“இந்த வாலு பொண்ணுக்கு கத்துக்குடுக்க எக்கச்சக்கமா சேர்த்து வச்சிருக்கேன். இதுவும் ஒரு க்ளாஸ்ன்னு வச்சுக்கலாமே மிஸஸ்.பார்த்திவ்…” என கண் சிமிட்ட,
“தேவையே இல்லை. நான் தூங்கிட்டேன்னு என்னை எழுப்பாம சத்தம் காட்டாம படுத்தீங்க தானே? போய் தூங்குங்க…” என அவன் கைகளில் இருந்து நழுவிய பெண்ணை மொத்தமாய் அள்ளிக்கொண்டவன்,
“என்ன தூங்கிட்டீங்கன்னு நீ எழுப்பாம இருந்திருக்கனும். கிளாஸ்க்கு நீ வெய்ட் பன்றன்னு எனக்கு தெரியாதே யட்சினி…”
“நானா? அதெல்லாம் இல்லைப்பா…”
“ஆனா நான் ஆமாப்பா…” என சொல்லியவன் ஸ்ருதியை மொத்தமாய் சுருட்டி அவள் கழுத்தில் முகத்தை தேக்க,
“மூச்சு முட்டுது…” என்றாள் ஸ்ருதி மெல்லிய குரலில்.
“எனக்கும். எப்போ மொத்தமா உன்னோட சேர்ந்து மூச்சை விடுவேன்னு இருக்கு. ரொம்பவே என்னை அடக்கி வச்சுட்ட ஸ்ருதி நீ…” என்றவன் அவளை கீழே இறக்கி தள்ளி நிறுத்தி பார்த்தான்.
“என்னாச்சு?…” என்றவள் அவனின் திடீர் செய்கையில் குழம்ப,
“ஆமா நீ முண்டு கட்டமாட்டியா?…” என கேட்க,
“என்ன?…” என விழி விரித்தாள்.
“முண்டு கட்டுவாங்களே இந்த ஊர் பொண்ணுங்க. அதான் நீ கட்டலையான்னு கேட்டேன்…”
“ஹலோ, என்ன இது?…” என்றவள் முறைக்க,
“குடுக்க மறந்துட்டேன்ல…” என சொல்லியவன் அந்த அறையில் இருந்த தன்னுடமை அடங்கிய பெட்டியில் இருந்து ஒரு புடவையை எடுத்து வந்தான்.
கசவு பட்டில் முழுவதுமாய் ஒவ்வொரு இசை கருவிகள். காலை திருமணத்திற்கும் அப்படி இருந்திருக்க இப்போது இந்த நிகழ்விற்கும் அதுதான் எனும் போது ஸ்ருதியை வெட்கம் பிடுங்கியது.
கையில் அந்த புடவையை வைத்தபடி பார்த்திவ்வை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தை புடவையால் மறைத்துக்கொள்ள,
“போ போ போய் கட்டிட்டு வா….” என குறும்பாய் சிரித்தான் பார்த்திவ்.
“அதெல்லாம் முடியாது. நான் மாட்டேன். அதுவும் முண்டு. நோ நோ நோ….” என அவள் பின்னே செல்ல,
“ஓகே, நான் ஹெல்ப் பன்றேன். எப்படி கட்டனும்ன்னு நீ சொல்ல சொல்ல…”
“நான் சொல்லவும் வேண்டாம். உங்க உதவியும் எனக்கு தேவை இல்லை…” என பின்னே சென்றவள் சுவராய் எழும்பி நின்ற கண்ணாடியில் சாய்ந்துவிட நகர முடியவில்லை.
“இப்ப என்ன சேரி மாத்த மாட்ட. ரைட்…”
“ஆமா, மாட்டேன். சேரி வேண்டாம்…”
“அதை தான் நானும் சொல்றேன் ஸ்ருதி…” என்றவன் நமுட்டு சிரிப்பில் தாளமுடியாமல் அவன் முகத்தை அந்த புடவையால் மறைத்துவிட்டாள்.
“ஸ்ருதிக்கு வேண்டம்ன்னா எனக்கும் வேண்டாம். பேசிக்கலி நான் ஒரு பர்பெக்ட் ஹஸ்பன்ட் மெட்டீரியல் யூ க்னோ…” என்றவன் கையிலிருந்த கசவு புடவையை விசிற கட்டிலை நிறைத்தது அந்த புடவை.
“பார்த்திவ்…”
“திரும்ப சொல்லு ஸ்ருதி…” என்றவன் குரல்கள் அவளுள் அடங்கி எழுந்து மூர்ச்சையடைந்து மோட்சம் பெற்று என சதிராடிக்கொண்டிருந்தது.
“மாஸ்டர்…” என்றாள் மீண்டும் சிரிப்புடன்.
“இதுக்கும் இன்னொரு பாடம் சொல்லுவேன். கெட் ரெடி…” என்றான் அசராமல்.
“இந்த ஜ்வெல்ஸ், மேக்கோவர் எடுக்கனும்….” என்றதும் தான் கொஞ்சம் விலகினான்.
“நான் சொன்ன பேச்சை மீறவே மாட்டேன். நான் ஹெல்ப் பன்றேன்…” என்றவன் சொற்களுடன் செயல்களும் ஸ்ருதியை சித்தம் கலங்க செய்தது.