பிரமாண்டமான முறையில் பார்த்திவ்கிருஷ்ணா ஸ்ருதகீர்த்தி வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
ஆலிவ் க்ரீன் கலரில் அழகிய வேலைபாடுகள் நிறைந்த உடையில் ஸ்ருதியின் அழகு இன்னும் பன்மடங்காகி இருந்தது.
அதே நிறத்தில் பார்த்திவ்வின் உடையும் வசீகரித்தது. இருவருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அவர்களின் உடைகள்.
பார்த்திவ்வின் பக்கம் சொந்தங்கள் எல்லாம் சபை நிறைத்திருந்தனர். கூடவே அறிவழகனின் நண்பர்கள், மஞ்சுளா, பிரமோத் இவர்களின் நெருங்கியவர்களும் வந்திருந்தனர்.
அத்தனைபேரும் வந்திருக்க ஸ்ருதியின் பக்கம் சுபஷ்வினி குடும்பத்தார், சுதந்திரம், சுபாஷ் என்று சேர்ந்திருந்தனர்.
இதில் ஸ்ருதி முன்பு பாடிக்கொண்டிருந்த ட்ரூப்பில் இருந்த நண்பர்களையும் அவள் அழைத்திருந்தாள்.
“இது ஏன் மோளே? வேண்டாம்டா…” என சுபஷ்வினி கூட வேண்டாம் என்றிருக்க,
“தப்புன்னு தோணுது அஷ். நரேஷ் தவிர்த்து அங்க எனக்கு பெருசா யார் மேலையும் வருத்தம் இல்லை. சுகந்தன் மேல கூட நரேஷ்க்கு சப்போர்ட் பண்ணிட்டானேன்னு கோவம். மத்தபடி இதுக்கு கூப்பிடாம இருந்தா நல்லா இருக்குமா சொல்லு?…” என்றாள்.
“கல்யாணத்துக்கு தான் கூப்பிட முடியலை. ரிசப்ஷனுக்கு வரட்டும். இது நான் எனக்காக தான் யோசிச்சேன். பார் வேற இடத்துக்கு போகவும் நம்மளை பார்க்கலைன்னு அவங்க நினைச்சாலும் நினைக்கலாம். ஆனா அதை பத்தி எனக்கு கவலை இல்லை…”
“என்னோட லைப்ல வேலைன்றது வேற. ஆனா கல்யாணம் அது சமபந்தமான நிகழ்ச்சி வேற. இதுக்கு அவங்களை கூப்பிடாம இருக்க முடியலை அஷ். தப்புன்னு நினைக்கிறியா நீ?…” என ஸ்ருதி கேட்கவும்,
“சமத்துடா நீ. இவ்வளோ நாள் அவங்களோட பெருசா எந்த தொடர்பும் இல்லாம இருந்துட்டு இதுக்கு சொல்லும் போது என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சேன்…” சுபஷ்வினி கூறவும் புன்னகைத்தாள்.
“அந்த ட்ரூப்ல இருந்து சுகந்தன் தவிர வேற யாரும் என்னை பெருசா கான்டெக்ட் பண்ணலை. நானும் அப்படியே இருந்துட்டேன். ஆனா இப்ப கூப்பிடனும்னு தோணுது. வரதும் வராததும் அவங்க விருப்பம்…” என்ற ஸ்ருதி,
“என்ன சொல்றீங்க மாஸ்டர்?…” என்றாள் சிரிப்புடன் பார்த்திவ்வின் முன் நின்று.
“அதான் மேடம் முடிவு பண்ணிட்டீங்களே? அப்பறம் என்ன? இன்விடேஷன் நேர்லையா? இல்ல அனுப்பறதா?…” என கேட்க,
“வீக்லி ஒன்ஸ் எல்லாரும் ஒரு மீட்டப் பண்ணுவாங்க. அன்னைக்கு சுகந்தன்கிட்ட சொல்லிட்டு நானும் அஷும் மட்டும் போய்ட்டு வந்திடறோம்…” என்றவள் சொல்லியதை போலவே நேரில் சென்று அழைக்க அத்தனைபேருக்கும் மகிழ்ச்சி.
“நீ அப்படியே எங்களை மறந்துட்டியோன்னு நினைச்சிட்டோம் ஸ்ருதி…” என சிலரும்,
“எங்களால நம்பவே முடியலை. பெரிய இடத்துக்கு போகவும் நீ மாறிட்டன்னு நினைச்சோம்…” என சிலரும்,
“பழசை மனசுல வச்சுக்காம நீ வந்ததே போதும் ஸ்ருதி. ரொம்ப சந்தோஷம். நாங்க எல்லாரும் கண்டிப்பா வருவோம்…” என சுகந்தனும் சொல்லியிருந்தான்.
