“வேண்டாம் ஸ்டமக் ஃபுல்லா இருந்தா வாய்ஸ்ல டைனமிக் மிஸ்மேட்ச் ஆகிடும். அந்த டெப்த் போக சிரமம். ப்ரீத்திங் கன்ட்ரோல் வரத்து கஷ்டம்…” என்று சொல்ல,
“எதுவும் வேண்டாம். கொஞ்சம் ஹாட் வாட்டர் மட்டும்…” என்றாள் ஸ்ருதி.
“இங்க வா, ஏன் டல்லாகிட்ட? ரொம்ப படுத்தறேனா?…” என கேட்டு அவள் நெற்றி, கழுத்து, கன்னம் என தொட்டு பார்த்தான்.
“ஒன்னும் இல்லையே?…” என்று சொல்ல,
“ஒன்னுமே இல்லை தான். வாங்க போகலாம்…” என ஸ்ருதி முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.
“பாட வாய்ஸ் மட்டும் போதும் யட்சினி…” பார்த்திவ் சிரிக்க,
“ஹப்பா சிரிக்கறீங்க நீங்க? எனக்கு என் முகமும் முக்கியம். நான் கண்ணாடி பார்க்க தான் செய்வேன்…” என்று சொல்ல,
“சரி பார்த்துட்டே வா. நான் போறேன்…” என முன்னே சென்றுவிட்டான்.
ஸ்ருதியும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மேல் தளத்திற்கு செல்ல அத்தனைபேரும் அவளுக்காகவே காத்திருந்தனர்.
அனைவரும் அவளுக்கு ஹலோ சொல்ல பார்த்திவ் காதில் மாட்டியிருந்த ஹெட்போனுடன் ஸ்ருதியை நேராக கண்ணாடி அறைக்கு செல்லுமாறு அனுப்பினான்.
“ஸ்ருதி ரெடி?…” என அவள் அங்கே சென்று நின்றதும் பாட்டின் இசை உயிர்ப்பிக்கப்பட்டது.
தனது ஒரு கரத்தை மேல் நோக்கி காண்பித்து ஒன்று இரண்டு மூன்று என அசைத்தவன் மொத்த விரல்களையும் காண்பித்து ஆரம்பிக்கும் சமிஞ்சையை செய்ய ஸ்ருதியின் குரல் பதிவாக ஆரம்பித்தது.
மொத்த இசையின் உயிர்ப்பையும் அவளின் குரல்வழி கடத்த சிற்சில இடங்கள் லேசாய் பிசிறடித்தது.
“ஸ்டாப்இட் ஸ்ருதி…” என சட்டென மைக்கில் கத்தியவன் சத்தத்தில் அத்தனைபேரும் மிரண்டு பின்வாங்கினார்கள்.
ஸ்ருதியும் முயன்றளவு அவளால் முடிந்ததை பாட அந்த மூச்சின் சப்தம் அதில் இடையிட்டது.
அவளால் மூச்சை கட்டுப்படுத்தி பாட முடியவில்லை. இடையிட்ட மூச்சுக்காற்றில் பாடலில் சுதி மாற,
“டேக் ஒன்…” என்றவன் அவளை வரும்படி தலையசைத்தான்.
ஸ்ருதி அமைதியாக வந்தமரவும் மற்றவர்கள் திரும்பிக்கொள்ள பார்த்திவ் அவளருகே அமர்ந்து,
“என்ன பிரச்சனை உனக்கு? ஏன் ப்ரீத்திங் கன்ட்ரோலுக்கு வரலை?…” என்று கேட்க,
“இல்ல, எனக்கு இன்னைக்கு முடியலை. நிஜமாவே முடியலை….” என்றாள் ஸ்ருதி.
“லிசன் ஸ்ருதி, மத்த எல்லாம் பெர்பெக்ட். இந்த ஒன்னே ஒன்னு தான். கமான். யூ கேன் டூ இட்…” என்று பொறுமையாக எடுத்து சொல்ல,
“ஸ்ருதி…” என்று அந்த அவள் அதிரும்படி இரைந்து எழுந்துவிட்டவன் மனைவியின் ஈர விழிகளில் மீண்டும் அமைதியாகி அமர்ந்தான்.
பல்லை கடித்தபடி பார்த்த ஸ்ருதிக்கு அத்தனை கோபம். தான் சொல்ல வருவது புரியாமல் அத்தனை பிடிவாதமாக இருக்கிறானே என்று பார்த்தவளுக்கு மனமும் சோர்ந்தது.
