“ஏன் ஸ்ருதி பேசாம அஷ்வினியை அந்த ரூமை வெக்கேட் பண்ணிட்டு இங்க வர சொல்லேன். வீட்டுல இருக்க சங்கடமா இருந்தா கெஸ்ட் ஹவுஸ்ல கூட இருக்கட்டும். ரூம்க்கு குடுத்த அமௌன்ட்டை குடுத்தா போதும். நீ பேசேன்…” என்றார் மஞ்சுளா.
முதல்நாள் இரவு சுபஷ்வினி தங்களுடன் வருவதாய் சொல்லவும் ஸ்ருதி முகத்தில் ஒளிர்ந்த சந்தோஷத்தில் இரவே அறிவழகனிடம் கூட பேசிவிட்டார் மஞ்சுளா.
“அப்பா கூட சரின்னு சொல்லிட்டார் தெரியுமா? பார்த்திவ் கண்டிப்பா ஓகே தான் சொல்லுவான்…” என சொல்ல அவரை இறுக்கமாய் அணைத்தவள் மஞ்சுளாவை அப்படியே தூக்கி சுற்றிவிட்டாள்.
“இப்படியா பட்டுன்னு தூக்கி சுத்துவ நீ? நான் கூட கட்டி புடிக்கிறன்னு நினைச்சுட்டேன்…” என அவள் இறக்கிவிட்டதும் நெஞ்சில் கைவைத்தபடி மஞ்சுளா சொல்ல அப்படி ஒரு சிரிப்பு ஸ்ருதிக்கு.
“சந்தோஷத்துல தூக்கிட்டேன்…” என கண் சிமிட்டியவள்,
“ஆனா அஷ் இருக்கமாட்டாளேம்மா. யார் சொன்னாலும் கேட்க மாட்டா…” எனும் பொழுதே அதில் வருத்தத்தை விட தோழியை புரிந்து வைத்திருக்கும் பெருமிதம் தான் அதிகமிருந்தது.
“நீ சொன்னாலுமா?…” என மஞ்சுளா கேட்க,
“நான் சொன்னாலும் தான். ஆனா நானுமே சொல்லமாட்டேன். அஷ் மாட்டேன்னு சொல்ற ஒரு விஷயத்தை சொல்லி அவளை நான் சங்கடப்படுத்த மாட்டேன் ம்மா…” என்றவள்,
“காபி எடுத்துட்டு வரேன். இன்னும் அவ என்ன பன்றாளோ? ஒருவேளை நல்லா தூங்கினா?…” என்றபடி சுபஷ்வினி இருக்கும் அறை பக்கம் செல்ல போய்,
“ம்ஹூம், கதவு திறக்கற சத்தத்துல கூட முழிச்சுக்கலாம். இவ்வளோ நேரம் வேற எங்கயும் தூங்கறவ இல்ல. அவளே வரட்டும்…” என்று சொல்லி காபி எடுக்க சென்றாள் ஸ்ருதி.
“விளையாட்டு பொண்ணு. ஆனா ரொம்ப பொறுப்பான பொண்ணும். காபி ஒருநாள் போட சொல்லி தந்தேன். இப்ப வரை அவளுக்கு அவளே கலந்துக்கறா. காபி பர்பெக்ட்டா வரவும் அடுத்ததை கத்துப்பாளாம்…” என சிரித்த மஞ்சுளா,
“நீ சொல்லேன் பார்த்திவ். இவ்வளோ பெரிய வீட்டுல அஷ்வினிக்கா இடமிருக்காது? அவ இருந்தா இன்னும் நம்ம வீடு கலகலப்பா இருக்கும். ரெண்டுபேருமே சந்தோஷமா இருப்பாங்க…” என்றார் மஞ்சுளா மகனிடம்.
“இப்படி வந்து உட்காருங்கம்மா…” என தனக்கெதிர் சோபாவில் அமர்த்தியவன்,
“சுபஷ்வினி ஒரு ட்ரூப்ல பாடிட்டிருந்தாங்க. தெரியுமா?…” என்றான்.
“ஆமா, தெரியுமே. நீ கூட சொன்னியே. ஆனா இப்ப அங்க பாடறதில்லைன்னு…”
“ஹ்ம்ம், அவங்க ஓரளவு பாடுவாங்க. ஓகே தான். ஆனா இப்ப வரை ஸ்ருதி சுபஷ்வினிக்கு ஒரு சான்ஸ் குடுங்கன்னு முன்னாடியும் சரி, இப்பவும் சரி கேட்டதே இல்லை…” என்றான் மென்புன்னகை சிந்த.
