“ஆமா ஸார். கமிட்டாகிட்டு இப்ப அட்வான்ஸை திருப்பி தருவது எந்த விதத்துல நியாயம்? பர்சனல் வெஞ்சன்ஸ மனசுல வச்சுட்டு இப்படி பன்றார். எனக்கு மூவி ஆரம்பிக்கிற நேரம்…” என சாரங்கபாணி சொல்ல,
“நாளைக்கே நான் பேசறேன் பார்த்திவ்ட்ட….” என்ற தேவராஜ் மகனின் பி.ஏ ஹர்ஷத்தை அழைத்து விஷயத்தை விசாரிக்கும்படி சொல்லிவிட்டு பர்த்திவ்விற்கும் அழைப்பு விடுத்தார்.
“எனக்கு சொல்ல எதுவும் இல்லை ஸார். இந்த படத்துல சேர்ந்து வொர்க் பண்ண எனக்கு விருப்பமில்லை. அதான் அட்வான்ஸை திருப்பி குடுத்துட்டேன்…” என்றான் சாதாரணமாக.
“அது எப்படி ஸார்? அக்ரிமென்ட் போட்டு படம் ஆரம்பிக்க போற நேரத்துல இப்படி பன்றது எந்தவிதத்துல நியாயம்? இதுல ப்ரெஸ்க்கு வேற சொல்லி என் இமேஜையும் கேள்விக்குறியாக்கறார்…” என சாரங்கபாணி குற்றம் சாட்ட,
“நான் என் முடிவை சொன்னேன் ஸார். என் வகையில இதை செய்யலைனா நான் மனுஷனே இல்லை. அன்ட் ஒன் திங், நிஜமான காரணத்தை சொல்ல நான் தயார். கேட்க அவர் தயார்ன்னா என் மேல என்ன நடவடிக்கை வேணும்னாலும் எடுத்துக்கலாம்….” என்ற பார்த்திவ்,
“ஒரு மனசாட்சி உள்ள மனுஷனா நான் என்ன செய்யனுமோ அதை தான் செஞ்சிருக்கேன். இதை வெறும் தொழிலா, பணம் மட்டுமே பார்க்க கூடியதா நான் பார்க்கலை. எனக்குன்னு சில நெறிமுறைகள் இருக்கு. அது என்னளவில் சரியா இருக்கனும்னு நான் விரும்பறேன்….” என்றான் பார்த்திவ்.
“ஓகே பார்த்திவ் காம் டவுன்…” என்ற தேவராஜ் சாரங்கபாணி பக்கம் பார்த்தார்.
“நீங்க லீகலா ஆக்ஷன் எடுக்க காரணம் இது மட்டும் தான மிஸ்டர் சாரங்கபாணி?…” என தேவராஜ் கேட்க அவரிடம் பதிலில்லை.
“ஓகே பார்த்திவ், நான் பேசிட்டு சொல்றேன். நீங்க புறப்படலாம். அன்ட் உங்க அடுத்த படத்தோட இசையமைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்…” என்றவர் எழுந்து நின்று கை குலுக்க,
“ஆசிர்வாதம் பண்ணுங்க ஸார். உங்களை மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் முன்னாடி நான் இன்னும் வளரனும்…” என்றவன் அவரின் பாதம் தொட்டு எழ,
“ஏற்கனவே பார்த்திவ் கிருஷ்ணா உச்சம் தொட்டாச்சே. இன்னும் சிறப்பா வளரனும் பார்த்திவ். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என்று சொல்லி வாழ்த்தியதோடு அவனை அணைத்தும் விடுவித்தார்.
“நானே நாளைக்கு கால் பன்றேன். நீங்க கிளம்பலாம்…” என்றவர் பார்த்திவ் கிளம்பவும்,
“இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கலை தேவராஜ்…” என்றார் சாரங்கபாணி.
“நானும் தான் எதிர்பார்க்கலை. என்னோட நண்பர் சாரங்கபாணியா இல்லையோ? எப்ப இருந்து இந்தளவுக்கு யோசிக்க ஆரம்பிச்சீங்க?…” என்ற தேவராஜ் சாரங்கபாணி மறுத்து பேசும் முன்,
“நான் ப்ரடியூசர் பி.எஸ் கிட்ட பேசிட்டேன் எல்லாமே? எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சுட்டு தான் பேசறேன் சாரங்கபாணி…” என்றதும் சாரங்கபாணி அதிர்ந்து போனார்.
“ஒரு விஷயத்தை விசாரிக்கும் போது சம்பந்தபட்டவங்க மட்டும் சொல்றதா வச்சு எப்படி பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியும்? விசாரிக்க வேண்டியது என் கடமை…” என தேவராஜ் சொல்லவும் முகம் சிறுத்த சாரங்கபாணி,
“அது எல்லாம் தேவை இல்லாத விஷயம். நான் புகார் குடுத்தது பார்த்திவ் என்னோட படத்துக்கு இசையமைக்க முடியாதுன்னு சொல்லி வாங்கின அட்வான்ஸை திருப்பி தந்ததால மட்டும் தான். அதை மட்டும் விசாரிச்சா போதும்…” என்றார்.
