அவளறியாமலே தன்னைப்போல திரும்பி பார்க்க பார்த்தவள் முகம் இருண்டு நெஞ்சை அடைத்துவிட்டது.
“ச்சீ…” என்ற சத்தத்துடன் பார்த்திவ் முதுகில் ஒன்றிவிட அவளை அணைத்தபடி விருட்டென உள்ளே நுழைந்துவிட்டான் பார்த்திவ்.
உள்ளே வந்து அந்த அறையில் அமரும் வரை வாயே திறக்கமுடியவில்லை ஸ்ருதியால்.
சில விஷயங்கள் கேள்விப்படுவதற்கும், கண்ணால் பார்ப்பதற்குமான வித்தியாசத்தை அங்கே உணர்ந்தாள் ஸ்ருதி.
தன்னை எத்தனை துணிச்சலான பெண் என நினைத்திருக்க அவள் கண்டது, அதிலும் ஆராதனா, அவளுடன் அந்த ஆடவன்.
ஒருவிதமான அசூயையுடன் முகத்தை சுளித்தவளால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.
“ஹேய் என்ன ஸ்ருதிம்மா? இதெல்லாம் கடந்து போயிடனும். இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க?…” என சிரித்துவிட்டான் பார்த்திவ்.
“அவ்வளோ ஈஸியா போச்சா உங்களுக்கு? எப்படி அவங்களால? அதுவும்…” என்னும் பொழுதே உமட்டிக்கொண்டு வந்தது அவள் பார்த்த அந்த கோலம்.
“இதான் நீங்க அவளை வேண்டாம்ன்னு சொன்ன ரீசனா?…” என கேட்க,
“இப்ப அதை பத்தி பேச வேண்டாம். நமக்கு அவங்க யாருமில்லை. சோ அதை விடு. அது அவங்க பர்சனல்…” என்ற பார்த்திவ் தண்ணீரை வரவழைத்து அவளுக்கு கொடுத்தான்.
“ரிலாக்ஸ் வாலு…” என சொல்லி அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவன் தண்ணீர் பாட்டிலை ஸ்ருதி அவனிடம் நீட்டியதும் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“உன்னை என்னவோ நினைச்சேன். நீ என்னடான்னா? இன்னும் ரெண்டுநிமிஷம் நின்னிருந்தா மயங்கி விழுந்திருப்ப போல?…”
“மூச், நான் கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க. இதுக்கெல்லாம் எப்படி உங்க ஹோட்டல்ல அலோவ் பன்றீங்க. இதுல பர்சனல் மண்ணாங்கட்டின்னு…” என அவள் வெடிக்க,
“இதென்னடா வம்பா போச்சு? ஒவ்வொருத்தரையும் நாம செக் பண்ணிட்டா இருக்க முடியும்? இப்ப கூட சொல்றேன். அது அவங்க தனிப்பட்ட விஷயம். அவ்வளோ தான். சாக்கடையை விட்டு நாம தள்ளி தான் நிக்கனும். எத்தனை கிளறினாலும் அதன் வாடை மாறாது…”
“என்னமோ சொல்லுங்க. ஆனா….” என்றவள் தன் முகத்தை பார்த்திவ்வின் வயிற்றில் பதித்து,
“அச்சோ எனக்கு கண்ணை மூடினா அதான் வருது. அதுவும் அப்பிடியே எப்படி உங்களை கூப்பிட முடிஞ்சது. பார்த்திவ்வாம்….” என பல்லை கடித்தாள்.
“நான் தான் உன்னை பார்க்காதன்னு சொன்னேன்ல?…”
“அப்போ முதல்லையே உங்களுக்கு தெரியுமா?…”
“ஹ்ம்ம், வாய்ஸ் வச்சு தெரிஞ்சது…” என்றவன்,
“இப்ப எதுக்கு இந்த டாப்பிக். உனக்கு மூட் சேன்ச் பண்ணனுமா? வா போகலாம்…”
“ஊருக்கா?…” என வேகமாய் ஸ்ருதி கேட்க,
“ம்ஹூம். இந்த வீக் ஃபுல்லா நாம இங்க தான். நெக்ஸ்ட் வீக் பிரமோத் கிளம்பறதுக்கு ரெண்டுநாள் முன்ன நமக்கு ரிசப்ஷன்….” என்றதும் சரி என்றாள் ஸ்ருதி.
மீண்டும் இருவரும் வெளியே வர ஸ்ருதிக்கு கண்களை திருப்ப கூடாதென்றாலும் பார்வை நீர் பரந்த வெளியை பார்க்க அங்கே தண்ணீருக்குள் அந்த ஆடவனுடன் எதை பற்றியும் கவலையின்றி இருந்தாள் ஆராதனா.
