பார்த்திவ் கிருஷ்ணாவின் முகம் அப்பட்டமான அதிருப்தியை காண்பித்தது.
அந்த ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்த அத்தனைபேரும் அவனின் முகத்தை ஒருவித அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அந்த பாடலை பதிவு செய்ய முயன்றுகொண்டிருந்தனர்.
சின்ன சின்ன திருத்தங்களையும் கூட சரிசெய்ய சொல்லி தந்துகொண்டிருந்தான் பார்த்திவ்.
ஒவ்வொரு முறையும் குறைகள் இருந்துகொண்டே இருக்க இதோ அவனின் பொறுமை எல்லையை கடக்க இருந்தது.
“ஃபுல் ஷிட், தான்யா என்ன பண்ணிட்டிருக்கமா நீ?…” என நறநறவென பற்களை கடித்தான் பார்த்திவ்.
“ஸார் நான்…” என்றவளுக்கு வியர்த்தது. அத்தனைபேர் முன்னிலையும் அவமானமாகவும் இருந்தது.
அவளும் அந்த பாடலுக்கு நூறு சதவிகித உழைப்பை போடத்தான் செய்தாள். ஆனாலும் அவனுக்கு முழுமையடையவில்லை.
“எக்ஸ்ப்ரெஷன்ஸ் எங்க போகுது உங்களுக்கு?…” என்று இரைந்ததில் அவ்விடமே நிசப்தமானது.
“ஓகே காம் டவுன், காம் டவுன்…” என தன் கைகளை உயர்த்தியும், இறக்கியும் காண்பித்தவன் மூச்சை ஆழ இழுத்துவிட்டான்.
“சரணம் நோட்ஸ்ல ல-வுக்கும், ழ-வுக்குமான உச்சரிப்புல கவனமா இருக்க வேண்டாமா? பழத்தை பலம்ன்னு உச்சரிப்பீங்களா? வாட்ஸ் திஸ் தான்யா?…” என்று சொல்ல அந்த பெண் மிரண்டு நின்றிருந்தாள்.
“இங்க வாங்க…” என்று சொல்லவும் அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டாள்.
“சிட்…” என முன்னிருந்த இருக்கையை காண்பித்தவனின் எதிரில் அமர்ந்தாள் அவள். அந்த பாடல் வரிகளை பார்த்தவன்,
“திரும்ப இந்த லிரிக்ஸ் பாடுங்க…” என்று நீட்டவும் வாங்கியவள் அதனை பாடுவதற்குள் குரல் நடுங்கியது.
“ஓகே, டென் மினிட்ஸ் டைம் எடுத்துக்கோங்க…” என்றவன் அந்த சுழல் நாற்காலியில் இருந்து திரும்பி தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தினான்.
அத்தனைபேரும் காத்திருக்க அதுவே பாடகி தான்யாவை பதட்டமுற செய்ய தன்னால் முடியாதோ என்னும் சந்தேகமே வந்துவிட்டது.
“ஏன் இங்கயே பார்த்துட்டு இருக்கீங்க? வேற வேலை இல்லையா?…” என இரைந்தான் பார்த்திவ்.
அந்த மர மேஜையை ஒரு தட்டு தட்டி கத்தி சொல்லியவன் கீழுதட்டை கடிக்கவும் அனைவரும் அவன் மேலும், தன்யா மேலும் இருந்த பார்வையை திருப்பிக்கொண்டனர்.
“நீங்க பாடுங்க…” என்றான் இப்போது தான்யா பக்கம் திரும்பி.
“ஓகே ஸார்…” என்று சொல்லியவள் அந்த வரிகளை மெல்லிய குரலில் பாட அப்போது அவன் எதிர்பார்த்த அந்த உணர்வு வந்துவிட்டது போலும்.
“இட்ஸ் ரைட்…” என்றான் அவளின் மெல்லிய சத்தத்தையும் கவனித்து கேட்டு.
அதிலேயே இன்னும் தூக்கிவாரி போட்டது தான்யாவிற்கு. இருநாட்களாக பாட ஆரம்பித்ததில் இருந்து இந்த பாடுதான்.
“திரும்ப பாடுங்க. ஹ்ம்ம்…” என்று இன்னும் முன்னே வந்தமர்ந்தவன் தன்னிரு கைகளையும் கோர்த்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான் பார்த்திவ்.
பயத்துடன் மீண்டும் அத்தனைபேர் முன்பிலும் திட்டிவிடுவானோ என தான்யா பார்த்திவ்வை பார்க்க,
“லிசன், இப்ப உங்க மைண்ட்ல இந்த சாங் லிரிக்ஸ் உங்க வாய்ஸ்ல கவனம், வார்த்தைகள், ஸ்ருதி தவறாம இருக்கனும். மத்த எல்லாம் எல்லாம் உங்களுக்கு அவுட்டாஃப் போக்கஸ்ல போயிடனும் தான்யா…”
அமைதியான குரலில் பார்த்திவ் சொல்ல சொல்ல அதையெல்லாம் கொண்டுவந்துவிடும் வேகம் தான் தான்யாவிற்கு.