“ஏன்? நீ தரமாட்டேன்னு நினைச்சிட்டாளோ? இல்லை கேட்க சங்கடமா?…” மஞ்சுளா விழிக்க,
“ம்ஹூம். ஸ்ருதி ரெக்கமென்ட் பண்ணினா அது அஷ்வினி மரியாதையை குறைக்கும்ன்னு ஒரு எண்ணம். அதுமட்டுமில்லை. வாய்ப்பு தரனும்ன்னா தானா தரனும். நான் ஏற்கனவே சுபஷ்வினி வாய்ஸ் கேட்டிருந்தாலும் இன்னும் ஸ்க்ரீன்ல பாட வைக்க எதுவும் பேசினதில்லை…” என்றவன்,
“அதனால ஸ்ருதியும் எதுவும் கேட்கலை. இப்படி இருக்கும் போது அஷ்வினியை தங்க சொல்லுவாளா? யோசிங்க…” என்றான்.
“சரி அவ சொல்லவேண்டாம். நான் சொல்றேன்…” என்று மஞ்சுளா சொல்ல,
“இந்நேரம் குடிக்கமாட்டாங்களே. அவங்க காபி டைம் எனக்கு தெரியுமே…” என்றவள் தான் போட்டதை மெல்ல பருக மஞ்சுளா அவளை பார்த்து புன்னகைத்தார்.
“எப்படி இருக்கு?…” என மருமகளிடம் கேட்க,
“போன வாரத்துக்கு இந்த வாரம் ஓகே. அடுத்த வாரம் குடிக்கிற மாதிரி இருக்கும் போல…” என்றவள் குடித்து முடிக்க,
“நான் போட்டு தரேன்னா வேண்டாம்ன்னு சொல்றா. குக் போடுவாங்கன்னா அதுவும் வேண்டாமாம். கத்துக்கனும்ன்னு பிடிவாதம்….” என ஸ்ருதியின் தலையை ஆதுரமாய் கலைக்க பார்த்திவ் முறைத்தான் ஸ்ருதியை.
“இதுக்கு மட்டும் கத்துக்க எவ்வளோ ஆர்வம் உனக்கு? இன்னைக்கு ஸ்டூடியோவுக்கு வா பேசிக்கறேன்…” என அவன் வாத்தி அவதாரம் எடுக்க,
“இன்னைக்கு நான் லீவ்….” என்றாள் ஸ்ருதி.
“யாரை கேட்டு லீவ்? இங்க என்ன வேலை உனக்கு?…” என்றான் உக்கிரமாக.
“நான் பிராப்பரா உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, மெயில் கூட பண்ணியிருக்கேன். லீவ் லீவ் தான்…” என்றதும் பல்லை கடித்த பார்த்திவ் தனது போனை எடுத்து பார்க்க சட்டென சிரிப்பு பீறிட்டது.
“ரெஸ்பெக்ட்டட் மாஸ்டர், கைண்ட்லி கிராண்டடா?…” என வாசித்து அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன் அதன் காரணத்தில் இன்னும் சிரித்தான்.
“பிரமோத் உன் ஸ்டூடண்ட்டா? எப்பருந்து?…” என்றவன்,
“பிரமோத்…” என சத்தமிட வெளியில் இருந்து உள்ளே வந்தான் பிரமோத்.
“என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?…” என்றபடி வந்தவன்,
“ஹாய் படி, குட்மார்னிங்…” என ஸ்ருதிக்கு வணக்கம் சொல்ல,
“இப்படியா ஒரு மாஸ்டரை பார்த்து சொல்றது பிரமோத்?…” என ஸ்ருதி கண்டிப்புடன் கேட்க,
“மறந்துட்டேன்…” என்றவன் கையிலிருந்த பேட்மிட்டனை கீழே வைத்துவிட்டு,
“நமக்கம்…” என்று கையெடுத்து கும்பிட மஞ்சுளா கன்னத்தில் கை வைத்து சிரிப்போடு பார்த்தார்.
“என்னம்மா இது?…” பார்த்திவ் கேட்க,
“என்னை கேட்டா? உன் தம்பி வந்ததுல இருந்து க்ளாஸ்ன்னு இதுதான் நடக்குது….” என்றவர் முடிக்கும் முன்,
“எங்க எங்க தல? ஆள காணும்? இன்னுமா எழுந்துக்கல?…” என சுபஷ்வினியை தேட,
“அடங்குடா. இங்க வந்து உட்கார்….” என தம்பியின் கையை பிடித்து இழுத்த பார்த்திவ்,
“ஈவ்னிங் ப்ளைட். நீ என்னன்னா விளையாடிட்டு இருக்க…” என்றான்.
“அதுக்கு இப்பவே ஏர்போர்ட் போய் ப்ளைட்டை கழுவி துடைச்சு தூசு தட்டவா முடியும்?…” என்ற ஸ்ருதியின் கிண்டலில் பார்த்திவ் மனைவியிடம் முறைப்பை காண்பிக்க அதில் சுதாரித்தவள்,
“நானே உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன் ஸ்டூடண்ட்…” என பார்த்திவ்வை கண்டுகொள்ளாதவாறு ஸ்ருதி எழுந்துவிட்டாள்.