அதனை பார்த்ததுமே ஒரு முக சுளிப்புடன் ‘என்ன வாழ்க்கை இது?’ என்றுதான் தோன்றியது.
கூடவே சாரங்கபாணி செய்ததும் ஞாபகம் வர இதழ்களுக்குள் என்னவோ திட்டிக்கொண்டே வந்தாள் ஸ்ருதி.
“என்ன பேசற யட்சினி?…” என்றவன் அவள் முகத்தில் வெடித்த எள்ளையும், கொள்ளையும் பார்த்துவிட்டு,
“இன்னும் அதை நீ விடலையா?…” என முறைத்தான்.
“ஹ்ம்ம், அப்பா தான் அப்படின்னா, மக. ப்ச்….” என்று மேலும் பேசும் முன்,
“ஸ்ருதி…” என பார்த்திவ் ஆட்சேபிக்க,
“உங்களுக்கு உங்க எத்திக்ஸ், லிமிட்ஸ் வச்சுட்டு அதோடவே இருங்க. என்னால முடியாது. எவ்வளோ பேச்சு? எவ்வளோ பண்ணினார்? என்னால மறக்கமுடியலை. அன்னைக்கு அந்த சூழ்நிலை…” என்றவள் முகம் ரத்தமாய் சிவந்துவிட்டது.
“ரூம்க்கு போவோம். இன்னும் டென்ஷனாகுது. எதையும் பார்க்கிற மூட் இல்லை…” என்று சொல்லி பார்த்திவ்வை பார்க்க ஸ்ருதியின் விழிகள் கலங்கி இருந்தது.
“ஓகே, என்னோட வந்து ஆபீஸ் ரூம்ல வெய்ட் பண்ணு. போகலாம்…” என சொல்லியவன் அவளை அழைத்து சென்றான்.
மேனேஜர் தவிர வேறு யாரும் வரவில்லை. பார்த்திவ் சொல்லிவிட்டான் அவரிடம் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று.
ஐந்து நிமிடங்கள் தனியாய் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவளை நெருங்கியவன்,
“வா ஸ்ருதி…” என்றான்.
ஸ்ருதியும் அமைதியாக எழுந்து வெளியே வர அவர்கள் வில்லாவிற்கு செல்லும் பாதை அல்ல அது.
“எங்க போறோம்?…” என்றவளை அழைத்துக்கொண்டு பேக்வாட்டார் பக்கம் வந்தான்.
உப்புக்காற்றின் ஈரம் அவள் முகத்தில் அறைந்தது குளுமையாய். படித்துறை போலிருந்த இடத்திற்கு வரவும் படகு வீடு ஒன்று அவர்களை நெருங்கியது.
“போட் ஹவுஸ்…” என சொல்லி ஸ்ருதி பார்த்திவ்வை திரும்பி பார்க்க,
“ஹ்ம்ம், ஆமா. வா….” என அவளுடன் உள்ளே நுழைந்தான் பார்த்திவ்.
படகு தண்ணீரில் மிதந்து செல்ல ஆரம்பிக்கவும் இதமாய் பூஞ்சாரல் பொழிய ஆரம்பிக்க இதத்திற்கு இதம் சேர்த்தது அந்த பகல் பொழுது.
எரியும் மனதை குளிர்விப்பதை போலிருக்க பார்த்திவ்வை எதிர்பார்க்காமல் ஸ்ருதி மேலே மாடிக்கும் சென்று, கீழும் வந்து என அந்த பிரமாண்ட படகை சுற்றி வந்தாள்.
அவளின் மனநிலையே மாறிவிட்டது. ரசிக்கும் பார்வையுடன் வளைய வந்தவள் பார்த்திவ்வை காணாது படகின் கடைசி வரை செல்ல அவனில்லை.
படகை செலுத்துபவரிடம் வந்தவள் மீண்டும் அடுக்களை இருக்கும் பக்கம் சென்றாள்.
அங்கே அவர்கள் ஹோட்டல் சீருடையில் இருந்தவர் அவள் கேள்வியாய் வந்து நின்றதுமே,
“மேம் ஸார் மேல ரூம்ல இருக்கார்….” என்றார்.
“இப்பத்தான் மேல இருந்து வந்தேன்…” என்றபடி மீண்டும் முதல் தளத்திற்கு செல்ல அங்கிருந்த அறையில் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் பார்த்திவ்.
“என்கிட்ட சொல்லாம இங்க வந்துட்டீங்க? நான் தேடினேன்…” என்றவளை கை நீட்டி அழைத்தவன்,
“வாடாம்மா இங்க… என்றான் புன்னகையுடன்.