“அவனுக்கு நல்லா வேணும்…” என அங்கே நரேஷின் பேச்சை ஒருவர் துவங்கவுமே சுபஷ்வினியும், சுகந்தனும் சத்தமிட்டு தடுத்துவிட்டனர்.
சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பியிருந்தாள் ஸ்ருதி. இப்போது அனைவருமே அங்கே வந்திருந்தார்கள்.
பாதுகாப்புகள் பலமாகவே ஏற்பாடாகி இருந்தது. பெரிய பிரபலங்களை சந்திக்க முடியாதவண்ணம் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் தாங்களும் இருப்பதை நினைத்து சந்தோஷத்துடன் மேடைக்கு சென்றனர்.
அனைவரையும் ஸ்ருதி பார்த்திவ்விற்கு அறிமுகம் செய்து வைத்தாள். இன்முகத்துடன் அவனும் பேசி அனுப்பினான்.
சுபஷ்வினி தான் அனைவரையும் அழைத்து இருக்கவைத்து உணவுண்ண அழைத்து சென்றாள்.
மேடைக்கு ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்க சாரங்கபாணியின் மனைவி சிவசங்கரி மட்டும் அவரின் மேனேஜருடன் அங்கே வந்து நின்றார்.
பார்த்திவ் முகம் மாறாமல் தலையசைப்புடன் புன்னகைக்க ஸ்ருதிக்கு அவர் யார் என தெரிந்ததும் அமைதி.
வரவேற்பாக சிரிக்கவும் தோன்றவில்லை அவளுக்கு. பார்த்தபடியே இருக்க சிவசங்கரி அதை எல்லாம் பெரிதுபடுத்தவில்லை.
“கங்க்ராட்ஸ் பார்த்திவ் அன்ட் ஸ்ருதி…” என மேனேஜரிடம் இருந்து பொக்கேவை வாங்கி அவர்களுக்கு நீட்டியவர் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
வரவேண்டுமே என்ற சபை மரியாதைக்காக மட்டுமே அவர் வந்தது. ஸ்ருதியிடம் வாழ்த்தியதோடு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சுதந்திரத்தின் மூலம் தான் அவரை அழைத்திருந்தான் பார்த்திவ். அதுவும் ஒரே துறையில் இருக்கும் காரணத்தினாலும், அவர் மீதிருந்த நன்றியினாலும் மட்டுமே.
“ஸார்க்கு இன்னொரு முக்கியமான வேலை. அதான் நான் மட்டும் வந்தேன்…” என அவர்கள் கேளாமலே சிவசங்கரி சொல்ல,
“இட்ஸ் ஓகே…” என்றான் பார்த்திவ்.
“ம்மா…” என மஞ்சுளாவை பார்க்க,
“நான் பார்த்துக்கறேன் ப்பா…” என்றவர் அவரை அழைத்து சென்றார் பேசியபடி.
“எப்படி இவ்வளோ சகஜமா இருக்க முடியுது இவங்களால?…” ஸ்ருதி கேட்டேவிட்டாள் பார்த்திவ்விடம்.
“அதுதான் அரிதார உலகம். உள்ள ஆயிரம் இருக்கும். ஆனா வெளில காமிக்காம இருக்க என்ன வேணா செய்வாங்க. இது அவங்களுக்கான மரியாதைக்கு மட்டுமில்லை, நான் மீடியால குடுத்த ஸ்டேட்மென்ட் ஒண்ணுமில்லை, நாங்க நார்மலா தான் இருக்கோம்ன்னு காமிக்கவும் தான்…”
அவன் இலகுவாய் சொல்லிவிட்டாலும் ஸ்ருதியால் அதனை ஏற்க முடியவில்லை.
சிவசங்கரியை திரும்பி பார்க்க மஞ்சுளாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியிருந்தார் அவர்.
“ஸ்ருதி என்ன யோசனை? கெஸ்ட் வராங்க பார்…” என அவளை திசை திருப்பினான் பார்த்திவ்.
வந்தவர்கள் அத்தனைபேரும் ஸ்ருதியின் பாடலை பற்றியும், அவள் விருது வாங்கியதை பற்றியும் வாழ்த்திவிட்டும் சென்றனர்.
“அச்சோ, கொஞ்சம் வெக்கமாவும் இருக்கு…” என்றாள் ஸ்ருதி.
“வாலு இது நம்ம ரிசப்ஷன். ஃபேன் மோட்ல இருக்க நீ…” என சிரித்தான்.