“இதுக்கு நான் போய் ப்ளைட்டை தூசு தட்டி கழுவி துடைச்சிட்டு அப்படியே ஏறி அதுல உக்கார்ந்துக்கறேன்…” என்றான் பிரமோத் பாவம் போல.
“டேய்…” என பார்த்திவ் பக்கென்று சிரித்துவிட ஸ்ருதி இடுப்பில் கை வைத்து நின்றாள்.
“ஓகே, உன் அண்ணி டென்ஷனாகிட்டா. நீ காபியை குடிச்சிட்டே கிளம்புவியாம்…” என்ற பார்த்திவ்,
“நீ போடாம்மா…” என ஸ்ருதியிடம் சொல்ல,
“அது…” என சென்றவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“அண்ணா நீங்க குடிக்க வேண்டியது தானே? வொய் மீ….” என்று கேட்க,
“விடுடா, நீ கிளம்பறயேன்னு ஸ்ருதி ஒரே புலம்பல். போய்ட்டு எப்போ வருவ, இடையில வர முடியுமான்னு கேட்டுட்டே இருக்கா. நீ போய்ட்டா போரடிக்குமாம்…” என பார்த்திவ் சொல்ல,
“குடும்பமா இருக்க எவ்வளோ சந்தோஷம் ஸ்ருதி முகத்துல…” என்றார் மஞ்சுளா.
பிரமோத்திற்கும் தெரிந்தது தானே? ஸ்ருதி இங்கே வந்ததில் இருந்து ஸ்டூடியோ நேரம், உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்கள் எல்லாம் தங்களுடன் மட்டுமே என.
“இந்த பொண்ணை விலக்கி வைக்க நினைக்கிற மனசு எல்லாம் என்ன சொல்ல?…” மஞ்சுளா சொல்ல,
“மனசுன்னு எல்லாம் சொல்லாதீங்கம்மா. அது இல்லைன்றதால தான விலக்கியே வச்சிருக்காங்க. இதுவே அவங்களுக்கு திரும்பும்…” என்றான் பிரமோத்.
“ஷ்ஷ் பிரமோத், ஸ்ருதி வரா…” என்றவன் போனில் அவள் அனுப்பிய விடுமுறை விண்ணப்பத்தை காண்பிக்க பிரமோத் அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.
“விடியற்காலை மூன்றரை மணிக்கு தூக்கத்துல அனுப்பிருப்பாங்க போல? எவ்வளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்?…” என்று சொல்லி சிரிக்க,
“தூக்கத்துல யார் அனுப்பினாலும் மிஸ்டேக் வரத்தான் செய்யும். எங்க உன் அண்ணனை அந்த நேரம் அனுப்ப சொல்லு பார்ப்போம்? ரொம்ப இல்லை ஹாய் ஸ்ருதின்னு மட்டும்…” என்று வந்தாள்.
“நான் ஏன் அனுப்ப போறேன்?…” என்ற பார்த்திவ் தனது போனை எடுத்து,
“ஹாய் ஸ்ருதி…” என வாய்ஸ் அனுப்ப,
“சூப்பர் அண்ணா…” என்றான் பிரமோத்.
“அப்படியா? இந்தா காபி. குடிச்சிட்டு சந்தோஷமா சூப்பர்ன்னு சொல்லுவியாம்…” என மிரட்டலுடன் ஸ்ருதி அவனுக்கு நீட்ட,
“இதை தான் பர்பெக்ட் சென்டாஃப்ன்னு சொல்லுவாங்க போல?…” என கப்பை எடுத்த பிரமோத் கண்ணை மூடியபடி,
“ஓம் சாந்தி, நாக்குல படாம ஊத்திடறேன்…” என்றான்.
“அவ்வளோ பயமெல்லாம் வேண்டாம். நான் போடலை. குக் ஆன்ட்டி தான் போட்டு குடுத்தாங்க. ரொம்பத்தான்…” என்றவள் சொல்லவும்,
“உங்களுக்குப்பா? அண்ணி தான் போட்டு குடுத்தாங்க. நல்லா இருக்கு…” பிரமோத் மாட்டிவிட பார்த்திவ் இதழ்களுக்குள் புன்னகைத்தபடி என்ன சொல்ல போகிறார் என பார்த்தான்.
“நான் அடிக்கடி காபி டீ குடிக்கறதையே விட்டாச்சு பிரமோத். வரும்போது பிரண்ட்ஸ் கூட பில்டர் காபி குடிச்சிட்டு தான் வந்தேன்…” என்றார் அறிவழகன் உடனே.
“பார்த்தியா ஆள் எஸ்கேப் ஆகறதை?…” என மஞ்சுளா ஸ்ருதியிடம் கேட்க,
“ஏன் உங்க மருமகளுக்காக குடிச்சா என்னவாம்?…” என்ற பிரமோத்,
“நீங்க கொண்டுவாங்க அண்ணி. அரை கப் போதும்லப்பா…” என ஸ்ருதியிடம் கேட்டு அறிவழகனிடம் முடிக்க,