“அவன்கிட்ட சொல்லவேண்டாம்ன்னு சொல்லியிருந்தேன். சொல்லிட்டானா?…” என கேட்டவர்,
“வந்து உட்காருங்க. சாப்பிடலாம்…” என்றார் அவர்.
“இல்ல இருக்கட்டும் மேம். நாங்க கிளம்பறோம்…” என சுபஷ்வினி சொல்ல,
“என்ன அதுக்குள்ள? இருந்து சாப்பிட்டு தான் போகனும். அதுவும் முதல் முதல்ல வந்திருக்கீங்க…” என பிடித்துக்கொண்டார் மஞ்சுளா.
ஸ்ருதியாலும் மறுக்கமுடியவில்லை. உண்மைக்கும் அது சங்கடமாக இருந்தது அவளுக்கு.
பார்த்தியிடம் ஆயிரம் பேச்சுக்கள், சண்டை, கலாட்டா என நிறைய செய்ததுண்டு.
ஆனால் மஞ்சுளா, அறிவழகனிடம் ஒரு எல்லையில் தான் நின்றிருந்தாள். இத்தனைக்கும் மஞ்சுளா அவளிடம் இயல்பாய் நெருங்கி பழகியும் கூட.
“என்னம்மா? அடுத்த வீடா நினைக்க வேண்டாம். முதல்ல இந்த ஸார், மேம் எல்லாம் தூக்கி போட்டுட்டு ஆன்ட்டி, அங்கிள்ன்னு கூப்பிடுங்க…” என மஞ்சுளா அச்சொல்ல,
“அம்மா, அப்பான்னும் கூப்பிடலாம். உங்க விருப்பம் தான்…” என்றார் அறிவழகன்.
மஞ்சுளா அவரை ஒருநொடி கண்டிக்கும் பார்வை பார்த்துவிட்டு ஸ்ருதியை கண்டு புன்னகைக்க,
“சட்டுன்னு கூப்பிட வராது இல்லையா? அதுதான்…” என்ற ஸ்ருதி,
“அம்மாப்பான்னு சொல்ல எனக்கொண்ணும் கஷ்டம் எல்லாம் இல்லை மேம். நான் அஷ்ஷோட அம்மாவை அம்மான்னு தான் கூப்பிடுவேன்…” என்று சிரித்தபடி சொல்ல மஞ்சுளாவிற்கு என்னவோ போலாகிற்று.
“தப்பா நினைச்சு சொல்லலை ஸ்ருதி. நீ எதுவும் வருத்தப்படுவியோன்னு தான் அவரை பார்த்தேன்…” என்றார் அவர்.
“வருத்தப்பட என்ன இருக்கு? அம்மாப்பான்னா எல்லாரும் என்னை பெத்தவங்களை மாதிரியே இருப்பாங்களா? இல்லை அவங்களை வச்சு மத்தவங்களை நான் எடை போடுவேனா? அதை செய்யமாட்டேன்…” என்றாள்.
“என்னோட லைஃப் அது வேற. அதை அளவா வச்சு மத்தவங்க மேலையும், அந்த உறவுமுறை மேலையும் வெறுப்பை காட்டறது எந்த விதத்துல நியாயம்? அதனால நான் க்ளியரா இருக்கேன்…” என்றாள் தெளிவாக.
“நீ சிங்கராகிட்டன்னு தெரிஞ்சும் இன்னும் அப்படியே இருக்காங்களா ஸ்ருதி? உன்னை அழைச்சுக்க, உன்னோட பேச, இதெல்லாம்…” என்ற மஞ்சுளா ஒரு கணம் அவள் மனநிலையை கருத்தில் கொண்டு யோசித்தார்.
“அம்மா பர்ஸ்ட் ஆடியோ லாஞ்ச் அப்போ கூப்பிட்டாங்க. நான் பேசலை. நானா பேசற வரைக்கும் பேசலைன்னு சொல்லி கட் பண்ணிட்டாங்க. அதுக்கப்பறம் பேசலை. அப்பா விஷ் மட்டும் பண்ணினார். அவ்வளோ தான்…” என்று சொல்ல மஞ்சுளாவிற்கு தான் நெஞ்சை அடைத்தது.
எப்படி இத்தனை சாதாரணமாக இவளால் இதனை பகிர முடிகிறது என்று பார்க்க,
“என்ன பெத்தவங்க அவங்க? கொஞ்சமும் பொறுப்பு இல்லாம…” என அறிவழகன் தான் கொதித்தார்.
“பொறுப்பெல்லாம் நிறையவே இருக்கு. மாசமானா என்னோட அக்கவுண்ட்க்கு அவங்களோட அன்பு வந்து சேர்ந்திரும். கொஞ்சம் நெருங்கினா எங்க நான் அவங்களோட சேர வருவேனோன்னு ஒரு பயத்துலயே இருக்காங்க…” என்று சிரித்தாள் ஸ்ருதி.
