“தெரியாம அடிக்கலை. பர்ப்பஸா பண்ணேன். இனி அவன் யாரையும் எதுவும் பண்ண கூடாதுன்னு தான் அடிச்சேன்…” என அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,
“பார்த்திவ் இது போலீஸ் கேஸானா எவ்வளோ பெரிய பிரச்சானையாகும்? என்ன நடந்துச்சுன்னு வினோத்தோட பேரன்ட்ஸ் இங்க கேட்டுட்டே இருக்காங்க…” என பதறினார்.
“தாராளமா கம்ப்ளைண்ட் குடுக்கட்டும். நான் பேஸ் பண்ணிக்கறேன்னு சொன்னேன் தானே? தெரியாம செஞ்சா தான் பயம் வரனும். நான் தெரிஞ்சே தான் செஞ்சேன்…”
“பார்த்திவ் ப்ளீஸ்….” என அவர் பேச,
“என்ன எதிர்பார்க்கறீங்க?…” என்றவன் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
“ஓகே நான் மேனேஜ் பன்றேன் பார்த்திவ்…” என்றவர்,
“ஸ்ருதி மொபைல் என்கிட்ட இருக்கு. அந்த ரூம்ல நம்மோட சேர்த்து பத்துபேர்கிட்ட தான் இருந்தாங்க. எந்த விஷயமும் வெளில போகாது….”
“ஸ்ருதி மொபைலை சுபாஷ் வந்து மார்னிங் வாங்கிப்பான்…” என்றான் பார்த்திவ்.
“இல்லை பார்த்திவ். நானே வரேன்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்றுவிட்டு வேறு ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான் பார்த்திவ்.
“என்னாச்சு பார்த்திவ்? என்ன பிரச்சனை?…” சுதந்திரம் பதட்டத்துடன் கேட்க,
“ண்ணா என்னமோ அவனை பண்ணிருக்கீங்க. கேஸானா ஆகட்டும். தெரிஞ்ச பசங்க அத்தனபேரு இருக்கானுங்க. ம்ம்ன்னு சொல்லுங்க. அவனுங்க முன்ன வந்து நிப்பாட்டிருவோம்…” என்ற சுபாஷ்,
“இப்ப என்னவாச்சும் செய்யனுமின்னு தான் மண்டைய உடைச்சுட்டு இருந்தேன்…” என்ற சுபாஷின் தோளில் தட்டிய பார்த்தி,
“பெருசா ஒண்ணுமில்லை அங்கிள். இனிமே அவன் காலத்துக்கும் சிங்கிள் மட்டும் தான்…” என சொல்லிவிட்டு அமர்ந்தான் பார்த்திவ்.
“பார்த்திவ்…” என புரியாமல் அவர் பார்க்க,
“அவனோட பார்ட் ஒன்னை ரொம்ப டேமேஜ் பண்ணிட்டேன் அங்கிள். கல்யாணமானாலும் இனி அவன் நோ யூஸ். கை விரலையும் ஒடிச்சுட்டேன். கொஞ்சம் சரி பண்ணினாலும் ஒரு காபி கப் பிடிக்க கூட விரல்ல வலு இருக்காது…” என சொல்லியவன் கண்களில் பளபளத்த அந்த உணர்வில் சுதந்திரத்தின் முதுகுத்தண்டே ஜில்லிட்டது.
“இனி எந்த பொண்ணையும் அவன் வேற மாதிரி பார்க்க கூடாது பாருங்க. இதையே அவன் திரும்ப ஸ்ருதிகிட்ட பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம் அங்கிள்? அதான். என்னால அப்படியே விட்டுட்டு வர முடியலை….” என சொல்ல,
“சபாஷ்ண்ணா. இப்பத்தான் என் மனசு நிம்மதியாருக்கு. ஒவ்வொருவாட்டியும் அந்த நாய் இத பண்ணான், அத பண்ணான்னு கேள்விப்படும் போது எல்லாம் இவன் எல்லாம் பூமில நிம்மதியா இருக்கானேன்னு கோவமா வரும். இப்பதான் எனக்கு குளுகுளுன்னு இருக்கு…” என்றான் சுபாஷ்.
