“என்னால முடியுமா?…” என அவள் இன்னும் தயங்கி பார்த்தாள்.
அந்த தயக்கம் எல்லாம் பார்த்திவ்விற்கு ஒரு பொருட்டாகவே இல்லை. ஸ்ருதியை இன்னும் இந்த நிறுவனத்துடனும், தங்கள் குடும்பத்துடனும் ஆழமாய் பிணைக்க வேண்டுமே.
தன் மனைவிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிலும் தனக்கு இணையாக அவள் செயல்பட வேண்டும் என நினைத்தான் பார்த்திவ்.
இத்தனை வருடங்கள் அவள் இழந்த ஒவ்வொன்றையும் அவள் அதிகமாகவே பெறவேண்டும்.
அதற்கு உறுதுணையாக காலம் முழுவதும் அவளுடன் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் ஸ்திரம் பெற்றது.
“நீ என்ன நினைக்கிற ஸ்ருதி? பாட்டு பாடிட்டு, பாட்டு கத்துக்கிட்டு கல்யாணம், குடும்பம், குழந்தை இது மட்டும் போதும்ன்னு நினைக்கிறியா?…” என்ற கேள்வியில் குழந்தை என்று அவன் சொல்லியதில் முகமெல்லாம் மத்தாப்பூக்கள்.
“நமக்கு குழந்தை…” என சொல்லி ஸ்ருதி சிரித்துவிட பார்த்திவ்வும் சிரித்துவிட்டான்.
“ஆமா நமக்கு தான். குட்டியா இந்த வாலு பொண்ணு மாதிரியே இன்னொரு ஸ்ருதகீர்த்தி…” என்றதும் புன்னகையுடன் இருந்தவளின் முகம் லேசாய் மாறியது.
“ஏன் அந்த பேருக்கு என்னவாம்? எப்ப நீ என் மனசுக்குள்ள வந்தியோ அப்பவே நம்ம பொண்ணோட பேரும் ஸ்ருதகீர்த்தின்னு நான் முடிவு பண்ணிட்டேன்…” என்றவன்,
“வேணும்னா அதுக்கடுத்து பொண்ணோ பையனோ நீ எந்த பேர் செலெக்ட் பண்ணுவியோ அதை வச்சுக்கலாம்…” என்றவன் சொல்லியதை விட்டுவிட்டு,
“ரெண்டு மட்டுமா?…” என்று ஸ்ருதி கை காண்பித்து குறும்பாய்.
“ஹேய் ஸ்ருதிம்மா…” என சிரித்தவன்,
“பின்ன?…” என்றதும்,
“எனக்கு தோணுற அளவுக்குக்கு பெத்துப்பேன். நிறைய குழந்தைங்க. எல்லாருக்கும் அக்கா தங்கச்சி, அண்ணா, தம்பின்னு நிறைய. ஒன்னொன்னும் இன்னொன்னு கூட சண்டை போட்டு, மல்லுக்கு நின்னு, பஞ்சாயத்து பண்ணி, எல்லாரையும் அதட்டி, கொஞ்சி நான் அவங்களை பார்த்துக்கனும்….”
“ஹ்ம்ம், அப்பறம்…” பார்த்திவ்விற்கு அவளின் ஆசைகளில் கண்கள் மின்னியது.
“எல்லாரையும் நான் தான் ஸ்கூல்ல விடுவேன். மறக்காம ஒவ்வொரு பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கையும் அட்டன் பண்ணுவேன். நீங்களும் தான். எந்த சாக்கும் சொல்ல கூடாது. ரெண்டுபேரும் கரெக்ட்டான அம்மா, அப்பாவா இருக்கனும்…” என்றாள் விரல் நீட்டி மிரட்டலாக.
“உத்தரவு யட்சினி…” என அவன் இடைவரை குனிந்து.
“அவங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை படிக்க வைக்கனும். சும்மா இதை தான் நீ பண்ணனும்ன்னு திணிக்க கூடாது. கொஞ்சம் கண்டிப்பு, கொஞ்சம் சுதந்திரம், ஆனா அவங்க எப்பவும் நம்மோட. பிரமோத் போற மாதிரி ஹையர் ஸ்டடிஸ் எதுக்கும் நான் அனுப்பமாட்டேன்…”
“ஓகே, நெக்ஸ்ட்…”
“ஆமா முக்கியமான விஷயம் மறந்தே போச்சு. குட்டீஸ்க்கு புடிச்ச மாதிரி அவங்களுக்கு ஹெல்தியா சமைக்கனுமே? எனக்கு தெரியாதே? அதுக்குள்ள நான் கத்துக்கனும்….”
