“மேனேஜர்ட்ட சொல்லி வேற எங்கயாச்சும் அவராவே அரேஞ்ச் பண்ணி தர மாதிரி ஏற்படு செய்யலாம். ஓகே. இப்ப நீ கூலா?…” என்றான் லேசாய் தலை குனிந்து அவள் முகம் நெருங்கி.
“நீங்க சொன்னது உண்மை தான்…” ஸ்ருதி தீவிரமாக சொல்ல,
“எது?…” என கேட்டான் பார்த்திவ்.
“அதான் ஹர்ட் பன்ற மாதிரி பேசுவாங்கன்னு. ப்ரைவேட் பிளேஸ்ன்னு சொல்றேன், என்கிட்டையே சொல்றா இது நான் இருக்கவேண்டிய இடம்ன்னு…” என்றாள் அவள்.
“டிஸ்கஸ்டிங். இப்ப இதை டிஸ்கஸ் பண்ணனுமா?…” என்றதும்,
“உங்களுக்கு அவங்களை எப்படி பிடிக்காம போச்சுன்னு தெரியலை. ஆனா அவங்களுக்கு இன்னும் உங்க மேல ஒரு இது இருக்குன்னு இன்னைக்கு தெரிஞ்சிச்சு….” என வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க,
“ஸ்ருதி ஸ்டாப் இட்…” என பார்த்திவ் முறைத்தான்.
“பார்த்திவ் வெரி ஹாட்…” என ஆராதனா போலவே ஸ்ருதி சொல்ல,
“அடங்கமாட்டியா நீ?…” என்றவன் அவளை துள்ள துள்ள ஒரு கையால் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
“நான் குளிச்சிட்டேன். பசிக்குது. சாப்பிடனும். காபி வேணும்…” என ஸ்ருதி ஒவ்வொன்றாய் சொல்ல அறையை சட்டென இருட்டாக்கினான் பார்த்திவ்.
“அதான் பிளாட் டீ போட்டு குடிச்சிட்டியே. கொஞ்ச நேரத்துக்கு பசி தாங்கும். நேரமாகட்டும் சேர்ந்து சாப்பிடலாம்…”
“நோ, நான் ப்ரெஷாகிட்டேன்…”
“எஸ், எனக்கும் அதான் வேணும்….”
“நோ மாஸ்டர்…”
“ஹேய் வாலு, நீ பேச பேச தான் உன்னை விடக்கூடாதுன்னு தோணுது….” என கைகலப்பும், கலாட்டாவுமாக முன்னிரவு நிகழ்வை பகலுக்கு இழுத்து வந்தனர் இருவருமாக.
பார்த்திவ்வின் பேச்சுக்களுக்கு ஸ்ருதியின் சின்ன சின்ன அடிகள் கூட அவனுக்கு தாளமாய் சப்தம் எழுப்பியது.
நேரங்கள் கடக்க மெல்ல ஸ்ருதியை விட்டு விலகியவன் போனை எடுத்து உணவிற்கு சொல்லிவிட்டு வந்து மீண்டும் அவளருகே விழுந்தான்.
“என் மோளே இருந்திருந்தா இவ்வளோ நேரம் என்னை சாப்பிடாம இருக்க விட்டிருப்பாளா?…” என பில்லோவை கொண்டு ஸ்ருதி அவனை மொத்த,
“அதான் நைட்டெல்லாம் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்ட தான?…” என அவளின் அடிகளுக்கு பதில் தந்தான் கள்ளப்புன்னகையுடன்.
“அது சிறு தீனி பாஸ். யானை பசிக்கு சோளப்பொரி…” என முகத்தை சுளிக்க,
“ஆஹாங், கிட்ட வாயேன்…” என்ற பார்த்திவின் அழைப்பில் சுதாரித்து சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடினாள் ஸ்ருதி.
“நான் ஊருக்கே கிளம்பிருவேன் பார்த்துக்கோங்க…” என்று சொல்லி செல்ல அடக்கமாட்டாத புன்னகையுடன் பார்த்திவ் அவள் பின்னே செல்ல பொத்தென்று கதவு அடைபட்டது.
“வெளில தான் வரனும் யட்சினி. வா வச்சிக்கறேன்..” என சொல்லிக்கொண்டவன் இன்னொரு அறைக்கு சென்று தானும் குளித்துவிட்டு வந்தான்.
ஸ்ருதி இன்னும் வராதிருக்க படுக்கை விரிப்புகளை தானே மாற்றிவிட்டு புதிதாய் விரித்து சரி செய்தான்.
“கூப்பிட்டிருக்கலாமே? நான் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல…” என வந்தாள் ஸ்ருதி.
