்ருதியோட பாட்டை உங்க படத்துல இருந்து தூக்குவீங்க. அவ்வளோ தானே? செஞ்சுக்கோங்க. உங்க கை கொண்டு எத்தனை மறைச்சாலும் அவ சூரியன் மாதிரி, அந்த நிலா மாதிரி. அவ வெளிவர வெளிச்சத்தை உங்களால தடுக்கவே முடியாது. பார்த்துடுவோம்…” என்றவன்,
“உங்களோட டிக்னிட்டி எப்படியோ, என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. அதுவும் என் பாதுகாப்புல வந்த பொண்ணை இவன்…” என வினோத்தை தூக்கி நிறுத்தி சாத்து சாத்து என சாத்தி நைய்ய புடைத்துவிட்டான் பார்த்திவ்.
“இதுக்கு கம்ப்ளைண்ட் குடுக்கனும்ன்னா குடுங்க. யார் வேண்டாம்ன்னா? அதை நான் பேஸ் பண்ணிப்பேன்….” என்று அனைவரும் கேட்க சொல்லியவன்,
“உங்களுக்கு மட்டும் ஒரு விஷயம் சொல்றேன். உங்க பொண்ணோட இருந்ததுல இவனும் ஒருத்தன். டவுட் இருந்தா கிளியர் பண்ணிக்கோங்க. எவிடென்ஸ் வேணுமா?…” என்றதும் சாரங்கபாணி பாதி செத்துவிட்டார்.
பார்த்திவ் சொல்லியதில் எந்த தவறும் இல்லையே. எவ்விடத்தில் சறுக்கினோம் என தன்னை எண்ணிய குறுகி போனவர்,
“ஸாரி பார்த்திவ்…” என மன்னிப்பை யாசிக்க,
“ஸாரியாம். ஷிட்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் பார்த்திவ்.
அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவனுக்காக உடன் வர அவரை சட்டை செய்யவே இல்லை.
“பார்த்திவ் நான் கூட்டிட்டு போறேன். உங்க காரும் போய்ருச்சு…”
“ஏன் டாக்ஸி பிடிச்சு போகமாட்டேனா?…” என்றவனை இழுத்து பிடித்து கெஞ்சி தன் காரில் ஏற்றிக்கொண்டார்.
செல்லும் வழியெங்கும் அவர் பேசிக்கொண்டே வர பார்த்திவ்விடம் மௌனம் மட்டுமே.
“நான் மார்னிங் வந்து பார்க்கறேன் பார்த்திவ்…” என ஸ்டுடியோ வாசலில் இறக்கிவிட்டு செல்லவும் வேகமாய் உள்ளே நுழைந்தான்.
“ஸ்ருதி ரூம்ல தான் இருக்கா பார்த்திவ். சுபாவுக்கு போன் பண்ணி வர சொன்னேன். இப்ப கூட இருக்காங்க…” என்று சொல்ல,