“எஸ் ஸார்…” என்றவள் பாட ஆரம்பிக்க கண்ணை மூடியவன் காதுகள் கூர்மையானது.
“ம்ம்ம், ம்ம்ம்…” என்று அவளுக்கே கேட்காத குரலில் தலையசைத்து கேட்டுகொண்டவன் தான்யா முடித்ததும்,
“நவ் பெட்டர். பல்லவில உங்க நோட்ஸ் ஏற்ற இறக்கமாவே இருக்கு. ஒரு பேலன்ஸ் சுத்தமாவே இல்லை. ஏன்?…” என்றவனுக்கு என்ன சொல்ல முடியும் அவளால்?
“என்ன தப்புன்னு உங்களுக்கு தெரியுதா?…” என்று பார்த்திவ் கேட்க,
“எஸ் ஸார்…” என்றாள் தான்யா.
“கொஞ்சம் முன்னாடி சரணத்துல தான் தப்பு பண்ணினீங்க. இப்ப பல்லவி. என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என கேட்க பதில் சொல்ல முடியவில்லை.
“பல்லவில அந்த எண்டிங் வேர்ட்ல ஒரு ஸ்மூத் அன்ட் ஸூத்திங் இருக்கனும். இவ்வளோ ஷார்ப் தேவையே இல்லை. இப்ப பாருங்க…” என அவன் பாடி காண்பிக்க அத்தனை அழகாய் வந்தது அந்த வரிகள்.
அப்படியே கரைந்து போகக்கூடிய விதமாய் அவன் பாடி காண்பிக்க மீண்டும் இரண்டு மூன்று நான்கு என அவள் பாட பாட பார்த்திவ்வின் கண்கள் சிவக்கவே ஆரம்பித்துவிட்டது.
வேறு எதுவும் சொல்லாமல் அனைவரையும் கிளம்ப சொல்ல தான்யாவுக்கு அழுகையே வந்துவிட்டது.
தற்போது தான் வளர்ந்துவரும் பாடகி அவள். திரைப்படத்திற்கு பத்து பாடல்களுக்குள் தான் பாடியிருப்பாள்.
பார்த்திவ்வின் இசையில் இது இரண்டாவது பாடல். முதல் பாடல் நல்லவிதமாய் வந்துவிட இதையும் தான்யாவை பாட வைக்க முயன்றான் பார்த்திவ்.
முதலில் பாடியதோ துள்ளல் வகையை சேர்ந்தது. இப்போது பாடும் பாடலோ இதமான மெலோடி வகையை சேர்ந்தது.
பாடல் அவன் எதிர்பார்த்ததை போல தாள, லயம் சேராததில் அவனின் கோபம் பெருகிக்கொண்டே இருக்க அந்த இடத்தை விட்டு அனைவரையும் கிளம்ப செய்திருந்தான் பார்த்திவ்.
காலை வீட்டிலிருந்து புறப்படுகையிலும் கோபம் தான். அறிவழகன் சொந்தத்தில் ஒரு பெண்ணை பேசலாம் என அவர் நிற்க முடியாதென்று மறுத்து வந்திருந்தான்.
“கல்யாணம் நின்னா உடனே அந்த பேரை மாத்த திரும்ப அவசரப்பட்டு அதையே செய்யனுமா? என்னால முடியாது…” என்று சொல்லிவிட்டான் அவரிடம்.
“உன்னோட நல்லதை நாங்க பார்க்காம எப்படி பார்த்தி? என்ன பேசற நீ? இந்த பொண்ணை நல்லா விசாரிச்சிட்டு தான் உங்கிட்டவே சொல்றேன் நான்…” என்று கூற,
“நான் விசாரிக்க சொல்லலையே. அதுவும் இல்லாம இப்ப அந்த மைண்ட் செட்ல நான் இல்லை….” என வாதம் புரிந்தான் பார்த்திவ்.
“வீடு எப்படி இருக்கு பார். இந்த ப்ரப்போசல் நின்னதுல இருந்தே வீடு வீடா இல்லை. ஒரு சுபநிகழ்ச்சி நடந்தா மனசுக்கும் நிம்மதி கிடைக்கும்…” என அறிவழகன் தர்க்கம் செய்தார்.
“அப்படின்னா நீங்களே பண்ணிக்கோங்க. அம்மா ஓகே சொன்னா…” என சொல்லியவன் மஞ்சுளாவை பார்த்து ஒரு புன்னகையை சிந்தியவன்,
“அப்பாவுக்கு வீட்டை விசேஷ வீடா பார்க்கனுமாம். கொஞ்சம் பார்த்து வாட்ச் பண்ணுங்கம்மா….” என சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான் பார்த்திவ்.