“சும்மாருடா நீ. நானே இது பிரச்சனையாகுமோன்னு பயத்துல இருக்கேன்…” என்றவர் உடனே வக்கீலுக்கு அழைக்க போக,
“ப்ச், மார்னிங் பார்த்துக்கலாம் அங்கிள். ஒன்னும் பிரச்சனை இல்லை….” என சொல்லிய பார்த்திவ்,
“இவ்வளோ நாள் நமக்கெதுக்கு? யாரும் என்னவும் பண்ணிட்டு போகட்டும்ன்னு அவங்க பர்சனல். நம்ம நம்மோட லெவல்ல கரெக்ட்டா இருப்போம்ன்னு ஒதுங்கி இருந்தது தப்பு போல அங்கிள்….” என்றவனை சுதந்திரம் கவலையாய் பார்த்தார்.
“ஸ்ருதி மாதிரி எத்தனை பொண்ணுங்களை இவனுங்க இரையாக்கிருப்பாங்க? காதுல கேட்டும் செவிடா இருந்திருக்கேன். இன்னைக்கு ஸ்ருதின்னு வரவும் தான் எனக்கு உரைக்குதுன்னா நான் எத்தனை செல்பிஷ்ல….” என்றான்.
“அட்ஜஸ்மென்ட்ன்றது அவங்கவங்க சுய விருப்பம். ஆனா எத்தனை பேரை சூழ்நிலையை காரணம் காட்டி பலவந்தப்படுத்திருப்பாங்க பொறுக்கி ராஸ்கல்ஸ். இதுக்கெல்லாம் என்ன முடிவு?…” என்று என்னென்னவோ பேசினான்.
“பார்த்திவ் அமைதியா இருப்பா…” என்றார் சுதந்திரம் கலக்கத்துடன்.
விடியும்வரை அவ்வப்போது தயாரிப்பாளரும் அழைத்து விவரத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.
வினோத் சுயநினைவு அடைந்துவிட்டதாகவும் அவன் யாரின் மீதும் புகார் தரவில்லை என்றும் கூறினார்.
அதனுடன் யார் தன்னை தாக்கியது என்றும் தெரியவில்லை என சொல்லியதாக நிம்மதியுடன் கூறினார் அவர்.
“நீங்க ரொம்ப பயந்துட்டீங்க போல? சப்போஸ் விஷயம் வெளில தெரிஞ்சா கூட அது உங்க மூவிக்கான ப்ரமோஷன் தானே?…” என கேட்டவனிடம்,
“பார்த்திவ் ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு. உனக்கு தெரியாதா என்ன?…” என வேதனையுடன் பேசினார்.
“அட போங்க ஸார். ரொம்ப உயர்ந்த இடத்துல வச்சிருந்த நெருக்கமானவங்களையே நான் சரியா புரிஞ்சுக்கலை. யாரை நம்பறது?…” என்றான் பார்த்திவ்.
அவன் சாரங்கபாணியை தான் சொல்கிறான் என்று அவருக்குமே தெரிய அருகில் இருந்த சாரங்கபாணியை பார்த்துவிட்டு,
“நீ ரொம்ப வேதனையில இருக்கன்னு புரியுது பார்த்திவ். நான் நேர்ல வந்து பேசறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டார் அவர்.
“அங்கிள் இந்த ஃப்ளோர்ல வேற யாரும் இருக்க வேண்டாம். க்ளியர் பண்ணிடுங்க. இன்னைக்கு இங்க எந்த வொர்க்கும் வேண்டாம்…” என சொல்லியவன்,
“தான்யா?…” என்றதும்,
“வந்திட்டிருக்காங்களாம்…” என்றார் சுதந்திரம்.
மீண்டும் அறைக்குள் சென்று பார்க்க ஸ்ருதி காபியை பருகிக்கொண்டிருந்தாள் மௌனமாக.
“குட்மார்னிங் ஸார்…” என சொல்லி அவன் கண்களின் வலியை கண்டு,
“நான் ஆல்ரைட். ஒரு பிரச்சனையும் இல்லை. பாருங்க ஸ்மைல் பன்றேனே?…” என தானாகவே அவள் சொல்ல அதுவே நெஞ்சை பிசைந்தது.