“கத்திட்டா எல்லாம் ஆச்சா? பதிலுக்கு நானும் பேசிட்டு கிளம்பி போய்ட்டே இருப்பேன்…” என பல்லை கடித்து சொல்ல,
“ஓஹ்…” என்றுமட்டும் சொல்லியவன் இருக்கையில் பின்னால் சாய்ந்து தாடையை தடவியபடி ஆழ்ந்த பார்வை பார்க்க,
“இனிமே உங்க ம்யூஸிக்ல நான் பாடவே மாட்டேன். பாருங்க. இது தான் லாஸ்ட்…” என்று சொல்லியவள் வேகமாய் எழுந்து கண்ணாடி அறைக்குள் வந்து நின்றாள்.
“ஸார் நாம வேணும்னா பார்ட்ஸ் பிரிச்சு எடுத்துப்போமே?…” என்று அவனின் உதவியாளர் சொல்ல அவனை பார்த்திவ் முறைத்த முறைப்பில் அடங்கி போனான்.
“ஸ்ருதி பாடுவாங்க…” என்று மட்டும் சொல்லி அவளை பார்த்தவன் பார்வையை ஸ்ருதி சந்திக்கவே இல்லை.
பாடலில் தான் கவனமானாள். பாடி முடிக்கும் வரை சரியா தவறா என்ற கேள்விகளும் இல்லை.
ஒருவித வைராக்கியத்துடன் இழுத்து பிடித்து பாடியும் முடிக்க அத்தனைபேரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
“இந்த சிம்மேந்திரமத்யமம் ராகத்தை சிங்கத்தின் தலைவன்னும், அதன் கம்பீரத்தை பறைசாட்டுறதுன்னும் சொல்லுவாங்க. கொஞ்சம் அசாத்திய திறமை வேணும். அப்படிப்பட்டதை அழகா பாடிட்டீங்க ஸ்ருதி…” என்ற வாழ்த்தில் புன்னகை சிந்தியவள் அந்த அறையை விட்டு விருட்டென வெளியேறிவிட்டாள்.
அவளுடன் செல்ல முடியாமல் பார்த்திவ் அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.
ஒருமணி நேரம் கடந்து தான் அவனின் அறைக்கு வந்து சேர்ந்தான் பார்த்திவ். வந்ததும் பார்த்தவன் பதறிவிட்டான்.
பார்த்திவ் வரும் பொழுது உண்டவற்றை எல்லாம் வெளியேற்றி தள்ளாடியபடி நடந்து வந்தாள் ஸ்ருதி.
“டேய் ஸ்ருதிம்மா என்னாச்சு?…” என்று வந்து பிடித்தவனை பிடித்து தள்ளிவிட்டாள்.
“போயா போ…” என அவனின் கையை உதறி சென்று இருக்கையில் கால்களை மடித்து அமர்ந்துவிட்டாள்.
“அதான் பாடியாச்சுல. நான் சொன்னது தான். இனிமே உங்க ம்யூஸிக்ல பாடவே மாட்டேன். படவே இல்லைன்னாலும் பரவாயில்லை…” என்று வேகமாய் சொல்ல வேறு யாரும் வர கூடும் என கதவை தாழிட்டு வந்தான் பார்த்திவ்.
“இப்ப என்னாகிருச்சுன்னு இவ்வளோ கோவப்படற ஸ்ருதி? இப்பவும் நான் சொன்னது தான் நடந்திருக்கு. உன்னால முடிஞ்சது தானே? அப்பறம் ஏன் என்னை டென்ஷன் பண்ணின நீ?…” என்று அவனும் எகிற உதடு துடிக்க பார்த்தாள் ஸ்ருதி.
ஸ்ருதியின் கண்கள் குளம் கட்டிவிட்டது பார்த்திவ்வின் கோபம் கண்டு. இதழ்களை கடித்து அமைதியை இழுத்து பிடித்தாள்.
“ஓகே ஓகே. விடு, ரெண்டுபேரும் தப்பு பண்ணிட்டோம்…”
“நான் பண்ணலை. நீ தான், நீ தான்…” என்று சொல்லியவளின் இந்த கோபம் புதிது.
“என்ன ஸ்ருதி?…” என்றான் புரியாமல்.
“என்ன ஸ்ருதின்னா? எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. தெரியலை. அது கூட புரியலையா?…” என்றவள் முகத்தில் அவ்வளவு எரிச்சல்.
“டேட்டா ஸ்ருதி?…” என்ற கேள்வியில் இல்லை என தலையசைத்தவள் பார்வை பார்த்திவ்விடம் யோசனையாக நிலைத்தது.