“சரி கத்துக்கோ…”
“எங்க? நீங்க இப்படி எழுந்ததும் இங்க கூட்டிட்டு வந்துட்டு அடைஞ்ச பின்னாடி வீட்டுக்கு கூட்டிட்டு போனா எப்படி? நான் எப்போ கத்துக்கவாம்?…” என ஸ்ருதி சலிக்க,
“சரிடாம்மா, அதுக்கு நேரம் ஒதுக்கலாம். வேற?…” என்றவன் முகத்தில் புன்னகை நிறைந்திருந்தாலும் அவளின் ஆசைகளில், கனவுகளில் மனது ரணப்பட்டு போனது.
“இன்னும் நிறைய இருக்கே. அவங்களுக்கு எல்லாமே நான் தான் செய்யனும். நான் தான் பார்த்துப்பேன். அதுக்கு போக தான் மிச்சநேரம். பாடறது கூட. என்னை சுத்தி அவங்க சத்தம் இருந்துட்டே இருக்கனும். என் மேல கால் போட்டு கை போட்டு அவங்க தூங்கனும். ஹ்ம்ம் அப்பறம்…” ஸ்ருதி யோசிக்க,
“போதுமா?…” என்றவன் கேள்வியில் ஸ்ருதி கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள்.
தான் எத்தனை தூரம் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறோம் என்ற ஸ்ரமனையே அப்போது தான் ஸ்ருதிக்கு வந்தது.
“எல்லாமே நடக்கனும்ன்னா முதல்ல நீ நிறைய கத்துக்கனும். நான் கிளாஸ் எடுப்பேன் தான். அது ஸ்டூடியோல. வீட்டுல நீ எனக்கு கிளாஸ் எடேன். யார் வேண்டாம்ன்னு சொன்னா?…” என அவன் கண் சிமிட்டி பேச்சை மாற்ற முயன்றான்.
“பார்த்திவ்…” என்று அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்ட ஸ்ருதிக்கு அந்த நொடி அமைதி தேவைப்பட்டது.
இத்தனை தூரம் தன் மனதில் இந்த எதிர்பார்ப்புகள் மண்டிக்கிடந்தன என நினைக்கையில் கண்ணை கரித்தது ஸ்ருதிக்கு.
இவை எல்லாம் தனக்கான ஏக்கங்கள், தான் எப்படி இருக்கவேண்டும் என்று தனக்குள் அமிழ்ந்து கிடந்த ஏக்கங்கள்.
அவை எல்லாவற்றையும் தன் பிள்ளைகளுக்கு தந்துவிடவேண்டும் என்னும் அளப்பறியா ஆசைகள்.
சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் அது கூட இல்லாமல் வளர்ந்த தன்னை எண்ணியவளுக்கு ஒருவித கோபம்.
இந்தளவிற்கு தன்னை கொண்டுவந்துவிட்டனரே என நினைத்தவள் அந்த நினைவையும் தூர ஒதுக்கினாள்.
“ப்ச், ஸ்ருதி ஸ்ட்ராங்…” என தன்னை தானே சொல்லிக்கொள்ள,
அவன் மார்பில் சாய்ந்து நின்றவள் முகம் நிமிர்த்தி பார்க்க என்னவென்று புருவம் உயர்த்தினான்.
“கொஞ்சம் இல்ல ரொம்பவே எமோஷனல் ஆகிட்டேன்ல…” என்றதும் இல்லை என மறுப்பாய் தலையசைத்தவன்,
“இப்படி உட்கார்…” என அவனின் இருக்கையில் அவளை அமர வைக்க கண்ணகற்றாமல் பார்த்தாள் ஸ்ருதி.
“இனிமே இது உன்னோட சீட் ஸ்ருதி…” என்றவன் அவள் எழுந்துவிடாமல் இருபுறமும் கையிட்டு தடுத்து லேசாய் குனிந்து நின்றான்.
