“எப்போ சொல்ல போற மோளே? டிஸைட் பண்ணிட்டியா நீ?…” என சுபஷ்வினி கேட்கவும் விழி திறந்து பார்த்த ஸ்ருதியின் முகம் இப்போது மெல்லிய சோர்வை காண்பித்தது.
இருவருமே மெல்லிய குரலில் தான் பேசிக்கொண்டு வந்தனர். முன்னிருந்த ஓட்டுனருக்கு கேட்காதளவிற்கு.
“என்னாச்சு ஸ்ருதி? ஏன் டல்லாகிட்ட?…”
“அஷ் எனக்குள்ளையே நிறைய கேள்வி. என்னோட எண்ணங்கள் எனக்கே முரணா தெரியுது…” என்று சொல்ல,
“என்னடா? எனக்கு புரியலை…”
“விடு அஷ். கொஞ்சம் யோசிக்கனும்…” என்ற ஸ்ருதி,
“ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஜஸ்ட் இது மட்டும் போதுமா என்ன? பார்க்கலாம்….” என சாதாரணமாக ஸ்ருதி சொல்ல,
“இப்ப நீ என்கிட்ட வாங்க போற…” என சுபஷ்வினி முறைக்க,
“நிஜமாவே சொல்றேன் அஷ். எனக்குள்ள தோணின இந்த தாட் அவங்களுக்கும் வரனும். அதோட அதை சொல்ல எனக்கு தோணனும். பார்க்கலாம்…” என்றாள் ஸ்ருதி.
“பார்க்கலாம்ன்னா? சொல்ற ஐடியா இருக்கா இல்லையா?…”
“தெரியலைன்னு தான் சொல்லுவேன். கல்யாணம், கமிட்மென்ட், காதல் இதுக்கெல்லாம் என் லைப்ல இடமே இல்லைன்னு எவ்வளோ தெளிவா இருந்தேன். இது எல்லாத்துக்கும் மேல இந்த பிடித்தம் முளைச்சிருக்கு. இப்பத்தான் துளிர் விட்டுருக்கு. கொஞ்சம் வளரட்டுமே?…” என ஸ்ருதி கூறவும்,
“நீ எதையும் எதையும் நினைச்சு கன்ப்யூஸ் பண்ணிக்காத ஸ்ருதி. முதல்ல அப்படி நினைச்சிருந்தா, அதுல நம்பிக்கை இல்லாம இருந்தா வாழ்க்கை முழுதும் அப்படியே இருக்கனும்னு என்ன அவசியம்?…” என்றவளுக்கு பதில் சொல்லவில்லை ஸ்ருதி.
“எதையாச்சும் யோசிச்சு சொதப்பின மோளே நீ புட்டுக்கறி தான்…” என முறைத்துவிட்டு,
“தள்ளி உக்காரு…” என ஓரமாய் அவளை அமர சொல்லி சுபஷ்வினி ஸ்ருதியின் மடியில் படுத்துக்கொண்டாள்.
“இந்த சேரி வேற…” என உடனே எழுந்து பேக்கிலிருந்து ஒரு குட்டி போர்வையை ஸ்ருதியின் மடியில் விரித்து படுத்துவிட்டாள்.
“இவாங்க அவருக்காக புடவை கட்டுவாங்களாம், அவர் பார்க்கனுமாம். அதோட தான் பை சொல்லுவாங்களாம். ஆனா யோசிப்பாங்களாம். லவ் பண்ணினா மண்டை கோளாறு புடிச்சுக்கும் போல?…” என தன் பாட்டில் சுபஷ்வினி பேச,
“ப்ச், தூங்கேன் அஷ்…” என்றாள் ஸ்ருதி சிரிப்புடன்.
அவள் தன்னை திட்ட பேச எல்லாம் கேட்டவளுக்கு இன்னும் சிரிப்பாக இருந்தது.