கதவை சாற்றிவிட்டு பார்த்திவ்வின் மடியில் அமர்ந்தவள் கால்கள் அவன் கால்களின் மேல் படர்ந்தது.
பாந்தமாய் தன் கைவளைவினுள் அவளை அடக்கி அணைத்துக்கொண்டவன் வெப்பச்சூட்டில் இதமாய் குளிர் காய்ந்தாள் ஸ்ருதகீர்த்தி.
வெளியே மழை இப்போது நன்றாக பிடித்துக்கொள்ள வேறு எதுவும் தெரியவில்லை.
“நீ ஓகே வா ஸ்ருதி? கூலாகிட்டியா?…” என்றான் அவள் கழுத்தோரம் முகம் பதித்தபடி.
“ஹ்ம்ம், உங்களையும் படுத்திட்டேனா?…”
“ப்ச், கேட்டா பதில் சொல்லமாட்டியா? திரும்ப கேள்வி தான் வருது….” என அவன் அதட்ட,
“ஓகே தான். ஆனா, ஹ்ம்ம்…” என இழுத்தவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன்,
“இதை திரும்ப சொல்ல வைக்காத ஸ்ருதி. நல்லா மனசில வச்சுக்கோ…”
“கிளாஸா மாஸ்டர்?…” என குறும்பாய் அவள் கேட்க,
“அடி வாங்குவ நீ. முக்கியமான விஷயம் சொல்றேன்…”
“கிளாஸ் எடுக்கும் போது தான் திரும்ப சொல்ல வைக்காதன்னு சொல்லுவீங்க…”
“இப்ப நான் உன் புருஷன். அதை சொல்லவே மாட்டியா நீ? மாஸ்டர் மாஸ்டர்ன்னு படுத்தற…”
“நீங்க மாஸ்டரானதால தான் புருஷனாகிருக்கீங்க. பழசை மறக்க கூடாது…”
“இப்ப சொல்ல வந்ததை மறந்துடுவேன் போல. ஸ்ருதி…” என பல்லை கடித்தவன் ஒரு நொடி தன்னை அமைதியாக்கிக்கொண்டு அவள் முகம் பார்த்தான்.
“என்னை ரொம்பவே டைவர்ட் பன்ற நீ ஸ்ருதி. உன்கிட்ட ஒவ்வொரு நிமிஷமும் நான் சேவ் மீ சொல்லனும் போல…” என்றான் முகமெல்லாம் காதலுடன்.
“இங்கயா? இப்பவா?…” என நமுட்டு சிரிப்புடன் ஸ்ருதி சொல்ல,
“உன்னை…” என்றவன் சில நொடிகள் அவளின் சிரிப்பை உறைய வைத்துவிட்டு விலகினான்.
“கொஞ்சம் மெல்ல மாஸ்டர். வாயிருந்தா தான் பாட முடியும். ஞாபகம் இருக்கட்டும்…” என அவள் கேலி பேச அதற்கும் தாழிட்டவன்,
“திரும்ப திரும்ப…” என சொல்லியே திரும்ப திரும்ப வாங்கிக்கொண்டாள்.
“ஹப்பா…” என அவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டவள்,
“சொல்லுங்க, பேசலை. அமைதியா கேட்கறேன்…” என்றதும் தான் பார்த்திவ் பேச ஆரம்பித்தான்.
“என்னை பார் ஸ்ருதி…” என மனைவியின் முகம் நிமிர்த்தி அவளை பார்த்தபடி,
“யாரையும் நினைச்சு, யாருக்காகவும் நம்ம நிம்மதியை இழக்க கூடாது ஸ்ருதி. நான் எப்பவும் சொல்ற மாதிரி நீ என்னோட கனவு. நாம இன்னும் பார்க்கவேண்டியது நிறைய இருக்கு. இந்த சின்ன விஷயத்துக்கு அதுவும் வொர்த்தே இல்லாததுக்கெல்லாம் மூட் அப்செட் ஆகலாமா?…” என கேட்க,
“பார்க்க வேண்டியதுன்னா? கொஞ்சம் முன்னாடி ரெசார்ட்ல பார்த்தோமே, அப்படியா?…” என வேண்டுமென்றே கேட்டவள் கண் சிமிட்ட,
“வாலு, வாலு. அது ஒன்னு தான் இல்லை உன்கிட்ட…” என அவளின் கன்னத்தை தன் கையால் அழுத்தி பிடித்தவன் குவிந்த இதழ்களில் தன்னிதழை உரச,
“கண்ணாடி…” என்றவள் கைகள் அதன் திரையை இழுத்து இருவரையும் திரையிட்டது.
முத்தமெனும் போர்க்களத்தில் முற்றுகை எனும் ஆளுமையின் இறுதியில் தேன்சிதறல்கள் மின்னலாய்.