மூச்சு நின்றுவிடும் போலிருந்தது ஸ்ருதிக்கு. அத்தனை கூட்டத்தின் சத்தமும் ஆராவாரம் செய்தது அவ்விடத்தையே.
அதகளம் புரிந்தனர் பார்த்திவ்வின் ரசிகர்கள் அனைவரும். ஸ்ருதியினது ஒருவித ஸ்தம்பித்த நிலை தான்.
தான் நினைத்ததை விட சிறப்பானதொரு தருணம். தன்னெதிரே மனம் கொண்டவன். அவனின் காதல்.
ஆம் காதலே. வார்த்தைகளில் உரைக்கப்படவில்லை. கேள்வியாய் கேட்கப்படவில்லை. விருப்பமாய் சொல்லிவிடவில்லை.
ஆனால் இதில் எல்லாம் அடங்கிவிடாத ஒரு நிறைவும், நேசமும் மொத்தமாய் அவன் உருவில் அவள் விரும்பியதை தர பூங்கொத்தை நீட்டி காத்து நின்றது.
அவளை அவன் வாழ்க்கைக்குள் வரவேற்க காத்திருந்தவன் பார்வையில் ஸ்ருதி நெஞ்சம் நெகிழ்ந்து கலங்கியது.
சட்டென அவன் கேட்டுவிட்டதையும், உள்ளங்கைக்குள் காண்பித்த மோதிரத்தையும் பார்த்தவளுக்கு சந்தோஷத்தில் உள்ளம் குலுங்கியது.
தன்னைப்போல அவள் விழிகள் சுழன்று சுபஷ்வினியை தேட தாங்கள் அமர்ந்த இடத்தில் நின்றிருந்தவள் கைதட்டி, விசிலடித்து கத்தி சந்தோஷ கூச்சல் போட்டு கூட்டத்தோடு அத்தனை ஆர்ப்பரித்தாள் அங்கே.
அடுத்ததாய் மஞ்சுளாவையும், அறிவழகனையும் தான் பார்த்தாள் ஸ்ருதி. பார்த்ததும் புரிந்துபோனது அவர்களுக்கும் இதில் சம்மதம் என்று.
மஞ்சுளா கை தட்டியபடி புன்னகைக்க, அறிவழகன் இரு கைகளின் பெருவிரலையும் காண்பித்து அவளுக்கு தங்களின் சம்மதத்தை தெரிவித்தார்.
“என்ன ஸ்ருதி? சைலண்ட்டாகிட்ட? வாலு பொண்ணுக்கு பேச்செல்லாம் நின்னு போச்சே?…” என பார்த்திவ் இன்னும் அவளை நெருங்கி நின்று கேட்க அரங்கத்தில் ஹோவெனும் சப்தம்.
நேரடியாக ஒரு காதல் காட்சி. இதுவரை பார்த்திராத விதத்தில் இங்கே அரங்கேற அத்தனைபேரின் பார்வைக்கும் ரசனையை தூவியது.
முன்வரிசையில் பார்த்திவ்வுடன் அமர்ந்து இருந்தவர்களும் ஸ்ருதி என்ன செய்ய போகிறாள் என்று பார்த்தபடி ஆவலுடன் இருந்தனர்.
தேவராஜும் இதனை பார்த்து புன்னகைத்தார். அதிரன் சொல்லியிருந்தான் இதனை பற்றி.
பார்த்திவ்வின் பேச்சுக்களிலும் ஸ்ருதி அவனுக்கு எத்தனை முக்கியத்துவமானவள் என அவருமே யூகித்திருந்தார்.
இன்று அவரின் முன்னே இந்நிகழ்வு நடக்க முகமெல்லாம் சந்தோஷத்துடன் அவரும் கைதட்டி சிரிப்புடன் பார்த்தார்.
நிகல்சிச்யே அங்கே சில நிமிடங்கள் தடைபட தொகுப்பாளர்களுக்கு அங்கே நடப்பதை முதலில் எப்படி கையாள்வது என்று திகைத்து போயினர்.
அப்படியே விட்டுவிட்டால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கு என்ன வேலை?
“செம்ம கன்டன்ட். ப்ரோமோவுக்கு ஆப்ட்டான ஸீன்…” என அப்படியே அதனை தங்கள் நிகழ்ச்சிக்கு விளம்பரமாக்கிக்கொண்டனர்.
“வாரெஹ் வாஹ். விருது விழாவில் சுவாரஸியமான நிகழ்வு. நாளைக்கு மொத்த தமிழகத்துக்கும் இதுதான் கன்டன்ட்….” என மைக்கில் பெரிதாய் சத்தமாய் சொல்லி சந்தோஷித்து,
“பலத்த கரகோஷத்துடன் நம் மனம் கவர்ந்த இந்த ஜோடியை வாழ்த்துவோம் மக்களே. கமான், க்ளாப்ஸ்….” என மேடையில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி உடனே அந்நிகழ்வை கையிலெடுத்துக்கொண்டார்.
அதனை திரும்பி பார்த்த ஸ்ருதிக்கு அத்தனை கூட்டத்தின் நடுவே பதட்டமாகி போனது.
“ஸ்ருதி…” பார்த்திவ் அவள் நிற்பதை கண்டு மீண்டும் அழைக்க,
“கமான், ரிலாக்ஸ்டா. எல்லாரும் நம்மை தான் பார்க்கறாங்க…” என்று அவன் சொல்ல ஸ்ருதி தெளிந்தாள். வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன்,
“இல்ல உங்களுக்கு வாழ்க்கை குடுக்கறதை பத்தி எனக்கொன்னுமில்லை. நீங்க யோசிச்சுக்கோங்க. அப்பறம் தப்பிக்க முடியாது…” என புன்னகையுடன் கண்ணில் வழிந்துவிட்ட கண்ணீரை துடைத்தபடி வாய்கொள்ளா சிரிப்புடன் ஸ்ருதி.