“இதை நீங்க எனக்கு சொல்ல கூடாது சாரங்கபாணி. நான் பிரச்சனையோட வேரையும் தெரிஞ்சுக்கனும் இல்லையா? காரணம் சொல்லாம தீர்வு எப்படி கிடைக்கும்?…” தேவராஜ் கூர்ந்த விழிகளால் சாரங்கபாணியை துளைக்க,
“இப்ப புரியுது தேவராஜ். உங்க மகன் நடிக்க போற புது படத்துக்கு ம்யூஸிக் பார்த்திவ்ன்னு கேள்விப்பட்டேன்….” என்றதுமே,
“ஆமா, உங்க முன்னாடியே வாழ்த்தி அனுப்பினேனே. உங்களுக்கும் அடுத்த படத்துக்கும் என்னுடைய வாழத்துக்கள். வாழ்த்த மனசு இருந்தா போதும்…” என்றவர்,
“உங்களுக்கு இந்த விசாரணை திருப்தி இல்லைன்னா பரவாயில்லை. அடுத்து எங்க நடவடிக்கை எடுக்கனும்னு நினைக்கறீங்களோ எடுத்துக்கலாம். ஆனா நியாத்தின் பக்கம், மனசாட்சிப்படி நான் நிப்பேன். பார்த்திவ் எடுத்த முடிவுல எனக்கு எந்த தப்பும் தெரியலை….”
“தேவராஜ்…” என சாரங்கபாணி எழுந்து நின்றுவிட்டார்.
“நாமலாம் நமக்கு பின்னான தலைமுறைக்கும், சமுதாயத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டா இல்லைனாலும் தவறான முன்னுதாரணமா இருந்திட கூடாது சாரங்கபாணி…” என்றார் தேவராஜ்.
“ஒரு பொண்ணுக்கு தகப்பனா நீங்க வெக்கப்படனும் சாரங்கபாணி. இத்தனை வருஷம் நீங்க சரியா இருந்தது பெரிய விஷயம் இல்லை. கடைசி வரை சரியா வாழ்ந்திருக்கனும். அந்த நிமிஷம் அந்த பொண்ணு ஸ்ருதகீர்த்திக்கு துணையா இருந்திருக்கவேண்டிய நீங்களே எப்படி அதுக்கு துணை போனீங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு…” தேவராஜ் சொல்லவும்,
“அட்வைஸ் கேட்க நான் இங்க வரலை. இதுதான் உங்க முடிவா? என் மூவில பார்த்திவ் வொர்க் பண்ணலைன்னா வேற எந்த படத்துக்கும் பார்த்திவ் இசையமைக்க கூடாதுன்னு தடை போடனும் நீங்க. முடியுமா முடியாதா?…” என சாரங்கபாணி கேட்க,
“முடியாது…” என்றார் தேவராஜ்.
அத்தனை அமைதியாக அவர் சொல்ல சாரங்கபாணிக்கு ரத்த அழுத்தம் கூடியது. எங்குமே தன் பேச்சிற்கு மதிப்பில்லாததை போல தோன்றியது.
“நீங்களும் அவன் பக்கமா? தேவராஜ் இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலை. எனக்காக நீங்க பார்த்திவ்ட்ட பேசுவீங்கன்னு நினைச்சேன்…” என்றார் சாரங்கபாணி.
“நான் திரும்பவும் பார்த்திவ்ட்ட இதை பத்தி பேசினா சரிவராது. இதை இப்படியே சுமூகமாவே விட்டுடுங்க. உங்களோட தவறை சீர்திருத்த பாருங்க. ஒருத்தர் மேல பகை வச்சு பழி தீர்த்த பார்த்தா நமக்கு மேல இருக்கற ஒரு சக்தி அதுக்கு பலியாக்கிரும்…” என்ற தேவராஜ்,
“உதாரணம் நான் சொல்லவேண்டியதே இல்லை. அந்த பொண்ணு மேல நீங்க கொண்ட காழ்ப்புணர்ச்சி இப்ப உங்களை எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. இனியாச்சும் யோசிங்க. இதுக்கு மேல உங்க விருப்பம்…” என சொல்லிவிட்டார் தேவராஜ்.
சில நொடிகள் அவரை பார்த்த சாரங்கபாணிக்கு மனதெல்லாம் தீ பற்றி எரியும் உணர்வு.
எல்லா இடங்களிலும் ஒரு சறுக்கல் ஆரம்பிப்பதை போல தோன்ற தன்னுடைய தவறு புரிந்தாலும் அதனை ஏற்க மனது இடம்கொடுக்கவில்லை.
இத்தனை வருடங்கள் இல்லாத ஒருவித அகம்பாவம் அவரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.
நற்பண்புகளை எல்லாம் விஷ ஜந்துக்கள் சூழ்ந்துகொண்டதை போல எதையும் பிரித்தறிய முடியாமல் அயர்ந்து போனார்.
வீடு வந்து சிவசங்கரியிடம் விஷயத்தை சொல்லியவர் தேவராஜின் அறிவுரையையும் சொல்ல,
“அவர் சொன்னமாதிரி விட்டுடுங்க. வேண்டாம். நான் நம்மோட நல்லதுக்கு தான் சொல்றேன். நீங்க இதை கமிஷனர்கிட்ட கொண்டுபோய் கோர்ட், கேஸ்ன்னு இழுத்தடிச்சா பார்த்திவ் யோசிக்காம எல்லாத்தையும் வெளில சொல்ல வேண்டியதாகிரும். அது இன்னும் மானக்கேடு…” என எச்சரித்தார்.
உண்மை தானே? சொல்லிவிடுவான். ஆராதனாவில் இருந்து திருமணம் நின்றது, தான் வினோத்துடன் செய்தது என எல்லாம் சொல்லிவிடுவான்.
ஆனாலும் அவரால் பொறுக்கமுடியவில்லை. அவ்வளவு நிதானமிழந்து அவர் இருக்க,
“உங்களால இன்னொரு நல்ல இசையமைப்பாளனை உருவாக்க முடியாதா? இந்த பார்த்திவ்வே நீங்க உண்டாக்கி விட்டவன் தானே? திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு குடுங்க. இனிமே வினோத் மாதிரி ஆளுங்க கூட நட்பு வச்சுக்காதீங்க…”