“கேட்டேனே, அவ்வளோ அக்கறை இருந்தா நீங்க எனக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு கேட்டேனே…” என ஸ்ருதி சொல்லவும்,
“அடிப்பாவி…” என சுபஷ்வினி வாயில் கை வைக்க,
“அதுக்கு தான் ஸார் பயங்கர கோபம்…” என்றாள் இலகுவாக.
“கோபம் வராம. வேற என்னாச்சு ஸ்ருதி?…”
“என்னவோ பெத்தவங்க இல்லைன்னா அவ்வளோ திமிரா போச்சா, கேட்க ஆளில்லாம சுத்தறியா, நீயே முடிவு பண்ணுவியான்னு ரொம்ப பேசிட்டார். எனக்கு இப்படியே விட்டா எப்படின்னு புடிச்சுட்டேன்…” என்றவள்,
“அதான் உங்களுக்கு இவ்வளோ அக்கறை இருக்குன்னு எனக்கு முன்னையே தெரியலை. பேசாம ஒரு ப்ரெஸ் மீட் வச்சு கல்யாணம் கேன்சல். எங்கப்பா எனக்கு பார்ப்பார்ன்னு சொல்லிடறேன். நீங்க சென்னை வாங்கன்னு கூப்பிட்டுட்டேன். கால் கட்டாகிருச்சு…”
“ஆமா. இல்லைன்னாலும் எப்படியும் இதை நான் பார்த்திவ்ட்ட சொல்லியிருப்பேன் தானே?…” ஸ்ருதி சொல்ல,
“ஸ்ருதி…”
“ப்ச், இரு அஷ், நான் சொல்லிடறேன்…” என்றவள்,
“நான் திரும்ப அவரோட வொய்ப் நம்பருக்கு கூப்பிட்டுட்டேன். இப்படி இப்படி அப்பாவுக்கு ரொம்ப வருத்தமாம். லைன் கட்டாகிருச்சு. இருந்தா போனை குடுங்கன்னு சொல்லி பேசவும் அந்தம்மா என்னை ப்ளாக் பண்ணிருச்சு. கொஞ்ச நேரத்துல அப்பா மெசேஜ். இனி உன் விஷயத்துல தலையிட்டேனா என்னன்னு கேளுன்னு…”
ஸ்ருதி சொல்லி முடிக்க சுபஷ்வினி வாயில் கைவைத்து அமர்ந்திருந்தாள் கேட்ட விஷயத்தில்.
“நானும் பதிலுக்கு அனுப்பினேன். நீங்க ஒத்துக்கலைன்னாலும் நீங்க தான் என் அப்பா, என் நம்பரை ப்ளாக் பண்ண நினைச்சா அங்க வந்து நேர்ல பேசுவேன்னு. அதுல இருந்து இப்ப வரைக்கும் அவ்வளோ மெசேஜ். நான் பதில் சொல்லவே இல்லை…” என சிரிக்க,
“என்ன பண்ணியிருக்க ஸ்ருதி?…” என்றாள் சுபஷ்வினி.
“ஏன் என்னாச்சு? அவர்கிட்ட வேற எப்படி பேச அஷ்? என்னை தண்ணி தெளிச்சிவிட பார்க்கறார். அவர் வரவே வேண்டாம். எனக்காக எதுவும் செய்யவேண்டாம். அட்லீஸ்ட் வார்த்தையால நோகடிக்காம இருக்கலாம்ல. பெத்தவங்க இல்லைன்னு நீயா தேடிக்கிட்டியான்னு ஒரு மாதிரி கேட்கறார்…”
“ஸ்ருதி விடுடா…”
“என்ன விட? அப்போ நான் சும்மா இருக்கவா? இவங்க தானே பெத்தாங்க. என்னைக்காச்சும் என் வாழ்க்கையோட அடுத்தகட்டம் என்னன்னு ஒருதடவையாச்சும் பேசி இருப்பாங்களா? மாசமானா காசு அனுப்பிட்டேன் சொல்றது, வருஷம் பொறந்தா பிறந்தநாள் விஷ்….” என பல்லை கடித்தாள்.
“அந்த ஜென்மங்களுக்கு நீ என்ன சொன்னாலும் புரியாது ஸ்ருதி. இப்ப இதுவா நமக்கு நேரம்? அவங்களை விடு…”
“ம்ஹூம். அப்படியெல்லாம் விடமாட்டேன். அதான் சொல்லியிருக்கேனே, இந்த ஜென்மத்துல நான் அவங்க பொண்ணுன்ற நினைப்பு என்னைக்கும் மறக்கவே கூடாது. நான் விடவும் மாட்டேன்…” என்றாள்.