“யோசிக்கிறதை எல்லாம் எப்பவோ தாண்டிட்டேன். எனக்கும் சேர்த்து இனி நீ யோசி….” என்ற பார்த்திவ் அதற்கு மேல் தாமதிக்காமல் அங்கேயே அந்த மோதிரத்தை எடுத்து ஸ்ருதியின் விரலில் அணிவித்தவன்,
“சீக்கிரம் இந்த விருதை மாதிரி இந்த பார்த்திவ்வையும் உன் கைக்குள்ள வச்சுக்க வாழ்த்துக்கள் ஸ்ருதி…” என சொல்ல லேசாய் முறைப்பும், சந்தோஷமுமாய் புன்னகைத்தவள் வாய்விட்டே சிரிக்க இருதுளி நீர் மீண்டும் விழியை நிறைத்தது.
“இப்ப எதுக்கு அழற நீ?…” என அதட்டினான் ஸ்ருதி முகம் நோக்கி லேசாய் குனிந்து.
“தோணுது அழறேன். இப்பவே அழ வச்சுட்டீங்க…” என்று சொல்ல,
“எல்லா கேமராவும் உன்னை தான் போக்கஸ் பண்ணுது யட்சினி…” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்.
நிமிர்த்து பார்த்தவள் விழிகள் மொத்த அரங்கையும் பார்த்துவிட்டு புன்னகைக்க அவளின் கையை இருக்கமாய் பற்றிக்கொண்டான் பார்த்திவ். அதற்கும் பலத்த கரகோஷம்.
அருகில் நின்ற முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என அத்தனைபேரும் தானாகவே வந்து கைகொடுத்து வாழ்த்தி செல்ல சாரங்கபாணி சட்டென கிளம்பிவிட்டார் அங்கிருந்து.
பார்த்திவ்வும், ஸ்ருதியும் மேடைக்கு வருவதை போலவே தெரியவில்லை என்றதும் தொகுப்பாளினியே கீழே வந்துவிட்டார்.
“கங்க்ராட்ஸ் பார்த்திவ் ஸார் அன்ட் தி லக்கியஸ்ட் கேர்ள் ஸ்ருதகீர்த்தி…” என வாழ்த்த,
“அந்த லக்கி நானா இருக்கலாம் இல்லையா?…” என அந்த மைக்கை வாங்கி பார்த்திவ் சொல்ல மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம் ரசிகர்களிடையே.
அவ்வளவு சத்தம். அது விருது நிகழ்ச்சியா இல்லை நிச்சயதார்த்தமா என பிரித்தறிய முடியாத வகையில் அந்நிகழ்வில் அத்தனைபேரும் சந்தோஷம் கொண்டனர்.
“ஓகே ஓகே, சொல்லுங்க பார்த்திவ் ஸார், எப்போ இந்த லவ் ஸ்டார்ட் ஆச்சு? இப்படி சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க? ஸ்ருதகீர்த்தியே எதிர்பார்க்கலை போல? பொண்ணு திணறி நின்னுடுச்சு…” என தொகுப்பாளினி கேட்க பார்த்திவ் ஸ்ருதியை பார்த்து அப்படியா என்றான் இமையுடனான புருவமுயர்த்தி.
“ஸார் நாங்க கேள்வி கேட்டுட்டு நிக்கறோம். பாருங்க அத்தனைபேரும் இதுக்காக காத்துக்கிட்டு நிக்கறாங்க. சொல்லுங்க ஸார். எப்போ கல்யாணம்?…” என அடுத்த கேள்வி.
“டேட் பிக்ஸ் பண்ணிட்டு நாங்களே சொல்றோம்….” என்ற பார்த்திவ்,
“எல்லோருக்குமே நன்றிகள்…” என்றவன் அனைவரிடமும் விடைபெற்று கையசைத்துவிட்டு கிளம்ப, அதில் ஆராவார கூச்சல்கள் அவ்விடத்தை கிடுகிடுக்க வைத்தது.
இன்னும் நிகழ்ச்சி மிச்சமிருக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியும் என்று பார்த்திவ்விற்கு தோன்றவில்லை.
ஸ்ருதியை கைபிடித்து அழைத்துக்கொண்டு வர அங்கே மஞ்சுளா, அறிவழகன், சுபஷ்வினி, சுதந்திரம் என அனைவரும் நின்றிருந்தனர்.
“அஷ்…” என ஓடி சென்று சுபஷ்வினியை அணைத்துக்கொண்டாள் ஸ்ருதி.
“மோளே அச்சோ அழறியா? வெக்கப்படறியா? டேய் ஸ்ருதிக்குட்டி. அச்சச்சோ…” என்று சுபஷ்வினி அவள் முகம் நிமிர்த்த,
“பாவம் உன் க்ரஷ்…” என்றாள் சிரிப்புடன் ஸ்ருதி.
“அதானே பார்த்தேன்…” என்ற சுபஷ்வினி ஸ்ருதியை அணைத்தவாக்கில் தூக்கி சுழற்றி இறக்க,
“ப்ரெஸ் வராங்க பார்த்திவ். கிளம்பிடலாம்…” என அறிவழகன்.
“மேம்…” என்ற ஸ்ருதி மஞ்சுளாவின் அருகில் நின்றதும்,