இன்னும் எத்தனை வேதனைகளை தானாக தாங்கி, தானாக சமாளித்து, தானாக தேற்றி வெளிவரும் இந்த பெண் என்று.
“குட், வெரிகுட். இப்படித்தான் இருக்கனும் ஸ்ருதி. மை ப்ரேவ் கேர்ள்…” என்றவன் அவள் உச்சந்தலையில் லேசாய் உச்சி முடியை கலைத்து அழுத்தி ஆதுரமாய் சொல்ல ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவள்,
“நாங்க எங்க ரூம்க்கு போயிடட்டுமா?…” என கேட்டாள் ஸ்ருதி.
“ஏன், இங்க அன்கம்பர்ட்டபிளா எதுவும் இருக்கா ஸ்ருதி?…” என கேட்டவன்,
“இந்த ஃப்ளோர்ல வேற யாரும் இல்லை. நாம மட்டும் தான். நாமன்னா நீ, அஷ்வினி, நான், அங்கிள், சுபாஷ்…” என்று கூற,
“அவங்களாம் காணும்?…” என்று எழுந்தாள் ஸ்ருதி.
“வெளில தான் இருக்காங்க. நீ உட்கார்…” என்ற பார்த்திவ்வை தாண்டிக்கொண்டு,
“எவ்வளோ நேரம் அஷ் முகத்தையே பார்க்க? போர் ஸார்…” என விளையாட்டை போல பேசி தன்னை சமாளித்தபடி கதவை திறந்து வெளியே செல்ல தான்யா உள்ளே பயத்துடன் நுழைந்தாள்.
பார்த்த அடுத்த நொடி மற்றவர்கள் அனைவரையும் தாண்டிக்கொண்டு தான்யாவை நெருங்கிய ஸ்ருதி அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கீழே தடுமாறி விழுந்தாள் தான்யா.
“யூ சீட்…” என்று சொல்லியவள் குரலின் ஆவேசத்தில் சுபஷ்வினி வந்து ஸ்ருதியை பிடித்துக்கொள்ள தான்யா அச்சத்துடன் எழுந்து நின்றாள்.
“இவ தான் அஷ் என்னை அந்த ரூம்க்கு கூட்டிட்டு போனா. சுத்தி பார்க்கலாம். இங்க ஏற்கனவே வந்திருக்கேன். நீ தான் பர்ஸ்ட் டைம். என்னோட க்ளோஸ் ப்ரெண்டை உனக்கு இன்ட்ரோ பன்றேன்னு கூட்டிட்டு போனா அஷ். பார்த்திவ் ஸார் இங்க தான் இருக்கார்ன்னும் சொல்லி…” என்று ஸ்ருதி சொல்ல நடுங்கி போய் நின்றாள் தான்யா.
மாட்டிக்கொண்டோம் என்று முதல்நாளே தெரியும் தான்யாவிற்கு. ஆனால் குடும்பத்தை விட்டும் தலைமறைவாக முடியாது.
அதிலும் அதிகாலையே அவளுக்கு போன் செய்து சுதந்திரம் மிரட்டியே வரவழைத்திருந்தார்.
வரவில்லை என்றால் குடும்பத்தையும் சேர்த்து உள்ளே தள்ளிவிடுவதாக சொல்லி. வேறு வழியின்றி வந்திருக்க இங்கே ஸ்ருதியை எதிர்பார்க்கவில்லை.
அவள் ஆவேசத்துடன் அடித்த அடியில் தான்யாவின் உதட்டோரம் கிழிபட்டு ரத்தம் கசிந்தது.
“ஸாரி ஸ்ருதி….” என்றவள் மன்னிப்பில் ஸ்ருதி மீண்டும் அறைய பார்த்திவ்வின் முகத்தில் தீவிரம்.
“யார் சொல்லி இதை செஞ்சீங்க?…” என்றான் முன் வந்து நின்று அவளிடம் கேட்டு.
“ஸாரி ஸார்…” என அவனிடமும் மன்னிப்பை கேட்க,
“யார் சொல்லி செஞ்சதா கேட்டேன் உங்ககிட்ட. வேற எதையும் பேசவேண்டாம்…” என மீண்டும் சொல்ல பயத்தில் தான்யாவும் நடந்ததை விவரித்து முடித்த அடுத்த நொடி மஞ்சுளாவின் கரம் தான்யாவின் மேல் இடியென இறங்கியது.