“இப்ப உனக்கு தான் கிறுக்கு புடிச்சிருக்கு. நான் தெளிவா தான் இருக்கேன்…” என சொல்லவும்,
“இங்க பாரு அஷ். சில விஷயங்கள் தூரத்து பார்வைக்கு வேற விதமா இருக்கும். எனக்கும் அப்படித்தான் தெரிஞ்சது. ஆராதனா விஷயம். அங்க என்னவோ தப்பிருக்கு. இதை இத்தனை நாள் அவங்களோட பழகினதை வச்சு சொல்றேன். அது எப்போ கன்பார்ம் ஆச்சு தெரியுமா?…”
சுபஷ்வினிக்கு புரிந்தது அவள் வினோத் நிகழ்வை பற்றி சொல்லவரும் விஷயத்தை. தலையசைத்து ஆமோதிக்க,
“புரிஞ்சதுல. அதே தான். அதுமாதிரி அந்த ம்யூஸிக் ஷோ. அங்கயும் ஏதாவது தப்பிருக்கலாம். இல்லை இல்லாமல் கூட இருக்கலாம். அதை நான் நினைக்க விரும்பலை. ஒருவேளை பார்த்திவ் ஸாரே அந்த பொண்ணு தான் வின்னராகனும்னு முடிவு பண்ணியிருந்தா ஏதோ ஒருவிதத்துல என்னை விட பெஸ்ட்டா தோணிருக்கலாம். அதனால முடிவெடுத்திருக்கலாம்….”
இது ஸ்ருதிக்கான நல்ல எதிர்காலம். இது எப்படியும் அவளுக்கு அமைந்துவிட வேண்டும் என்னும் பேரவாவில் அவள் மற்றதை யோசிக்கவில்லை.
“நீ சொல்ற மாதிரியே லவ், கமிட்மென்ட் இதெல்லாம் நானும் அக்ஸப்ட் பண்ணிக்கறேன். ஆனா அது ஒருத்தர் மட்டுமே முடிவு பண்ண கூடிய விஷயமில்லை. முதல்ல பார்த்திவ் ஸார் என்ன நினைக்கறாங்கன்னு தெரியனும்….”
“அவருக்கு தான் நீ ஸ்பெஷலாச்சே ஸ்ருதி…”
“எந்த வகையில அஷ்?…”
“உன் மேல ரொம்பவே அன்பு, அக்கறை, உன் எதிர்காலத்து மேல அத்தனை மெனக்கெடல்…” என சொல்ல,
“இதுல எங்கயுமே லவ் இல்லையே? பாசம் யார் மேல வேணா வரும். என் மேல கூடுதலா இருக்கு. அவர் கண்ணுல எப்பவும் கண்டிப்பும் அன்பும் சரிசமமா இருக்கும். அதை தான் நான் உணர்ந்திருக்கேன். அதுக்கு மேல…” என்றவள்,
“ப்ச், அஷ் இந்த ரூட்ல பேசினா இதையும் நானே வேண்டாம்ன்ற முடிவுக்கு வந்திருவேன். இப்ப வரைக்கும் இந்த பீல் எனக்கு புடிச்சிருக்கு. சொல்லவேண்டிய சூழ்நிலை வந்தா சொல்லிட்டு போறோம். அவ்வளோ தானே?…” என சொல்லவும்,
“பேசலைம்மா, ஆளைவிடு…” என சொல்லும் பொழுதே ஸ்ருதியின் எண்ணிற்கு அந்த நள்ளிரவு வேளையில் அழைப்பு.
ஸ்ருதியின் தாய் ராகினி தான் அழைத்திருந்தார். பார்த்ததுமே சுபஷ்வினிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“எப்படித்தான் இந்தம்மாவுக்கு மூக்குல வேர்க்குமோ? விடமாட்டாங்களே?…” என்ற சுபஷ்வினி,
“நீ இவங்கள வச்சு உன் வாழ்க்கையை முடிவு பண்ணின கொன்னுடுவேன் உன்னை…” என்றதும் ஸ்ருதி புன்னகைக்க,
“என்னவோ பண்ணு…” என்று எரிச்சலுடன் திரும்பிக்கொள்ள மீண்டும் மீண்டும் அடித்து ஓய்ந்தது ராகினியின் அழைப்பு.
உடனே குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது. அதுவும் ஸ்ருதி மேடையில் பாடியிருந்த அந்த சிறு காட்சியை பகிர்ந்து.