“அதனால என்ன? கல்யாணப்பொண்ணுன்னா ஃபேன் மோட்ல இருக்க கூடாதா? முதல்ல நான் ஒரு பெரிய ரசிகை. அதுக்கப்பறம் தான் மத்தது எல்லாம்…” என்றதும்,
“பார்ரா, ஆனா உனக்கு மட்டும் நான் க்ரஷ் இல்லை. அதானே?…” லேசாய் முறைப்புடன் கேட்டான் பார்த்திவ்.
“சொல்லமாட்டேன்…” என கண் சிமிட்டி அவள் சிரிக்க ஒவ்வொரு நிகழ்வும் அழகாய் நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
இந்த நிகழ்வுகளில் புகைப்படங்களை எடுத்தவர்கள் தங்களின் தனிப்பட்ட பக்கத்தில் ஸ்ருதியின் பூர்வீகம், அவளின் பெற்றோர், அவர்களின் பிரிவு, அவள் வாழ்க்கை, அவள் படிப்பு என்று விவாதத்தையும் இனிதே துவங்கி வைத்தனர்.
பார்த்திவ் அவளிடம் தன் மனதை தெரிவித்த அன்றிலிருந்து நிகழ்பவையாக இருந்தாலும் இப்போது இந்த விவாதம் இன்னும் பெரிதாகி இருந்தது.
வரவேற்பிற்கு ஸ்ருதியின் பெற்றோர் வராததும், அவர்களின் தனிப்பட்ட குடும்பம், பின்புலம் என்றும் அலசி ஆராய்ந்து பதிவேற்றிக்கொண்டிருந்தனர்.
“அடுத்த ஹாட் நியூஸ் கிடைக்கிற வரை இவனுங்க வாய்க்கு அவல் இதுதான்…” என சுபஷ்வினி சலித்துக்கொண்டாள்.
“எப்படியும் உங்கப்பா இன்னைக்கு உனக்கு கூப்பிடுவார் பாரு…” என்றும் ஸ்ருதியிடம் சொல்ல,
“ம்ஹூம், பார்த்திவ் இருக்கும் போது கூப்பிடமாட்டார். அம்மா கூப்பிடவே மாட்டாங்க. இந்த விஷயத்தை அவங்களோட குடும்பம் ரொம்ப பெரிய பிரச்சனையாக்கி இருப்பாங்க. சமாளிக்கட்டும். ஒரு விஷயம் செய்யும் போது அதோட எதிர்வினையையும் அவங்க ஏத்துக்கனும்…” என்றாள் ஸ்ருதி.
“ஓகே விடு. நானும் இந்நேரம் இதை சொல்லி உன்னை மூட் அப்செட் பண்ணிட்டேன்…”
“நோ அஷ், நான் அப்செட் ஆகவே இல்லை…” என கண் சிமிட்டி புன்னகைத்த ஸ்ருதி,
“எங்க சுகந்? எல்லாரும் சாப்பிட்டாச்சா?…” என கேட்டாள்.
“ஹ்ம்ம், சாப்பிட்டு கிளம்பனும்ன்னு சொன்னாங்க. எல்லாரையும் பார்க்கவும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போவாங்களாம். என்னை உன்கிட்ட போக சொல்லிட்டாங்க…” என்று சொல்ல தூரத்தில் அவர்கள் அனைவரும் அமர்ந்து இதனை பார்ப்பதை ஸ்ருதியுமே கவனித்தாள்.
“எல்லாருக்கும் ரொம்பவே சந்தோஷம் மோளே. உன்னால நிறையபேரை நேர்ல பார்க்க முடிஞ்சதுன்னு சுகந் சொன்னான். ஒரு சிலர் கிட்ட இன்ட்ரோ பண்ணிக்கிட்டாங்க போல…” என சுபஷ்வினி சொல்லிவிட்டு,
“மை காட் மோளே…” என அவளின் கையை பிடித்தாள்.
“ஸ்ஸ் அஷ்…” என்றவள் திரும்பி பார்ப்பதற்குள்,
“ஸ்ருதி…” என்ற பார்த்திவ்வின் பக்கம் திரும்பிவிட்டாள்.
அங்கே தயாரிப்பாளரும் அவரின் மனைவியும் வந்திருந்தனர். அவரை பார்த்ததும் ஸ்ருதி ஒருநொடி திகைத்து பின் முகம் தெளிந்தாள்.
“எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?…” என தயாரிப்பாளரின் மனைவி கேட்க,
“நல்லாயிருக்கேன்…” என்ற ஸ்ருதி பார்த்திவை பார்க்க,