கிளம்புகையில் என்னவோ சாதாரணமாக பேசி சென்றதை போலிருந்தாலும் மகனை அறியாதவரா மஞ்சுளா?
“அவன் என்ன குழந்தையா? இறுக்கி பிடிச்சு ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடற மாதிரி கல்யாணம் செஞ்சுக்கோன்னு நிக்கறீங்க?…” என அறிவழகனை பிடிபிடியென பிடித்துவிட்டார் மஞ்சுளா.
“புரியாம பேசாத மஞ்சு. நல்ல டைரக்டர், பேமிலி ப்ரென்ட் மாதிரி இருந்தவரே அவர் பொண்ணோட தப்பை மறைச்சு நம்ம பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு முடிவு பண்ணினார். திரும்ப அது தொடருமோன்னு ஒரு பயம்…” என்றார் அறிவழகன்.
“புரியாம பேசறது நானா? நீங்களா? முதல்ல சாரங்கபாணி அவங்க பொண்ணோட தப்பை மறைச்சு பேசலை. அவருக்கே அது பார்த்திவ்க்கு தெரிஞ்சப்போ தான் தெரியும். அதுக்கப்பறம் பண்ணினதை சொல்லுங்க நான் தப்புன்னு ஒத்துக்கறேன்…”
“எதை சொல்ற மஞ்சு?…”
“அவங்க பொண்ணு பண்ணின தப்பு என்னன்னு தெரிஞ்சும் பார்த்தியை சமாதானம் செய்ய முயற்சி பண்ணினாங்களே. அது தப்பு. அதை நான் ஒத்துக்க முடியாது….” என்றார் மஞ்சுளா.
“இத தான் சொல்றேன். இதுக்கு தான் பயப்படறேன். இப்போதைக்கு அமைதியா இருக்கற மாதிரி இருந்துட்டு கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் பார்த்தியை அப்ரோச் பண்ணினா?…” என்று கேட்டார் அறிவழகன்.
“எப்படி சொல்ற மஞ்சு? பொண்ணை வேண்டாம்ன்னு சொன்ன பின்னாடி அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததும் பார்த்தி போய் எப்படி பார்த்தான்? அவனுக்குள்ள ஒரு கில்ட்டி கான்ஷியஸ் இருந்ததால தானே?…” என்றவரை ஏகத்துக்கும் முறைத்தார் மஞ்சுளா.
ஆனாலும் அறிவழகனின் இந்த அச்சத்தை இல்லை என முற்றிலும் தவிர்க்கவும் முடியாது.
எங்கே மகனின் வாழ்க்கை திசை மாறிவிடுமோ என பயந்திருக்கிறார் என்று புரிந்தது.
“நீங்க அமைதியா யோசிங்க. வெறும் நன்றிக்கு கல்யாணம் செஞ்சுக்கற செண்டிமென்டல் ஃபூல் இல்லை நம்ம பார்த்தி. அவன் போய் பார்த்தது ஜஸ்ட் ஒரு மனிதாபிமானம் அன்ட் அவரோட பிரபஷனலா அவன் வொர்க் பன்றான். பார்க்காம அவாய்ட் பண்ண முடியாது…” என்று விளக்கினார்.
“புரியுது மஞ்சு. ஆனாலும் கொஞ்சம் பயமாவும் இருக்கு. பார்த்திக்கு வர போற பொண்ணு எப்படி இருக்கனும். எத்தனை சொல்லு ஆராதனா மேல எவ்வளோ பிரியம் வச்சிருந்தான் பார்த்தி…” என அறிவழகன் மீண்டும் சுற்றி அங்கே தான் வந்து நின்றார்.
“இருக்கலாம். கல்யாணம் செஞ்சுக்கபோற பொண்ணு மேல ஒரு பிரியம், ஆசை வரது எல்லாம் இயற்கை. அதை வச்சு பார்த்தி தடுமாறிடுவான்னு நினைக்கறது நம்ம பிள்ளை மேல நமக்கே நம்பிக்கை இல்லாதது மாதிரி ஆகிடும்…” என்று மஞ்சுளா பொறுமையாக சொல்ல,
“ஓகே ஓகே. புரியுது. பார்த்தியே கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லியிருக்கான். ஆனாலும் எங்க அவன் மனசை மாத்திட கூடாதேன்னு தான். ப்ச், ஓகே லீவ் இட் மஞ்சு. அவனுக்கான பொண்ணை இன்னும் நாம பார்க்கலையோ என்னவோ?…” என்று சொல்லிக்கொண்டார் அறிவழகன்.