“வருதப்படாதம்மா. போனா போகட்டும்…” அறிவழகன் சொல்ல,
“அப்படி எல்லாம் போகவிடமாட்டேன் ஸார். ஸ்ருதியோட பேரன்ட்ஸ் அவங்க தானே? காலத்துக்கும் அந்த பொறுப்பும், கடமையும் அவங்களுக்கு இருக்கு. இருக்கனும். அதனால நான் விடறதா இல்லை…” என கண் சிமிட்டினாள் ஸ்ருதி.
ஸ்ருதியின் மனது மத்தளமிட ஆரம்பித்தது. ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவள் முகம் நிர்மலமாக இருக்க மஞ்சுளா புன்னகைத்தார்.
“என் பையனோட வாழ்க்கையை அவன் தான் முடிவு பண்ணனும். அவனோட முடிவும், விருப்பமும் தான் எங்களோடது…” என்றார் அவர்.
“அப்போ லவ் மேரேஜ் பண்ணினாலும் ஓகேன்னு சொல்லுங்க…” சுபஷ்வினி சந்தோஷமாய் கேட்டு,
“உங்களோட ரிலேட்டிவ்ஸ் அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?…” என்று கேட்டாள்.
“அஷ் என்ன பேசற நீ? இதெல்லாம் கேட்டுட்டு?…” ஸ்ருதி அவளை அதட்ட,
“நீ சும்மா இரு மோளே. அவங்க சைட் என்னன்னு சும்மா தெரிஞ்சுக்க தான். ஒரு க்யூரியாஸிட்டி…” என்றாள் சுபஷ்வினி.
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த மஞ்சுளாவின் கண்களில் ஸ்ருதியின் மனதிடமும், அவளின் இந்த பேரமைதியும் வியப்படைய செய்தது.
‘விளையாட்டு பெண்’ பார்த்திவ் சொல்லியிருந்தாலும் ஸ்ருதியை பற்றி நேரில் அந்த நிகழ்வில் பார்த்திருந்தாலும் இந்த தருணம் அவளுக்கு எத்தனை முக்கியம்?
இப்போதும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சலனமின்றி எப்படி இருக்கிறாள் என பார்த்தார்.
“சொந்தங்கள் என் பையன் வாழ்க்கை இப்படி இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்லலாம். ஆனா அதை முடிவு பண்ண முடியாதே? ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும். வாழ்க்கையை வாழப்போறவன் மனசு தான் இங்க முக்கியம் அஷ்வினி…” என்றார் மஞ்சுளா.
“சரியா சொன்னம்மா….” என்றார் அறிவழகனும்.
“கிரேட் ஆன்ட்டி…” என்ற சுபஷ்வினிக்கு தாங்கமுடியாத சந்தோஷம்.
லேசாய் கண்களும் கலங்கிவிட்டது. அவள் பார்த்தவரையில் பார்த்திவ்வின் மனதும் ஓரளவு புரிந்துபோனது.
இப்போது மஞ்சுளாவின் பேச்சும் அதற்கு லயம் சேர்க்க மனதெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான்.
அதே சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்ப முற்பட மஞ்சுளா அவர்களை இருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“மோளே நான் ஹேப்பியோ ஹேப்பி. இன்னைக்கு உன் மொக்கை அரிசி ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனாலும் ஒரு புடி புடிப்பேன். எனக்கு உன்னோட மீன் மொலியும் சொல்லிரு…” என அவளை கட்டிக்கொள்ள,
“அது மட்டும் இறங்குமே உனக்கு…” என்றாள் ஸ்ருதி.
அதற்கு மஞ்சுளா பெரிய தாம்பாளத்துடன் வந்துவிட்டார். அதில் புடவையும், பூ பழமும் இருந்தது.
“என்ன ஆன்ட்டி?…” சுபஷ்வினி கேட்க,
“முதல்தடவை வந்திருக்கீங்க ரெண்டுபேரும். அதுவும் எங்க கல்யாண நாள் அதுவுமா. அதான் சின்ன கிப்ட்…” என்றவர் முதலில் சுபஷ்வினிக்கு தந்துவிட்டு அடுத்த தட்டை எடுத்து ஸ்ருதியிடம் நீட்டினார்.
“இரண்டு வாரத்துல நடக்க போற விருது நிகழ்ச்சில உனக்கு தான் விருதுன்னு பார்த்திவ் சொன்னான் ஸ்ருதி. அதுக்கு என்னுடைய மனமார்ந்த வாழத்துக்கள். அதுக்காக தான் இந்த புடவை உனக்கு…” என்று சொல்ல,