“ஓகே, என்னவோ மூட் ஸ்விங். சரியாகிடும். நானும் கொஞ்சம் என்னை கண்ட்ரோல் பண்ணிக்கறேன்…” என்று கேட்டும் அவள் பார்த்தபடியே இருக்க,
“வா…” என அவளை தன் மடிக்கு மாற்றியவன் அவளின் கன்னங்களில் இதழ் பதிக்க ஸ்ருதியின் கண்ணில் இருந்து நீர் திரண்டது.
“ஸாரி ஸாரி ஸாரி. அழ மட்டும் செய்யாதம்மா. ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த பாட்டு சாதனையா இருக்கும். அதான் உன்னை ரொம்பவே படுத்தி எடுத்துட்டேன். ஸாரி டா…” என்று சொல்ல,
“பார்த்திவ்…” என்றாள் கீழ் உதடு நடுங்க.
ஸ்ருதியின் கண்கள் அலைபாய்ந்தது. அப்படி இல்லாவிட்டால்? நினைக்கவே முடியவில்லை.
மனதிற்குள் சந்தோஷமும், சஞ்சலமும் ஒருங்கே எழுந்து கழுத்தை பிடித்தது ஸ்ருதிக்கு.
“பயமா இருக்கு பார்த்திவ்…” என்றவள் அவன் கழுத்தை கட்டிக்கொள்ள,
“ஸ்ருதிம்மா, என்னன்னு சொல்லு. என்ன பயம்?…” என பார்த்திவ்வும் இப்போது பதறினான்.
தன்னுடைய நெருக்கடியால் தான் இந்தளவிற்கு கஷ்டப்படுகிறாள் என எண்ணியவனுக்கு தன் மீதே அத்தனை கோபம்.
மனைவியை விட மற்றவை என்ன பெரிது என ஒரு மனம் அவனை இடித்துரைத்தது.
இன்னொரு மனமோ இதுவும் அவளின் வளர்ச்சியில் ஒரு மைல் கல் தானே? ஸ்ருதியின் மகுடத்தில் ஒரு வைரக்கல்.
அதற்கென்றே இத்தனை பாடுகளும். ஒவ்வொன்றிலும் அவளை வைத்தும் அவன் யோசித்திருந்தான்.
இப்போது அதனால் மனைவியின் இந்த வருத்தங்கள் பார்த்திவ்வை கனமாக சுட்டுவிட,
“ஸாரிடா. இனிமே இவ்வளோ உன்னை டார்ச்சர் பண்ண மாட்டேன்…” என்றவனுக்கு அவளை எப்படி தேற்ற என்று தெரியவில்லை.
பார்த்திவ் பேசிக்கொண்டிருக்க மனதின் அழுத்தமும், அவள் எதிர்பார்ப்பு பொய்த்துவிட கூடாதே என்ற ஆதங்கமும் ஸ்ருதியை புரட்டியது.
“மாமல்லபுரம் போவோமா ஸ்ருதி…” என தானாகவே கேட்க அவளிடம் பதிலில்லை.
“ஸ்ருதி…” பார்த்திவ் அவளை நிமிர்த்தி பார்க்க அவள் எப்போதோ மூர்ச்சையாகி இருந்தாள்.
“ஹேய் என்னடா, ஸ்ருதிம்மா. ஸ்ருதி…” என கன்னம் தட்டியவன் தண்ணீரை எடுத்து தெளிக்க விழிக்கவே இல்லை ஸ்ருதி.
சுபாஷிற்கு அழைத்தவன் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல ஸ்டூடியோவில் அத்தனைபேரும் பயந்து போயினர்.
“ஸ்ருதிக்கு உடம்பு எதுவும் சரியில்லாம இருந்ததா பார்த்திவ்?…” என்று சுதந்திரமும் செல்லும் வழியில் கேட்க,
“இல்லையே அங்கிள். ஆனா கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் மூட்ல தான் இருந்தா…” என மடியில் இருந்தவளை பார்த்தபடி சொல்ல,
“அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்…” என்றதும்,
“அஷ்வினிக்கும் சொல்லிருங்க அங்கிள். மயக்கம் தெளிஞ்சா நாம எல்லாம் இருந்தாலும் அஷ்வினியை ஸ்ருதி தேடுவா. என்னவோ பயந்திருக்கா…” என கலக்கத்துடன் சொல்லியவன் ஸ்ருதியின் முகத்தையே பார்த்தபடி வந்தான்.
மருத்துவமனைக்கு செல்லவுமே உடனடி சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட மஞ்சுளாவும் வந்துவிட்டார். சுபஷ்வினியும் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.
“என்னாச்சு ஸார்? மார்னிங் நல்லா தானே இருந்தா?…” என சுபஷ்வினி வந்ததும் பதட்டமாய் கேட்க,