அவரை அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் வந்ததையும், கேட்டதையுமே கவனிக்கவில்லை.
“பார்த்திவ் ஸ்ருதிக்கு ஓகேனா கம்ப்ளைண்ட் பண்ணு. இது சம்பந்தப்பட்ட யாரையும் சும்மா விட கூடாது. இதை நம்ம ஹேண்டில் பண்ணிப்போம்…” என்ற மஞ்சுளா,
“சுதந்திரம் நம்ம லாயர்க்கு கால் பண்ணுங்க. கமிஷனர் ஆபீஸ் போகலாம்…” என அவருக்கும் சொல்லிவிட்டு,
“அன்ட் இந்த பொண்ணோட காண்ட்ராக்ட்டை கேன்ஸல் பண்ணு பார்த்திவ். இனி இந்த பொண்ணு நம்ம இடத்துல ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது….” என்று படபடவென்று உத்தரவுகளை பிறப்பித்தார் மஞ்சுளா.
தான்யாவை விலக்கியதோடு மட்டுமல்ல, அந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரடியாகவே பார்த்திவ் அறிவித்துவிட்டான்.
இதுதான் தான் சாரங்கபாணியின் இயக்கத்தில் தான் பங்குபெறும் கடைசி படம் என்று.
இருவருக்குள்ளும் ஒத்துபோகவில்லை, அதனால் இனி அவரின் படத்திற்கு தான் எப்போதும் இசையமைக்க போவதில்லை என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டான் பார்த்திவ்.
இதனை திரையுலகில் எவருமே எதிர்பார்க்கவில்லை. சாரங்கபாணியும் எதிர்பார்க்கவில்லை.
பார்த்திவ்வின் முடிவுகள் ஏனென்ற அலசலில் ஊடகத்துறை தீவிரமாக இறங்கிவிட சாரங்கபாணி ஸ்தம்பித்து போனார்.
“தப்பு பண்ணிட்ட பார்த்திவ்…” என ஆற்றாமையும், ஆதங்கமுமாகவும் அதில் மறைக்கப்பட்ட கோபத்துடனும் சாரங்கபாணி கேட்க,
“இந்த முடிவு என்னோடது. இதோட சாதகபாதகம் எல்லாம் என்னையே சேரும். இதனால என்னோட கேரியர் சாயும்ன்னு நீங்க நினைச்சு கவலைப்பட வேண்டாம். அதை நான் காப்பாத்திப்பேன்…” என நிமிர்வாகவே கூறிவிட்டான் பார்த்திவ்.
“போயும் போயும் யாருமே இல்லாத அந்த பொண்ணுகாகவா?…” என்ற கேள்வியில் கூர்மையாய் பார்த்தவன்,
“வாட்? மைண்ட் யூவர் வேர்ட்ஸ். ஸ்ருதகீர்த்தி. ஸ்ருதிக்கு யாருமில்லையா? அந்த கடவுளோட பரிசு ஸ்ருதி. அம்மாவா ஒரு நட்பு இருக்கு. அப்பா மாதிரி பாசம் காமிக்க ஒரு தோள் இருக்கு. அண்ணனா துணை நிற்க களங்கமில்லாத அன்பு இருக்கு. அவளை சுத்தி எங்க குடும்பம் இருக்கு. இதெல்லாம் கண்ணுக்கு தெரியலையா?…” என்றவன்,
“உங்க முன்னாடி ஸ்ருதி வளர்ச்சி எப்படி இருக்குன்னு பார்க்க தானே போறீங்க?…” என்றான் பார்த்திவ்.
பார்த்திவ் சொல்லியதை போலவே நிச்சயமாக ஆசிர்வதிக்கப்பட்டவள் தான் ஸ்ருதகீர்த்தி.
தாயாய் தாங்கும் சுபஷ்வினி, தந்தையாய் அக்கறை கொண்ட சுதந்திரம், அண்ணன் என மார்தட்டிக்கொள்ளும் சுபாஷ்.
எல்லாவற்றிற்கும் மேல் இப்போது ஸ்ருதிக்கு பார்த்திவ்வின் குடும்பமும் அவளை அரவணைத்துக்கொண்டது.