“நம்மோட குழந்தைகள் உன் விருப்பப்படி, உன்னோட ஆசைகள் எல்லாத்தையும் பூர்த்தி பண்ணுவாங்க. ஸ்ருதகீர்த்தி ரொம்ப ப்ரீஷியஸ். அதான் என் பொண்ணுக்கும் அந்த பேர் வைக்கனும்ன்னு நினைக்கறேன். இதை நீ மறுத்தாலும் நான் கேட்க போறதில்லை…” என புன்னகைக்க,
“அப்போ உங்க பொண்ணை எப்படி கூப்பிடுவீங்கலாம்…” என ஸ்ருதி லேசான முறைப்புடன் கேட்க,
“நீ ஸ்ருதி, என் பொண்ணு கீர்த்தி. இல்லை என் பொண்ணையும் ஸ்ருதின்னு…” என்றவன் வாயை அடைத்தவள்,
“வேணாம், வேணாம். கீர்த்தியே இருக்கட்டும்…” என அவசரமாக சொல்ல பார்த்திவ் முகத்தில் அளவில்லா புன்னகை.
“ஓகே, நீ இங்கயே இரு. நான் வந்திடறேன். வெளில ஒரு டிஸ்கஷன் இருக்கு. போய்டு வரேன். இங்க உனக்கு சுதந்திரம் அங்கிள் உதவி பண்ணுவார்…” என பார்த்திவ் நிமிர்ந்து நிற்க,
“எனக்கு ஓகே, ஆனா இப்பவே இதெல்லாம். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன். கொஞ்ச நாள் போகட்டும்…” என்றவள்,
“ரிசப்ஷன் முடியட்டுமா?…” என கேட்க இடுப்பில் கை வைத்து முறைத்தான் பார்த்திவ்.
“என்னோட வேலைல பாதியை நீ எடுத்து என்னை நீ ப்ரீ பண்ணி விட்டா தான் டைம்க்கு வீட்டுக்கு போக முடியும், குடும்பம் பண்ண முடியும், குழந்தை பெத்துக்க முடியும். இல்லைன்னா நீயும் நானும் நீ எப்பவும் சொல்ற மாதிரி ஆர்மோனியப்பெட்டிய தூசு தட்டிட்டே இருக்க வேண்டியது தான்…”
சற்று முறைப்பு, நமுட்டு சிரிப்புடனும் பார்த்திவ் சொல்ல ஸ்ருதியின் முகத்தில் கோடி மின்னல்கள்.
“இதை நான் பார்க்கனும்ன்னு என்னலாம் ஸ்டன்ட் பன்றீங்க நீங்க. மாஸ்டர் கேடி…” என்ற சிரிக்க,
“புரிஞ்சா சரி…” என்றவன் கிளம்பும் முன்,
“பார்த்திவ்…” என்றாள் அந்த இருக்கையில் அமர்ந்தபடியே.
“இன்னும் என்னடா?…” என்றவனின் பார்வையில்,
“சும்மா சின்னதா ஒரு தடவை. கட்டிக்கோங்க ப்ளீஸ்…” என இரு கைகளையும் உயர்த்தி தன்னை நோக்கி அழைக்க குறுஞ்சிரிப்புடன் மனைவியை எழுப்பி அணைத்துக்கொண்டான் பார்த்திவ்.
“தூசு தட்டி வைக்கறேன். சீக்கிரம் வாங்க…” என்று முனுமுனுக்க,
“வாலு, உன் சேட்டை இருக்கே…” என அவளின் மூக்கை பிடித்து ஆடியவன்,
“ஸ்ருதிம்மா, ஹ்ம்ம். என்ன பன்ற என்னை?…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“இதை நான் கேட்கனும்…” என்றாள் ஸ்ருதி.
“ஓகே ரெண்டுபேரும் கேட்கலாம்…”
“அச்சோ, இவ்வளோ செல்லம் குடுக்காதீங்க. நான் தலைக்கு மேல நின்னுடுவேன்…” என அவளே சொல்ல அடக்கமாட்டாமல் சிரித்த பார்த்திவ்,
“இப்பவே அப்படித்தான் இருக்கன்னு வச்சுக்கோவேன்…” என்று சொல்ல,
“ப்ச், அழ வருது…” என்றாள் மீண்டும் உணர்வுகளின் வலையில்.
அவனின் இத்தனை நேசத்தினை அவளால் சுமக்க முடியாதென்பதை போல மூச்சு முட்டியது.
ஸ்ருதியின் கண்ணோரம் மின்னிய நீர் துளி பார்த்திவ்வின் இதழ்களில் தகிப்புடன் சாயமிட,