“ஆனா அதுக்கு இதென்ன பேச்சு? கேன்சல் பண்ணுவேன்னு…” என்ற சுபஷ்வினியை ஸ்ருதி பார்க்க,
“தப்புடா. அவர் நிலமையை நினைச்சு பாரு. இதே மாதிரி ஒரு சூழ்நிலையில கல்யாணத்தை அவர் நிறுத்தியிருக்கார். அதுல இருந்து இவ்வளோ சீக்கிரம் மீண்டு வந்ததே பெருசு…” என்றதும் தான் ஸ்ருதிக்கு புரிந்தது.
“நான் அதை மீன் பண்ணலை அஷ். இது இப்படி கன்வே ஆகியிருக்கும்ன்னு நான் நினைக்கலை…” என்று சொல்ல பார்த்திவ் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான்.
வந்தவன் இன்னும் குறையாத கோபத்துடன் இருக்க சுபஷ்வினிக்கு எப்படி சமாளிப்பதென்று புரியவில்லை.
எல்லாம் யோசித்து கொண்டிருக்க இப்போது என்னவென்றால் மஞ்சுளாவிடமும் இதனை சொல்லிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.
அவள் பேசுவதை கேட்டபடி சுபஷ்வினி பார்த்திவ்வின் மேல் ஒரு பார்வை, ஸ்ருதி மேல் ஒரு பார்வை என்றிருந்தவள்,
“அவ கொஞ்சம் எமோஷனலாகிட்டா ஸார். அதான் அப்படி பேசிட்டா…” என மீண்டும் சுபஷ்வினி அவளுக்காக பேச,
“ஓஹ்…” என்றான் அவன்.
“நிஜமா ஸார். அவங்கம்மாவும் நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடி பேசியிருக்காங்க…” என்றவள் ஸ்ருதி பகிர்ந்ததையும், அவளின் தாய் தந்தை பேச்சுக்களையும் சொல்ல முகம் மாறாமல் கேட்கவே பார்த்திவ் வெகுவாய் பிரயத்தனப்படவேண்டியதானது.
இயல்பாய் ஒரு பெண்ணுக்கு கிடைக்க கூடிய எதுவும் கிடைக்காத ஒரு நிலை ஸ்ருதிக்கு.
பார்த்திவ் மனதெல்லாம் அவள் மீதான நேசம் எவ்வளவு அபரிமிதமோ, அவளின் காயம் மீதான ரணமும் அப்படியே.
இப்போதும் கலகலப்புடன் நடந்ததை மஞ்சுளாவிடம் விவரித்துக்கொண்டிருந்தவளை பாராமல் பார்த்தவன் நெஞ்சம் அவளுக்காகவே தவித்தது.
பேசி முடித்து ஸ்ருதி வந்தமரவும் பார்த்திவ் கீபோர்ட் பக்கம் திரும்பிக்கொண்டான்.
கால்மணி நேரத்தில் மஞ்சுளா வந்துவிட்டார் அங்கே. அவர் வருகையில் கீழே கேண்டினில் ஸ்ருதி, சுபஷ்வினி, சுதந்திரத்துடன் சுபாஷ் என்னவோ சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான்.
அவனின் சத்தம் அங்கிருந்த அத்தனைபேரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவன் பேசுவதற்கெல்லாம் ஸ்ருதி கைதட்டி சிரிக்க அதில் மஞ்சுளாவின் மனது நிறைந்துவிட்டது.
ஏக்கங்களை அடக்கி ஆளும் வயதா? இந்த வயதென்ன? சிறுவயதிலும் இவள் எப்படி இருந்திருப்பாள்? நினைக்கையில் ஆறவில்லை மஞ்சுளாவிற்கு.
அவர் அவர்களை கலைக்காமல் மேலே சென்றுவிட பார்த்திவ் சுதந்திரத்திற்கு அழைத்துவிட்டான்.
“அங்கிள் ஸ்ருதி கூட தானே இருக்கீங்க? அம்மா வந்தாச்சு. வாங்க…” என்று சொல்ல அதற்குள் மஞ்சுளா இளைய மகனுக்கும், அறிவழகனுக்கும் பேசிவிட்டார்.
“அப்பாவுக்கும், தம்பிக்கும் ஓகே பார்த்திவ். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பிரமோத்தால உடனே வர முடியாது. ஆனா எப்படியாச்சும் ட்ரை பண்ணி வந்துருவேன்னு சொல்லியிருக்கான்….” என்று சொல்ல,
“ஹ்ம்ம் ஓகே ம்மா…” என்றவன்,
“உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே?…” என கேட்டான்.
“இதுல என்ன இருக்கு பார்த்திவ்? கல்யாணம்ன்றது முதல்ல மனசுக்கு சந்தோஷத்தை தரனும். மத்தவங்களுக்காக பெருசா பண்ணிக்கிட்டா மட்டும் எல்லாம் சரியா போகுமா? நாம கல்யாணத்தை தானே சிம்பிளா வச்சுக்க போறோம்….”