“ஹ்ம்ம், பண்ணிட்டேன். இதனால என்ன?…” என்றவன்,
“எப்பவும் நான் வந்து ஸ்டே பண்ணினா ரூம் சர்வீஸ் வந்திருவாங்க. ஆனா இன்னைக்கு வேண்டாம்ன்னு தோணுச்சு. நானே பண்ணிட்டேன்…” என சொல்லியவன் சுற்றி வந்து பார்த்தான்.
“என்ன தேடறீங்க?…” என ஸ்ருதி கேட்கவும் அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டவன்,
“இல்லை பெர்பெக்ட்டா பண்ணிட்டேனான்னு ஒரு பார்வை தான். எல்லாம் ஓகே வான்னு. அப்பறம்…” எனும் பொழுதே பெல்லடிக்கும் சப்தம்.
“ப்ரேக்பாஸ்ட் வந்திருச்சு…” என பார்த்திவ் சொல்ல,
“இது ஆல்மோஸ்ட் லஞ்ச டைம். பிரேஞ்ச்…” என்றாள் ஸ்ருதி கண் சிமிட்டி.
“தப்பில்லை தப்பில்லை…” என்றபடி கதவை திறக்க உள்ளே டைனிங்கில் கொண்டுவந்து வைத்தனர்.
“வா சாப்பிட்டு வெளில போகலாம்…” என சொல்லி இருவருக்கும் எடுத்து வைக்க வீட்டிலிருந்தும் அழைப்பு.
பேசியபடி உண்டு முடித்தனர் பார்த்திவ்வும் ஸ்ருதியும். அறிமுகமானதில் இருந்து இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருக்குமான பிடித்தங்கள் எல்லாமே ஓரளவு அத்துப்படி தான்.
அதனால் பார்த்திவ் முதலிலேயே என்னென்ன உணவு வகைகள் என்று சொல்லிவிட்டான் மேனேஜரிடம்.
அதன்படியே உணவுகளும் வந்திருக்க இதற்கிடையில் இருவருக்குமான வாழ்த்து செய்திகள் சமூகவலைதளங்களில் குவிந்துகொண்டிருந்தது இன்னும்.
பார்த்திவ், ஸ்ருதி இருவருமிருக்கும் புகைப்படங்களை தேடி தேடி பதிவேற்றி இருந்தனர்.
இதில் பாடகியான பொழுது ஸ்ருதி யார் என்று அறிந்து சில யூட்யூப் சேனல்களில் அவளின் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தாலும் இப்போது இன்னுமே வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டாள்.
காதல் திருமணம் என உலகத்திற்கே தெரிந்திருக்க ஸ்ருதி பங்கேற்ற அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ருதியின் பாடலையும், அதற்கு பார்த்திவ்வின் கருத்துக்களையும் சின்ன சின்ன காணொளிகளாக இப்போது வைரலாக்கினார்கள்.
இருவருக்கும் அப்போதிருந்தே காதல் இருந்ததாகவும், ஸ்ருதிக்கு கிடைக்கவேண்டிய முதல் பரிசு கிடைக்காததால் தான் அன்று பார்த்திவ் கிளம்பியதாகவும், அதனால் தான் எந்த தொலைகாட்சி நிகழ்ச்சிக்கும் அவன் வருவதில்லை என்றும் ஆரம்பித்தனர்.
“ஹ்ம்ம், இன்னும் என்னலாம் வர போகுதோ?…” என அதனை காண்பித்து அவள் புன்னகைக்க,
“லீவ் இட்…” என்றான் பார்த்திவ்.
ஸ்ருதியும் உண்டு முடித்து உடைமாற்றி கொண்டு வர அவளை கை பிடித்து வெளியே வந்தவன்,
“பேட்டரி கார் கொண்டுவர சொல்லவா? இல்லை சும்மா வாக்கிங் மாதிரி போறதா?…” என கேட்டான்.
இருவருமாக அந்த வில்லாவை விட்டு வெளியே வந்து கேட்டை தாண்டி பூங்காவின் பக்கம் நுழைந்தனர்.
மிகப்பெரிய தீவு தான் அது. பூங்கா ஒருபுறம் இருக்க அதற்கு மறுபக்கம் தங்கும் விடுதி சில மாடிகள் என்று கட்டப்பட்டிருந்தது.
“இதெல்லாம் சிங்கிள் ரூம், டபிள், ட்யூப்லேக்ஸ், லக்ஸுரி, ப்ரீமியம்ன்னு தனி தனி டைப்பாஃப் ரூம்ஸ். ஸீ வியூ சைட் ரூம்க்கு இன்னும் டிமான்ட்…” என்று காண்பித்தான்.
“தனி காட்டேஜ் பேக்வாட்டார் சைட்ல இருக்கு. அங்கயும் தனி வில்லா இருக்கு ஸ்ருதி. ஆனா ஃப்லோட்டிங் கிடையாது. நார்மலா தரையில தான் கட்டியிருக்கோம். ஆனா பால்கனி பக்கம் ஸீ வியூ இருக்கற மாதிரி….” என்றான் பார்த்திவ்.
ஒவ்வொரு இடத்தையும் விளக்கிக்கொண்டே வந்தான். தங்கும் இடங்களின் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் ஒரு அறையை அவளுக்கு திறந்து காண்பித்தான்.
ஒவ்வொன்றுமே அழகாய் இருந்தது. அவற்றை எல்லாம் தாண்டி வில்லா பக்கம் நுழைந்தான்.
“இங்க ப்ரைவேட் வில்லா வித் ஸ்விமிங் பூல். இருக்கறதுல இது கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ். பட் எப்பவும் சீசன்ல இது மட்டும் புக்கிங்க்லையே தான் இருக்கும். இதுக்கும் டிமாண்ட் அதிகம்….” என காண்பித்தவன் அதன் ஒரு சாவியை எடுத்து வரும்படி சொல்லிவிட்டு நடந்தான்.
அங்கே எதிர்ப்படுபவர்கள் அனைவருக்கும் மனைவியை அறிமுகம் செய்தும் வைத்தான் பார்த்திவ்.
அத்தனைபேரையும் அவனுக்கு தெரிந்திருந்தது. அனைவரிடமும் சகஜமாக அவன் பழகிய விதம் இன்னுமே ஸ்ருதியை கவர்ந்தது.
சாவி வரவும் அவர்களை செல்ல சொல்லிவிட்டு ஒரு வில்லாவின் கதவை திறந்தவன் உள்ளே அழைத்து செல்ல பாரம்பரியமான மர வேலைபாடுகளுடன் இருந்தது அந்த தனி வீடு.
“எப்படி இருக்கு?…” என கேட்க,
“ரொம்ப அழகா இருக்கு. யார் டிசைன் பண்ணினது? இன்டீரியர் எல்லாமே சூப்பர்…” என ஸ்ருதி சொல்ல,
“நம்ம பிரமோத் தான். அவன் அதானே படிக்கிறான். மேனேஜ்மெண்ட் படிச்சி முடிச்சிட்டு அவன் வந்து பொறுப்பெடுத்துப்பான்…” என சொல்லியவன் பின் பக்கம் வந்தான்.
“அதானே பார்த்தேன். ஆர்மோனியபெட்டியும், கீபோர்டும் தானே மாஸ்டருக்கு தெரியும்…” என ஸ்ருதி கிண்டல் பேச,
“இப்ப உன்னையும் தெரியுமே…” என்றான் கண்ணடித்து.
“வெளில இருக்கோம் மாஸ்டர்….” என ஸ்ருதி அவனை லேசாய் தள்ளி நிறுத்த,
“என்னை யார் கேட்பா?…” என அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன் பார்வையில் நீர் தாடகம்.
இரு ஸ்விம்மிங் பூல் இருந்தது. சிறு குழந்தைகள் வந்தால் அவர்களுக்கும், பெரியவர்களுக்கும் என அருகருகே இருந்தது.
அமர்வதற்கு தனியாக சிட்டவுட் இருக்க, அதனருகிலேயே ஊஞ்சல் போடப்பட்டிருந்தது.
மழை பெய்தாலும் நனையாமலிருக்க கூரை எழுப்பப்பட்டு அதனை சுற்றிலும் கொடிகள் படரவிடப்பட்டிருந்தது.
சற்று தள்ளி சாய்ந்த தென்னை மரங்களும், அதற்கு அருகில் பரந்துவிரிந்த நீரும், மெல்லிய அசைவுகளில் உண்டான மெல்லிய அலைகளும் தரையை தழுவியது.
“வாவ் அமேஸிங்…” என்ற ஸ்ருதி,
“அங்க போகலாம்…” என்றவளை கம்பியால் போடப்பட்டிருந்த கேட்டை திறந்துகொண்டு அழைத்து சென்றான்.
“சீசன் டைம் இது எப்பவும் ஃபுல் தான். ரொம்ப ரொம்ப அதிகமா இந்த வில்லாவை தான் சூஸ் பண்ணுவாங்க. ரேட்டிங்ல கூட நம்பர் ஒன்…” என சொல்லிக்கொண்டே இன்னும் முன்னே செல்ல,
“இப்போ ஆட்கள் யாரும் இல்லையோ? ரொம்ப தெரியலை…” என்றாள் ஸ்ருதி.